_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, October 27, 2008

விளக்கமான விளக்கு....

விளக்கமான விளக்கு.....
"விளக்கு" ஒரு பெயர் சொல், இது ஒரு வினைச் சார்ந்த பெயராக இருப்பதால் "விளக்கு"(விளக்கம் சொல்) என்பதும் வினைச்சொல்லாகவும் செயல்படுகின்றது.

பூமி தன்னை தானே சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது. பூமி தானே சுற்றுவதால் இரவு பகல் எற்படுகின்றது. இதில் பகல் என்பது சூரிய ஒளியால் பூமி வெளிச்சம் அடைகின்றது. ஒளி அல்லது வெளிச்சம் என்பது நிறங்களின் கூட்டு. ஒளி ஏழு நிறங்களின் கூட்டு என்பதாகும். வெள்ளை என்பது ஒரு நிறமே இல்லை நிறங்களின் கூட்டு.

ஒரு பொருளை உணரவேண்டுமானால் தொட்டுப் பார்த்து அறியலாம். ஆனால் ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் அங்கேதான் வெளிச்சம் (ஒளி) தேவைப்படுகின்றது. இருளில் உள்ள பொருளை பார்க்க முடிவதில்லை. ஆனால் தொட்டு உணர முடியும்.

பகலில் சூரிய வெளிச்சத்தால் நம்மால் பார்க்க முடிகின்றது. ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரிகின்றது என்றால் அந்த பொருளில் படும் வெளிச்சம்(ஒளி) நம் கண்ணை வந்து அடைகின்றது என்று பொருள். அப்படி அந்த பொருளில் படும் வெளிச்சம் நம் கண்ணை அடையாமல் தடுக்கப் படுமேயானால் அந்த பொருள் நமக்கு தெரியாது. இதில் பொருளின் தூரம், அமைப்பு, பொருளின் இயற்பியல் குணம் அடிப்படையில் நம் கண்ணால் காணப்படுகின்றது. இதில் ஒளியின் வேகமும் தூரமும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.


ஒவ்வொருப் பொருளுக்கும் நிறத்தை உற்கிரகரிக்கும் தன்மை உண்டு. இதிலிருந்து ஒரு பொருள் சிகப்பு நிறத்தில் இருப்பதாக கண்ணுக்கு தெரிகின்றது என்று வைத்துக் கொண்டால் அந்த பொருள் ஒளியில் உள்ள எல்லா நிறத்தையும் உற்கிரகரித்துவிட்டு சிவப்பு நிறத்தை மட்டும் வெளிவிடுகின்றது. எனவேதான் அந்த பொருள் நம் கண்ணுக்கு சிவப்பு நிறமாக தொன்றுகின்றது. உண்மையில் அந்த பொருளில் சிவப்பு நிறம் இல்லை என்பது இயற்பியல்.

மனிதனின் முக்கிய கண்டுபிடிப்பு "விளக்கு". இருளில் பொருளை காணவேண்டுமானால் வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சம் உருவாக்க பயன் பட்டதுதான் இந்த விளக்கு. இருளில் உள்ளப் பொருளை நம் கண்ணிற்கு விளக்குவதால் தான் அந்த பொருளுக்கு பெயர் விளக்கு என் பெயர் வந்தது.

மனிதனில் செயல்பாடுகளை அதிகப்படுத்தியதின் பெருமை இந்த விளக்கையே சாரும். நெருப்பை கண்டுபிடிச்ச அந்த கனமே விளக்கும் பயன் படுத்த பட்டது. முதலில் தீப்பந்தம் பிறகு விளக்கு எனப்படும் கருவிகள் பயன்பாடுகள் வரத்தொடங்கின.

விளக்குகள் முதலில் எண்ணெய் விளக்குகள், பின் படிப்படியாக மின் விளக்கு அதன் பிறகு விஞ்ஞான மாற்றம் செய்யப்பட்ட ஆவி விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன. எண்ணெய் விளக்குகள் தாவர எண்ணெய், விலங்கூகளின் கொழுப்பு மற்றும் நெய்கள்,அதன் பின் மண்ணெய் (பெட்ரோலிய எண்ணெய்) பயன் பட்டது.

எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும். இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

விளக்குகள் அகல் விளக்கு, குத்து விளக்கு, தூண்டாமணி விளக்கு, சட்ட விளக்கு, பாவை விளக்கு. என இன்றும் பயன் பாட்டில் இருப்பதை காணலாம். இதில் ஆர்கண்ட் விளக்கை அய்மே ஆர்கண்ட் என்பவர் கண்டுபிடித்தார். ஆர்கண்ட் விளக்கு மேன்படித்திய விளக்காகும். முதலில் ஆர்கண்ட் விளக்கில் திமிங்கில எண்ணெய்யும் பின் மண்ணெயையும் பயன் படுத்தும்படி வடிவமைக்கப்பட்டது. சமிக்ஞை விளக்கு தொடர்பு கொள்ள பயன் படுத்தும் விளக்கு. இவற்றை லாந்தர் விளக்கு எனவும் சொல்லப்பட்டது. மேலும் கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளை பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவலைகள் பயன்பட்டன பின்னர் மின்விளக்கு பயன்ப்பாட்டுக்கு வரத்தொடங்கின.

விளக்குகளில் மின்விளக்கு ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே முயற்றிகள் செய்யப்பட்டு வந்தது. 1879 இல் கார்பன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்தது.

மின் விளக்குகள் 1. வெள்ளோளிர்வு (Incandescent lamp) 2. உடனொளிர்வு (Fluorescend lamp) 3. உலோக ஹேலைட்டு விளக்கு(Medtal Halide lamp) 4. தங்ஸ்தன் அலன் விளக்கு (Tungstan-Halagen lamp)5. பாதரச ஆவி விளக்கு(Mercury Vapour lamp) 6. சோடியம் ஆவி விளக்கு(Sodium Vapour lamp) பயன்பாட்டுக்கு இருக்கின்றன.

மேலும் விஞ்ஞானிகள் சூரிய ஒளியை மிக பெரிய கண்ணாடி மூலம் உலகில் இரவிலும் வெளிச்சமூட்ட ஆராய்ந்து வருகின்றனர். இப்படியாக நம் கண்ணுக்கு பொருளை விளக்குவதால் தான் விளக்கை அவ்வாறாக அழைக்கின்றோம்.....

3 comments:

சதங்கா (Sathanga) said...

சரியான நேரத்தில் விளக்குகள் பற்றிய விளக்கம் அருமை.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))

ஆ.ஞானசேகரன் said...

// சதங்கா (Sathanga) said...

சரியான நேரத்தில் விளக்குகள் பற்றிய விளக்கம் அருமை.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))//
உங்கள் வருகைக்கு நன்றி சதங்கா... உன்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//அருமையான எழுத்து. மேலும் இன்தமிழில் பகிர்ந்து கொள்ள 'இன் தமிழுக்கு' In-Tamil.com வாருங்கள். இன் தமிழ் மூலம் உங்கள் இணைய தள வாசகர்களை பெருக்குங்கள்.
//
நன்றி .....