_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, June 26, 2010

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

வாழ்க்கையினா,.. ஏதாவது ஒண்ணு வேணுங்க!....

"யாரும் யாருக்காகவும் வாழவேண்டியதில்லை" என்பது என்னவோ சரிதான் போல தெரிகின்றது. ஆனால்
நாம் அப்படியா வாழ்ந்துக்கொண்டுள்ளோம்? இல்லையே!!!! நம் வாழ்க்கையை நம்மை சார்ந்த சூழல்கள்தான் நிர்ணயம் செய்துக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடிவதில்லை.

ஒரு தவளை கதை ஒன்னுங்க...... தவளைகள் கூட்டமாக ஒரு மலையின் அடிவாரத்தில் நின்று பேசிகொண்டன அதில் ஒரு தவளை " யார் இந்த மலையில் உச்சியை முதலில் தொடுவார்கள் என்று பார்க்கலாமா?" என்று கேட்டது. அதில் சில தவளைகள் என்னால் முடியாது என்று நின்றுவிட்டது. சில தவளைகள் முயற்சிக்கலாம் என்று தயாரானது. அதன்படி சிலதவளைகள் உச்சியை நோக்கி புறப்பட்டது. ஆனால் கீழேயுள்ள தவளைகள் மேலே போகின்ற தவளைகள் பார்த்து "வேண்டாம் கால் வழிக்கும் நின்றுவிடுங்கள்.... இது வீண் முயற்சி" என்றேல்லாம சொல்லி சிரித்தன. அதை கேட்ட சில தவளைகள் பாதி தூரம் சென்றதும் நின்றுவிட்டது. இன்னும் சில தவளைகள் செல்லும் வழியில் சோர்வு அதிகமாகி நின்றுவிட்டன. ஆனால் ஒரு தவளை மட்டும் துள்ளி துள்ளி மலையின் உச்சியை அடைந்துவிட்டது. ஆச்சரியமாக அந்த மலையின் உச்சியை அடைந்த தவளைக்கு காது கேட்காது. அதன் வெற்றியின் ரகசியமே அதற்கு காது கேட்காததுதான்.... மற்ற தவளைகள் சொல்லிய முயற்சியற்ற வார்த்தைகள் இதனை பாதிக்கவில்லை. அதற்காக நமக்கும் காதுகேட்காமல் இருக்கவேண்டும் என்பதிற்கில்லை. மற்றவர்கள் சொல்லும் வசைசொற்களை புறந்தள்ளி வாழ்ந்தாலே வேற்றியின் படிகள் நமக்குதான்.


இதே போல இன்னொன்று சொல்லுவார்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடும்பொழுது நம்மை யாரோ விரட்டி வருவதாக நினைத்துக்கொண்டு ஓடினால் வெற்றி பெறலாம் என்றும் சொல்வதுண்டு. வாழ்க்கை ஓட்டத்திலும் அப்படிதாங்க நாம் ஓடிதான் ஆகவேண்டும் ஏன் ஓடவேண்டும் யாருக்காக ஓட வேண்டும் என்ற எண்ணங்கள் மனதில் ஓடினால் வாழ்வதற்கு அர்த்தமே இருக்காது. ஓடிதான் ஆகவேண்டும் ஓடிய தூரங்கள் நமது வேற்றியாக மகிழவேண்டும். இதுதான் வாழ்க்கை! இதுதான் நம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சப்பானியர்கள் உணவு வகைகளின் ஒரு வித்தியாசம் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படிதான் கடலிருந்து மீன் பிடித்து அந்த மீனை சாப்பிடுபொழுது அவர்களுக்கு திருப்தி அழிக்கவில்லை. மீனை பிடித்து கரைக்கு எடுத்து வரும்பொழுது அது இறந்து விடுகின்றது. அப்படி இறந்த மீனை உண்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை எனவே படகுகளில் தண்ணீர் தொட்டிகள் மூலம் மீன்களை எடுத்து வந்து சாப்பிட்டார்கள். அதுவும் அவர்களுக்கு திருப்தியாக இல்லை. மீன்களை தண்ணீர் தொட்டிகளில் அடைக்கப்பட்டதால் மீன்கள் சோர்வாக இருக்கின்றன அதனால் அவர்களுக்கு திருப்தி தரவில்லை. மீண்டும் அந்த மீன்களுக்கு ஒரு புத்துணர்வு கொடுக்க அந்த மீன் தொட்டிகளில் ஒரு சுரா மீனை விட்டார்கள். சுராமீனால் விரட்டப்பட்டு தப்பித்த மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததால் அந்த மீனை உண்பதில் சப்பானியர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் என்ற கதையும் உண்டு. ஆமாங்க நம்முடைய வாழ்க்கையிலும் ஒரு சுரா தேவைதான் படுகின்றது. நம் வாழ்க்கையில் ஓட வேண்டும் என்பது ஒரு மாயை எதையோ அடைய வேண்டும் என்பதும் ஒரு மாயை. அப்படிபட்ட வாழ்க்கை மாயையில் சுராவாக இருப்பது வாழ்க்கை ஓடத்தின் ஏற்ற இறக்கங்கள். எதையோ ஒன்றை நோக்கி ஓடவேண்டிய கட்டாயம். ஆனால் அதில் ஒருவரை அழித்து ஒருவன் வாழவேண்டும் என்ற எண்ணங்கள் எதனால்?........

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம் -பாரதிதாசன்

அழிந்து வரும் தமிழனுக்காக சின்னதாய் ஒரு முடிவு எடுப்பார்களா???... இந்த கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்............


நீண்ட இடைவெளியில் சின்னதாய் ஒரு இடுகை...
அன்புடன்...
ஆ.ஞானசேகரன்

Wednesday, June 16, 2010

சாமானியனை வஞ்சிக்காத சிங்கப்பூர், கடந்து வந்த பொருளியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் மீண்டது எப்படி?

சாமானியனை வஞ்சிக்காத சிங்கப்பூர், கடந்து வந்த பொருளியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் மீண்டது எப்படி?


வணக்கம் நண்பர்களே!
இந்த இடுகையை படிக்கும் முன் கீழ்கண்ட எனது முந்தய இடுகையை படித்திருந்தால் நன்றாக இருக்கும்.....

சுட்டியை தட்டுங்கள்

சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்.

சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?


மேற்கண்ட எனது சுட்டிகளை படித்திருப்பீர்கள்... மிக்க நன்றிங்க.
உண்மைதானுங்க சாமனியந்தான் உலகப் பொருளியியலை நிர்ணயம் செய்யக்கூடியவன். ஒரு நான்கு நாட்களுக்கு முன் சிங்கப்பூர் வானோலியில் கேட்ட செய்தி.... "கடந்து வந்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து சிங்கப்பூர் பாதிக்கப்படாமல் மீண்டு வந்துள்ளது. அதே சமயம் பொருளாதார வளர்ச்சியும் பெற்று இன்று ஒரு சிறப்பான பொருளியியல் நிலையும் பெற்றதற்கு காரணம் என்ன?" என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் " சிங்கப்பூர் இதற்கு முன் சந்தித்த பொருளியியல் மந்தநிலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம்தான் இந்த பொருளியியல் மந்தநிலையை சாமாளிக்க முடிந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தின்படி, இந்த பொருளியியல் மந்தநிலையில் நாங்கள் சாமானியனுக்கு வேலையிழப்பு செய்யவில்லை மாறாக அரசு கசானாவிலிருந்து காசு எடுத்து சமன்படுத்தினோம். அது ஆரப்பத்தில் கடிணமாக இருந்தாலும் போக போக பொருளியியல் நிலைப்பு தன்மைப்பெற்றது. இதுதான் எங்களின் வெற்றிக்கு காரணம்" என்று கூறப்பட்டது. மேலும் சொல்லப்பட்டது " அப்படி வேலையிழப்பு செய்த நாடுகளில் இன்னும் பொருளியியல் மீட்சி பெறாமல் இருக்கின்றது. மேலும் விலைவாசியும் அத்தியவசிய பொருள்களின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றதாக என்று சொல்லப்பட்டது."


ஒரு அரசாங்கம் சாமானியனுக்கு மனபுழுக்கம் இல்லாத பணபுழக்கம் கொடுத்தால் நாடும் அதன் பொருளியியலும் கெட்டியான இடத்தை பிடிக்கும் என்பது மேலே சொன்ன பதில்களிலிருந்து தெரிகின்றது. பொருளியியல் பற்றிய சாதாரண விளக்கங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள கீழேயுள்ள எனது இடுகையை பார்க்கலாம். மேலும் உங்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது.

சொல்லதான் நினைக்கின்றேன்....

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

தங்கமான தங்கம்.....

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.