_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, July 27, 2010

எல்லாம் தெரிந்தாலும்!.......

எல்லாம் தெரிந்தாலும்!.......

(படம் இடுகைக்கு தொடர்பில்லை)

மின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் " பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்" என்றார். பாட்டியோ " பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

மேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை "தின்னர்".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்.....
நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.

" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே!"


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

Thursday, July 22, 2010

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."


வணக்கம் நண்பர்களே!
நான் வீட்டுக்கு வரும் வழியில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண் கர்ப்பிணி. கர்ப்பிணி பெண்ணிடம் ஒரு பெண் " ஏங்க நீங்க உட்காந்து பேசுங்க எனக்கு கால் வலிப்பதுபோல இருக்கு" என்று சொன்னார்கள்.... அந்த நிமிடங்களில் எனக்கு ஒரு வித மகிழ்ச்சி வந்துசென்றாலும் சில சில வாங்கியங்கள் நினைவில் வந்து சென்றதை தவிற்க முடியவில்லை......... அதுவும் பெண்களிடமிருந்து வந்த வார்த்தைகள்தான்.
" என்னமோ இவ மட்டும் புள்ளதச்சியா இருப்பதாக நிணைச்சி இந்த ஆட்டு ஆட்டுரா.."
"நாங்களெல்லாம் புள்ளபெத்துகல இவ என்ன? இங்க நோவுது அங்க நோவுது என்று நடிக்கின்றா..."

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

என்னோடு வேலை செய்யும் சீன பெண் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் " இன்று காலை மருத்துவரை பார்த்தேன் மருத்துவர் உறுதிப்படுத்தினார்..... இது மூன்றாவது மாதம்" என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல அவள் வேலையை பார்த்துக்கொண்டுருந்தாள்..... இது அவளுக்கு முதல் குழந்தை.

பக்கத்து வீட்டில் தங்கிருக்கும் தம்பதினர் காலையில் வெளியில் சென்றனர்..... என்னை பார்த்துவிட்டு இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.... பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் அவர் வீட்டிற்கு பொழுது போக்காக நான் சென்றேன். அந்த நண்பர் சமையல் அறையில் போராடிக்கொண்டிருந்தார். "என்ன சார் சமையல் எல்லாம் கலக்கலா இருக்கு" என்றேன். " ஆமாம் சார் காலையில் மருத்துவரை பார்க்க சென்றோம் மருத்துவர் உறுதி படுத்தினார்" என்றார். "அடடேய் வாழ்த்துகள் தலைவரே" என்றேன்....... " நன்றி சார் வீட்டுல மயக்கமா இருக்காங்க அதுதான் நான் சமையலுல இறங்கிட்டேன்" என்றார்..... "நல்லது விட்டுலயும் வாழ்த்து சொன்னதாக சொல்லிருங்க"... என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

பேரூந்தில் அன்று கும்பல் அதிகமாகவே இருந்தது அந்த நேரம் பார்த்து ஒரு கர்ப்பிணி பெண் வண்டியில் ஏறுகின்றாள்.... " ஏம்பா புள்ளதாச்சிக்கு யாராவது ஆம்பளங்க ஏந்திருச்சி உட்கார இடம் கொடுங்கப்பா...." முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் சொல்லுகின்றாள்.......

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் சில பெண்கள் வேகமாக வயல் வெளிக்கு சென்றார்கள்.... சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறு கைகுழந்தையுடன் வந்தார்கள்.... அவர்களுக்கு பின் மெதுவாக அந்த தாயும் வந்துகொண்டிருந்தாள்..... கழை எடுக்க சென்ற பெண் பிரசவ வலி எடுத்து அந்த வயல் மேட்டுலேயே பிள்ளை ஈண்றாள்....

=> " நான்கு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தாச்சா?" ம்ம்ம்ம் எடுத்தாச்சி அக்கா நல்லாயிருக்குண்ணு சொன்னாங்க.........
=> "ஆறு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தியா இல்லையா? ம்ம்ம்ம்ம் குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.......
=> "ஒன்பது மாசம் ஆச்சா..... டாக்டர் என்ன சொன்னாங்க.? ம்ம்ம்ம்ம் டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்க குழந்த நல்ல வளர்ச்சியுடன் இருக்கு பயம் வேண்டாம் என்று சொன்னார்........
பிரசவ வலியில் அவள்.... டாக்டர் அவள் கணவனிடம் " குழந்தை திரும்பவில்லை உடன் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் உங்களின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கின்றோம்....... (செலவு ரூ.20,000)"

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

ஒரு சில நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி...... அது மறக்க வேண்டிய செய்தி அதனால் அதன் சுட்டியை சேமிக்கவில்லை இங்கே சுட்டியை கொடுக்க மனமுமில்லை.... 14 வயது மாணவி கழிப்பறையில் தானாக குழந்தையை பெற்றெடுத்து குப்பை தோட்டியில் வீசி வந்த கொடுமை........
இது எப்படி சாத்தியம் என்று மருத்துவ பதிவர்கள்தான் விளக்கம் சொல்லமுடியும்.... இதுபோல கழிவறையில் குழந்தை பெற்று வீசி எரிந்த சம்பவம் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பல செய்திகளில் பார்க்க முடிகின்றது.....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை கண்டிப்பாக படிக்கவும்)

என் எண்ணங்களில் வந்து சென்ற விடயங்கள் யாரையும் புண்படுதுவதற்காக இல்லை....

நட்புடன்...
ஆ.ஞானசேகரன்.

Saturday, July 3, 2010

நான் யாரோ!.....

நான் யாரோ!.....


நான் என்பவன் யார்? என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார்? என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார்? என்ற கேள்வியோடு அதற்கான விடைகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.... அவற்றை முழுவதுமாக படிக்க சுட்டியை தட்டுங்கள்.....

நான் யார்?



உன்னை அறிந்தால்... நீ! உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்... (திரைப்பாடல்)


அன்புடன்

ஆ.ஞானசேகரன்