Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...
நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).
அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.
ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.
வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.
நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.
அரிகிவரும் நாய் இனத்தை கண்டுபிடித்து பாதுகாப்போம்...
வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...
நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....
அன்புடன்...
ஆ.ஞானசேகரன்
Saturday, December 18, 2010
Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...
Labels:
இந்திய தனித்தன்மை,
சிந்தனைகள்,
நாய்,
நாய் காட்சி,
பதிவர் வட்டம்
Wednesday, December 15, 2010
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....
ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.
சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.
கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.
அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.
விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.
சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.
பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....
உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.
மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்
அன்புடன்.
ஆ.ஞானசேகரன்
ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.
சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.
கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.
அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.
விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.
சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.
பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....
உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.
மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்
அன்புடன்.
ஆ.ஞானசேகரன்
Labels:
FCI dog show,
நாய்,
நாய் காட்சி,
பதிர்வர் வட்டம். நட்பு,
மொக்கை
Tuesday, December 14, 2010
FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show
FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show
வணக்கம் நண்பர்களே!
நீங்கள் மேலே பார்த்த நாயின் புகைப்படம் சமீபத்தில் (11-12-2010 & 12-12-2010) சென்னையில் நடைப்பெற்ற மாபெரும் தேசிய நாய் காட்சி மற்றும் விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அங்கிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. அந்த விழாவை பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம் அதுவரை ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
வணக்கம் நண்பர்களே!
நீங்கள் மேலே பார்த்த நாயின் புகைப்படம் சமீபத்தில் (11-12-2010 & 12-12-2010) சென்னையில் நடைப்பெற்ற மாபெரும் தேசிய நாய் காட்சி மற்றும் விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அங்கிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. அந்த விழாவை பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம் அதுவரை ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
Labels:
dog,
dog show,
FCI dog show,
சென்னை,
நாய்
Subscribe to:
Posts (Atom)