_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label ஆற்றல். Show all posts
Showing posts with label ஆற்றல். Show all posts

Monday, September 7, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

ஏன்? எதற்கு? எப்படி?..... 2

உலகத்தில் எல்லா இடங்களிலும் பொதிந்து கிடக்குதுன்னா அது ஆற்றல்(energy) தாங்க. இந்த ஆற்றலைதான் கர்ப்பனையில் கடவுள் என்று சொல்லுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். சுற்றி சுற்றி கடவுளைப் பற்றி சொல்லும்பொழுது இந்த ஆற்றலில்தான் வந்து முடிப்பார்கள். ஆற்றலை மனிதன் எப்பொழுது புரிந்துக்கொண்டு பயன்படுத்தினானோ அன்றுதான் விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஆச்சரியமாகியது. இயற்பியலில் ஆற்றல் என்று சொல்லுவார்கள் இதை எளிதாக சொல்லவேண்டும் என்றால் "சுறுசுறுப்புடன் செயற்படுதல்" என கொள்ளலாம்.

ஆற்றல் பல வகைகளில் இருக்கின்றது. உதாரணமாக
நிலையாற்றல்
இயக்கயாற்றல்
வெப்ப ஆற்றல்
ஒலி ஆற்றல்
ஒளி ஆற்றல்
அணு ஆற்றல்
அணுகரு ஆற்றல்
வேதியாற்றல்
என இப்படி பலவகை ஆற்றல்களாக பொதிந்து கிடக்கின்றது. இப்படி பட்ட ஆற்றலை புரிந்துக்கொண்டால்தான் நாம் நம்முடைய தேவைகளுக்கு முறையாக பயன்படுத்தலாம், இது எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அதைப்பற்றி மேலும் மேலும் சொல்லிக்கொள்வதில்தான் விஞ்ஞான வளர்ச்சியே இருக்கு. அதுதான் இந்த "ஏன்? எதற்கு? எப்படி?.... " கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும் சொல்லிக்கொள்வோம் என்றுதான் இந்த இரண்டாவது பகுதியை தொடர்கின்றேன்.

ஆற்றலை பற்றியது "ஆற்றலை ஆக்கவொ அழிக்கவோ முடியாது, ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்." இந்த கோட்பாட்டை மனிதன் புரிந்துக்கொண்டதன் விளைவாகத்தான் பல கண்டுபிடிப்புகள் உருவாகின என்றால் மிகையாகாது. உதாரணமாக இயக்காற்றலை மின் ஆற்றலாக மாற்றியதன் விளைவு "டைனமோ" உருவானது. மின்னாற்றலை இயக்காற்றலாக மாற்றியதன் விளைவு "மோட்டார்" உருவானது. இப்படி பல கண்டுபிடிப்புகள் உருவாகிக்கொண்டுள்ளது.

இப்பொழுது நாம் "ஏன்? எதற்கு? எப்படி?.." தொடருக்கு வருவோம். ஒரு காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூர் காந்த புலத்தில் சுழற்றப்பட்டால் காப்பர் கம்பி வழியாக மின்சாரம் வெளிப்படும். அதாவது இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் டைனமோ என்று சொல்லுகின்றோம். அதேபோல் சில மாற்றங்கள் செய்து காந்த புலத்தில் உள்ள அந்த காப்பர் கம்பியால் சுற்றப்பட்ட ஆர்முச்சூரில் கம்பியின் வழியாக மின்சாரம் செலுத்தப்பட்டால் ஆர்முச்சூர் சுற்றும். அதாவது மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இதுதான் மோட்டார் என்று சொல்லுகின்றோம்.

கீழே உள்ள படத்தை பார்க்கவும்...
[படம்]

ஒரு மோட்டாரும் ஒரு டைனமோவும் ஒரே அச்சியில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் இடையில் ஒரு விசிரியும் இணைக்கப்பட்டுள்ளது. டைனமோவில் வெளிப்படும் மின்சாரத்தை மோட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது விசிரியை கையால் சுற்றிவிடப்படுகின்றது. அதன் அச்சியில் உள்ள டைனமோவும் சுற்றி மின்சாரத்தை வெளிப்படுத்தும். மின்சாரம் அதனுடம் இணைத்த மோட்டாரை சுற்ற வைக்கும். மோட்டார் சுற்றும் பொழுது விசிரியும் டைனமோவும் சுற்றும். அதேபோல் டைனமோவில் மின்சாரம் வெளிப்படும். இந்த சுற்றில் விசிரியானது தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்குமா? இருக்காதா? ஏன்?...................... அப்படி தொடர்ந்து சுற்றாது என்றால் ஏன்?.................

உயரமான இடத்தில் குவளை வடிவில் நீர்தொட்டிகள் கட்டி வைத்து குடிநீர்க்கு பயன்படுத்தி வருகின்றோம். இதில் நிலத்தடி நீரை மோட்டாரை இயங்க வைத்து உயரமான தொட்டியில் நீர் நிரப்பி வைக்கப்படுகின்றது. பின்னார் குடி நீருக்காக திறந்து விடப்படுகின்றது. இதை இயற்பியலில் சொன்னால் மின் ஆற்றல் மோட்டாரை இயக்க வைத்து, இயக்க ஆற்றல் நிலையாற்றலாக நீரை தொட்டியில் வைக்கப்படுகின்றது. பின்னர் நிலையாற்றல் இயக்க ஆற்றலாக குடிநீருக்காக திறந்து விடப்படுகின்றது.

[படம்]

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்றால் நிலத்தில் உள்ள நீரை ஏன் உயரமான தோட்டியில் மோட்டார் கொண்டு நிரப்பி பின்னர் குடிநீருக்காக அனுப்பபடுகின்றது. நேரடியாக மோட்டர் கொண்டு நீரை வினியோகம் செய்யலாமே. ஏன் அப்படி செய்யவில்லை? தொட்டியில் நிரப்பி பின் வினியோகிப்பதால் என்ன லாபம்?

கீழே உள்ள படத்தை பார்க்கவும்
[படம்]
சாதாரணமாக நீர் தொட்டிகள் குவளை வடிவில் வைக்கப்படும். சில இடங்களில் கூம்பு வடிவில் நீர் தோட்டிகள் வைக்கபடுகின்றது. இந்த கூம்பு வடிவ நீர் தொட்டிகளினால் என்ன அதிக லாபம்? அந்த லாபம் எதனால் ஏற்படுகின்றது?

இது போன்ற சிந்தனைகள் வந்தாலும் வரலாம்..
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
..