_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label சேவை. Show all posts
Showing posts with label சேவை. Show all posts

Tuesday, January 11, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.

மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...






மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108



அன்புடன்

ஆ.ஞானசேகரன்