_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label பசி. Show all posts
Showing posts with label பசி. Show all posts

Wednesday, August 26, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

உணவின் அவசியம் மற்றும் தேவைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற பொழுதும் இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிக வருத்தப்பட கூடியது. உலக நாடுகளில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்தாத நாடாகதான் இன்றும் இருக்கின்றது. நான் படித்த வரலாற்று பாடங்களில் அந்த அரசன் கோவில் கட்டினான், இந்த அரசன் குளங்கள் வெட்டி அணைகள் கட்டினான் என்றுதான் படித்துள்ளேன். ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு தொலை நோக்கு திட்டங்கள் இன்று நடந்துக்கொண்டு உள்ளது. அந்த கால அரசர்கள் மக்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்து வேலைகளை கொடுத்து கூலியும் அதற்காக உணவும் கொடுத்தான் என்பதுதான் வரலாறு. குளங்கள் தூறு வாருதல், சாலைகள் அமைத்தல், சாலையோரம் மரங்கள் நடுதல் போன்ற வேலைகளை கொடுத்து மக்களுக்கு உணவளித்தான். இன்று கிட்டதட்ட 20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான விடயம். மக்கள் தொகை அதிகரிப்பு, நலிந்து வரும் விவசாயம் போன்றவைகள் நாளை உணவின் பற்றாகுறை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் உண்மை. இனிமேலும் இதனை கவணிக்காமல் விட்டுவிட்டால் ஒரு பெரிய வறட்சியை பார்க்க வேண்டி வரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை.


தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி. காடுகளை அழித்து குளங்கள் வெட்டி நாடாக்கினான் என்பது வரலாறு. வயல்காடுகளை அழித்து துண்டுப்போட்டு வீட்டு மனையாக்கி காசாக்கியதுதான் இன்றைய நிலை. பல ஏரிகள் குப்பை காடாக காட்சியளிக்கும் நிலை.

ஒரு வேளை உண்பவன் யோகி (யோகம் பன்னுகிறவன்),... இரு வேளை உண்பவன் போகி,... முன்று வேளை உண்பவன் ரோகி (நோயுடையவன்),... என்பார்கள். உணவின் தேவைகள் அப்படி அதேபோல் உணவின் அவசியம் அப்படி. எல்லா உயிர்களுக்கும் இயற்கையே உணவழிக்கும் என்றாலும் அப்படி இயற்கையால் உணவழிக்க முடியாத சுழல் வந்தால் இயற்கையே உயிர்களை சமன் செய்துவிடும். அப்படிதான் உயிரை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தன காலரா, மலேரியா, அம்மை போன்ற நோய்கள். இவற்றிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கற்றுகொண்டான் ஆனால் இன்னும் உணவிற்கான சமன்பாட்டை கற்றுகொள்ளவில்லை. மாறிவரும் சூழல்களில் பட்டினிசாவுகள் அதிகரிக்கின்றன.

மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றியினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை. இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

முன்பெல்லாம் நெல் விளைச்சல் 10 மாதம் முதல் ஒரு வருடம்வரை கால வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றைய நிலை பல ரக நெல்மணிகள் வந்துள்ளது. மரபணு மாற்றம் பயனாக குறைந்த பச்ச நாள் 60 முதல் 80 நாட்களின் முழு வளர்ச்சியை பெறுகின்றது. அதே போல்தான் பழங்களும் விரைவாக பழுக்க பல ரசாயண முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் நோய்க்கு அழாக வேண்டிய நிலையுள்ளது.

"உழுதவன் கணக்கு பார்த்தால் ஒழக்கு கூட மிஞ்சாது" என்பது பழமோழி. அந்த அளவிற்கு லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் உணவுக்காக அன்னிய நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைதான் வரும். இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆள் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இதனால் இன்னும் நான்கு ஐந்தாண்டுக்களில் அரசிடம் உள்ள உணவு கையிருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் யோசிக்க வேண்டிய நிலை.

விவசாயச்துறையில் இந்தியா விஞ்ஞானத்துவத்தில் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது நாம் 30 வருடம் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வல்லரசு கனவில் இருக்கின்றோம். விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.

மேலும் பசி மற்றும் உணவின் தேவைகளையும், உற்பத்திகளையும் பின் வரும் இடுகையில் பார்க்கலாம். உங்களின் ஆலோசனைகள் பின்னூட்டத்தில் எதிர்ப்பார்க்கின்றேன்.

அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.



Friday, August 21, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...


உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..

"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....."
மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.

பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.

"வசதியிருக்கின்றவன் தரமாட்டான்
வயிறுப் பசித்தவன் விடமாட்டான்"
உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.

பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்...
"பசியும் சுண்டல் ருசியும் போனால்,..
பக்தியில்லை பசனையில்லை
சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!"
பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...

அதற்குமுன் பின்வரும் காணோளியை பாருங்கள்..



அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.