_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, May 29, 2010

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!.. விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

Monday, May 24, 2010

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு.....

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்







Monday, May 17, 2010

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!

வணக்கம்!..... அன்பு வலைபெருமக்களே!


கிட்டதட்ட என்னை மறந்தே விட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். காலம் கைகொடுக்காத காரணங்களால் வலைப்பக்கம் வரமுடிவதில்லை. விரைவில் முழு உச்சாகத்துடன் வருவேன். அதுவரை சின்ன சின்ன இடுகைகளில் சந்திப்போம்.

நேற்று 16.05.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை5.00 மணியளவில் முனைவர் மு.இளங்கோவன் சிங்கப்பூர் வருகையும் அதன் பின் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பும் நடந்தது. அதில் சிறப்பான கலந்துரையாடலும் அதன் பின் நடைப்பெற்ற இலக்கிய உரையாடலில் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் அதில் சுவைக்கப்பட்ட நாட்டுப்புறப்பாடல்களை பற்றியும் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பாக உரையாற்றினார். சிங்கப்பூர் தமிழ் அறிஞர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டு கலந்துரையாடல்களுடன் சிறப்பான சந்திப்பாக இருந்தது. பல விடயங்கள் விவாதிக்கப்பட்டது. அதன் விவரங்கள் மற்ற பதிவர்கள் மற்றும் முனைவர் மு. இளங்கோவன் எழுதுவார்கள்.


சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளேன். சுட்டியை சுட்டி காணலாம்.

முனைவர் மு. இளங்கோவன் மற்றும் சிங்கை வலைப்பதிவர்கள் சந்திப்பு

புகைப்படங்களை பற்றி பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு செல்லுங்கள்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Tuesday, April 13, 2010

தாயும்,... சேயும்.....

தாயும்,... சேயும்.....

புகைப்படத்துடன் செய்தியை அறிய சுட்டுங்கள் சுட்டியை

தாயும்,... சேயும்...... (கண்டதும் சுட்டதும்)


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்

Sunday, April 11, 2010

PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக......(தண்ணீர்)

PiTன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்காக.....(தண்ணீர்).

வணக்கம் வலை நட்புகளே!
PiT ன் 2010 ஏப்ரல் மாதப்போட்டிக்கு கீழ்கண்ட புகைப்படத்தை அனுப்பியுள்ளேன். உங்களின் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்....



மேலும் சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு மட்டும்.....








அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



மேலும் புகைப்படங்களை பார்வையிட என் மற்றொரு தளம்...

கண்டதும் சுட்டதும்....

எனது Flickr

Tuesday, March 16, 2010

மீண்டும் உங்களோடு......

மீண்டும் உங்களோடு...

அன்பின் வலை மக்களே! வணக்கம்...
சில பல காரணங்களால் வலையின் பக்கம் வரமுடியாமலும், மனம் அதற்கான அனுமதியை கொடுக்காத காரணத்தாலும் உங்களை உங்களோடு சந்திக்க முடியாமல் போய்விட்டது. நான் வலைப்பக்கம் வராவிட்டாலும் என்பக்கம் வந்துசென்ற அணைத்து அன்பருக்கும் அன்பின் நன்றிகள். மீண்டும் உங்களோடு அதே புத்துணர்வோடு சந்திக்க முயற்சித்து கொண்டுள்ளேன். என்னதான் இருந்தாலும் சமுகத்தால் சமுக கோராப்பல்களால் கடிபடும்பொழுது வலியில்லாமல் இருப்பதில்லை அப்படிதான் எனக்கும்.

(இணையத்தில் சுட்டப்படம்)

"என்னடா வாழ்க்கை
கருவேலங்காட்டுக்குள் புகுந்த...
வண்ணத்துப்பூச்சி போல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..." ( எங்கேயோ கேட்ட கவிஞன் வரிகள்)

சலிப்பு மிக்க வரிகளாக இருந்தாலும் சூழல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் இப்படிதான் போய்விடுகின்றது. "நடக்ககூடாது ஆனால் நடந்துவிட்டது" இதுதான் மனதை அலைகளித்துவிடுகின்றது. நியாயமும் நேர்மையும் இந்த சமுகம் நமக்கு கொடுக்காத பச்சத்தில்தான் வன்முறைகள் வெடிகின்றன.

"நியாயத்தையும் நேர்மையும் நாம் கொடுத்து வாங்கும் ஐந்து ரூபாயில் வைத்துக்கொள்வோம் அதற்கு மேல் எதிர்ப்பார்பது நமது முட்டாள்தனம்..." (அப்துல்லா அண்ணனின் பொன்மொழி)... வேடிக்கையாக சொன்னாலும் எத்தனை நியாயங்கள் பொதிந்த வரிகள்.

வலிகள் என்றும் நிரந்தமாக இருப்பதில்லை காலம் அதற்கான மருந்தையும் கொடுத்துவிடும். அதுபோல் நானும் அதே புத்துணர்வோடு வருவேன் என்ற நம்பிக்கையில்

ஆ.ஞானசேகரன்.

Friday, February 5, 2010

மனிதனைத்தேடி.........

மனிதனைத்தேடி.........


மனிதன் கவுளை சார்ந்து வாழப் பழகிக்கொண்டானா? இல்லை கடவுள் மனிதனை சார்ந்துள்ளதா? இதன் பதில்கள் இன்னும் தெளிவடையாமலே இருக்கின்றது. பகவத் கீதை, பைபிள், குரான் போன்ற சமய நூல்களும் அறநூல்களும் மனிதனை நெறிப்படுத்த தொகுக்கப்பட்டவைகள்தான்.

ஒருவனுக்கு நல்ல வெளிநாட்டு நிருவணத்தில் வேலைக்கிடைக்கின்றது. அதன் மகிழ்ச்சியை வணங்கிய இறைவனிடம் பகிர்ந்துக்கொள்கின்றான். "சர்வ வல்லமைப்படைத்த இறைவா எனக்கு கணனி பற்றிய அறிவும் எனக்கில்லை, வேலையை பற்றிய அனுபவமும் எனக்கில்லை இருந்தாலும் இந்த வேலை எனக்கு கிடைக்கும் என்று உம்மையையே நம்பியிருந்தேன். எனது நம்பிக்கையும் உன் ஆசிர்வாதமும் இருந்ததால் அந்த வேலை எனக்கே கிடைத்தது" என்று சொல்லி நன்றியை கடவுளிடம் ஆணந்த கண்ணீருடன் சொல்லியுள்ளான். ஆம் கடவுளின் கருணையிருந்தால் எல்லாம் நடக்கும்.......
மனிதன்: எந்த ஒரு தகுதியும் இல்லாத ஒருவனுக்கு தன்னை விசுவாசிக்கின்றான் என்ற ஒரு காரணத்தால் அந்த வேலையை அவனுக்கே கொடுக்கும் இறைவனை என்ன சொல்ல வேண்டும்? எல்லா தகுதியும் இருந்தும் தன் மீது இருக்கும் நம்பிக்கையை மட்டும் நம்பி வந்த ஒருவனுக்கு அந்த வேலை பறிக்கப்படுவதை என்னவென்று சொல்வது?... உங்களின் வாக்கின்படி இப்படிப்பட்ட இறைவன் ஞாயமற்றவரா இருக்கின்றாரா?.

தன் மகன் நோயினால் அவதிப்படுகின்றான், மருத்துவரிடம் அழைத்துச்செல்ல அவனிடம் காசு இல்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கேட்டுப்பார்க்கின்றான் காசு கிடைக்கவில்லை. தன் மகனின் நிலையை பார்த்து கண்ணீருடன் "இறைவா என் மகன் நோயினால் அவதிப்படுகின்றான் என்னிடம் காசு இல்லை எப்படியாவது மருத்துவரிடம் அழைத்துச்செல்ல காசு கொடுக்கவும்" என்று வேண்டுகின்றான். கடைசியில் மகன் இறந்துவிடுகின்றான்.

சார்வ வல்லமைப் படைத்த இறைவனிடம் "என் மகனை குணப்படுத்து இறைவா" என்று விசுவாசத்துடன் அவன் வேண்டியிருந்தால் அவனின் விசுவாசம் குணப்படுத்திருக்கும். ஆனால் அவனோ இறைவா எனக்கு காசுகொடு என்று வேண்டி தன் மகனையே இழந்துவிட்டான்.... உண்மையான விசுவாசிகளை கடவுள் கைவிடமாட்டார். அவனின் விசுவாசம் அவன் மகனை காப்பாற்றவில்லை.
மனிதன்: சர்வ வல்லமைப் படைத்த இறைவன் ஏன் அவன் மகனுக்கு நோயைக் கொடுக்க வேண்டும்?

பகவத் கீதையை படித்தறிந்த ஒருவன் தான் படித்தவற்றை அரசனிடம் விளக்கி சொன்னால் அரசன் காசுக்கொடுப்பான் என்று அரசனிடம் செல்கின்றான். அரசனிடம் சென்று " மன்னா நான் பகவத் கீதையை நன்றாக படித்துணர்ந்தவன் நான் உங்களுக்கு அவற்றை பற்றி விளக்கி சொல்கின்றேன்" என்றான். அரசன் அவனை பார்த்து " உன்னை பார்த்தால் நன்றாக படித்தவனாக தெரியவில்லை மீண்டும் நன்றாக படித்துவிட்டு வா! பின்னர் உன்னிடம் கேட்கின்றேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டார். அவனும் வேறு வழியில்லாமல் மீண்டும் கீதையை படிக்கின்றான்... பின்னர் ஒரு நாள் அரசனிடம் சென்று கேட்டான் அன்றும் அரசன் அதேதான் சொல்லி அனுப்பிவிட்டார். அவனோ சலிக்காமல் மீண்டும் பகவத் கீதையை படிக்கின்றான். இப்படியாக மூன்று நான்குமுறை படித்த பின் கீதையை உணருகின்றான். இப்பொழுது அவனுக்கு கீதையைப்பற்றி உணர்வு நன்றாக இருக்கின்றது ஆனால் அவன் அரசனிடம் செல்லவில்லை... நீண்ட நாள்களுக்கு பின் அரசனுக்கு நினைவு வருகின்றது.. தன்னிடம் மூன்று நான்கு முறை வந்து கீதைப்பற்றி விளக்க வந்தவர் ஏன் காணவில்லை என்று தேடி அவன் இருப்பிடம் செல்கின்றான். அரசன் அவனை வணங்கி " நீங்கள் எனக்கு கீதையைப்பற்றி விளக்கம் சொல்லிக்கொடுங்கள்" என்று கேட்கின்றார்..

பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவற்றில் சொல்லப்பற்றிருக்கும் நீதிகளை ஒருவன் படித்துணர்ந்தால் பொருளை பற்றிய ஆசை, புகழைப் பற்றிய ஆசை, பதவியை பற்றி ஆசையில்லாதவனாக இருப்பான். அப்படிப்பட்ட நிலைதான் பற்று அற்ற நிலை. அந்த நிலையை அவன் உணர்ந்ததால்தான் கடைசியில் அவன் அரசனின் காசுக்காக மீண்டும் செல்லவில்லை. அந்த நிலையை அறிந்ததால் அரசனும் அவனிடம் வந்து கீதையைப்பற்றி விளக்கம் கேட்டார்.

மனிதன்: அந்த பற்று அற்ற நிலையில் உள்ள மனிதன்தான் இறைவன்... கடவுளை தேடி நீ எங்கேயும் செல்ல தேவையில்லை உன்னில் இருக்கும் நல்ல குணங்களை உணர்ந்தாளே நீயே கடவுள்தான். இதைதான் மத நூல்களும், அறநூல்களும் சொல்கின்றது. அதை உணராத மனிதன்தான் பொருளுக்காக, புகழுக்காக, பதவிக்காக தேடித்தேடி எங்கேயோ அழைகின்றான். உனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை ஏற்று உணர்ந்து நடித்தால் நீயே அந்த நாடகத்தின் நாயகனாக இருப்பாய். நீ தேடிப்போகும் இறைவன் உனக்கு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்தாளே நீயே மனிதனாவாய். மகனாக மகளாக, தாயாக தந்தையாக, தாத்தா பாட்டியாக.... இப்படி கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து எவன் நடக்கின்றானோ...... அவனே இறைவன்!...... அவனே மனிதன்!....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்...


Tuesday, February 2, 2010

கடவுள் வாழ்கின்றார் (றா?)

கடவுள் வாழ்கின்றார் (றா?)


ஆதி மனிதன் கொண்டுவந்த எத்தனையோ பழக்கங்கள் நம்மை விட்டு விழகினாலும், கடவுளும் கடவுளைப்பற்றிய நம்பிக்கையும் நின்றுவிடவில்லை. உண்மையில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? ம்ம்ம்ம்... இருக்கின்றார் மக்களின் மனங்களில் இருக்கின்றார். மக்கள் நம்பும் நம்பிக்கையில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார். இதன் தொடர்புள்ள மற்றொரு என் இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம்...

மெற்கண்ட சுட்டியையும் படித்துவிட்டு வந்திருப்பீர்கள், நீங்களே சொல்லுங்கள் கடவுள் வாழ்கின்றாரா? இல்லையா? அதற்கு முன் எல்லொருக்கும் தெரிந்த ஒரு சிறிய கதை. ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்கு சொன்ன கதைகளில் இதுவும் ஒன்று. குரு தம் சீடர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கின்றார். அப்பொழுது சீடர்களிடம் சில அறிவுரைகளையும் சொல்கின்றார். " நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வைக்கவேண்டும் ஏனெனில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருக்கின்றார் எனவே அந்த உயிர்களிடம் அன்பு வைப்பவர்கள் கடவுளிடம் அன்பானவர்களாக இருப்பார்கள்" என்றார். சீடர்களும் தங்களுக்கு தெரிந்தவரை தலையை ஆட்டிவைத்தார்கள். குருகுலத்திலிருந்து கோவில் சிறிது தொலைவில் இருந்தது. சீடர்கள் அனைவரும் காலையில் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்கின்றார்கள். அப்பொழுது எதிரில் ஒரு யானைப்பாகன் " ஓடுங்கள்... ஓடுகங்கள் யானை மதம் கொண்டு வருகின்றது " என்று சொல்லிக்கொண்டே ஓடுகின்றான். எல்லா சீடர்களும் அதை கேட்டதும் ஓடிவிடுகின்றார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஓடாமல் இருந்தான், மதம் கொண்ட யானையும் வந்தது யானை அவனை ஒரு சுற்று சுற்றி வீசி எரிந்தது.

மயக்க நிலையில் அவனை மற்ற சீடர்கள் தம் குருவிடம் தூக்கி சென்றார்கள். குருவும்
அவனுக்கு வைத்தியம் செய்தார், அவன் மயக்க நிலை தெளிந்ததும் குரு அவனிடம் " யானை வருவதை அறிந்ததும் எல்லா மாணவர்களும் ஒடிவிட்டார்கள் ஏன் நீ மட்டும் ஓடவில்லை" என்று கேட்டார். அவன் " குருவே நீங்கள்தான் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் வாழ்கின்றார் அவைகளிடம் அன்பு செய்யுங்கள் என்று சொன்னீர்கள் அதுதான் நான் ஓடவில்லை" என்றான்.... அதற்கு குரு " யானை பாகன் எச்சரிக்கை செய்தான் இல்லையா! அவனிடத்திலும் கடவுள் இருக்கின்றாரே, ஏன் அவன் சொல்வதை ஏற்கவில்லை" என்று கேட்டார்.

மேற்கண்ட கதையில் இப்படியும் சொல்லலாம்: "இருக்கின்ற கடவுள் அந்த யானைக்கு மதம் பிடிக்காமல் வைத்திருக்கலாமே?"

அதேபோல் கடவுளின் நம்பிக்கையில் இருக்கும் வாதங்கள் நின்றுவிடவில்லை. வாதங்களில் எந்த அளவிற்கு உண்மை உணரப்படுகின்றதோ. அந்த அளவிற்கு எதிர்வாதங்களிலும் உண்மை இருக்கதான் செய்கின்றது. வெறும் வாத சாட்சியங்களை வைத்துக்கொண்டு கடவுள் வாழ்கின்றார் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

என்னை பொருத்தவரை மனிதனின் தேடல்களும் ஆசைகளும் இருக்கும் வரை கடவுளின் மேல் இருக்கும் நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட மனிதன் மனங்களில் அவன் காணாத கடவுள் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றார்.

"நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதால் அங்கு எதுவும் இல்லை என்று சொல்லவும் முடியவில்லை. நாம் நம்புவதால் இல்லாத ஒன்று இருக்கு என்றும் சொல்வதிற்கில்லை".... காணாத ஒன்றை நம்பும் மனிதன் காணும் மனிதனிடம் என்று அன்பு வைகின்றானோ அன்றே கடவுள் வாழ்கின்றார்.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, January 28, 2010

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

ஏன்? எதற்கு? எப்படி?..... 10

பல் போனால் சொல் போச்சுனு சொல்லுவாங்க, ஆமாம் "சொல்லுனா" என்னாங்க? வரையறுக்கப்பட்ட ஒலி என்று சொல்லலாமா!.... தமிழ் இலக்கணத்தில் சொல் என்பதை "ஒரு பொருளை கூறும் மொழிக்கூறு" என்று சொல்லுவதுண்டு. அதேபோல் சொல் என்பது ஒரு ஒலி வடிவம். இந்த ஒலி வடிவம் வாய்வழியில் உருவாகி காதுகளால் உணரப்படுகின்றது. அப்படியானால் மொழி என்பது என்ன? ஒலியையும் சைகைகளையும் மூலகூறுகளாக கொண்ட இலக்கணங்கள் அடங்கிய சொற்களை மொழி என்று கூறலாம்.

ஒலி என்பதை விஞ்ஞானம் எப்படி அழைக்கின்றது? ஒலி என்பது காதுகளால் கேட்டு உணரகூடிய அதிர்வுகளை குறிக்கும். அதாவது ஒலி என்பதை அழுத்தம் மாற்றம், துகள் நகர்வு அல்லது துகள்களின் திசை வேகம் என்று கூறலாம்.

ஒலி எவ்வாறு கடத்தப்படுகின்றது அல்லது பரவுகின்றது? ஒலி அலைகளாக கடக்கின்றது. அதாவது எல்லாத்திசைகளிலும் சரியான விகிதத்தில் அலைகளாக பரவுகின்றது. அந்த அலையில் வேகம் மற்றும் அதிர்வெண்ணை பொருத்து தூரம் கடக்கின்றது. ஒலி பரவ ஊடகம் தேவை, காற்று மற்றும் வாயுக்களில் நெட்டலைகளாக ஒலி பரவுகின்றது. சில உலோகம் மற்றும் திடப்பொருள்களிலும் பரவும் ஆனால் பொருளின் தன்மைகேற்ப அதன் வேகம் குறையும் (உதாரணமாக கண்ணாடியில் ஒலியின் வேகம் குறைவு). வெற்றிடத்தில் ஒலி அலைகள் பரவாது. ஆனால் மின்காந்த அலைகள் வெற்றிடத்தில் வேகமாக பரவும். ஈரக்காற்றில் ஒலியின் வேகம் அதிகமாக இருக்கும்.

ஒலி எவ்வாறு உருவாகின்றது? பொருள் அதிவுருவதால் ஒலி உண்டாகின்றது. முறுக்கப்பட்ட கம்பியில் உண்டாக்கப்படும் அதிர்வுகளால் வீணை மற்றும் வயலினில் ஒலி உருவாகின்றது. காற்று மூலகூறுகளில் அதிர்வால் புல்லாங்குழலில் ஒலி உருவாகின்றது. முறுக்கப்பட்ட கம்பி அதிர்வுகளை கைகளால் கட்டுப்படுத்தி இசையாக வெளியாகின்றது. காற்றின் அதிர்வை பூல்லாங்குழலின் துளைகளை கட்டுப்படுத்தப்பட்டு நாதம் உருவாக்கப்படுகின்றது.

நாம் எவ்வாறு ஒலி எழுப்பி பேசுகின்றோம்? மனிதன் தன் குரல்வளை மூலம் ஒலி எழுப்புக்கின்றான். நுரையீரல்களிலிருந்து வரும் காற்றின் உதவியால் குரல்வளையில் உள்ள உள்நாக்கு அதிர்வடைந்து ஒலி உருவாகின்றது. அந்த ஒலி நாக்கு, உதடு, பல், வாய், தொண்டை குழி அகியவற்றின் அதிர்வளைகளால் ஒலி மாற்றம் அடைந்து சொல்லாக மொழியாக வெளிவருகின்றது. இப்படிப்பட்ட ஒலி அதிர்வைதான் சொல் என்கின்றோம். இலக்கணவரையறுக்கப்பட்ட சொல்லை மொழி என்று சொல்லுகின்றோம். மொழியானது உயிர் மற்றும் மெய்யொலிகளால் உருவாகின்றது. இவ்வாறு ஒலி சொல்லாக மாறுவதை ஒலிமாற்றம் என்று அழைக்கப்படுகின்றது.


குரல்வளையால் உருவாக்கிய ஒலி மற்றும் சொல்லை நாம் எவ்வாறு உணருகின்றோம்? அதாவது எப்படி கேட்கின்றோம்? காதுகளால் உணரப்படுகின்றது. பாலுட்டிகளுக்கு பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு காதுகள் உள்ளது. காதினுல் இருக்கும் திரவ குடத்தில் மிதக்கும் சுருள் போன்ற அமைப்புதான் குரல்வளையில் உருவாக்கப்பட்ட ஒலி அதிர்வுகளை உணர்ந்து அதன் ஒத்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பி அதன் அதிர்வுகளை சொல்லாக மொழியாக நமக்கு மூளை உணர்த்துகின்றது.

இப்படிப்பட்ட ஒலி அதிர்வுகள்தான் நம்முடைய தொடர்பிற்கு மிகவும் பயனாக இருக்கின்றது. ஒலியின் அதிர்வுக்கு தகுந்த எழுத்துகளை உருவாக்கி எழுத்துகள் மூலமாகவும் செய்திகளை தொடர்புக்கொள்கின்றோம். மொழி என்பது தொடர்பிற்கு மட்டும் இல்லாது கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் ஊடகமாகவும் இருக்கு என்பதும் உண்மை.

மொழி என்பது நமது கலாச்சாரம்
மொழி என்பது நமது வாழ்வாதாரம்
மொழி என்பது நமது உணர்வு
மொழியிழந்தவன் தன்னையே இழந்தவனாவான்........


இன்னும் செய்திகளுடன்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Thursday, January 21, 2010

தெரியாது என....

தெரியாது என...

வணக்கம் நண்பர்களே! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி. தமிழ்மணம் விருதுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வேலை பளு மற்றும் உடல் உபாதைகள் காரணமாக தொடர்ந்து இணையத்தில் வரமுடியவில்லை. இனி கொஞ்சம் கொஞ்சமாக வருவேன் என்று நினைக்கின்றேன்.

ஒரு செவிவழி கேட்ட கதை ஒன்னுங்க,... ஒரு இளைஞன் வேலைதேடி ஒரு பெரிய வெளிநாட்டு நிர்வாகத்திற்கு சென்றான். "அங்கு அலுவலகம் துப்பறவு பணி காலியாக இருப்பதாகவும் உடனே எங்கள் அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் செய்யுங்கள் அந்த வேலை உங்களுக்குத்தான்" என்று அங்குள்ள அதிகாரி சொன்னார். அதை கேட்டு மகிழ்ந்தான் ஆனால் தன்னிடம் மின்னஞ்சல் முகவரி மற்றும் அனுப்பும் முறையும் தெரியாததால் அலச்சியமாக இருந்துவிட்டான். அந்த வேலை வேறு ஒருவனுக்கு கிடைத்துவிட்டது. தனது குடும்பம் வறுமையை போக்க வேறு வழியின்றி பக்கத்து ஊரில் உள்ள மலிவான காய்களை வாங்கி அவன் ஊரில் விற்றதில் லாபம் ரூ20 கிடைத்தது. இதை இன்னும் கொஞ்சம் அதிகமாக காய்கள் வாங்கி விற்றான் லாபம் அதிகமாக கிடைத்தது. காய்கள் தேவை அதிகமானதால் தானே தோட்டமும் வாங்கி காய்கள் விவசாயமும் செய்து விற்பனை செய்தான் லாபமும் அதிகமாக கிடைத்தது. இவனிடம் 300 பேர் வேலைசெய்யும் அளவிற்கு பெரிய அளவில் இவனின் வியாபரம் பெருகியது. கணக்குகள் சரிபார்க்க கணனி மற்றும் வேலையாட்களும் இருந்தார்கள்.

இந்த அளவிற்கு பெரிய வியாபாரியாக இருந்தாலும் கணனியை பயன்படுத்த தெரியாதவனாக இருந்தான். அங்கிருந்த ஒருவர் " இவ்வளவு பெரிய வியாபாரியாக இருக்கும் உங்களுக்கு கணனியை பயன்படுத்த தெரியவில்லையே" என்று கேட்டார். அதற்கு அவன் "இது தெரிந்திருந்தால் நான் இன்னும் கூட்டிக்கொண்டுதான் இருந்திருப்பேன்" என்றார்.

அட ஆமாங்க எதும் தெரியாது என்று இருப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லைங்க. முறையான முயற்சியும் தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் வாழ்க்கையில் முன்னோற முடியுமுங்க....

சென்ற முறை இந்தியா சென்ற பொழுது கல்லணைக்கு சென்றேன். காவிரி ஆற்றில் கட்டிய அணைகளிலேயே மிக பழமையான அணையாகும். கரிகால்ச்சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லும் களிமண்ணாலும் கட்டப்பட்ட இந்த அணை கிட்டதட்ட 19 நூற்றாண்டுகளாக நமது பாசனத்திற்கு பயன்பட்டுவருகின்றது எனபது மிக பெரிய ஆச்சரியம். சிறுவனாக சிறுவகளோடு விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனை பட்டத்து யானையால் மாலையிட்டு அரியணை ஏறிய இரண்டாம் நூற்றாண்டு சோழ மன்னனாவான். அப்படிப்பட்ட சிறுவன் தனக்கு தெரியாதென இருந்திருந்தால் இன்று நான்(நாம்) பார்த்த கல்லணை இருந்திருக்காது.


கல்லணை பற்றிய புகைப்படம் மேலும் இங்கே சுட்டவும்...

சுமார் 19 நூற்றாண்டுக்கு முன்னரே காவேரியின் போக்கை கட்டுப்படுத்தி அவற்றை முறையான பாசனத்திற்கு பயன்படுத்திய பாங்கு இன்றுவரை நம் அரசுக்கு தெரியாமல் இருப்பதேன்? அட அது போகட்டுங்க அந்த அணையையாவது பராமரித்து வருகின்றார்களா? என்றால் நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம்? என்று கேட்க வேண்டியுள்ளது. கருநாடகத்தில் தண்ணீர் தரவில்லை, கேரளத்தில் தண்ணீர் தரவில்லை, ஆந்திராவில் தண்ணீர் தரவில்லை என்று அரசியல் நடந்தும் நம்ம அரசியல்வாதிகளால் கடலில் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்த என்ன செய்ய திட்டம் செய்துள்ளார்கள்? இங்கிலந்தை சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் முயற்சி இல்லை என்றால் மேட்டூர் அணையையும் நாம் கண்டுருக்க முடியாது? தஞ்சை விவசாயிகளின் போராட்டமும் முயற்சியும் இல்லாது இருந்திருந்தால் மேட்டூர் அணைக்கு அனுமதிம் கிடைத்திருக்காது. நமககு தெரியாது என இருந்திருந்தால் எதையும் நாம் சாதிக்க முடியாது. தெளிவான சிந்தனையும் முறையான முயற்சியும் நமக்கு இன்று தேவை.......

அன்புடன்
ஆ.ஞானசேகரன்