என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2
ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில் சுந்திர இந்தியாவை கண்டார்........
அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது. அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம் காந்தியடிகளா? வெள்ளையர்களா?
அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....
ஆ.ஞானசேகரன்
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
Friday, October 4, 2013
Friday, July 13, 2012
என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...
என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...

வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.
1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?
2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?
3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...
4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?
5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......
6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?
7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....
8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?
9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?
10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............
இன்னும் கேள்விகள் தொடரும்........
ஆ.ஞானசேகரன்

வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.
1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?
2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?
3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...
4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?
5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......
6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?
7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....
8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?
9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?
10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............
இன்னும் கேள்விகள் தொடரும்........
ஆ.ஞானசேகரன்
Thursday, September 8, 2011
வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!
வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!
நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)
93 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.
1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.
ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.
2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.
2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.
2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.
2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.
2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜூலை 26: ஆமதாபாத்தில்
நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.
நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.
2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.
செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.
மக்கள் கருத்து: இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்... அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க பாரதம்!......
என்ன? கொடுமை சரவணன் சார்!................
ஆ.ஞானசேகரன்
நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)
93 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.
1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.
1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.
2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.
ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.
2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.
2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.
2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.
2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.
2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.
2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.
2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.
ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜூலை 26: ஆமதாபாத்தில்
நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.
செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.
அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.
நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.
2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.
2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.
செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.
மக்கள் கருத்து: இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்... அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......
வாழ்க ஜனநாயகம்!
வாழ்க பாரதம்!......
என்ன? கொடுமை சரவணன் சார்!................
ஆ.ஞானசேகரன்
Sunday, August 15, 2010
இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...
இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்?
முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.
இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது....
"மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.
எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.
விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.
விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....
நாம்!...
நம் நாடு!....
நம் மக்கள்!....
என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......
நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....
64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..
ஆ.ஞானசேகரன்.
இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்?
முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.
இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது....
"மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.
எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.
விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.
விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.
இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....
நாம்!...
நம் நாடு!....
நம் மக்கள்!....
என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......
நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....
64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..
ஆ.ஞானசேகரன்.
Labels:
64 வது சுதந்திர தினம்,
இந்தியா,
சிந்தனைகள்
Wednesday, August 12, 2009
பச்சை முத்து தாத்தாவும் நானும்...
பச்சை முத்து தாத்தாவும் நானும்...
பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக் காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....
நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?
தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?
நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?
தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....
நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)
தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.
நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?
தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.
நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...
தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.
நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?
தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"
நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.
தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!
நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.
தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..
நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?
தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....
நான்: ""தலைய சொருஞ்சுகிட்டு நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதைதான் நானும் நினைத்துக் கோண்டு இருக்கேன்!""
வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்கள்!
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
(முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை)
பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக் காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?
தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?
நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?
தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....
நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)
தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.
நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?
தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.
நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...
தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.
நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?
தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"
நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.
தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!
நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.
தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..
நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?
தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....
நான்: ""தலைய சொருஞ்சுகிட்டு நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதைதான் நானும் நினைத்துக் கோண்டு இருக்கேன்!""
வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்கள்!
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.
(முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை)
Subscribe to:
Posts (Atom)
