(இணையத்தில் சுட்டப்படம்)இதற்கு முன் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
வலைப்பக்கத்தில் மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....
என்ற ஒரு இடுகை எழுதியிருந்தேன், சுட்டியை ஒரு முறை சுட்டுங்கள். நன்றி நண்பர்களே! உங்களின் எனர்ஜி உங்களின் கைகளில் இருக்கும்பொழுது எங்கே தேடுகின்றீகள்? அட ஆமாங்க நல்லா பாருங்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை எடுத்து சுவைக்கதான் நாம் மறந்துவிடுகின்றோம்.
என்னோடு வேலை செய்யும் ஒரு சீன நண்பர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில் அவருக்கு தோண்டை புற்று நோய் வந்து சிகிச்சையில் இருக்கின்றார் என்றும் பிழைப்பது மிக கடினம் என்றும் சொன்னார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் அவர் வேலைக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்தது. அவரை பார்த்து "நான் (How are you sir?) நலமாக இருக்கின்றீர்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே" ( Till i am live) இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்" என்றார். அதை கேட்டதும் எனது மூச்சு காற்று சிறிது நின்றே வந்தது. என்ன வார்த்தை அது! ஆனால் அவர் அதை சிரித்துக்கொண்டே சொன்னார். அவரின் எதார்த்தம் இன்னும் அவரை வாழவிடுகின்றது. இன்னும் பல அவர் சொல்லுவார்..... " நான் தினமும் காலையில் எழுந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்"..... அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. " என்று கூறுவார்..... ஏன் அப்படி என்று கேட்டால் " ஆகா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்.... இன்னும் அப்படியே இருப்பேன் என்ற நம்பிக்கை வரும் அதனால்தான் நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்" என்று சொல்லுவார். நம்மில் எத்தனை பேர் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளோம்... அவர் இன்றும் அதே நம்பிக்கையில் நலமாக இருக்கின்றார். அவரிடம் இருக்கும் எனர்ஜி பூஸ்டை சுவைப்பதினால் அவரால் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகின்றது. (பின் குறிப்பு: உறக்கம் என்பது தற்காலிக மரணம் என்று சீனர்கள் நம்புவதுண்டு. உறக்கதிலிருந்து எழுந்ததும் கடவுளிடம் நன்றி சொல்வதும் அவர்களின் பழக்கம்).
நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......
கவணக்குறைவாக சாலையை கடக்கும்பொழுது எதிரே வரும் வண்டியை கவணிக்காமல் செல்கின்றோம். வண்டி ஓட்டுனர் விரைவாக வண்டியை நிறுத்துகின்றார். அப்போழுதான் நம்முடைய கவணக்குறைவை உணர்கின்றோம்.. உடனே வண்டி ஓட்டுனருக்கு கையை உயர்த்தி நம்முடைய நன்றியையும் சிரமபடுத்தியதற்கு வருத்ததையும் தெரியப்படுத்தலாம். ஏன் மன்னிப்பை கூட தெரிவிக்கலாம். இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!
அலுவலகம் ஒன்றிக்கு மகிழுந்தில்(car) செல்கின்றோம். காவலாளி கதவை திறந்து விடுகின்றார். கதவை திறந்த காவலாளிக்கு கையை உயர்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரியப்படுத்துகின்றோம். கதவை திறந்துவிடுவது அவரின் வேலையாக இருக்கலாம், நீங்கள் அப்படி செய்வதினால் அவரால் அந்த வேலையை சோர்வின்றி செய்ய முடிகின்றது. மறுமுறை நீங்கள் வரும்பொழுது உங்களை இன்னும் மகிழ்வுடன் வரவேற்று கதவை திறந்துவிடுவார்...... காலதாமதமாக அவர் திறந்துவிட்டால் நீங்களும் மன அழுத்ததிற்கு ஆளாவீர்கள் அதனால் அவரும் மன அழுத்தம் கொள்வார்..... இது அனைவருக்குமே நற்பயனை அழிக்காது..... நீங்க செய்வது ஒன்றுதான் சிறிது கையை உயர்த்தி வணக்கமும் நன்றியும் சொல்வதுதான்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!
கடைக்கு வரும் வாடிக்கையாளர் கத்திரிக்கா வாங்குகின்றார்.... கத்திரிக்கா கொடுத்ததும் அதற்கு சாமமான காசை கொடுக்கின்றார். வாடிக்கையாளருக்கு ஒரு " நன்றிங்க" என்று சொல்வதினால்!............ வாடிக்கையாளர்க்கு கத்திரிக்காவின் விலையின் கடினம் அற்றுபோய் மகிழ்வைதான் கொடுக்கும். அதனால் மீண்டும் பல முறை உங்கள் கடைக்குதான் வருவார்.... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட நம்கைகளில்தான் இருக்கின்றது!
நன்றி, வணக்கம், சிரமத்திற்கு கொடுக்கும் வருத்தம், சிறிய மன்னிப்பு இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை தாரளமாக கொடுப்பதினால் நம்மால் நாமும், நம்மால் அவர்களும் உச்சாகமுடன் மகிழ்வை அடைய முடிகின்றது......
எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் சிறு துளியில் இருக்கும்பொழுது.... அதை பயன்படுத்தி பயனாகலாம்...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்


