_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, January 11, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... ( அவசரசேவை 108)

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த சமையம் பண்டித் ஜவர்கலால் நேரு இந்தியாவில் பொருளியல் நிலைமை போதிய அளவு இல்லாததால் நாட்டு மக்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் கோரிகையிட்டார், " கல்வி மற்றும் மருத்துவத்திற்கு சேவைகள் செய்யுங்கள்" என்றார். அதன்படி சில அமைப்புகள் தனது சேவையை செய்தது. இதில் முக்கிய பங்கழித்தது கிருஸ்துவ அமைப்புதான் என்பது பாராட்டகூடியது. மருத்தவத்திற்கும் கல்விக்கும் இருந்த சேவை மனப்பன்மை இன்று இல்லை என்பது வருத்தப்படகூடிய ஒன்று. இன்றொ கல்வியும், மருத்துவமும் காசு சம்பாரிக்கும் இடமாக இருக்கின்றது.

மத்திய அரசின் முக்கிய திட்டமான அவசர சேவை ஆம்புலன் 108 அந்த வகையில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்களின் சேவை மெச்சும்படியாக உள்ளது. அதை முறைப்படி அமுல்படுத்தும் தமிழக அரசுக்கும் ஒரு சலூட்...... ஒவ்வொரு அம்புலன்ஸிலும் பயிற்சிப்பெற்ற செவிலியர்கள் இருப்பதும் அவர்களுக்கு சமூக மனப்பாண்மை மற்றும் சேவை மனப்பாண்மை இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியாது. நூற்றுக்கு மேற்பட்ட பிரசவம் ஆம்புலஸிலேயே நடந்துள்ளது. அந்த அளவிற்கு வண்டியில் எல்லா வசதிகளும் பயிற்சி பெற்ற செவிலியர்களும் இருப்பது பாராட்டியே ஆகவேண்டும்...






மறைந்துவரும் சேவை மனப்பாண்மை இவர்களால் துளிர்விட்டுக்கொண்டுள்ளது. இவரைகளை பாராட்டுவதின் மூலம் இன்னும் இதுபோன்ற அமைப்புகள் வளர வாய்ப்பழிப்போம்...... இதில் முக்கியமாக நான் பார்த்தது கையூட்டும், அன்பளிப்பும் இவர்கள் எதிர்ப்பாக்கவில்லை.........

வாழ்த்துகள் 108
பாராட்டுகள் 108



அன்புடன்

ஆ.ஞானசேகரன்



Sunday, January 9, 2011

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..... (கோவை சக்தி)

நமது நண்பரும் பதிவருமான கோவை சக்திக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது , சென்னை Viveka Educatinal & Charitable trust மூலமாக திரு பொன் பரமகுரு M.A, B.L, I.P.S அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ண்பர் சக்தி மென்மேலும் சிறப்பாக சேவைகள் செய்ய வாழ்த்துவதுடன் பாராட்டுகளும் சொல்வோம். நம்முடைய பாராட்டுகள் அவரை செம்மைப்படுத்தும் என்று நம்புகின்றேன். நண்பர்களே! வாழ்த்துங்கள் அவரை.......

அன்று வழங்கப்பட்ட விருதுவின் புகைப்படமும்,... அவருக்கு விருது வழங்கும் நிகழ்வும் புகைப்படங்களாக பதிந்துள்ளேன்...

நண்பர் கோவை சக்தியின் வலைப்பக்கம்
ஜெய் ஜவான்....





நண்பர் சக்தி சமூக சேவையாளார் மட்டுமில்லை, சிறந்த தேசப்பத்தர். அவரை பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி

அன்புடன்

ஆ.ஞானசேகரன்

Friday, January 7, 2011

இன்று ஒரு நாள் மட்டும்...

இன்று ஒரு நாள் மட்டும்...

எல்லோருக்கும் தெரிந்தது, "எங்கப்பன் குருதுகுள்ள இல்லை". கடன்காரனுக்கு பயந்த ஒரு தந்தை தன் மகனிடன் " ராமையா வருவான் வந்தால் அப்பா இல்லை என்று சொல்லிவிடு" என்று அவன் குருதுகுள் சென்று பதுங்கி விடுவான். ராமையா வந்து மகனிடன் " அப்பா எங்கே?" என்று கேட்டார். அவன் மகனோ "என் அப்பா குருதுக்குள் இல்லை" என்று சொல்லி உண்மையையும் போட்டு உடைத்துவிடுவான். இப்படிதாங்க நாம் ஒவ்வொருவரும் எதோ ஒரு காரணங்களுக்காக நாட்களையும் சந்தர்ப்பங்களையும் கடத்தி வருகின்றோம். இன்று அல்லது இப்பொழுது இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனபோக்கில் சம்பந்தப்பட்டவர்களை சந்திக்க தவிர்க்கின்றோம். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு வகை விவேகம் என்று வைத்துக்கொண்டாலும் அதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியுமா?


தற்கால சூழலில் அலைபேசி அலைப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்க நினைக்கின்றோம்.
1. அலைபேசியை அணைத்து விடுவது.
2. அழைக்கும் நபரின் எண்ணை பார்தததும் அழைப்பை எற்றுக்கொள்ளாமல் இருப்பது.
3. தவறி எடுத்துவிட்டாலும் தொடர்பு சரியாக இல்லாது போல நடிப்பது.
4. அவசரமாக இருப்பது போல தொடர்பை துண்டிப்பது.

இன்னும் எத்தனையோ முறைகளில் பிரச்சனைகளை தவிற்க முயற்சிக்கின்றோம். எதிராளிகள் இன்னும் புத்திசாலியாக வேற்று எண்ணுடன் தொடர்புக்கொண்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விடுவதும் உண்டு. அழைப்பை ஏற்றுக்கொள்ள திரண் இல்லாமல் இருப்பது தொடர்புக்கொள்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதில்லை, பல நேரங்களில் அவர்களும் விட்டுக்கொடுப்பதால் பிரச்சனைகளிலிருந்து தற்காலிக விடுப்பு கிடைக்கின்றது. அதுவும் எவ்வளவு காலங்களுக்கு சமாலிக்க முடியும்? இப்படி தற்காலிகமாக தப்பிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை சரியாக பயன் படுத்தினால் நல்ல தீர்வுகளை நம்மால் செய்ய முடியும் என்பதை மறுக்க முடியாது. அவரால் நமக்கு பல உதவிகள் கூட கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம். ஒன்று மட்டும் உண்மை நாம் ஒருவரை ஏமாற்றி விட்டால் அது அவருக்கு தெரியாது என்று நினைப்பது நமது முட்டாள்தனம்.

"தற்காலிகமாக பிரச்சனைகளை தள்ளி போடுவதை விட
முறையாக தீர்வு காண்பதே புத்திசாலிதனம்...."


இன்னும் உங்களுடன்
ஆ.ஞானசேகரன்.

Saturday, December 18, 2010

Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...

Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...

நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).



அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.

நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.

ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.


நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு
ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.

அரிகிவரும் நாய் இனத்தை கண்டுபிடித்து பாதுகாப்போம்...
வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...
நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....Add Video


அன்புடன்...

ஆ.ஞானசேகரன்

Wednesday, December 15, 2010

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....



ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.




சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.

அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.

விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.

சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.

பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....

உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.




















மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்


அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

Tuesday, December 14, 2010

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show





வணக்கம் நண்பர்களே!
நீங்கள் மேலே பார்த்த நாயின் புகைப்படம் சமீபத்தில் (11-12-2010 & 12-12-2010) சென்னையில் நடைப்பெற்ற மாபெரும் தேசிய நாய் காட்சி மற்றும் விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அங்கிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. அந்த விழாவை பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம் அதுவரை ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...






அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, November 22, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....13

ஏன்? எதற்கு? எப்படி?....13

மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு. உயிரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இந்த மூளைதான். இது வரை நமது அறிவியல் முழுமையாக மூளையின் கட்டமைப்பை கண்டறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூளை செயலற்று போனால் அந்த உயிர் இறந்துவிட்டதாக சட்டமே சொல்லுகின்றது. மூளை செயலிழந்தால் சிறுக சிறிக அனைத்து உறுப்புகளும் செயலற்று போகும். இறுதியில் அந்த உயிர் இறந்துவிடும்.

நாம் ஒரு பொருளை குறிப்பார்த்து கல்லால் அடிக்கின்றோம் என்றால் கண்ணால் பார்க்கப்பட்ட அந்த பொருளை கையால் எப்படி சரியாக அடிக்கப்படுகின்றது? அதே போல எல்லோராலையும் அப்படி சரியாக அடிக்க முடிவதில்லையே ஏன்? கண்ணால் பார்க்கப்படும் பொருள் விழித்திரையில் படும்பொழுது அந்த பொருளின் தூரம் மற்றும் முப்பரிமாணம் மூளையால் கணக்கிடப்படுகின்றது. எந்த அளவிற்கு உற்று பார்க்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அதன் கணிப்பும் சரியாக இருக்கும். அதனால்தான் எல்லோராலையும் சரியாக செய்ய முடிவதில்லை. இதற்கு தகுந்த பயிற்சி தேவையாகின்றது. உற்று நோக்குதல் மற்றும் ஒரு நிலைப்படுத்துதல் முக்கியம். அந்த நிலையை எட்ட மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமீபத்தில் வந்த ஆங்கில திரைப்படம் (The_karate_kid_2010) கராட்டே கிட் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி "ஒரு பெண் பாம்பின் கண்களை உற்று நோக்கி பயிற்சி பெறுவதாக இருக்கும்"... இப்படிப்பட்ட பயிற்சிதான் மூளைக்கு தேவை. இந்த காட்சிதான் படத்தின் இறுதி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி சன்னலுக்கு அருகில் மாங்காய் மரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். சன்னலில் படாமல் மாங்காயை மட்டும் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் பல முறை கல் சன்னலை பதம் பார்த்துவிடும் ஏன்? சன்னலை அடிக்க கூடாது என்பது முக்கியமாக கருதுவதால் மூளை சன்னலைதான் அதிகமாக பதியவைக்கின்றது எனவேதான் கல் சரியாக சன்னலை பதம் பார்த்துவிடுகின்றது. மாங்காவை மட்டுமே மனதில் பதிய வைக்க முறையான பயிற்சி தேவையாகின்றது.


மேலும் சிந்தனைகளுடன்


ஆ.ஞானசேகரன்.

Monday, October 11, 2010

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

"No love no life" காதல் இல்லையேல் சாதலே மேல் என்று சொல்லும் அளவிற்கு மனிதனும் அவனை சுற்றிய காதலும் இருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் கல்யாணம் என்ற நிபந்தனை அவனை இந்த காலக்கட்டத்தில் ஏனோ பயப்படுத்துகின்றது. இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேலைநாடுகளை தாண்டி இந்தியாவில் நகரங்களிலும் இருக்கதான் செய்கின்றது. " மனிதனின் பிறப்பின் முக்கியதுவம் தனது சந்ததிகளை விருத்தி செய்வது" எனற ஒரு தத்துவம் மறைந்து வெகுகாலமாகின்றது.

இந்த அவசரக்கால உலகில் கல்யாணம் மற்றும் குழந்தைகளை பெற்றல் என்பது ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. பலர் கல்யாணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழல் கடந்தால் நாளைய உலகம் பெரியவர் இல்லமாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த சில நாட்டில் அரசாங்கமே கல்யாணங்களுக்கு ஊக்கப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் சிங்கப்பூர் அரசும் கல்யாணம் செய்ய ஊக்கப்படுத்தியும் அதற்காண சந்தர்ப்பங்களை உருவாக்கியும் வருகின்றது.

அப்படி ஊக்கப்படுத்தும் விதமாக 10.10.2010 சிறப்பு தினமாக "I do" Wedding at sentosa 2010" என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அதன்படி 140 க்கு மேற்ப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம் நடத்தியது. குறைந்த செலவில் நிறைவான மகிழ்வாக நடத்தியது சிறப்பாகும். இந்த கல்யாண வைபோவத்திற்கு நிர்வாக புகைப்பட கலைஞராக (Official Photographer) சென்றேன். அங்கு நான் எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

கீழே சில புகைப்படங்கள் உங்களுக்காக ..... மேலும் அதிக படங்களை பார்க்க சுட்டியை தட்டுங்கள்.

பின் குறிப்பு: மேலை நாட்டு நாகரிகம் பல நாடுகளிடம் தொற்றிக்கொண்டு இருப்பது உண்மை. அதே போல் சிங்கப்பூரிலும் மேலை நாட்டு நாகரிகம் பல தொற்றியுள்ளது. அது பொல தொற்றிக்கொண்ட பழக்கம் ஒன்று கல்யாண சடங்கின் பொழுது முத்தமிடல். பதிவு திருமணத்தின் பொழுது முதலில் மோதிரம் மாற்றிக் கொள்கின்றார்கள் பின்னர் பதிவாளர் சொல்லின் பேரில் ஜோடிகள் முத்தமிடுவார்கள்... அந்த நிகழ்வைதான் இங்கு புகைப்படம் பதித்துள்ளேன். சில நண்பர்கள் சங்கடங்களின் பேரில் இந்த பின் குறிப்பு.










கல்யாண வைபோவம் புகைப்படங்கள்....

கல்யாண ஜோடிகளின் அணிவகுப்பு புகைப்படங்கள்....


அன்புடன்,...
ஆ.ஞானசேகரன்.

Monday, October 4, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....12

ஏன்? எதற்கு? எப்படி?....12

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"

மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். மனித உடல் என்பது சதை, எலும்பு, நரம்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளதாக அறிவியல் சொல்லுகின்றது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு,
காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.

உடலுக்கு 9 வாசல் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை. இப்படியாக சொல்லப்படுகின்றது. இப்படி சொல்லப்படும் கணக்கு சரிதானா? பெண்களுக்கும் இந்த கணக்கு ஒன்றுதானா? கண், காது, மூக்கு என்பது ஏன் இரண்டாக இருக்கின்றது? அப்படி இரண்டாக இருப்பதால் பாதகம் மற்றும் சாதகம் என்ன? என்பதுதான் இன்றைய ஏன்? எதற்கு? எப்படி?....

மனிதன் தன்னுடைய தாய் வயிற்றில் கருவாக உருவானதும் தாய்க்கும் கருவிற்கும் பாலமாக இருப்பதுதான் தொப்புள் கொடி. இந்த கொடியின் வழியாகதான் தாயிடமிருந்து உணவு சக்தி கருவிற்கு செல்கின்றது. ஆக கருவிலேயே உருவாகிய தொப்புள் கொடி வயிலை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை? அப்படி பார்த்தால் 10 வாசல் என்பது சரிதானே! மேலும் பெண்ணிற்கு இன்னும் கூடுதலாக மூன்று வாசல்கள் இருப்பதும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அதாவது பெண்ணிற்கு சிறுநீர் பாதையும், கருப்பை பாதையும் வேறு வேறாக இருப்பதும் மேலும் ஒரு வாசல் பெண்ணிற்கு உண்டும் என்பதும் உண்மைதானே!..... ஆக பெண்ணிற்கு 11 வாசல்லவா இருக்கின்றது. அதே போல் பிறந்த குழந்தைக்கு உணவாக பால் சுரக்கப்பட்டு ஊட்டுகின்றாளே பாற்காம்புகள் அதுவும் உடலிருந்து வெளிப்படும் வாசல்தானே! ஆக இந்த வாசல்களையும் பார்த்தால் பெண்ணிற்கு 13 வாசல்கள் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஓ... இப்படியே போனால் உடலில் இருக்கும் ஒவ்வொரு வேர்வை துளைகளும் உடலிருந்து வரும் வாசல்கள்தானே! இப்படிப்பட்ட கேள்விகள் உங்களை போல எனக்கும் இருக்கின்றது.

ம்ம்ம்ம்.... அது இருக்கட்டும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், இரண்டு பாற்காம்புகள் என ஏன் இரண்டு இரண்டுடாக இருக்கின்றது? அதனால் என்ன பயன்? ஒரு கண்களால் பார்க்க முடியாதா? ஒரு காதால் கேட்க முடியாதா? ஒரு மூக்குதுளையால் சுவாசிக்க முடியாதா? ஒரு பாற்காம்பால் பாலூட்ட முடியாதா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னையும் துளைத்தது.....

கண்களில் இரண்டால் மட்டுமே ஒரு பொருளின் முப்பரிமாணத்தை உணரமுடியும். ஒரு கண்ணால் அந்த பொருளின் முப்பரிமாணத்தை உணர்வது மிகவும் கடினமாக இருக்கும். அதே போல் ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு அளவில் இருக்கின்றது? என்பதையும் கணிக்க இரண்டு கண்கள் தேவையாகின்றது. அதனால் இயற்கையே உயிர்களுக்கு இரண்டு கண்கள் கொடுத்துள்ளது. மனிதனுக்கு இரண்டு கண்களும் முகத்தில் நேராக வைக்கப்பட்டுள்ளது. மற்ற விலங்களுக்கு பக்கதிற்கு ஒன்றாக இருக்கும். எனவேதான் மற்ற விலங்குகள் ஒரு பொருளை பார்க்க தலையை ஆட்டி ஆட்டி பார்க்கும். மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்குகளுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும். ( என் காளை மாடுக்கு சிகப்பு கலர் புடிக்காது சிகப்பில் உடையணிந்தால் முட்டும் என்பதேல்லாம் கட்டுகதையே! ) ஆரோக்கியமான பார்வை என்பது இரண்டு கண்களும் சரியாக இருக்க வேண்டும்.

இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும். ஒரு காதில் அலைபேசி தொடர்ந்து பேசுவதாலும், ஒரு காதில் பாடல் கேட்பதும் இப்படிப்பட்ட குறைகள் வர வாய்புள்ளது. விமான ஓட்டுனர், பாராசூட்டில் குதிப்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு காதின் சமச்சீர் மிக முக்கியம். நாம் நேராக நடந்து செல்லவும் இந்த சமசீர் காதுகள் தேவையாகின்றது. இரண்டு காதுகள் இருப்பதினால் ஒலி வரும் திசை மற்றும் துரத்தை உணரமுடிகின்றது.

மூக்கு என்பது மனிதனின் சுவாசத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. மேலும் வாசனை அறியவும் பயனாகின்றது. இந்த மூக்கு முகத்தின் முன்பக்கம் நீட்சியாக இருக்கும். இதன் துவாரம் இரண்டாக பிரிந்து செல்லும்..... இதனால் மூச்சு காற்று சத்தமிடாமல் உள்சென்று வெளியாகின்றது. மேலும் மூச்சுக்காற்றை உள்ளிழித்து வெளியேற்ற மிக வசதியாக இருக்கின்றது. ஒரே துளையில் அப்படிப்பட்ட நிகழ்வு மிக கடினமாக இருக்கும். மூச்சு தினறல் இல்லாமல் காற்றுழுக்க இந்த இரண்டு துளைகள் பயனாகின்றது.

குழந்தைகளுக்கு பாலுட்டதான் முலைகாம்புகள் பயனாகின்றது. ஒரு பகுதியில் பாலுட்டும் பொழுது மறுபகுதியில் பால் சேகரிக்கபடுகின்றது. அதனால் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலுட்ட முடிகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.


Sunday, September 19, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....11

ஏன்? எதற்கு? எப்படி?....11

வணக்கம் நண்பர்களே!...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம். அவ்வப்பொழுது வந்தாலும் பதிவுகள் எழுதுவது மிக குறைவே. நான் எழுதிய சிந்தனை இடுக்கைகளின் தொடர் "ஏன்? எதற்கு? எப்படி?" அப்படியே நின்றுவிட்டது. அதை கொஞ்சம் தூசி தட்டி எழுப்பலாம் என்ற எண்ணத்தில் "தூக்கத்தைப்" பற்றி எனக்குள் எழும் கேள்விகள் இந்த பதிவாக இருக்கின்றது. இதற்கு முன் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி?.... இடுகைகளின் தொகுப்பு கீழே புதியவர்களுக்கு பயனாக இருக்கும்.


அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?....

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 2

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 3

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 4

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 5

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 6

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 7

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 8

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 9

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 10




தூக்கம் என்றால் என்ன? தூக்கம் ஏன் வருகின்றது? யாரேல்லாம் தூங்க வேண்டும்? தூக்கத்தினால் என்ன பயன்? ஏன் தூங்க வேண்டும்? தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்கும் மட்டுமில்லை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எனக்கும் இருக்கின்றது. இது போல பல விஞ்ஞானிகளும் கேட்டுள்ளார்கள், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கான விடைகளை முழுமையாக அறியப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல விடயங்கள் பதிலழிக்கப்பட்டுள்ளது. இன்னும் துருவி துருவி பார்க்ககூடியவையாகவே இருக்கும் ஒரு ஆய்வு நிலைதான் தூக்கம்.

தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. நமது மூன்னோர்கள் கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள்தான் இருந்தது. ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.

தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப்பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டாயம். சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.

தூக்கம் எதனால் வருகின்றது? 'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது. நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள். இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கிதான் ஆக வேண்டும். " பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.

எவ்வளவு நேரம் தூங்கலாம்? அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. சாதாரணமாக மனிதன் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். முதியவர்களுக்கு 8 மணி நேரம் தூக்கம் போதுமானது. பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூக்கம் அவசியம் இந்த தூக்கம்தான் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதாக சொல்கின்றார்கள். பள்ளிக்கு செல்லாத வயது குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரம் தூங்கலாம்.

தூக்கத்தினால் என்ன பயன்? சமீபத்தில் ஒரு ஆய்வு ஜெர்மனியில் நடந்தது. அதன் முடிவில் தூக்கத்தினால் நினைவாற்றல் அதிகப்படுத்துகின்றது என்று கூறப்பட்டது. தூக்கம் புத்துணர்வை அதிகப்படுத்துகின்றது. தூங்கும் பொழுது இதயம் , மூளை போன்றவை இயக்க நிலையில் இருக்கின்றது. தூக்கம் என்பது மூளைக்கு ஒரு கட்டாய நிகழ்வாக இருக்கின்றது. தூக்கத்தின் பொழுதுதான் மூளை தன்னை அனைத்து பகுதிகளையும் சரி பார்க்க பயன் படுத்துகின்றது. தூக்கம் என்பது மூளையின் ஓய்வு என்பது முற்றிலும் உண்மையில்லை. மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது. மூளை தன் கட்டளைகளை அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தி சரியாக செயல்படுகின்றதா? என்று சரிபார்க்கின்றது. அதாவது (overhaul) ஓவர்கால் செய்கின்றது. இந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் புதிய செல்களில் உற்பத்தி இல்லாமேலே போய்விடும். நாம் செய்யும் செய்ய நினைக்கும் அனைத்து செயல்களையும் கட்டளைகளாக செலுத்தி பார்த்து அதில் குறைகள் இருந்தால் தானாகவே சரி செய்துவிடுகின்றது. காலை தூக்கு, கையை ஆட்டு , தலையை சொரி போன்ற கட்டளைகலாக இருக்கும். ஆனால் அந்த கட்டளைகள் செயல் படுத்தாமல் தன்னைதானே சரிபார்க்க உபயோகித்துக்கொள்ளும். சில வேலைகளில் அந்த கட்டளைகள் செயல் வடிவம் செல்ல வாய்ப்புகள் இருக்கும் அந்த சமயங்களில் கலை தூக்க முடியாமல் கடின படுவதாக நமக்கு இருக்கும். இதைதான் ஏதோ ஒன்று நம்மை அமுக்கி செல்கின்றதாக சொல்லுவார்கள். நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு ஆழ்ந்த தூக்கமே நல்லது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக்கொள்ள வேண்டும். தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்துவிட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. சீரான உணவு பழக்கம் நல்லது.எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....

தூக்கமின்மை என்பது என்றால் என்ன? பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படி பட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும்...

நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவும் 16 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவது கேடு விளைவிற்கும். இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் ஆளாக வேண்டி வருவதாக ஆய்வு சொல்லுகின்றது.
தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.