_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 29, 2009

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...
தீபாவளி என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்... அதிலும் ராக்கட் வெடி என்றால் அதில் ஒரு தனி ஆசைதான், அப்பாவிடம் அடம்பிடித்து பெரிய அளவில் உள்ள ராக்கட் வெடிதான் வேண்டும் என்று வாங்கிவிடுவோம். "அப்பாடி பெரிய ராக்கட்" அருகில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் கூப்பிட்டு அந்த ராக்கட் விட தயாராகுவோம். பழைய சோடாப்பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு பாட்டிலை நிறுத்தி வைத்து அதில் அந்த ராக்கட்டை சரியாக நிறுத்தி நண்பர்கள் கோசமிட நெறுப்பை பொருத்தி ராக்கட்டை செலுத்தியதும் ஒரே மகிழ்ச்சிதான். சிலசமையம் ராக்கட் பக்கத்தில் உள்ள கமலா அக்கா விட்டுக்குள் சென்றுவிடுவதும் பின் கமலா அக்கா எங்களை விரட்டுவதும் இன்னும் பசுமையா இருக்கின்றது.....

என்னங்க இப்படி விட்ட வெடி ராக்கட்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த நம்மால் நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க அனுப்பிய சந்திரயான் -1 100வது வெற்றியை மகிழாமலா இருக்கமுடியும்.. இந்தியாவிற்கும் இந்தியனுக்கும் இது ஒரு மைல்கல்தான்... நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -1 வெற்றிகமாக 100வது நாளாக தனது பணிகள் செய்துகொண்டே வருவது நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் மிகையாகாது.


நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் தன் குழந்தை சந்திரயான் -1 வின்னில் செலுத்தும் பொழுது நம் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பும். அதன் வெற்றிக்கு பின் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் என்னவென்று சொல்ல..... கிழே உள்ள சுட்டியில் காணோளி உள்ளது சுட்டி பார்க்கவும்>>>>> அப்படி இப்படி உள்ள வீடியோவை மெனக்கட்டு உற்காந்து பார்க்கும் பொழுது இதை பார்க்க மாட்டோமா? பார்க்கனும்ங்க.... ம்ம்ம் பார்க்கனும் சுட்டியை சுட்டுங்க>>>>

Launched on Oct. 22, 2008 from SDSC SHAR, Sriharikota, INDIA

India's First Mission to Moon

Lunar Flythrough of Chandrayaan-1

Lunar Flythrough of Chandrayaan-1

ம்ம்ம்ம்ம்ம் அம்மாம்தூரம் உள்ள நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க சென்ற நம்மால்... இங்கே நம் கக்கத்தில் இருக்கும் நம் சகோதரனின், சகோதரியின் குசேலம் விசாரிக்க மாட்டோமா? ராக்கட் விடவேண்டாம்ங்க கரம் நீட்டினாலே போதும். சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இன்னமும் இலங்கை தமிழின் துயர் துடைக்க உங்கள் நாடகத்தை நிறுத்தி விட்டு கரம் கொடுங்க போதும்.. அதைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.....

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,

ஆ.ஞானசேகரன்.

நன்றி தினமலர்:
சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா
ஜனவரி 29,2009,12:54 IST
பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ' மூன் இம்பாக்டர் பிரோப் ' நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ' மூன் இம்பாக்டர் பிரோப் ' எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது

Tuesday, January 27, 2009

இயற்கை இயற்கையாக!...

இயற்கை இயற்கையாக!....
இதற்கு முன் இயற்கையையும் மனிதனால் வரும் மாற்றங்களைப் பற்றி ஒரு பதிவு எழுதியுள்ளேன். இந்த பதிவிற்கு அந்த பதிவும் ஏற்றவையாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்... படிக்காதவர்கள் சுட்டியை சுட்டவும்....

இந்த முறை திருச்சி என் வீட்டிற்கு செல்லும் பொழுது பக்கத்து வீட்டில் இரண்டு கிளி வளர்த்து வந்தார்கள். மிகவும் நல்ல கிளி, கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிங்களமும் கலந்து பேசுமாம் நான் பார்த்ததில்லை. ஒருநாள் ஒரு கிளி வெளியில் பறந்து சென்று விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டார். நான் பரவாயில்லை விடுங்கள் அது சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என்றேன். அவர் சொன்னார் இல்லை சார் அந்த கிளி எங்கள் வீட்டில் 10வருடம் இருந்துவிட்டது வெளியில் சென்றால் மற்றகிளிகளுடன் போராட பழக்கமில்லாமல் இறந்துவிடும் "அதுதான்" வருத்தமாக இருக்கின்றது என்றார்...........???????
இதுதானுங்க நம்முடைய சின்ன சந்தோசத்திற்காக இயற்கையாக வாழும் பறவைகளையும் விலங்குகளையும் நாம் நசுக்கி விடுகின்றோம்... இயற்கையில் அவைகள் வாழ கற்றுக்கொண்டுவிடும். நாம் அதற்கு உணவழிப்பதன் மூலம் அவைகள் போராட பலம் இழந்தைவையாக இறக்க வேண்டி வரும். பறவைகளும் விலங்குகளும் இயற்கையின் சொந்தகாரர்கள் அவைகளுக்கு இயற்கையே உணவழிக்கும். அந்த உணவில்தான் அவைகள் நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்கின்றது. இந்த இயற்கையான வட்டத்தை கெடுத்தமேயானால் அவைகள் உலகிலிருந்து அழிந்தேபோகும்....

கிழே உள்ள படத்தை பார்க்கவும்....(சிங்கபூர் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டது...)

மேற்கண்ட படத்தின் சாரம், ... உங்களின் உணவு அவைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை குறிக்கும்... சிங்கபூரில் இயற்கையான விலங்கினங்களுக்கு உணவழித்தால் அபதாரமும் விதிக்கப்படுகின்றது..

மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..... அந்த இயற்கையின் அழகில் (படம் பார்க்க.....) கல்லை கக்கத்தில் வைத்துக்கொண்டு வளரும் மரம்,....... மர கிளைகளில் பூத்தும் காய்த்தும் சிரிக்கும் மரம்,...... முயலின் முக சாயலில் இருக்கும் பூ..... இப்படி இயற்கை இயற்கையாக இருக்கும் வரை அவைகள் அழகுடனும் நம்மோடு வாழும் என்பதே என் எண்ணம்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்., ஆ.ஞானசெகரன்.

Sunday, January 25, 2009

நாம் கண்ட குடியரசு!........

நாம் கண்ட குடியரசு!........
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். சமத்துவம் இல்லாத சுதந்திரம் பல பேர் மீது ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்திட வழி செய்யும். சுதந்திரமில்லாத சமத்துவம் தனி மனிதனின் தன்னெழுச்சியான இயல்புகளை குலைவுறச் செய்யும், சகோதரத்துவம் இல்லாத சுதந்திரமும், சமத்துவமும் இயற்கையாக கொண்டிருக்க வேண்டிய தன்மைகளைப் பெற்றிருக்கமாட்டா. சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஆகிய இரண்டும் இந்தியச் சமுதாயத்தில் அறவே இல்லை என்ற உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்"------- இதை கூறியவர் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாபெரும் தலைவர் பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.......
நன்றி விக்கிபீடியா
பல நூற்றாண்டுகள் மன்னர் ஆட்சியும், முகலாய ஆட்சியும் கொண்டதுதான் நம் நாடு அதற்கு பின் 200ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அடிமை பட்டு பின்னர் நடந்த போராட்டத்தின் விளைவாகதான் இந்த சுதந்திர காற்றை நம் நாடு சுவாசிக்கின்றது. 1947ல் ஆகஸ்டு மாதம் 15ம் நாள் நாம் நாடு சுதந்திர இந்தியாவாக நடைப்போட்டதில் பலரின் போராட்டத்தினால் உருவாணதை யாரும் மறக்க முடியாது. அதன்பிறகு நாட்டின் ஆட்சி முறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணய சபை நியமிக்கப்பட்டது. 1946 டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் தேதி வரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்துடன் அதற்கு மறுநாள் அதாவது 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசு தொடங்கியது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நம்முடைய அரசியல் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய பெருமைக்குறிய அமைப்பு. அதன் பெருமை அதன் நடைமுறையில்தான் சிக்கல் காணமுடிகின்றது. நமக்கு கொடுக்கப்பட்ட முழு சுதந்திரம் சட்டத்தை உதாசீனப்படுத்தப்படுவது கேவளத்துக்குறியது. 60வது குடியரசு தினத்தில் நம் நாட்டையும் நாட்டின் அரசியல் அமைப்பையும் நாம் எந்த அளவிற்கு மதிக்கின்றோம் என்பதை கொஞ்சம் சிந்திப்போம்........ நம் நாட்டின் சட்டதை அரசியல் அமைப்பை நாம் மதிக்கவில்லை என்றால் நம் தாயை அவமதிப்பதாகும்.

அரசியல் சாசனத்தில் 10ஆண்டுக்குள் எல்லோருக்கும் கல்வி என்ற நிலை இன்னுமும் நாம் எட்டவில்லை மாறாக கல்வியை வியாபாரமாக்க பட்டுள்ளது. மதுவை அரசு ஏற்று நடத்துவதும், கல்வியை தனியாரிடம் விற்பனை செய்வதும், அரசியல் சாசனத்தை அடகு வைப்பதற்கு சாமமான செயல்தானே?...

இன்னும் தனிமனித சுதந்திரம் பாதுக்காக்க படுகின்றதா? காவல் துறையில் கூட பாதுகாப்பில்லை. படித்த இளைஞன் கூட காவல் நிலையம் தனியாக சென்று தன் குறைகளை கூற முடியாத நிலைதான் இங்குள்ளது. பெண்கள் நிலை சொல்ல வேண்டியதில்லை. மகாத்மா கண்ட கனவு காவல் நிலையத்தில் கூட காணமுடியாத சட்டசாசனம்தான் நம் காண்கின்றோம்... சட்டங்கள் உள்ளது, சட்டத்தை மதிப்பதிலும் பயன் படுத்துவதிலும்தான் சிக்கல் உள்ளது.

நம் அரசியல் சாசனத்தை மதிப்பதில் கல்விக் கற்றவர்கள் மதிக்கின்றார்களா என்றால்?...... இவர்கள்தான் நம் நாட்டின் தேர்தலை உதாசினப்படுத்துகின்றனர். பெரும்பான்மை படித்தவர்கள் ஓட்டு போடுவதேயில்லை என்பதும், நாட்டை சவக்குழிக்கு கொண்டு செல்வதிற்கு சமமான செயல்தானே.... எத்தகைய சட்டங்கள் இருந்தாலும் நம் நாட்டையும் நம் அரசியல் சாசனத்தையும் மதிக்காமல் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இந்த 60வது குடியரசு தினத்தில் நினைவில்கூறுவோம்....

நம் நாட்டின் சட்ட சாசனம் ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் உருவாக்கப்பட்டது. அதை முழுமையாக நடைமுறைப் படுத்த நம் அரசியல் தலைவர்களின் பொறுப்பிலும் உள்ளதை மறக்க முடியாது. அதேபோல் மக்களின் அறிவினாலும் நம்முடைய உரிமைகளை பெறமுடியும். அதற்கு முறையான கல்வியும் அவசியம்.

பொதுவான வளர்ச்சியை இந்தியா கண்டாலும், எல்லா இன மக்களும் அந்த வளர்ச்சியை பெற முடியாமல் இருப்பது சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் கோளாருதானே. இதை இந்த நன்னாளில் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் வியக்கும் அரசியல் சாசனம் இருந்தும் நம்முடைய பொறுப்பின்மையால் உலக அரங்கில் பல இழந்துள்ளோம். ஓங்கும் கைகளால் இந்தியாவை நல்ல குடியரசாக உயர்த்துவோம் என்று சொல்லி 60வது குடியரசு வாழ்த்துக்களை பருகுவோம்......
இந்தியாவின் எதிர்காலம் நம்கைகளில்!..
வாழிய இந்தியா!
வாழிய இந்தியர்!......

அன்புடன்
ஆ.ஞானசெகரன்.