_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, March 31, 2009

சொல்லதான் நினைக்கின்றேன்....

சொல்லதான் நினைக்கின்றேன்....

ஏம்பா பங்குச் சந்தைனு சொல்லுராங்களே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேம்பா? என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி... ம்ம்ம்ம்ம்..... என்னது பங்குச் சந்தையா? என்னபா என்ன நினைக்குற நான் என்ன காரைக்குடி அண்ணாமலை செட்டியாரா? இல்லை ஹர்ஷத் மேத்தாவா? என்னைப்போய் கேட்கிறியே..... இல்லைபா நீ இணையத்தில் ஏதோதோ படிக்குர அதுதான் கேட்டேனு சொன்னதும் கொஞ்சம் தலைநிமிர்த்தி நமக்கு தெரிஞ்சத சொல்ல...

எனக்கு அதப்பத்தி அனுபவம் இல்லபா, கொஞ்ச நாளுக்கு முன் ஆணந்த விகடனுல படிச்ச கதை ஒன்னு..... ஒருவன் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவரிடம் இங்கு குரங்குகள் இருக்குனு கேள்விப்பட்டேன் எனக்கு நான்கு குரங்குகள் வேனும் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தருகின்றேன் பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அவர்களின் ஒருவன் ஒரு குரங்குக்கு 50 ரூபாயா? நான் பிடித்து தருகின்றேன் என்று பிடித்து தந்தான். இவர் சொன்னது போல நான்கு குரங்குகளுக்கு 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்தார். பின் அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அந்த குரங்குகளை அதில் வைத்து பூட்டிவிட்டு ஒரு காவல் காரனையும் வைத்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அடுத்தமுறை இன்னும் அதிக குரங்குகள் தேவை 75 ரூபாயானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 75ரூபாய் என்றதும் அந்த ஊரில் உள்ள அனைவரும் எல்லா குரங்குகளையும் பிடித்து வைத்திருந்தனர். அடுத்தமுறை வந்த வியாபாரி ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா குரங்குகளையும் ரூபாய் 75 வீதம் வாங்கி கொண்டார். அதேபோல் எல்லா குரங்குகளையும் அந்த வீட்டில் பூட்டினார். மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....

என்னபா புரியுதா? என்று கேட்டேன் நண்பரிடம். ம்ம் நீ சொல்லுரதிலிருந்து பார்த்தா குரங்கு வியாபாரம்தான் பங்குசந்தை, குரங்குதான் பங்கு. மதிப்பே இல்லாத குரங்கை மதிப்புள்ளதாக ஆக்கி செய்யும் வியாபாரம்தான் பங்குசந்தையா என்றான்? நான் அப்படி சொல்லவில்லை பங்கு என்பது ஒரு மாய தோற்றம் அதை கைதேர்ந்தவர்கள் செய்யும் விளையாட்டில் இப்படியும் ஆகலாம். சிறிதே உபயோகம் உள்ள தங்கதிற்கு மதிப்புக் கொடுக்கப் படுவதும், அவற்றின் விலை கோபுரத்தில் இருப்பதும் எதை காட்டுகின்றது; ஒரு குரங்கு விளையாட்டுப் போல தோன்றவில்லையா? பங்கு வர்த்தகம் புரியாதவர்களுக்கு ஒரு சூதாட்டம் அதை முறைப்படி கற்றுக்கொண்டால் லாபத்தில் விளையாடலாம். கொஞ்சம் தெரிந்ததுமே எல்லாம் தெரிந்துக்கொண்டேன் என்று இருமாப்பு இல்லாமல் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றுதான் எனக்குப் படுதுபா என்றேன். .......
நீ சொல்லரதும் சரிதாம்பா...... ஆமாம் சுவிஸ் வங்கில இந்தியாவிலிருந்து மட்டும் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணமா டிபாசிட் செஞ்சு இருக்காங்கலாமே, நம்ம அரசாங்கம் இதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருமா?

இங்க பாரு இப்படி எல்லாம் வம்புல மாட்டிவிடக்கூடாது.. இதெல்லாம் நடக்குறக் காரியமா? அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் இந்தியாவிற்கு இல்ல, இல்லவே இல்லை...... அவரும் தலை ஆட்டிகொண்டே சென்றுவிட்டார், நானும் எஸ்கேப்

Sunday, March 29, 2009

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் ஒருவர், அவர் படித்த கதை ஒன்றை என்னோடு பகிந்துக்கொண்டார். அந்த ஊரில் ஒரு மகான் யோகாவில் தேர்ந்தவர், அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பவர். பலர் அவரிடம் வந்து எனக்கு யோகா சொல்லிதாருங்கள் என்று கேட்டுப்பார்த்தனர். அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒதுங்கிவிடுவார். அந்த ஊரில் ஒருவன் எப்படியாவது அவரிடம் யோகா கற்றுகொண்டு விடலாம் என்று தீவிரமானான். அவரிடம் சென்று சில நாட்கள் உங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக் கொடுங்கள் என்று கேட்டான். அவரும் சிறிது யோசனைக்கு பிறகு சரி என்று ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்த மகான் செய்யும் யோகாவை கற்றுகொண்டு விடலாம் என்பதுதான் அவன் திட்டம். அந்த மகான் விடியற்காலையில் எழுந்தார் காலை கடன்களை எல்லாம் இனிதே முடித்தார், பின் சிறிது நீராகாரம் அறிந்திவிட்டு தன்னுடைய வயல்வெளிக்கு வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு மதியம் உணவிற்கு வீட்டுக்கு வந்தார்; நன்றாக சாப்பிட்டார் பின் சிறிது தூக்கத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சென்றார்; மலையில் சிறிது தூரம் நடை பின் சாப்பாடு அதற்கு பின் நன்றாக தூங்கினார்; இதேபோல் மறுநாளும் தொடர்ந்தது. யோகா கற்றுகொள்ள வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இவர் ஒன்றும் யோகா செய்யவில்லையே பின் எதற்காக ஊர்மக்கள் இவரை யோகாவில் சிறந்தவர் என்று கூறுகின்றனர். ஆழ்ந்த குழப்பத்திற்கு பின் அவரிடமே கேட்டான்.

அதற்கு அவர் சிறிது புன்முருவலுடன், யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும். மனம்பொருந்தி எந்த காரியம் செய்தாலும் மனமும் செய்யும் காரியமும் வெற்றியடையும். நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன். சாப்பிடுவதானாலும் சரி; வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்... (கதை பகிர்ந்த நண்பர் குப்புசாமிக்கு நன்றி).

யோகாப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழ் உள்ள சுட்டியை சுட்டவும்


Friday, March 27, 2009

தங்கமான தங்கம்.....

தங்கமான தங்கம்...

"திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்" சென்ற பதிவில் நண்பர் ஆதவா அவர்களின் கேள்விதான் இது :
ஆதவா said...
நான் இங்க வரதே உங்களோட புரிதலான அலசல்களால்தான். ரொம்ப எளிமையா புரிய வெச்சுப்புடறீங்க. பங்கு வணிகம் குறித்த உங்கள் அலசல்கள் பிரமிக்க வைக்கின்றன.இப்போ உங்க கிட்ட ஒரு கேள்வி...தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா சார்?

இதற்கு என்னுடைய பதிலை விட மிக அழகாக தோழி உமா அவர்கள் சொல்லியுள்ளார்கள்.. பராட்டிக்கூடியது: தங்கம் விலை கண்டிப்பாக குறையும்.ஆனால் சிறிதுகாலம் ஆகும். பங்குசந்தையில் இலாபமில்லாத்தால் தங்கத்தில் அதிகமாக விளையாடுகிறார்கள்.அதனால் தான் விலையேற்றம்.பங்குச்சந்தை திரும்பினால் இதிலிருந்து பணம் சந்தைக்கு போய்விடும். அப்போது வெகுவாக குறையும் சாத்தியமிருக்கு.தங்கத்தில் சேமிப்பதும் அப்போது குறையலாம்.

RajK க்கு தங்கத்தை பற்றிய விளக்கம்: ஒரு பொருளின் விலை அது எந்த அளவு அவசியமானது என்பதை பொருத்தது இல்லை; அது அதன் கிராக்கியை பொருத்தது (Supply-Demand). இது தான் சிறிதே பயன்படும் தங்கத்தின் விலைக்கும், வாழ்வின் அவசிமான தண்ணீரின் விலைக்கும் உள்ள வேறுபாடு.தங்கத்தின் கிராக்கி அதிகமானதால், அதை எடுக்க பல இயற்கை சீரழிவுகள் நடக்கின்றன. உலகின் காலநிலையை கட்டி காக்கும், அமேஸான் காடுகளின் அழிவும் அதில் ஒன்று. இதில் காமடி என்னவென்றால், இந்த உலகத்தை காக்க அந்நாட்டில் உள்ளோர், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை குறைத்து கொள்ள வேண்டுமாம். எனது எண்ணம், தங்கம் வைரம் போன்ற வெட்டி பொருள்களை சேர்க்காதீர்.

இப்படி ஒவ்வொருவரும் தனது ஆபாரமான கருத்துகளை கூறியது பாராட்டகூடியதும் மற்றும் சிந்தனையை தூண்டி விடுகின்றது. எனக்கும் அதே எண்ணங்கள்தான்... இப்படிப் பட்ட கலந்து ஆலோசித்தல் மூலம் நமக்கு பல புரிதல் உண்டாகின்றது.. தங்கத்தின் விலைக்கும் பெட்ரோலியத்தின் விலைக்கும் எதிர் விகிதத்தில் வருகின்றது. பெட்ரோலின் விலை ஏற்றம் கண்டால் தங்கத்தின் விலை சரியும் என சொல்லப்படுகின்றது....

எனக்கும் ராஜ்K க்கு உள்ள சந்தேகமும் உண்டு, பெரும் உபயோகம் இல்லாத தங்கத்திற்கு ஏன் இந்த மதிப்பை கொடுக்கின்றார்கள்... மேலும் அரிதாக கிடைக்ககூடிய பொருளை மையமாக கொண்டு பொருளாதாரம் கணக்கிடப்படுவதும் ஒத்துகொள்ள வேண்டியதாகின்றது... ஆனால் பெரும்பாண்மையான தங்கம் ஆபரணங்களாகவே இருப்பது சரியான நிலைபாடை கொடுக்க முடியுமா என்பதும் கேள்வி?

கீழே உள்ள படம் மின் அஞ்சலில் வந்தது..... தங்கத்தின் மதிப்பு உங்களுகே புரியும்:

இப்படி பல கோடி மதிப்புள்ள தங்கம் மக்கள் மத்தியில் புதைந்துள்ளது, இதனால் அரசிற்கு எந்த விதமான லாபமும் இல்லை... ஒரு முறை செய்திகள் வாயிலாக கேட்ட ஒன்று,... தாய்லாந்து நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை சென்றது. பேங்ராப்ட்(Bankrupt) ஆகும் நிலையை அடைந்தது. (Bankrupt தமிழில் வங்கி நோடிப்பு நிலை அல்லது ஓட்டாண்டி) . அப்பொழுது அரசு மக்களிடம் கேட்டது நம் நாட்டின் பொருளாதாரம் சீர்ப்படுத்த வேண்டும் என்றால் உங்களின் உதவி தேவைப்படுகின்றது, உங்களிடம் உள்ள ஆபரணத் தங்கங்களை அரசுக்கு கொடுத்து உதவுங்கள்.. அரசு மீழ்ச்சியடைந்த பிறகு திருப்பித் தருகின்றோம் என்று கோரியது. அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பை பெற்று மீண்டு பொருளாதாரம் மீழ்ச்சியடைந்தது. மக்கள் தம்மிடம் உள்ள ஆபரணங்களை கொடுத்து உதவினார்கள், இன்று வரலாற்றில் சாதனை பட்டியலில் உள்ளதாம்.

மற்றொன்று ஓகோன்னு இருந்த நாடு ஐஸ்லாந்து, தீடீர் என்று ஒருநாள் நாடே Bankrupt க்கு வந்துவிட்டது. இது வரலாற்றில் மனிதன் சிந்திக்க வைத்த நாளாகும். உலகநாடுகளின் உதவியால் இன்று வளர்ந்துகொண்டு உள்ளது..... இப்படி உலகம் பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கங்களை சந்தித்தவண்ணம் இருக்கின்றது. இப்படி ஒரு நிலை இந்தியாவிற்கு வந்தால் நாம் நாட்டு மக்களிடம் இது போன்ற பொருப்புணர்வு வருமா? என்ற கேள்வியும் வருகின்றது. நம் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்துள்ளதால் மோசமான நிலை எப்பொழுதும் ஏற்பட வாய்பே இல்லை என்பது உண்மை. அப்படிப்பட்ட விவசாயத்திற்கு அரசாங்கம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நம்முடைய வேதனை...
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Thursday, March 26, 2009

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்

திருப்பி பார்த்த பதிவு.... சின்ன சின்ன சிதறல்கள்

வணக்கம் நண்பர்களே!.. ஏதாவது பதிவிலே எழுதலாம் என்றால் ஒன்றும் அழுத்தம் வரவில்லை.. அப்படியே நட்புகளின் பதிவை பார்வையிட்டுவிட்டு (படித்துவிட்டுதாங்க) அப்படியே கொஞ்சம் செய்திதாளிகளிலும் கவணித்தேன்... அமேரிக்கா அதிபரின் வேண்டுகோள் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று வங்கிகளுக்கு ஒபாமா கண்டிப்பு வரவேக்க வேண்டியதாக இருக்கின்றது. நம்ம பதிவின் சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்... அழுத்தமும் வேண்டுகோள்களும் தெரிகின்றது. ஒபாமாவின் வேகமும் பொறுப்பான செயல்களும் உலகசந்தை உந்துதல் பெற்றுவிடும் நம்பிக்கை தெரிய ஆரம்பிக்கின்றது. அமேரிக்காவின் செயல்பாடுகளால் இந்தியாவின் பங்கு சந்தையும் சிலநாட்களாக புத்துயிர்பெற்று வருகின்றது. வேகம் மெதுவாக இருந்தாலும் ஆரேக்கியமான உயர்வாக தெரிகின்றது என்று வல்லுனர்கள் சொல்கின்றனர்....

மன்னிக்கனும் நண்பர்களே காதலையும் காமடி அரசியலைமே சொல்லி இளஞர்களை மந்தப்படுத்த வேண்டாம் என்றுதான் எதார்தமான அலசல்களும் வேண்டும் என்று சிதறகளையும் உங்களிடம் கொண்டு வருகின்றேன்.. பங்குகள், வர்த்தகம் என்று புரியாது போல இருந்தாலும் நாம் காலந்தோசித்தால் புரிதல் வரும் என்ற நம்பிக்கையுள்ளது... வளர்ந்துவரும் வர்த்தகம் பற்றி சேதுராமன் சாத்தப்பன் கூற்றையும் கவணியுங்கள்... அமெரிக்க நடவடிக்கையால் மெதுவாக முன்னேறுகிறது பங்குச் சந்தை- சேதுராமன் சாத்தப்பன் - (புள்ளிகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சும்மா படித்துவிட்டு போங்கள் சமயம் வரும்போது கன்டிப்பாக நமக்கு உதவும்)

சந்தை முன்னேறுகிறது; மெதுவாக முன்னேறுகிறது; 10,000 புள்ளிக்கு அருகில் சென்று முத்தமிட்டு கீழே இறங்கி வந்து விட்டது. ஏறு மயில் ஏறு என்கிறபடி கடந்த 15 நாட்களாக ஏறிக்கொண்டே இருக்கிறது.முக்கிய காரணம் என்ன? உலகளவில் சந்தைகள் மேலே சென்றது தான். ஏன் மேலே சென்றன? அமெரிக்காவின் பேக்கேஜ் தான் காரணம். அமெரிக்கா, தனது நாட்டிலுள்ள கம்பெனிகள், வங்கிகளின் பொருளாதார சிக்கல்களை தீர்க்க, பேக்கேஜ் மேல் பேக்கேஜாக அறிவித்துக் கொண்டே இருக்கிறது.அது, அங்கு சந்தைகளை மேலே கொண்டு சென்றன. அதனால், குறிப்பாக இந்திய சந்தைகளும் ஒரேயடியாக மேலே சென்றன. மும்பை பங்குச் சந்தை 457 புள்ளிகள் மேலே சென்றது.நேற்று முன்தினம் சந்தைகள் மேலேயே தான் துவங்கின. பின்னர், மேலும், கீழுமாகத் தான் இருந்தது. முடிவாக, 47 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. டாடாவின் நானோவை பார்த்த அனைத்து வெளிநாட்டினரும் பாராட்டியதும் சந்தைக்கு காலையில் ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் தந்திருக்கும். ஆனால், அது பின்னர் நீடிக்கவில்லை.நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. பின் மேலே சென்றது. ஒபாமா விடுத்த அறிக்கையாலும் சந்தைகள் மேலே சென்றன. இருந்தாலும், சந்தைகள் நேற்றைய தினம் மேலும், கீழும் இருந்தது. இதற்கு வேறு ஒரு காரணம் என்னவென்றால், இன்று முடிவுபெற இருக்கும் டிரைவேட்டிவ் சந்தைகளின் முடிவுகள் தான்.மெட்டல், கட்டுமானத்துறை, வங்கித்துறை ஆகியவை மேலே சென்றன. டி.எல்.எப்., கட்டுமானக் கம்பெனியின் நான்கு புதிய மால்கள், தீபாவளிக்குள் திறக்கப்படும் என்று தெரிவித்திருப்பதால் அந்த கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன. கச்சா எண்ணெய் விலை கூடிவருவதால் அது சம்பந்தப்பட்ட பங்குகள் மேலே சென்றன.இறுதியாக மும்பை பங்குச் சந்தை 196 புள்ளிகள் கூடி 9,667 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 45 புள்ளிகள் கூடி 2,984 புள்ளிகளுடனும் முடிந்தது. கடந்த ஒன்றரை மாதத்தின் அதிகபட்சத்திற்கு சென்றுள்ளது.டாலர் மதிப்பு: டாலர் மதிப்பு சிறிது சிறிதாக வருங்காலங்களில் குறையும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். பெரிய அளவு குறைவு உடனடியாக இல்லாவிடினும் சிறிது சிறிதாக இருக்கலாம். குறைவதற்கு இன்னொரு காரணம், ஏற்றுமதியாளர்கள் பயத்தில் சேமித்து வைத்திருந்த டாலர்களையெல்லாம் விற்று ரூபாய் ஆக்கியது தான்.டாலர் மதிப்பு கூடும் போது எல்லாவற்றையும் டாலர் அக்கவுன்டில் வைத்திருந்தனர். மதிப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று தெரிந்ததும் உடனடியாக விற்றுக் காசாக்குவோம் (ரூபாயாக்குவோம்) என்ற நினைப்புத் தான் பலருக்கு.தங்கம் தங்கமாகவே உறுதியாக இருக்கிறது. 15,000 அளவிலேயே இருக்கிறது. பங்குச் சந்தை மேலே செல்வதாலும், கச்சா எண்ணெய் மேலே செல்வதாலும் தங்கத்தில் இருக்கும் முதலீடுகள் சிறிது மாறவாய்ப்புகள் உள்ளன.ஒரு காலத்தில் நிறுவனங்களுக்கு தலைவராவது என்றால் அனைவருக்கும் மிகவும் விருப்பமாக இருந்தது. ஆனால், சத்யம் விவகாரத்திற்கு பின், நிறைய நிறுவனங்களின் தலைவர்கள் விலகி வருகின்றனர். விலகுபவர்களிலும் 90 சதவீதம் பேர் உடல்நிலை சரியில்லை என்ற காரணம் காட்டி விலகுகின்றனர். 200 பேர் வரை சமீபத்தில் விலகி உள்ளனர்.கடந்த 9ம் தேதி அன்று சந்தை கடந்த மூன்று ஆண்டின் கீழ் நிலையை எட்டியிருந்தது. அதாவது 8,160 புள்ளிகளை. தற்போது 9,667 புள்ளிகளை எட்டியுள்ளது. 17 நாட்களில் 18 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. அது தான் பங்குச் சந்தை. சந்தையை சிறிது நாட்களாக பார்க்காதவர்கள், பேசாதவர்கள் எல்லாம் மறுபடி பார்க்கத் துவங்கி விட்டனர், பேசத் துவங்கிவிட்டனர். வடிவேலு பாணியில் சொல்லப்போனால், வந்துட்டாங்கய்யா, வந்துட்டாங்கய்யா... என்று சொல்லலாம்.



இந்த வாரத்தில் அழுத்தம் அதிகமாகவே செய்திகளில் தெரிகின்றது. இந்தியாவின் பணவீக்கம் படுவேகமாக குறைந்துள்ளது. இதனால் பலருக்கு லாபமும் சிலருக்கு படும்பாதிப்பும் உண்டாகியுள்ளதும் செய்திகளில் அழுத்தம் புரிகின்றது... பணவீக்கம் மேலும் குறைந்து 0.27 சதவீதமாகியது மேலும் பணவீக்கம் பூச்சியமாக வாய்புள்ளதாக கூறுகின்றனர். பணவீக்கம் மேலும் குறைந்திருப்பதை அடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நண்பர்களே! ரொம்ப அலுப்படைய செய்கின்றேன் மன்னிக்கவும்... நாட்டின் தூண்கள் நாம்தானே... புரிந்துகொள்ளலாமே என்றுதான்,. மற்றும் ஒரு வேடிக்கை நம்ம பதிவின் மிக பெரிய அழுத்தம் நான் வேடிக்கையாக கூறியது... இன்றைய செய்தி விலை வீழ்ச்சியால் ஆடுகளுக்கு தீவனமாகும் தக்காளி

பாலமேடு : தக்காளி விலை கடும் வீழ்ச்சியானதால் பாலமேடு பகுதியில் விவசாயிகள் ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி தற்போது ரூ. 2க்கு விற்கப்படுகிறது. கூலி ஆட்களுக்கு சம்பளம் தரக்கூட பணம் கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து பாலமேடு விவசாயி ராமன் கூறியதாவது, கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ ரூ. 2க்கு விற்கிறது.மதுரை மார்க்கெட் கொண்டு சென்றால் வியாபாரிக்கு கையில் இருந்து கமிஷன் கொடுத்துவிட்டு வரும் நிலை உள்ளது. ஆனையூர், மதுரை உழவர் சந்தை சென்றால் அங்குள்ள வியாபாரிகள் விவசாயிகளுக்கு இடம் தர மறுத்து விரட்டுகின்றனர். இதனால் சந்தைக்கு வெளியில் ரோட்டு ஓரங்களில் விற்க வேண்டியுள்ளது. கூடை ஒன்றுக்கு பறிப்பு கூலி, கூடை செலவு, பஸ்சில் "லக்கேஜ்' என 20 செலவாகிறது. ஆனால் கிடைப்பதோ ரூ. 16 மட்டுமே. இதனால் செடியில் பழுத்துள்ள தக்காளி பழங்களை ஆடு, மாடுகளுக்கு உணவாக்கி வருகிறோம். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் கூறினார்.
இப்படி பல சிதறல்கள் என் கண்ணில் பட்டன இதை உங்களுள் பகிர்வதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி நம்மால் ஒரு வளர்ச்சியை கொடுக்க முடியும் நம்பிக்கை உருவாகும்.... சென்ற பதிவில் நண்பர் சொல்லரசன் பின்னூட்டத்தில் கூறியவையும் நம்மை சிந்திக்க வைக்கின்றது. (போன முறை தக்காளி போட்ட ராமசாமிக்கு நல்ல லாபம் என்று குப்புசாமியும்,கந்தசாமியும்,முருகுசாமியும்,சிவசாமியும்,பத்து கிலோ தேவைபடும் சந்தைக்குக்கு ஜம்பது கிலோ தக்காளி கொண்டுபோன அவர்களுக்கு திண்டாட்டம்,வாங்குபவருக்கு கொண்டாட்டம்.அதற்க்கு பதில் ஆளுக்கு இரண்டு கிலோ தக்காளி கொண்டுபோனால் திண்டாட்டமும் இல்லை கொண்டாட்டமும் இல்லை.இதுதானுங்க சமச்சீர் நடக்குமா இந்தியாவில்.) நன்றி சொல்லரசன் .
கருப்பு பணத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் வந்தபொழுது சொல்லரசன் பதிவு நன்றக உள்ளது..... அதை பார்வைக்கு கொடுக்க
சரி சரி... பதிவு நீண்டுகொண்டே போகுது மன்னிக்கவும்.... அடுத்த முறை பல்சுவையாக பார்க்கலாம்.....
அன்புடன்..
ஆ.ஞானசேகரன்

Monday, March 23, 2009

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு....

பணம் பத்தும் செய்யும்....
பணம் பாதாளம் மட்டும் பாயும்....
பணம் என்றால் பிணமும் வாய்பிளக்கும்....

இப்படிதான் என்னைபோல் சாமானியர்கள் பணத்தின் மதிப்பை கணக்கிடுகின்றோம். உண்மையில் பணத்தில் மதிப்புதான் என்ன? அதை யார் நிர்ணயம் செய்கின்றார்கள்? பணத்தின் மதிப்பு கூடுவதும் குறைவதும் எதனால்? பணமதிப்பு கூடுவதினால் என்ன லாபம்? குறைவதனால் என்ன லாபம்? இப்படிதாங்க பல கேள்விகள் என்னிடத்தில்........

பணத்தின் முக்கிய பங்கு வணிப மாற்றம். பொருள்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் அவற்றுக்காக பயன்படும் அலகு பணம். அதாவது பணத்தின் மதிப்பு. பண்டைகாலங்களில் வாணிபம் பண்ட மாற்று முறையில் நடைப்பெற்றது. இன்றும் தமிழகத்தில் பல இடங்களில் வயல்வெளியில் வேலைச் செய்பவர்களுக்கு கூலியாக அந்த வயலில் விளையும் பயிர்மணிகள்தான் கூலியாக கொடுக்கப்படுகின்றது. கிராமங்களில் கடைகளில் இட்லி, தோசை, பயிறு வகைகள் வாங்க அதற்கு பதில் நெல்மணிகள் கொடுத்து வாங்குவார்கள். வயல்வெளிகளில் நெற்கதிர் அறுவடைச் செய்து எடுத்து செல்லும் பொழுது சில கதிர்கள் கீழே விழுந்துவிடும். அவற்றை என்னை போன்ற சிறுவர்கள் சேர்த்து எடுத்து கடையில் கொடுத்து திண்பட்டம் வாங்கிச் செல்வதும் உண்டு... இதே போலதான் வாணிபம் பண்டமாற்று முறையில் நடைப்பெற்றது....

பண்டமாற்று முறைக்கு பின் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. நாணயத்தின் மதிப்பு அவற்றை செய்யும் உலோகத்தின் மதிப்பை கொண்டு கணக்கிடப்பட்டது. அதன்படி தங்க நாணயம் வெள்ளி, செம்பு, பித்தளை, அலுமிணிய நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது.

இதற்கு அடுத்ததாக கடன்நாணயமாக பணம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி தங்கத்தை உருக்கி நாணயம் செய்வதற்கு பதிலாக தங்கத்தை அரசு இருப்பில் வைத்துக்கொண்டு அதன் மதிப்பிற்கு ஏற்றவாறு தாளில் உத்தரவாதமாக கொடுக்கப்பட்டதுதான் இன்று நாம் பயன்படுத்தும் பணம்....

இப்பொழுது தெளிவாக புரிகின்றது... ஒரு பணத்தின் மதிப்பு அரசால் இருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பை பொருத்தது என்று. இப்படி பணத்தின் மதிப்பு உலக வங்கியின் பார்வையில் நிர்ணயம் செய்யப்படுகின்றது. தங்கத்தின் இருப்பு குறைவானால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடும். இப்படிதான் அடிப்படை பணமதிப்பு கணக்கிடப்படுகின்றது..

பொதுவான பணமதிப்பை பற்றி புரிந்துக்கொண்டோம். இன்று நாம் பார்க்கும் பணமதிப்பு ஒவ்வொரு நாளும் மேலும் ஒவ்வொரு வினாடியும் ஒரு நாட்டின் பணமதிப்பு ஏற்றம் இறக்கம் காண்பது எதனால்? ஒரு நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியின் குறியிடை பொருத்து கணக்கிடப்படுகின்றது. ஒரு நாட்டின் உலக வர்த்தக மையத்தில் நடைபெரும் பாங்கு வர்த்தனையை பொருத்து அன்று மற்றும் அந்த நிமிடத்தில் அந்த நாட்டின் பணமதிப்பு கணக்கிடப்படும்.. இதுதான் ஒவ்வொரு நாளும் நடைபெரும் பணமதிப்பு கோட்பாடு... இந்தியாவின் உலகவர்த்தக மையம் மும்பையில் உள்ளது. அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் நூயார்கில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் எப்படி பணமதிப்பு கணக்கிடப்படுகின்றது என்பதும் புரிந்தது. பணமதிப்பு கூடுதல் குறைதல் எதனால்? ஒருநாட்டின் இறக்குமதி குறைந்து ஏற்றுமதி அதிகமானால், ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் மதிப்பும் அதிகமானால் அந்த நாட்டின் பணமதிப்பு கூடும். அதேபோல் ஒருநாட்டின் இறக்குமதி அதிகமாகவும், ஏற்றுமதி குறைவாகவும் இருந்தால் அந்த நாட்டின் பணமதிப்பு குறையும் என்பதும் புரிந்திருக்கும். இதுதான் பொதுவான காரணிகள் மேலும் உற்காரணிகள் பல உள்ளது. அவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள பொருளாதாரம் பற்றிய ஆய்வு தெரிய வேண்டும். நம்மை போன்ற சாமானியனுக்கு இந்த அளவு போதும் என்றே தோன்றுகின்றது.. மேலும் வல்லுனர்கள் யாரேனும் சொன்னால் நல்லது.

சிலசமயம் அந்த நாடே வேண்டுமென்றெ பணமதிப்பை குறைக்கும். இதேபோல் இந்தியாவில் நரசிம்மராவ் பிரதமராக இருக்கும் பொழுது இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த பொழுது பண மதிப்பை குறைத்துள்ளனர். நம்முடைய பணமதிப்பு குறைவானால் நாம் விற்கும் பொருளும் குறைந்த விலைக்கு கிடைக்கும் அதனால் ஏற்றுமதி அதிகமாகி அன்னிய செலவாணி அதிகமாகும். இதனால் சிறுக சிறுக நம் பணமதிப்பும் அன்னிய செலவாணியும் அதிகமாகும் என்பதாக கணக்கிடப்பட்டது.... இது எந்த அளவிற்கு வெற்றி பெற்றது என்பது தெரியவில்லை. இந்த முறையை முதல்முதலாக பயன்படுத்தியது இந்தியாதான்.....

உலக பொருளாரத்தில் முன்னனியில் உள்ள நாடுகளில் முக்கியமாக அமேரிக்கா ஐரோப்பிய நாடுகள். ஒரு நாட்டின் நிலையான பொருளாதாரம் அந்த நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் விவசாயம் என்பது மறுக்க முடியாது. ஏனோ தெரியவில்லை இந்தியா ஒரு விவசாய நாடாக இருந்தும் விவசாயத்திற்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை.. இதுதான் நாம் நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கின்றது.. நம் நாட்டின் வளங்களை முறையாக பயன்ப் படுத்தினால் உலகநாட்டிற்கே சோறுபோடமுடியும்.......

இந்த சாமானியனுக்கு தெரிந்தமட்டும் சொல்லியுள்ளேன். இதுவே சரி என்று சொல்லவில்லை. சரி என்று சொல்லும் அளவிற்கு பொருளாதாரம் படிக்கவில்லை. நண்பகளே உங்களுக்கு தெரிந்தவற்றையும் தவற்றையும் பின்னுட்டதில் கூறவும்...
மீண்டும் உங்களுள்
ஆ.ஞானசேகரன்.....

Saturday, March 21, 2009

சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?

சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பணவீக்கம் அதிகமாகுமா? பணவீக்கம் குறைந்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?

என்ன கொடுமைசார்..... மழைவந்தால் விவசாயிக்கு கொண்டாட்டம், துணி வெளுப்பவனுக்கு திண்டாட்டம்; அதுவே வெயில் அடித்தால் துணி வெளுப்பவனுக்கு கொண்டாட்டம், விவசாயிக்கு திண்டாட்டம்....... மக்கள் அன்றாடும் பயன்படுத்தும் பொருள்களின் விலை ஏற்றம் இறக்கம் கொண்டு கணக்கிடும் பணவீக்கம் தற்பொழுது இந்தியாவில் 0.44 சதவிகிதமாக உள்ளதாம். இதனால் சாமானியனுக்கு லாபம் உள்ளதா?

சாமானியனுக்கு வாங்கும் சக்தி அதிகரித்தால் பொருளின் விலை ஏற்றம் காணும், எற்றம் கண்டால் பணவீக்கம் அதிகமாகுமாம்... பணவீக்கம் அதிகமாகுவதும் குறைவதும் சமசீர் தன்மை வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்லுகின்றனர். அதுதாங்க அரிசி விலை ஏற்றம் கண்டால் விவசாயிக்கு நல்ல லாபம் கொடுக்கும், அதுவே அரிசி வாங்கும் சாமானியனுக்கு விலை ஏற்றம் கடுமையாக்கும்... சாமனியனுக்கு வாங்கும் சக்தியும் தேவையும் அதிகமானால் விலை ஏற்றம் காணும்; அந்த விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகப்படுத்தும்..

பணவீக்கம் என்றால் என்ன? சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை இந்த ஆண்டும் 105 ரூபாய்க்கு வாங்கினால், 5 சதவீதம் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இது போல, பல பொருட்களை வைத்து ஒவ்வொரு வாரமும் அரசாங்கம் பணவீக்கத்தைக் கணக் கிட்டு அறிவித்து வருகிறது.(செய்தி தினமலர்)

சாமானியனுக்கு கார்வாங்கும் சக்தி அதிகமானால்; தேவையும் அதிகமானால் கன்டிப்பாக விலையும் ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றத்தால் பணவீக்கம் அதிகமாகும். அப்போ சாமானியனுக்கு வாங்கும் சக்தி வரக்கூடாதா?.... வாங்கும் சக்தியும் வேண்டும் விலையும் ஏற்றம் காணக்கூடாது.... எனக்கும் புரியவில்லை சார்... சாமானியனுக்கு காரின் விலை குறையவேண்டும் என்றால் கார் உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும் அதே வேலையில் செலவினமும் குறைக்கவேண்டும், அப்போ சாமானியனின் சம்பளம் குறையும் வேலை பழு அதிகமாகும்... இதனால் சாமானியன் வாங்கும் சக்தியை இழப்பான்...... ஹிஹிஹீ தலை சுற்றுகின்றது..

ஒரு முறை தக்காளி சாகுபடி அதிகமானது, அதனால் தக்காளியின் விலை சரிந்துவிட்டது... இது தக்காளி வாங்கும் சாமானியனுக்கு மகிழ்ச்சி.. ஆனால் சாகுபடி செய்த விவசாயிகோ பெரும் பாதிப்பை கொடுத்தது.... தக்காளியை நகரங்களுக்கு கொண்டு செல்லமுடியாமல் விளைநிலங்களிலேயே போட்டு அழித்தனர்... என்ன வேடிக்கை... உண்மைதான் நகரங்களுக்கு கொண்டுசெல்லும் செலவு தக்காளியின் விலையை விட அதிகமாக இருந்தது.. இதே போல் பல முறை நடந்துள்ளது...

அமேரிக்கா காடுகளில் விளையும் ஆப்பில் உலக நாட்டில் உள்ள அனைவருக்கும் போதுமானதாம் ஆனால் அதை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்லும் செலவினம் அதிகமாகின்றது... பொதுவா என்னதான் செய்ய வேண்டும்? ஆய்வாளர்கள் சொல்வது சமசீர் வேண்டும்....

ஒரு பொருளின் விலை ஏற்றமோ; அல்லது விலை இறக்கமோ சமசீராக இருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பது ஓரளவிற்கு புரிகின்றது.. இதற்காக நாட்டின் உற்பத்தியையும், தேவையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதை வருகின்ற அரசு கவனத்தில் கொண்டால் நாடும் நாமும் சிறப்பாக இருக்கும் என்பது உண்மை......

மேலும் இது தொடர்பான செய்தி சுட்டியை சுட்டவும்

என்று அன்புடன்
ஆ.ஞானசேகரன்....

Thursday, March 19, 2009

சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்...

சாமானியனின் சத்தம் சந்தைக்கு வந்தால்...

உலகமயமாக்கல் பொருளாதார மந்தநிலை, சென்ற முறையை விட இன்று உலகெங்கிலும் பெருவாரியாக பாதிப்பை உணர்கின்றனர். இந்தியாவிலும் பல இடங்களில் மக்கள் உணர்கின்றனர் என்பது வருத்தப் படக்கூடியது. இந்தியாவில் உணரப்பட வேண்டிய அவசியம் இல்லை, "என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்" இப்படி இந்தியநாட்டின் பொருளாதாரத்தை உலகமயமாக்கலில் அடகுவைத்த காரணம்தான் இந்த பொருளாதார மந்தநிலை உணரப்படுகின்றது. அதுஷ்டவசமாக இந்தியாவின் நிலை 51%, 49% என்பதால் இந்த மந்தநிலையிலிருந்து தப்பித்து கொள்கின்றோம். இதற்கு கம்னிஸ்டுகளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சோசலிசமா? முதலாளித்துமா? என்ற போட்டியில் சோவியத் யூனியன் பிரிவுக்கு பின், சோசலிச கொள்கை சுக்குநூறானது. அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கையால் மட்டுமே உலகை நடத்தி செல்லமுடியும் என அமேரிக்கா கொக்கரிக்க.... நடந்த சம்பவங்கள்தான் இது. உலக சந்தையில் ஜப்பான் கலக்கி கொண்டிருந்தது. ஜப்பனியர்களின் உழைப்பு அவர்களால் பயன்படுத்தப்படும் கொள்கைகள் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணங்கள்.. தற்போழுது ஜப்பானிலும் இதுவரைக் கண்டிராத பொருளாதார நசிவு காணமுடிகின்றது.

ஜப்பானியர்களால் கொண்டுவரப்பட்ட கொள்கைகளில் முதன்மையானது கைசான்(Kaizen - kaizen mean continuous improvement every day, every time, every mints) ஒவ்வொருமுறையும் ஒரு முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்பது. பின் Lean மற்றும் six sigma போன்ற கோட்பாடுகளும் கைசான் லிருந்து வந்தவைகள். முதலில் Toyota கார் கம்பனியில் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை பின்பற்றிய அமெரிக்கா முதலாளித்துவம் அதை சரியான பாதையில் கொண்டு செல்லாததும் ஒரு மாபெரும் பொருளியல் மந்தநிலையை சந்தித்துள்ளது என்பது இந்த சாமானியனின் எண்ணங்கள். இதில் மாற்று கருத்து இருக்கலாம் இருப்பினும் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உற்பத்திப்பொருள்கள் பெருக வேண்டும் என்பதும், அப்படி உற்பத்தி செய்த பொருள்கள் மலிவாக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதும் எல்லோராலும் ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்..... அப்படி விற்பனை செய்யும் பொருள்களை வாங்குபவர்கள் யார்?........ கொஞ்சமும் சிந்திங்கள்!!!!!!.. நம்மை போல உள்ள சாமானியன்...... அந்த சாமானியனை சுரண்டிய முதலாளித்துவம்தான் மலிவு விலையில் விற்பனை செய்கின்றது... வாங்குபவன் சாமானியன்..

எப்படி முதலாளித்துவம் சாமானியனை சுரண்டுகின்றது?.... சரியாக செய்யப்படாத kaizan மற்றும் lean ஐ முதலாளித்துவ அதிகாரிகள் continuous improvement என்ற பெயரில் வேலையை சுலபமாக்காமல் சாமானியனுக்கு வேலைப் பழுவை அதிகப்படுத்தி வேலை வாங்குவது.. பின் சரியோ தவறோ வெலையை மேலிருந்து கீழ் செய்ய சொல்லுவார்கள்.... இதற்காக அந்த அதிகாரிகளுக்கு green belt மற்றும் black belt கொடுப்பார்கள்... அதற்குபின் அந்த அதிகாரி பதவிஉயர்வு செய்யப்படுவார்கள். பின் அடுத்து வரும் அதிகாரி மேலிருந்து கீழ் செய்த வேலையை கீழிருந்து மேல் செய்தால்தான் நல்லது என்று சொல்லி இவர்களும் அதேபோல் green belt மற்றும் black belt வாங்கி பதவி உயர்வு அடைவார்கள்.. அதை பலநாட்களாக செய்யும் சாமானியனுக்கு தெரியும் அதை பக்கவாட்டில்தான் செய்ய வேண்டும் என்று......

இப்படியாக அடுத்தடுத்துவரும் அதிகாரிகளின் செயல்களால் மன உழச்சலை சந்திக்கும் சாமானியனுக்கு மேலும் ஒரு சிக்கல். செலவினம் குறைப்பது மற்றும் லாபத்தை அதிகப்படுத்துவது இதற்காக ஒரு அதிகாரியை நியமிப்பது. இவர்கள் நன்கு படித்தவர்கள் மேலைநாடுகளில் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்தவர்கள்..... இவர்கள் செய்வது கொஞ்சம் கொஞ்சமாக சாமானியனுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை எடுப்பது பின் அதுவும் முடிந்தால் கூலியை அதைச்சொல்லி இதைச்சொல்லி குறைப்பது.. இதற்காகவும் green belt மற்றும் black belt கொடுப்பார்கள்.....

இப்படி வேலைப்பழுவால் மன உழைச்சலில் இருக்கும் சாமானியனுக்கு கூலியை குறைப்பது மேலும் ஒரு மன உழைச்சல், மற்றும் குடும்பத்தில் சிக்கல்..... இப்பொழுதான் நாம் சிந்திக்க வேண்டியது!!! இப்படிபட்ட சாமானியனால் எப்படி சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருளை வாங்க முடியும்????????? ஒரு சாமானியன் வாங்கினால்தான் ஒரு சாமானியனுக்கு கூலி கொடுக்க முடியும்.

சாமானியனிடம் பணம் புழக்கம் இருந்தால்தான் சாமானியன் வாங்கும் சக்தி இருக்கும். மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தால்தான் உலகசந்தை சிறக்கும் என்பதும் தெளிவாகின்றது. இதிலிருந்து ஏதொ ஒரு முறைகேடான கோளாரு உள்ளதை புரிந்திருக்கும்....

சாமானியன் என்று உழைப்பு சுரண்டலிருந்து விடுபடுகின்றானோ அன்றுதான் நிலையான உலகப் பொருளியல் காணமுடியும் என்பது என்னை போன்ற சாமானியனின் கருத்தாக இருக்கும்...... இதில் மாற்று கருத்து இருக்காலாம் என்நிலையில் இதுதான். மேலும் "கொடுமையிலும் கொடுமை உழைப்பு சுரண்டல்" என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...

என்றும் உங்களுள்
ஆ.ஞானசேகரன்.

Tuesday, March 17, 2009

தாலாட்டு பாடலாம்....

தாலாட்டு பாடலாம்....

குழந்தைகள் என்றால் எல்லொருக்கும் நினைவில் வருவது அவர்களின் சின்ன சின்ன சுட்டிதனம். அப்பறம் அந்த சின்னதாய் சிரிப்பு. இப்படிதான் என் குழந்தகளின் சுட்டிதனங்கள்....

குழந்தைகளைப்பற்றி சொல்லபோனால் சொல்லிக்கொண்டே இருக்கலாம். முக்கியமா இசையும் தாலாட்டும் சொல்லவேண்டியது. என் மகன் தவழும் நிலை முன்பெல்லாம் சன் தொலைக்காட்சியில் " நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டீவின் தமிழ் மாலை" என்று ஒரு இசையுடன் வரும் தற்பொழுது மாற்றிவிட்டார்கள். இந்த இசை கேட்டால் என் மகன் இசை வரும் பக்கம் திரும்பி பார்த்துவிட்டு செல்வான்.. ஒவ்வொரு முறையும் இதேபோல்தான். எனக்கு ஆச்சரியமாய் இருக்கும் எனவே என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன், அவர்களும் அந்த இசையில் ஒரு வசீகரம் குழந்தைகளுக்கு இருப்பதுபொல் தெரிகின்றது என் குழந்தையும் ஆர்வமாக கேட்கும் என்றனர்.

எனக்குகென்னவோ.. கருவுற்ற பெண்களில் டீவி பார்க்கும் பழக்கம் இருக்கும். கருவில் குழந்தைக்கு 5 மாதம் முதல் காதுக் கேட்க ஆரம்பித்து விடுமாம். கருவில் கேட்ட அந்த இசை குழந்தைக்கு பதிந்துவிட்டதால் பிறந்த பின்னும் அந்த இசை பிடித்துவிட்டதாக தெரிகின்றது.

குழந்தைகளுக்கு ஒருவிதமான மெல்லிய இசை பிடித்துவிடும். தாய்மார்கள் பாடும் தாலாட்டில் மயங்கி தூங்காத குழந்தை இல்லை என்றே சொல்லலாம். இதில் வரும் "ராரிரேரோ ராராரோ" என்ற ஒரு ராகம் தூக்கத்தை வரவைத்துவிடும்.... தாலாட்டில் தனது சொந்தம், வீரம், குடும்ப பெருமை எல்லாம் சொல்லப்படும்.. எனக்கு பிடித்த தாலாட்டு என் அம்மா அடிக்கடி பாடும் பாட்டு..

ராராரோ ராரிரரோ
ராரிரேரோ ராராரோ

யாரடிச்சார் ஏனழுதாய்
அடிச்சாரச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
கடிஞ்சார சொல்லியழு

மாமனடிச்சானோ
மல்லிகப்பூ செண்டாலே
அத்தையடிச்சாளோ
அமுதூட்டும் கையாலே (ரா..)

அடிச்சாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்துவைப்போம்
தொட்டாரைச்சொல்லியழு
தோள்விலங்கு போட்டுறுவோம்

வெண்ணையில விலங்குசெய்து
வெயிலிலே போட்டுறுவோம்
மண்ணால விலங்கு செய்து
தண்ணியில போட்டுறுவோம் (ரா..)

கொப்புக்கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய

விளக்கிலிட்ட வெண்ணையபோல்
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே! (ராராரோ..)

என் அம்மா எனக்கு பாடிய இதே தாலாட்டை என் பிள்ளைக்கும் பாடுவார்கள்...... தாலாட்டின் பெருமையை சொல்வதை விட அதை கேட்டால் தான் புரியும்....

நீங்கள் தாலாட்டு பாடியுள்ளீர்களோ இல்லையோ நான் என் குழந்தையை தூங்க வைக்க பாடிய பாடல் ஒரு சினிமா பாடல். கமல் சார் நடித்த வெற்றிப்படம் "நாயகன்" இந்த படத்தின் பாடல் "தென்பாண்டி சீமையிலே, தேரோடும் வீதியிலே" என்ற பாடல்தான். இந்த பாடலை நான் பாடி முடிப்பதற்குள் என் மகன் தூங்கிவிடுவான் (தூங்கவில்லை என்றால் தூங்கும்வரை திரும்ப திரும்ப பாடுவேன் எனவே தூங்கி விடுவான்). இந்த பாடலில் எனக்கு ஒரு சக்தி இருப்பதாக தெரியும் ஏன் என்றால் நானும் தூங்கிவிடுவேன். பல முறை நான் பாடும்பொழுது என் மகன் நீங்கள் அப்பா பாட்டை பாடவேண்டாம் என்பான் (அந்த பாட்டை அப்பா பாட்டு என்றுதான் கூறுவான்). ஏன் பாடவேண்டாம் என்றால் நான் தூங்கிவிடுவேன் என்று சொல்லுவான். என் மகனுக்கு பின் என் மகளுக்கு இதே பாடல்தான் இவளும் இந்த பாடலில் தூங்கிவிடுவாள். சில சமயம் இருவர்களும் தூங்கிவிடுவார்கள், சொல்லபோனால் எங்கள் குடும்பமே தூங்கிவிடும். எனவே அந்த பாடலுக்கு குடும்ப பாட்டு என்றே சொல்லுவோம்..

இசைஞானி இளையராஜா இசையில் ஒரு இயற்கை இருக்கும் என்பார்கள், அதை இந்த பாடல் மூலம் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது... இளையராஜாவின் முதல் பாடலே (அன்னக்கிளி படத்தில் சொந்தமில்லை பந்தமில்லை என்ற பாடல்) தாலாட்டு வகை சேர்ந்ததே......

தாலாட்டுக்கு என்றே ஒரு இலக்கியமும், கிராம மக்களின் பாரம்பரியம் மற்றும் அவர்களின் உணர்வும் தெரியும்.. இந்த நவின காலங்களில் தாலாட்டு மறைந்து வருகின்றது.... இன்று குழந்தைகளுக்கு கிடைக்காத தாலாட்டு பின் வரும் சுட்டிகளில் உள்ளது...




அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, March 16, 2009

என்னால் நம்ப முடியவில்லை!....

என்னால் நம்ப முடியவில்லை!....




படத்தை அமுக்கி யூத்புல் விகடனை பார்க்கவும்

இதற்குமுன் என்னுடைய பதிவு நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!... யுத்புல் விகடனில் குட்....Blogs ல் வந்தது என்னை மகிழ செய்தது..... இன்று இணையத்தில் மேயும் பொழுது என்ன ஆச்சரியம்... மீண்டும் குழந்தையும்; கணணியும்..... என்ற பதிவு விகடன் குட்...Blogs ல் வந்துள்ளது....

விகடன் குழுவினருக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி.......

Sunday, March 15, 2009

எனக்குள் ஆசைகள்....

எனக்குள் ஆசைகள்....

எல்லோரையும் போல எனக்கும், எனக்குள் சில ஆசைகளில் காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்பதுதான்... அதற்காக நான் எதையும் செய்யவில்லை, அப்பறம் எப்படி பெண்ணை காதலிக்க முடியும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது. அதற்காக நேரம் ஒதுக்கி காதல் செய்யதால் என்ன பயன்? அதுவும் அது உண்மையான காதலாக இருக்குமா என்பதுதான் என் எண்ணங்களும்.. பெண்கள் தானாக வந்து காதலிக்கும் அழகும் என்னிடம் இல்லை... அதுதான் எல்லோரையும் போல திருமணத்திற்கு பெண்பார்த்த பிறகு கிடைக்கும் கொஞ்சம் நாட்களில் அவளை காதலிப்பது. அதுதாங்க கடலைப்போடுவது, எல்லோரையும் போல நானும் அப்படித்தான். போனில்தான் பேச்சு, ஒருநாள் பேசவில்லை என்றால் தலையே வெடித்துவிடுபோல இருக்கும் (இருவருக்கும்) . அத பேசி, இத பேசி எல்லாமே இன்பமாக இருக்கும். நீங்கள் கேட்பது புரிகின்றது, திருமணத்திற்கு பின்னும் இப்படிதானா? ஹிஹிஹி சொல்லமாட்டேன் போங்க.. அப்படி பேசும்போதுதான் நான் என் அவளுக்காக எழுதிய இந்த ஆசைகள்... கர்நாடகவில் பிறந்து வளர்ந்தவள் தமிழ் சரியாக தெரியாவிட்டாலும் அவளால் ரசிக்க முடிந்தை என்னால் மறக்க முடியாது............

நான் கவிஞனாக ஆசை-உன்னை
வரிகளில் அடைத்து விடுவதற்காக...
நான் ஓவியனாக ஆசை-உன்னழகை
செதுக்கி வைப்பதற்காக...
நான் பிரம்மனாக ஆசை-உன்னை
மட்டுமே படைப்பதற்காக...
நான் குழந்தையாக ஆசை-உன்மடியில்
தூங்க வேண்டும் என்பதற்காக...
நான் அழவேண்டும் போல் ஆசை-நீ எனக்கு
ஆறுதலாக இருப்பாய் என்பதற்காக...
நான் கணவனாக ஆசை-உன்னை
எனக்கே சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக.......

-அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Saturday, March 14, 2009

குழந்தையும்; கணணியும்.....

குழந்தையும்; கணணியும்.....

உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, கணணி பல துறைகளிலும் புகுந்து விளையாடுகின்றது. கணணி என்றால் ஏதொ தொலைதொடர்பு துறையை சார்ந்துள்ள ஒரு பொரி என்றல்லாது; மருத்துவம், கணிதம், விவசாயம், கட்டமைப்பு துறை போன்று எல்லாத்துறைகளிலும் தனது பெரும் பங்கை அளித்து சாதனைப் படுத்துகின்றது.... மைக்ரோசாப்ட் நிர்வணம் கணணியின் திரண் மற்றும் எழிமை எல்லோராலும் பயன்படுத்தும்படி அமைத்திருப்பதுதான் இதன் பெரும் வெற்றி. தற்பொழுது பெருவாரியான நடுத்தர குடும்பங்களில் கணணி பயன்ப்படுத்துவது மேலும் ஒரு மகிழ்ச்சிதான்.


இப்படி வீட்டில் பயன் படுத்தும் கணணி குழந்தைகளும் தன் போக்குக்கு பயன்ப்படுத்தி வருகின்றனர். மேலும் முதல் வகுப்பு முதலாக கணணி பாடங்களும் சொல்லித் தரப்படுகின்றது. இப்படி குழந்தைகள் பயன் படுத்தும் கணணியில் சில பிரச்சனைகளை சந்திக்கின்றோம். உதாரணாமாக பல கோப்புகள் அழிக்கப்பட்டும், டிசிட்டல் புகைப்படம் பல கோடுகளும் வெட்டுகளும் மற்றும் அழிக்கப்பட்டும் காணமுடியும். இதனால் எரிச்சல் வரும் பின் அவர்களை பயன்படுத்த விடாமல் தடுப்பதும் உண்டு... நாம் எரிச்சல் படுவதால் எந்த பயனும் இல்லை மாறாக அவர்களுக்கு சில முக்கியமானவற்றை சொல்லிக் கொடுத்தால் இந்த பிரச்சனைகளிருந்து மெதுவாக சரி செய்யமுடியும் என்பது நானும் கண்டுள்ளேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். மேலும் உங்கள் அனுபவங்களையும் சொல்லலாம். ....

குழந்தைகளுக்கு புரியுமோ என்ற எண்ணம் வேண்டாம், நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்காமல் இருப்பதுபோலதான் இருக்கும் ஆனால் அதன் பயன் கொஞ்ச நாட்களிலே தெரிய ஆரம்பிக்கும்.. அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றனர் குழந்தை கருவில் 5 மாதத்திலிருந்தே காது கேட்க ஆரப்பித்து விடுகின்றது, எனவே நீங்கள் உங்கள் குழந்தையுடன் கருவிலே பேசுங்கள் என்று சொல்கின்றனர். மேலும் விவரம் இங்கே சுட்டி படிக்கவும்.

கணணிப்பற்றி குழந்தைகளுக்கு முக்கியமாக தெரியப்படுத்துவது "Delete" பொத்தானின் பயன்பாடுகள். இவற்றை பயன் படுத்தினால் கோப்புகள் அழிந்துவிடும் மேலும் உன்னுடைய அழகான புகைப்படம் காணாமல் போகும் என்பதை தெளிவுப்படுத்தவும். மேலும் தவறுதலாக "delete" யை அமுக்கிவிட்டால் yes or no என்ற செய்தி வரும் no என்ற பகுதியை அமுக்கவும் என்பதையும் சொல்லிவைக்கவும். மற்றொன்று அவர்கள் செய்யும் கோப்புகளை எப்படி சேமிப்பது என்பதை கண்டிப்பாக சொல்லவும். பின் "save " மற்றும் "save as" பற்றிய விளக்கமும், " save "என்பதை குறைந்த காலத்திற்கு பயன்ப்படுத்த வேண்டாம் என்பதும் "save as" பயன்ப்படுத்தி கோப்புகளை சேமிக்க கற்றுக்கொடுக்கவும். இப்படி நீங்கள் சொல்லி வந்தால் கண்டிப்பாக பயனை வெகுவிரைவில் காணமுடியும், பயம் வேண்டாம்........

நான் இணையத்தில் கண்ட ஒரு மின்பொருள் "mouse moveing record" இந்த மின்பொருளை பயன்படுத்தி என் குழந்தைக்கு நான் சொல்லிக்கொடுப்பதை பதிந்து பின் அவர்களே பார்த்து தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகமாகவும் பயன் உள்ளவையாகவும் இருக்கின்றது. இந்த மின் பொருள் இணையத்தில் இலவசமாக கிடைப்பதும் மற்றட்ட மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு மட்டுமில்லை நமக்கும் பெரிதும் பயன்படுகின்றது. அதன் சுட்டியை சுட்டி இறக்கி உங்கள் கணணியில் நிறுவி பயன் பெருங்கள்.... இங்கே இறக்கவும்>>
இதுபோன்று சின்ன சின்ன விடயங்களை கவணித்தாளே, நம் குழந்தைகள் முறையாக கணணியை பயன்படுத்துவார்கள் என்பது என் அனுபவ எண்ணங்கள். மிக முக்கியமான ஒன்று நாம் அவர்களை கவனித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை குழந்தைகளுக்கு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

குழந்தைகள் நாட்டின் தூண்கள்,
எண்ணங்களுடன்.....
ஆ.ஞானசேகரன்

Wednesday, March 11, 2009

சிறிய யோசனை,... பெரிய உபயோகம்....

சிறிய யோசனை,... பெரிய உபயோகம்....

மனித வாழ்வில் சந்தற்பச் சூழ்நிலைகளில் சிறிய உதவி மற்றும் சிறிய யோசனைகள் கூட பல நேரங்களில் ஒரு பெரிய மகிழ்ச்சியையும், பெரிதும் பயன்ப்பட கூடியவகையாக அமைந்து விடுவதும் உண்டு. ஒருமுறை நண்பர் ஒருவர் ஸ்கேனர் இருக்கின்றதா? என்று கேட்டார், நான் என்னிடம் இல்லை எதற்காக என்று கேட்டேன். விமான டிக்கட் மின் அஞ்சலில் அனுப்பவேண்டும் "ஈ டிக்கட்" ஒரு நண்பர் வீட்டில் பிரிண்ட் எடுத்துவிட்டேன். அவரிடம் ஸ்கேனர் இல்லை ஸ்கேன் எடுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டும் என்றார். நீங்கள் அப்படியே சேமித்து மின்னஞ்சல் செய்யலாமே என்றேன். அந்த தளத்தில் சேமிக்க வழிச்செய்யவில்லை அதுதான் பிரிண்ட் எடுத்தேன் என்றார்.

தற்போது விமான சேவைகள் அனைத்தும் இணையத்தளம் மூலம் நேரடியாக "ஈ டிக்கட்" பெறக் கூடிய சேவை அறிமுகப் படுத்தியுள்ளன. இதனால் பயணிகள் சுலபமாக தங்களில் பயண சீட்டை பெறப்படுகின்றது. அப்படி எடுக்ககூடிய "ஈ டிக்கட்" சில தளங்களில் சேமிக்க வழிவகை செய்யவில்லை ( பாதுக்காப்பு முன்னிட்டு என்று நினைக்கின்றேன்) . இது போன்ற சமயங்களில் PDF முறையில் சேமித்து வைக்கவோ அல்லது மின்னஞ்சல் செய்யவோ முடியும்.

ஒன்று. இந்த முறையில் டிக்கட் பக்கம் வந்ததும், டிக்கட்டை பிரிண்ட் கொடுக்கவும் பின் " Microsoft Office Document Image Writer" என்பதை தேர்வு செய்யவும் பின் பிரிண்ட் என்பதை அழுத்தவும் தற்போது save as "Tagged Imege file Format என்பதை தேர்வு செய்து சேமிக்கவும் இது ஒரு Imege file லாக சேமிக்கப் பட்டிருக்கும் இதை மின்னஞ்சல் முலம் அனுப்பி பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் மிகவும் சுலபமான வழி. இதற்கு உங்கள் கனனியில் Microsoft Office Document Imaging நிறுவப்பட்டிருந்தால் போதும். மேலும் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்
இரண்டு. உங்கள் கனனியில் ஏதாவது ஒரு PDF Creator நிறுவியிருந்தால் PDF file லாக செமித்து மின்னஞ்சல் செய்யலாம். இதுவும் ஒரு சுலபமான வழிதான். சில PDF Creator கள் இணையத்தில் இலவசமாக இறக்கம் செய்ய முடிகின்றது. இதன் மூலம் PDF file லாக சேமிக்கவும், மேலும் மின்நூல் உருவாக்கவும் PDF file லாக convet பன்னவும் இந்த மின்பொருள் பயன்படுகின்றது. இங்கே சுட்டி PDF Creator ரை இறக்கி உங்கள் கனனியில் நிறுவிக்கொள்ளலாம். இலவசமாக கிடைப்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான ஒன்று...




மேற்கண்ட விளக்கம் புரியும்படி இருக்கும் என்று நினைக்கின்றேன். நான் கணணி சார்ந்த துறையில் இல்லாததால் என்னால் முடிந்தமட்டும் எழுதியுள்ளேன்...

அன்புடன்,.

ஆ.ஞானசேகரன்.

முடியல!... முடியல!... என்னால பார்க்கவே முடியவில்லை... உங்களால்?...

முடியல!... முடியல!... என்னால பார்க்கவே முடியவில்லை... உங்களால்?...

இயக்குனர் பாலாவின் "நான் கடவுள்" பார்த்தேன் என் மனதிற்கு புலப்படாத காட்சிகள் எனவே என்னால் விமர்சிக்கும் அளவிற்கு ஞானம் இல்லை என்றே தோன்றியது. நண்பர்கள் முன் என்னால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை... உண்மையில் அகோரிகளைப் பற்றி எனக்கு புரிதல் இல்லை என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் அகோரிகளைப் பற்றி விபரங்கள் இருந்தும் என்னால் உள்மனதில் புரிந்துகொள்ள முடிவதில்லை.

என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிருந்தார். அதில் காணோளி (வீடியோ) இருந்தது, காணோளி என்றதும் அவலுடன் இறக்கம் செய்து பார்த்தேன் காசி அகோரிகளைப் பற்றிய டாக்குமென்ரியாக இருந்தது. என்னால் முழுவதும் பார்க்க முடியவில்லை. இறந்த உடலின் கையை வெட்டி எடுத்து சாப்பிடுவதாக காட்டப்பட்டுள்ளது.......... ஐயோயொ!..... என்னால் முடியவில்லை... உங்களால் முடிந்தால் இந்த காணோளியை பார்க்கவும்..

வயது வந்தவர்கள் மற்றும் சகிக்கும் மனம் உள்ளவர்கள் பார்க்கவும்........






Tuesday, March 10, 2009

ஓ பெண்ணே! நீ........

ஓ பெண்ணே! நீ........

உலக மகளிர்தினம் வந்ததும் எனக்குள்ளே ஒரு சில எண்ணங்கள்,.. பெண்மை, தாய்மை, தாய் இப்படி நினைக்குபோதே நெஞ்சாங்குளையில் ஒரு ஈர கசிவு உணரப்படுகின்றது என்பது கொஞ்சம் ஒவரா இருந்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ள என்ன வெட்கம்..... என்னால் உணரமுடிகின்றது. ஆனால் அதற்கு முன்... பெண்ணே! நீ பெண்மையை உணரப்படுகின்றாயா? என்பதுதான் முக்கிய கேள்வி ???????? பெண்ணே! நீ உணரப்படும் வரைதான் பெண்மையை உலகம் உணரும்..

பெண்ணைப் பற்றி சொல்ல வரும்போதே பெண்ணடிமை என்ற ஒரு நினைவையும் கொண்டு செல்வதும் இயல்பான ஒன்று.
உரிமை என்பது-கேட்டு
பறிப்பதும் எடுப்பதுமில்லை;-மாறாக
பகிர்வதும் உணர்வதுமே!.....

2001ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், நான் சிங்கபூரிலிருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தேன். இரண்டு வருட வேலைக்கு பின் சொந்த நாட்டை, வீட்டை பார்க்க வருகின்றேன் ஆயிராமயிரம் கனவுகளுடன். வரும்போது எல்லொரையும் போல ஒரு Hi 5 set வாங்கி வருகின்றேன். சுங்க இலாக்க அலுவலகம் முன் வந்துக்கொண்டுள்ளேன். அங்கு ஒரு இளம் நங்கை வெள்ளை சேலை இடுப்பில் ஒரு பேனாவை சொருகியுள்ளதை பார்த்ததுமே இவர் சுங்க இலக்கா அதிகாரி என்று புரிந்துக்கொண்டேன். என்னிடம் வந்து Hi 5 set ஐ பார்த்து என்ன இது என்று கேட்டு நான் சொல்வதற்குள் சார் வாங்க இது என்னானு பாருங்கோ என்று நால்வரை அழைத்து மாபெரும் குற்றம் செய்ததுபோல விசாரனை கேட்டனர். பின்னர் நான் ஒன்றும் புரியாததுபோல இதற்கு என்ன செய்யவேண்டும் என்றேன்.. அவர்கள் வரி கட்டவேண்டும் என்றனர், நான் சரி என்றேன்.. அந்த பெண் கொஞ்சம் தூரத்திலிருந்து என்னா சார்? என்று வினவ வரி கட்டி விடுவாராம் என்றனர் சலிப்புடன். என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது வேண்டும்மென்றே குழப்பம் செய்து லஞ்சம் வாங்க இருந்த அந்த இளம் நங்கையின் நாடகத்தை..... லஞ்சத்தை பற்றிக்கூட கவலைப்படவில்லை. இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த நினைவுகள்.. இந்திய நாட்டின் மக்களின் வரிப்பணத்தில் படித்துவிட்டு பொருப்புள்ள வேலையின் அதிகாரத்தில் உள்ள பெண்ணே நீ! ..... காசுக்காக கேவலமான நாடகம் ஏன்? ஒரு பெண்மையை என்னால் அப்போது உணரமுடிவதில்லை...

பெண்கள் எல்லாதுறைகளிலும் ஆண்களுக்கு இணையான சாதனைகள் படைத்து வருகின்றனர் என்ற பெருமைக்கு பின்னால் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்னால் மட்டுமில்லை பெண்மையே! உன்னாலும் ஏற்றுகோள்ள முடியாது என்பதும்(?).....

இதேபோல் 1982வாக்கில் எங்கள் ஊர் அஞ்சல் அலுவலகம் சென்று தபால் வாங்க ஐந்து ரூபாயை கொடுத்து கேட்டேன். அலுவகத்தில் உள்ள பெண் தபால் வாங்க வர தெரியுது சில்லரையா எடுத்து வரமுடியாதா? என்று கடிந்து கத்தினார். எனக்கு கோபம் வந்தது, சில்லரை இல்லை என்றால் சொல்லுங்கள் அதற்காக கத்துவது என்ன உங்கள் வீட்டு வியாபாரமா? உங்கள் வீட்டு வியாபாரமாக இருந்தால் இப்படி கத்திதான் செய்வீர்களா? என்று நானும் கொஞ்சம் கூச்சலிட்டேன். என் பின்னால் இருந்தவர்களும், இவர் எப்பொழுதும் இதேபோல்தான் கடிந்துக் கொண்டுதான் வேலைசெய்கின்றார் என்றனர். இங்கேயும் என்னால் பெண்மையை காணமுடியவில்லை. அஞ்சல் துறை, வங்கித் துறை என்பவை மக்கள் சேவையை கருதிதான் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது. அதனால்தான் பெண்களை பல பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். மக்கள் அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு எல்லாம் தெரிந்துக் கொண்டுத்தான் வரவேண்டும் என்பது அவசியமில்லை, தெரியாதவர்களுக்கு கனிவுடன் உதவ வேண்டும் என்பதற்காகதான் உங்களுக்கு வேலையும் கூலியும்... அந்த பொருப்புணர்வு இல்லாத பெண்ணே! நீ........ என்னால் இங்கும் பெண்மையை உணரமுடிவதில்லை.




அன்னைத் தெரசா, இந்திராக் காந்தி, டாக்டர் செல்வி ஜெயலலிதா, கல்பனா சால்வ்லா, சானியா மிஸ்ரா போன்ற பெண்களைபோல் சாதனைகள் செய்தாலும். பல இடங்களில் பெண்மை காணாமல் போகின்றதை நம்மால் பார்க்கவும், கேட்கவும் முடிகின்றது.








இப்படி பலர் பெண்மையின் சிறப்பை தவறாக பயன்படுத்தும் பெண்களுக்கு முன்னால் என்னால் பெண்மையை உணரமுடிவதில்லை. பெண்மையை சொல்லிச் சொல்லி பெண்ணை அடிமைப் படுத்துகின்றனர் இந்த ஆண்வர்க்கம், என்ற நொண்டி நையாண்டியை விட்டெரிந்துவிட்டு. பெண்ணே நீ!...... உங்களின் உரிமைகளை பகிர்ந்துக்கொள்!.. உணர்ந்துக்கொள்!.. இங்கே உணர்வுகள் உரவாட வேண்டுமே ஒழிய வரதட்சணை கொடுமை சட்டம் பொய்யாக வழிமாறி பாயவேண்டாம்.

பெண்ணே! நீ....
பெண்மையை உணரும்வரை.....
பெண்ணைச் சுற்றியே உலகம் வலம் வரும்...

வாழ்த்துகளுடன்....
ஆ.ஞானசேகரன்

Saturday, March 7, 2009

அவரவர் மொழியில் பேசி....

அவரவர் மொழியில் பேசி....

"மொழி" ஒருவனின் உணர்வை எண்ணத்தை வெளிப்படுத்தும் நிலை. தன் பிறப்பின் மூலம் தாய்வழியாக புகட்டிய மொழிதான் அவனின் அவளின் தாய்மொழி. தாய்மொழியை யாரும் பிறக்கும்போதே நிர்ணயம் செய்வதில்லை அது தாயின் வழிதான் பெரும்பாலும் புகட்டப்படுகின்றது. தன் தாய்மொழியை அதன் உணர்வை புரிந்துகொள்ளாதவன், அவன் தன்னையும் தன் கலாச்சரம் மற்றும் உணர்வுகளையும் புரிந்துகொள்ளாதவன் என்றுதான் அர்த்தம்.

அவரவர் தாய்மொழி அவர்களுக்கு சிறந்ததாகவும் உணர்வுகளை பரிமார எழிமையாகவும் இருக்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இதில் ஒருவர் மாற்று மொழிகாரர்கருடன் பழகும்பொழுது பொதுமொழியை அல்லது இருவருக்கும் புரிந்த மொழியை பயன்படுத்துகின்றது இயல்பான விடயம். மற்றொன்று மூன்று மேற்பட்ட பேர்கள் குழுமும்பொழுது, சில சிக்கல்களும் எரிச்சல்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்...

"சரோஜா" திரைப்பட காட்சியில் SPசரண் மற்றும் நண்பர்கள் நான்கு பேர் முக்கியமாக பேசும்பொழுது SPசரண் தெலுங்கில் பேசுவார், தெலுங்கு மற்ற இருவருக்கு தெரியாது எனவே அந்த இருவர் எரிச்சலடைவார்கள்.. இப்படி பல இடங்களில் மாற்று மொழி பேசும் பொழுது எரிச்சல் வருவது சாதாரணம் என்றே தோன்றுகின்றது. மேலும் புரியாத மொழி தொடர்ந்து கெட்கப்படும்பொழுது பல சந்தர்ப்பங்களில் எரிச்சல் வருவது எதனால்? அதை எப்படி தடுக்கலாம்?.

என் நண்பர் ஒருவர் முஸ்லீம் அவர்கள் வீட்டில் உருதுதான் பேசிக்கொள்வார்கள். அவர்களின் தாய்மொழி உருதாக இருந்தாலும் தமிழ்தான் எல்லாம். இப்படிதான் தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லீம் நண்பர்கள் நிலையும் என்றே நினைக்கின்றேன். நான் அடிக்கடி அந்த நண்பர் வீட்டுக்கு செல்வது வழக்கம், நான் இருக்கும் பொழுது எல்லோரும் தமிழில்தான் பேசுவோம். ஆனால் திடீர் என்று சொந்த கதையொ அல்லது எனக்கு தெரியக்கூடாத விடயமோ பேசும்பொழுது உருதில் பேசுவார்கள்....... இந்த நேரத்தில் எரிச்சல் வருமா? இல்லையா? உங்கள் நிலை என்னவா இருக்கும்?.... எனக்கும் எரிச்சல் வரும் நிலைதான் வரும் அதே வேலை நான் அவர்களிடம் "கொஞ்சம் காமடி கலந்து ஏன் திடீர் என்று சண்டை போடுகின்றீர்கள் சாமாதானமா பேசுங்கள்" என்று என்நிலைக்கு திருப்பிவிடுவேன்... இது எல்லா நேரங்களிலும் முடிவதில்லை பல நேரங்களில் ???????

இதே போல் மலையாளி நண்பர்கள் எனக்கு அதிகம். பொதுவாக மலையாளி இருவர் சேரும்பொழுது அவர்கள் மொழிதான் பேசுவார்கள்... கொஞசநாள் எரிச்சலும் பிறகு அனுசரிக்ககூடிய மனபோக்கும் வந்துவிட்டது. பிறகு என்ன அவர்கள் மலையாளம் பேசினால் நான் தமிழில் பதில் சொல்வேன்....

தற்பொழுது சிங்கையில் வேலை, என்னுடன் சீனர்கள் அதிகம் வேலை செய்கின்றார்கள். பொதுமொழி ஆங்கிலமாக இருந்தாலும் பல சமயங்களில் நாம் அருகில் இருக்கும்பொழுது சீன மொழியில் பேசிக்கொள்வார்கள்... சீன மொழி முற்றிலும் புரியாததால் எரிச்சல் அதிகமே வரும். அந்த நேரங்களில் சேனல் மாற்றுங்கள் என்று கையில் சைகை காட்டி காமடிப் பன்னுவேன். இதன் மூலம் அந்த எரிச்சலிருந்து விளக்கி கொள்வேன்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒருவகை உணர்வும், சத்தமும் உண்டு. பங்களாதேஷ் மொழிக்காரர்கள் பேசும்பொழுது சத்தம் அதிகமாக இருக்கும். பலசமயம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் அலைப்பேசியில் பங்களாதேஷ் நபர்கள் பேசினால் சத்தம் அதிகம் இருக்கும், போகபொகதான் புரிந்தது இது அந்த மொழியின் இயல்பான சத்தம் என்று.. இதுவும் ஒருவைகை எரிச்சலை கொடுத்தது. அலைபேசி மணிஅடித்தாலே நகர்ந்துவிடுவேன்.

எந்த அளவிற்கு மொழிப்பற்று இருக்கின்றதோ, அந்த அளவிற்கு மாற்று மொழி பேசும் பொழுது இடத்திற்கு ஏற்றவாறு எரிச்சலும் வருகின்றது என்பது உண்மையை ஒத்துகொள்ளவேண்டி வருகின்றது. இதில் நாம் தமிழ் மொழியில் பேசும் பொழுது அடுத்த மொழிப் பேசுபவர்களுக்கும் எரிச்சல் கொடுப்பதும் உண்டு.. இதிலிருந்து ஓரளவிற்காவது தவிற்பது நாம் ஒவ்வொருடைய சுயக்கட்டுப்பாடு பொது இடங்களில் வேண்டும் என்பதையும் புரிந்துக்கொள்ளவேண்டும்........

இதில் யாரையும் குறைசொல்லவில்லை..... தவிற்கபடவேண்டியதை கூறுகின்றேன்.......
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்

Thursday, March 5, 2009

தமிழே! தமிழே! மின்நூலகம்,..... ஏன் நம்மால் முடியாது?

தமிழே! தமிழே! மின்நூலகம்,..... ஏன் நம்மால் முடியாது?

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்.. என்ற தலைப்பில் தமிழ் மின்நூலகம் பற்றி அறிமுகம் செய்தேன். அதில் பெயரில்லா நண்பர் ஒருவர் நூலகம் ஒன்றை தெரியப்படுத்தினார். அவற்றை பார்வையிட இங்கே சுட்டவும் . ஈழத்து எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சியாக அந்த மின்நூலகம் இருக்கின்றது. 3129புத்தகங்கள் காண கிடைக்கின்றது. இவற்றில் ஈழத்து மக்களின் பண்பாடு மற்றும் நாகரிகம் அறிந்துக்கொள்ள நல்ல பயன் உள்ள முயற்சியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இதைப் பார்த்ததும்தான் எனக்குள் எத்தனை கேள்விகள்? தமிழே தாய்மொழியாக கொண்டு, மேலும் தாய்மொழியெலேயே கல்விப் பயின்று பெரிய பெரிய நிர்வணங்களில் பணியாற்றியும், மேலும் பெரிய பெரிய அரசு பதவிகளிருந்தும்,... தமிழ்நாட்டை வாழ்விடமாக வைத்துக்கொண்டு, நாம் ஏன் "தமிழ் மொழி மின்நூல் நூலகம்" பெரிய வடிவில் உருவாக்காமல் இருக்கின்றோம்?........ இந்தியர்கள் உலக அளவில் கணணி மற்றும் தொலைதொடர்பு துறைகளில் முன்னனியில் உள்ளார்கள் என்பதன் விளக்கம்தான் புரியவில்லை. படித்து முடித்துவிட்டு மிக பெரிய கார்ப்ரேட் நிர்வணத்தில் வேலை செய்வதைதான், நமக்கு கிடைக்கும் பேரின்பமாக நிலைகின்றார்களா? என்பதுதான் என் கேள்வியாக இருந்தது. நம்மால் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் ஏதாவது இருக்கின்றதா? அதற்காக நம் அரசும் ஏதாவது செய்கின்றதா? அங்கொன்றும் இங்கொன்றும் சாதனைகள் இருந்தாலும், சொல்லிக்கொள்ளுபடி இல்லை என்றே நினைக்க தோன்றியது.

மேலும் தமிழ்நாட்டில்தான் பெருவாரியான கணணி மற்றும் தொலைத்தொடர்பு துறை வல்லுனர்கள் அதிகம் என்றே நினைக்கின்றேன். இவர்கள் யாரோ கண்டுபிடித்த உருவாக்கிய மின்பொருளைதான் கையாள பயன்படுகின்றார்களே தவிர தான் ஒரு புதிய மின்பொருள் உருவாக்கவோ? அல்லது புதிய ஒரு கணணி சார் சாதணங்களை உருவாக்கவோ முயலாதது ஏன்? என்ற கேள்விகள் எனக்குள்ளே வந்துசென்றது.. இதற்காக இங்கே இருக்கும் தமிழ் காவலர்கள் ஊக்கப்படுத்தாமல் தன் சுயலாபத்தை மட்டுமே எண்ணமாக உள்ளதும் வருத்தப்பட வேண்டியதாகின்றது. என் எண்ணங்களில் தவறுகள் இருக்கலாம், இருப்பினும் வளர்ச்சிகளை எதிர்பார்ப்பது தவறில்லையே?...

என் ஆசைகளும் வேண்டுகோள்களும்!...... தமிழில் கோடான கோடி புத்தகங்கள் இருப்பதில் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சியடைய வேண்டியது. சிறுவர்கள் புத்தகம் முதல் இலக்கியம், கதைகள், கட்டுரைகள் போன்ற அனைத்து புத்தகங்களும் மின்நூல் வடிவில் உருவாக்குவது இயலாததுதான், இருப்பினும் ஒரு கூட்டு முயற்சியால் முடியும் என்றே தோன்றுகின்றது. யூ டியுப் போன்று ஒரு தளம் உருவாக்கி உலகில் உள்ள தமிழர்களின் கூட்டு முயற்சியால் ஒரு மிகப் பெரிய தமிழ் மின்நூலகம் உருவாக்கலாம் என்ற தமிழனின் ஆசையை வைக்கின்றேன். இதில் காப்புரிமை பிரச்சனை வரலாம் எனினும் நம்மால் இதை சாதிக்க முடியும் என்றே தோன்றுகின்றது. வலைப்பதிவர்களில் 90சதம் நண்பர்கள் கணணிசார் திரனாளர்கள் என்றே நினைக்கின்றேன், நீங்கள் முயற்சித்தால் முடியும், மேலும் சட்டம் சார்ந்த பதிவர்களின் உதவியால் காப்புரிமை பற்றிய பிரச்சனைகளையும் சமாளிக்கலாம்......

விரைவில் ஒரு மிகபெரிய தமிழ் மின்நூலகம் வேண்டி....
தமிழன் ஆ.ஞானசேகரன்.

Wednesday, March 4, 2009

தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்..

தமிழே! தமிழே!..... மின்நூலகம் உங்கள் அருகில்..
மனிதனின் கலை, பண்பாடு, நாகரிகம் அனைத்தையும் ஒன்றுசேர வைகைப்படுத்துவது என்றால் அவைகள் புத்தகங்கள்தான் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு புத்தகம் மனிதனின் வாழ்வியலில் பின்னப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டங்களில் வாழ்ந்த மனிதனின் நாகரிகம் மற்றும் வாழ்க்கை முறைகள், அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் மூலம் அறியப்படுகின்றது. நம்முடைய மூதாதையர்களின் வாழ்க்கை முறையிலிருந்து நாம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் புத்தகம் எழுதுவது, படிப்பது என்பது நம்மிடம் இன்றுவரை பழக்கத்தில் உள்ளது. இன்றும் பல பழமையான நூல்களின் மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவசரமான உலகில் நூலகம் சென்று படிப்பது கொஞ்சம் சிரமம் என்றாலும், பலர் படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.


இப்படிப்பட்ட சிரமமான சூழல்களை கருத்தில் கொண்டு, பல புத்தகம் மின்நூல் வடிவில் கொடுக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். இப்படி முயற்சி எடுக்கும் அறிஞர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்...... இதுபோல் தமிழ் இலக்கிய புத்தகங்களும் அறிஞர்கள் சிலரால் மின்நூல் வடிவில் கொடுத்து தொண்டாற்றி வருகின்றனர். இப்படிப்பட்ட தமிழ் இலக்கிய மின்நூல்கள் இணையத்தில் என் கண்ணில் பட்டவைகளை இங்கே சுட்டியுடன் இணைத்துள்ளேன், .. உபயோகப்படும் என்பது என் எண்ணம்......


மதுரைத்திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் மின்பதிப்புகள்-அகர வரிசைப் பட்டியல் கீழ் உள்ள சுட்டியை அமுக்கி தேவையான புத்தகங்களை இறக்கி, படித்துக் கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசமாக இருப்பது மேலும் மகிழ்ச்சியாகும்.....>>>இங்கே சுட்டவும்



மேலும்

முனைவர் அ.அ.மணவாளன் முன்னால் தமிழ்த்துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம் அவர்களின் தலைமையில் தமிழ் வெர்சுவல் பல்கலைக்கழகம் சென்னை சார்பில் வெளியிடப்பட்டுள்ள மின்நூலகம் இணையத்தில் மிக அழகாகவும், நுலைவாயில் பார்ப்பதற்கு நூலகம் போன்ற அமைப்பும் சிறப்பாக உள்ளது. இதில் பண்பாட்டு காட்சியகம் ஒலி ஒளி வடிவிலும் கிடைக்கின்றது. இதன் சுட்டி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.... இதன் சுட்டியை அமுக்கி எண்ணற்ற புத்தகங்களை படித்து பயன்பெறுங்கள்....>>>>இங்கே சுட்டவும் .
மேலும் பல வரலாற்று புத்தகம், கதை கவிதை புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள் பலவும் ஒருங்கே காணகிடைப்பது சென்னை நூலகம்.காம்..... இதில் உங்கள் நூல்களையும் வெளியிடலாம் என்பது தனி சிறப்பாக இருக்கின்றது. ஆனால் புத்தகங்களை இறக்கிகொள்ள முடியவில்லை மற்றும் பல புத்தகங்கள் இலவச சேவை இல்லை.... ஒருமுறை சுட்டியை சுட்டி பார்க்கவும்..... >>>>>இங்கே சுட்டவும்
புத்தக பிரியர்களுக்கு மகிழ்ச்சியும் பயனும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்..
ஆ.ஞானசேகரன்....

Monday, March 2, 2009

"பேண்ட்" அறிவேன்... "சர்ட்" அறிவேன்... "டை" கட்ட நானெறியேன்!...

"பேண்ட்" அறிவேன்... "சர்ட்" அறிவேன்... "டை" கட்ட நானெறியேன்!...
நான் படித்தது சீருடையணியும் பள்ளிதான் இருந்தாலும் "டை" எல்லாம் இல்லப்பா!.. அப்பறம் வேலையும் "டை" கட்டி செய்யுற வேலையும் இல்லை, "டை" யை பார்த்ததோட சரி. கல்யாணம் ஒருநாள் கூத்தாக யாரோ எனக்கு "டை" கட்டிவிட்டதாக ஞாபகம் அம்புட்டுதான் "டை"க்கும் எனக்கும் உள்ள தொடர்பு. ஒரு சமயம் நண்பர் ஒருவரால் "டை" கட்ட தெரிந்துக்கொண்டேன் அதுவும் இப்போழுது பேஏஏ தான்... மறந்துட்டேன்.

இப்படிப்பட்ட நிலையில்தான் வந்தது சிக்கல் என் மகன் பிறந்தநாளுக்கு ஆசையாக என் மனைவி என் மகனுக்காக "டை" வாங்கி வைத்திருந்தாள். அந்த நேரம் என்னிடம் கொடுத்து "டை"யை கட்டிவிட சொன்னாள் என்னால் முடிந்த அளவு முயற்சித்தும் முடியாமல் போனதும், என்செல்ல மகன் அடம்பிடிக்க என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும்பொழுதுதான்... கைகொடுத்தது இந்த குறும் காணோளி (வீடியோ கிளிப்). என்னை போன்று முழிப்பவர்களுக்கு இந்த காணோளி பயன்படும் என்று இத்துடன் இணைத்துள்ளேன். "டை" கட்ட மறந்தவர்களுக்கும் பயன்படும் என்பதும், மேலும் விரைவாக "டை" கட்ட சிறந்த வழியாகவும் உள்ளது..




இது போதும் இருந்தாலும் மேலும் ஒன்று......