Sunday, November 30, 2008
இனிய இயந்திரா! நேற்று மும்பையில்..
இனிய இயந்திரா! கொடுக்கப்பட்ட கட்டளையை திரம்பட செய்தவனே! வணக்கம்!...... உனக்கு இதில் ஈடுபாடு இருக்கோ இல்லையொ? முதலில் வணக்கம் சொல்லி வைத்துக்கொள்வோம். பதிமவயதில் என்னா லாவகமாக துப்பாக்கியேந்தி போர்களம் பூண்டாய். உனக்குள் இருக்கும் மூளையின் பலத்தை எப்போதாவது அறிந்ததுண்டா? உன்னால் சுடப்பட்டவர்களின் இரத்தமும் சதையும் உனக்குள் இருக்கின்றதை அறிந்ததுண்டா?
உன்னை ஏவியவன் யாரென்பதும் உன்னால் புரிந்துக்கொள்ள முடியுமா? கொடுக்கப்பட்ட கட்டளையை தவிற உனக்காக எதையாவது புரிந்துக் கொண்டதுண்டா? நீ கொன்று குவித்த மானிடத்தின் இரத்த நாளங்களின் துடிப்பில் என்ன உணர்ந்தாய்?..... உனக்காக நாங்கள் வருந்துகின்றோம்.. ஏவியவன் எங்கோ இருக்க, அம்பை என்ன செய்யமுடியும்?
உன்னில் உள்ள வேகம் எங்களிடத்தில் இல்லை என்பதை ஒப்புகொள்கின்றோம். அதற்காக நாங்கள் ஏமாந்துவிட மாட்டோம். எத்தனை உயிர்களை பறித்தாலும் உன்னால் உன்னை புரிந்துகொள்ளமுடிந்ததா? சலவை செய்த முளையில் நீமட்டும் கரைபடிந்துள்ளாய். அதனால்தான் உயிருடன் பிடிப்பட்டாய். கவலைப்படதே நீ உன்னை புரிந்துக்கொள்ளும்வரை என்தேசம் ஒன்றும் செய்யாது.
உன்னால் பலியான அதிகாரிகளின் பிள்ளைகள் உன்னைபோல ஆதரவின்றி இருப்பார்கள் என்று உனக்கு புரிந்திருக்க முடியாது. நண்பர்களின் உடல் சிதைந்துபோனதை பார்த்த பிறகுதான் நீ வாழவேண்டும் என்பதும் உணர்ந்திருப்பாய். உன்போராட்டத்தின் நோக்கமாவது உனக்கு உண்டா? தேசமே உன்னை பார்க்க வைத்த அறிவை உனக்காக செலவு செய்ததுண்டா?
உன்னை சீர்திருத்த கல்விக் கொடுத்து மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் என் தேசத்தின் செயல்பாடு. ஆனால் நீ அதை எதிர்பாக்காதே? மனித உயிரை எடுக்க யாருக்கும் உரிமையில்லைதான்... ஆனால் உயிரின் முக்கியம் உன்னை போன்றவருக்கு புரிதல் வரவேண்டும். அந்த வேதியல் மாற்றம் உன் போன்ற மூளை சலவை பெற்றவர்களுக்கு புரியவேண்டும் என்பதும் என்போன்ற இந்தியர்களின் ஆசையும்.
நீ ஏற்ற பணியின் பொருப்புணர்வு என் தேச அரசியல்வாதிகளுக்கு வந்திருந்தால், நீ வளர்ந்திருக்கவே முடியாது? நீ உணர்வற்று செய்யும் கடமையை நாங்கள் உணர்வோடு மதம், சாதி, இனம் பேயரால் புதைத்துவிட்டோம். அதனால்தான் இன்னும் நீ உயிரோடு இருக்கின்றாய்... உன்னால் ஒரு உதவிமட்டும் நீ இறக்கும் முன் உன் பொருப்புணர்வை, கடமையின் வேகத்தை என் தேசத்திற்கு விட்டு செல்.
உன்னை பார்த்த பிறகாவது என்தேச மகன்களுக்கு கடமையின் உணர்வை புரிந்திருக்கும். உன் வேகம் பார்த்த பிறகாவது உளவுதுறையின் மெத்தன போக்கும், அரசின் அலச்சியமும் புரிந்திருக்கும். நாங்கள் திறமையற்றவர்கள் இல்லை, திறமையை விற்றவர்கள்.
உன்னை நம்பி யாரும் இருக்க மாட்டார்கள். உன்னை பிடித்த என் தேச வீரர்களுக்கு குடும்பம் உள்ளது. அதையும் பொருள்படுத்தாது உன்னை வென்றாகளே அவர்களுக்கு முன் நீ ஒரு தூசிதான். எங்களின் கவனகுறைவால் நீ முளைத்துவிட்டாய்,.... இனி வரும் காலம்...........இந்திய தேசமே நீயே சொல்!
நம்மை வெல்ல இங்கே யாருமில்லை!..
மும்பையில் நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை நடந்த தாக்குதல்கள் சாதாரணம் இல்லை, இது ஒரு யுத்தம். இந்த 62மணி நேர தாக்கிதலில் 162 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் 14 போலிஸ் அதிகாரிகளும் இருவர் தேசிய பாதுக்காப்பு படை சேர்தவர்கள் பலியாகியுள்ளனர். சுயநலம் பாராது தன் உயிரையும் கொடுத்து போராடிய அதிகாரிகள் அனைவருக்கும் இந்தியனின் வணக்கங்கள்!......
மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இந்திய பாதுக்காப்பு துறைக்கு ஒரு சாவலாக அமைந்துவிட்டது. உளவுதுறையின் மெத்தன போக்கும் கவனக்குறைவும் தெரிகின்றது. உளவுதுறை நவீன உத்திகள் கையாளவேண்டிய காலகட்டதில் உள்ளது.... இனி வரும் காலத்தில் முறைப்படுத்தாமல் விட்டால் இந்தியா மறுபடியும் அடிமை சாசனம் எழுதவேண்டிவரும்.
இந்த மூன்றுநாள் போராட்டத்தில் தன்நலம்பாராது போராடிய என்.எஸ்.ஜி. கமாண்டோக்களையும், பாதுக்காப்பு படைனருக்கும் ஒவ்வொரு இந்தியனின் வணக்களும் பாராட்டுகளும்... இந்தியா என்ற மாபெரும் தொடர் நாடகத்தில் உங்களின் பாத்திரம் பெருமையை தருகின்றது. நாங்கள் ஏற்ற பாத்திரத்தின் கவனக்குறைவினால் நல்ல அதிகாரிகளை பலியிட வேண்டியதாயிற்று. இந்த போராட்டத்தில் பலியான அதிகாரிகளின் குடும்பதினருக்கு எங்கள் அனுதாபத்தை தெருவிக்கின்றோம்...
இனிவரும் காலங்களில் கடுமையான சட்டங்களும் அதிரடி நடவடிக்கையும் வேண்டும் என்பதை இந்தியாவும், அதிகாரிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சட்டம் மட்டும் போதுமான தீர்வாகாது. ஒவ்வொரு இந்தியனும் தான் ஏற்க்கும் பாத்திரத்தின் பொறுப்புணர்வை புரிந்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதியின் பொறுப்புணர்வில் பாதியளவு நமக்கிருந்தால் இந்த தாக்குதலை நாம் சந்திக்க வேண்டி இருக்காது. பயங்கரவாதிகளை எதிர்த்து எந்த பலனையும் எதிர்பாக்காமல் போராடிய வீரனின் பாத்திர பொறுப்புணர்வு அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இந்த பயங்கரவாதம் வந்திருக்காது என்பது உண்மை. போடா போன்ற சட்டங்களை சுயநலத்திற்க்கு பயன்படுத்துவதும் பொறுப்பின்மையை சொல்லுகின்றது.
இதுபோன்ற எல்லைதாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட வேண்டும். இதை ஒடுக்குவதே கொள்கையாக கொண்ட புலனாய்வு மற்றம் உளவுத்துறை ஏற்படுத்தவேண்டும். இவர்கள் அரசியல் தலையிடு இல்லாமல் சுயமாக வேலைச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் சாதி இனம், மதம் பாராது பொறுப்புணர்வுடன் நடந்துக்கொண்டால் நாளை இந்தியா நம் உள்ளங்கையில்.....
வாழ்க இந்தியா!
வாழிய மணிதிருநாடு!....
ஆ.ஞானசெகரன்.
Friday, November 28, 2008
அட போங்கடா!...
கருவேலங்காட்டு வண்ணத்துப் பூச்சிகாளாய்!..
Thursday, November 27, 2008
முழுமையான தமிழை காணமுடியுமா?.. பகுதி-2
ஆ.ஞானசேகரன்
Sunday, November 23, 2008
முழுமையான தமிழை காணமுடியுமா?..
Thursday, November 20, 2008
ம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்?..
நடிகர் பத்மஸ்ரீ கமல் அவர்கள் "மகாநதி" படத்தில் ஒரு காட்சியில் 'நல்லவர்களுகே துன்பத்தை கொடுக்கின்றதே ஏன்? அதான் ஏன்? ' என்று காதலியுடன் புலம்புவதாக அமைத்திருப்பார்கள்.... இந்த காட்சி என்னை பல இடங்களில் நினைத்துப் பார்க்க தூண்டியது.
இந்தியாவில் இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை... பல நேரங்களில் திட்டமிட்ட சதிகள் அப்பலதிற்கு வந்தாலும் அரசும், மக்களும் ஒன்றுமே கண்டுகொள்ளாதது கமலின் மகாநதி புலம்பல்தான் என்னை ஞாபக படுத்தும். இதில் பத்திகைகளில் வியாபார புத்தியை நினைதாலே கேவலமாக தோன்றும். கோரக் காட்சிகளை வரிசைப்படுத்தி மக்களை தூண்டும் விதமாகவும் உண்மைகள் திசை திரும்பவும் விதமாகவும் இருப்பதை பார்த்தால் பத்திரிகை சுதந்திரம் பாதை மாறிப் செல்வதும் தெரிந்து விடும்..
செங்கலை பார்த்தாலே எனக்கு முதலில் பொரித்தட்டுவது அயோத்தி கலவரம்தான். இந்த கலவரம் இன்றுவரை இந்தியாவின் நிம்மதியை கெடுக்கும் ஒரு நிகழ்வு. இன்றும் இதை வைத்து அரசியல் லாபம் காணும் ஓட்டு பொரிக்கிகள். அன்று என் வயசுக்க்கும் அனுபவத்திற்கும் என்னால்கூட இதை ஒரு விபத்தாக நினைக்க முடியவில்லை இதுவும் ஒரு திட்டமிட்ட சதி என்றே தோன்றியது. இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பதும் அரசியல் ஆதாயம்தான் என்று சொல்ல தோன்றாமல் இருப்பது அதிசயம்.
பின் அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்களில் கோத்ரா எனும் இடத்தில் வியாபாரிகளிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அதன் பின் ஏற்பட்ட தீ விபத்தால் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இஸ்லாமியர்கள்தான் விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது. இதை குஜராத் முதல்வர் மோடி பகிரங்கமாக இஸ்லாமியர்களை குற்றம் சாட்டி குஜராத் கலவரத்திற்கு பச்சை கொடி அசைத்தார். சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். இந்நிகவுகளை ஒரு விபத்து என்றும் அல்லது உணர்ச்சில் உண்டான நிகழ்வு என்றும் கூறினால் கண்ணிருந்தும் குருடர்களேயாகும்.
மேற்கண்ட நிகழ்வின் சந்தேகமாக கூறப்பட்ட உதாரணம் மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டான். அதே முறையை கோத்ரவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகம் என்றே நினைக்க தோன்றுகின்றது.
இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு நடந்தேறிய சீக்கிய கொலைகள். தற்போது ராகுல் காந்தி அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடதக்கது.
மெலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதன் தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக கலவரம் தூண்டி படுகொலைகளும் கற்பழிப்பும் அரங்கேற்றியது. ஒரு இன கலவரத்திற்கு முறையற்ற சுழல்களை உருவாக்கப்பட்டதும் எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதன் தொடராக கர்நாடகத்திலும் தமிழ் நாட்டிலும் மாதா கோவில்களில் கலவரம் எற்பட்டது.
இதேபோல சாதியின் பெயராலும் மதத்தின் பெயாரலும் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டு முறைகேடான அரசியல் வியபாரிகள் லாபத்தை அனுபவிற்கின்றனர். இதில் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிளக்கல்ல எனபதும் இதயத்தில் பீச்சிய துப்பாக்கி ரவை. சமிபத்தில் நடந்த சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம்....
மேற்கண்ட கொடுமையான நிகழ்வுகளை ஏன் வரும் முன் தடுக்க முடியவில்லை? திட்டமிட்ட இந்த நிகழ்வுகள் அரசு நினைத்திருந்தால் தடுக்க முடியும் ஆனால் செய்யவில்லை. நேற்றய கலவரத்தை பத்திரிகைகள் வரிசைப் படுத்தி (டிசிட்டல் போட்டொகள்) காட்டியுள்ளார்கள். தொலைகாட்சியில் பின்னனி இசையில் வெளிப்படுத்தினார்கள். இப்படி செய்து மேலும் கலவரத்தை உருவாக்கி பெருசுப்படுத்தி லாபம் சம்பாரிக்க வேண்டுமா என்ன? பத்திரிகைக்கு ஒரு தர்மம் உண்டுங்க ... குழந்தைகள் படம், பூக்கள் படம் தெளிவாக இருக்கனும் ஆனால் கோர சம்பவம் படங்கள் கொஞ்சம் தெளிவற்ற நிலையிதான் இருக்க வேண்டும். இதுதான் ஞாயமுள்ள பத்திகைகள் செய்ய வேண்டியது. (அப்படிப்பட்ட நிலையில் "இந்தியா டுடே" எழுதிய விதமும் கொடுக்கப்பட்ட படம் பாராட்டலாம்) இந்த மாணவர் கலவரம் பெரிய அளவில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே, ... வாழ்க தமிழகம்! வாழ்க தமிழர்கள்!...
இதுபோன்ற கலவரம் மற்றும் கோரச் சம்பவங்களுக்கு வேடிக்கை பார்த்த அரசு, ஒப்புகாக ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும்வண்ணம் ஒரு கமிஷன் ஏற்பாடாகும். பின் கமிஷனும் முடியாது கலவரமும் தொடரும்.. இன்னமும் அயோத்தி கலவர கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுத்தமில்லா யுகம்காண மாணவர்கள் ஒன்றுபடட்டும்!...............
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்.
Sunday, November 16, 2008
ஊக்கப்படுத்தி உச்சாகமாகலாம்...
ஆ.ஞானசேகரன்
Wednesday, November 12, 2008
மகிழ்வை கொண்டாடுவோம்!...
இயக்குனர் பாரதிராஜாவின் "கருத்தம்மா" படத்தில் பெரியார் தாசனும் சுந்தராஜனும் பேசும் வசனம் நினைவுக்கு வருகின்றது. பெரியார் தாசன் பாமர விவசாயியாக இருப்பார். சுந்தராஜன் அந்த ஊர் ஆசிரியாராக வருவார். பெரியார்தாசன் தன் மகனுடன் வயலில் வேலை செய்துகொண்டு இருப்பார். சுந்தராஜன் அவரிடம் ஏங்க உங்க மகனை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாமே என்பார். வேலைக்கு போயி என்னப்பன்னுறது என்று கேட்பார் பெரியார்தாசன். வேலைக்கு போயி பணம் சம்பாரித்து மகிழ்ச்சியா இருக்கலாம் என்பார் சுந்தராஜன். இப்ப என்ன நாங்கள் மகிழ்ச்சி இல்லாமலா இருக்கோம் போயி உன்வேலை பாரு என்று வாயடைத்து சொல்லுவார் பெரியார் தாசன்.
மகிழ்வை கொண்டாடுவோம்!....
Monday, November 10, 2008
வேலையில் குறைந்து வரும் நேர்மை! தமிழர்களிடம் தொற்றி வரும் அபாயம்....
வளர்ந்து வரும் விஞ்ஞானம், உலகமயமாக்கல், நவீன தொலைதொடர்பு உலகத்தை சுருக்கிவிட்டது. நம்ம சுப்பனுக்கும் குப்பனுக்கும் உள்ள பிரச்சனை வெள்ளை மாளிகை வரை தெரிந்துவிடுகின்றது.
நாங்கள் நால்வர் ஒருநாள் பீர் குடிக்கலாம் என்று பேசிகொண்டோம். அதில் ஒருவர் நான் வரவில்லை என்றார். அவரிடம் நான் காமடிக்காக ஒரு கதைச் சொன்னேன்....... அதாங்க எல்லோருக்கும் தெரிந்த மீன் கதை, நண்பர்கள் இருவர் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். போகும் வழியில் ஒரு குட்டையில் மீன் அதிகமாக இருந்தது. இருவருக்கும் ஒரே குழப்பம் மீன் பிடிக்கலாமா? கோயிலுக்கு போகலாமா? ஒருவன் மீன் பிடிப்பதாக முடிவெடுத்தான். மற்றொருவன் இல்லை நான் சாமி கும்பிட போரேன் என்று சென்றுவிட்டான். ஆனால் இருவரின் மனதில் எண்ண ஓட்டங்கள், மீன் பிடிப்பவன் மனதில் கடவுளின் எண்ணமே அதிகம் இருந்தது. இதில் சாமி கும்பிட போனவன் மனம் முழுவதும் மீன் பிடிப்பதிலேயே இருந்தது.
மேற்கண்ட கதையில் மனதூய்மையை அடிகோல் காட்டுகின்றது. எந்த ஒரு செயல்பாட்டிற்கும் மன ஈடுபாடும் தூய்மையும் முக்கியம். அதேபோல தொழிலிலும் நேர்மை என்பது மிக முக்கியமானது. நேர்மையற்ற முறையினால் பணம் வருவதுபோல தெரிந்தாலும் முடிவில் அந்த தொழிலே நசுங்கும்..
ஆதிமனிதனின் முதல் தொழில் விபச்சாரம் என்று சொல்லப்படுகின்றது. விபச்சாரம் என்பது எனனை பொருத்தவரை ஆண்களால் பெண்களுக்கு அழிக்கபடும் அநீதி என்று சொல்வதிற்கில்லை. இது சமுகத்தால் அழிக்கப்படுகின்றதாகவே நான் கருதுகின்றேன். காசுக்காக தான் பெண்கள் விபச்சாரம் செய்வதும், மற்றும் ஈடுபடுத்த படுவதும். இது ஆண்களால் முடியும் என்றால் கண்டிப்பாக ஆண் விபச்சாரமும் சமுகத்தில் இருக்கும் என்பது நிச்சயம். ஆண் விபச்சாரம் பற்றிய என் முந்தய பதிவு ஆண் விபச்சாரம்,........ வடிகாலுக்காக இளஞன் விபச்சாரியை தேடி வருகின்றான். பணமும் கொடுக்கப்படுகின்றது அந்த பெண் தன்னை முழுமையாக அவனுக்கு அழிக்கவில்லை என்றால் அங்கே நடப்பது ஏமாற்றம். இதை கலாச்சாரம் என்ற போர்வையில் ஞாயப்படுத்த வேண்டாம். விபச்சாரம் சரியா? தாவறா? என்று கூற வரவில்லை ( இதை சமுகம் பதில் சொல்லட்டும்) நேர்மையின்மையை கூறுகின்றேன்.
மேற்சொன்ன எடுத்துக்காட்டு விரசமாக இருந்தாலும், தொழிலில் நேர்மையின்மை பாதிப்பு உணர்வு பூர்வமாக இருக்கும் என்று நம்புகின்றேன். தமிழர்களிடம் விபச்சாரம் என்பது மிக மிக குறைவு கலாச்சாரம் என்ற போர்வையில் நடக்கும் நேர்மையின்மையும் ஒரு காரணம். இந்த தொழில் நசியுற்றால் சமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை விட்டுவிடலாம்.
ஆனால் இன்று தமிழர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வைகை தொழிகளிலும் நேர்மை குறைந்து வருவது அபாயத்தை கொடுக்கின்றது. மலேசியா, சிங்கபூர் நாடுகளில் பொதுவாக தமிழர்கள்தான் வேலைக்கு வருவார்கள். தற்போது தவிற்க படுகின்றது எனபது வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு தொழில் நேர்மையின்மை மற்றும் குற்றம் செயல்கள் முக்கிய காரணம். முன்பெல்லாம் தொலை தொடர்பு துறையில் தமிழர்கள் அதிகமாக வருவார்கள். தற்போது ஆந்திரா மற்றும் வடஇந்தியர்கள் அதிகம் காணமுடிகின்றது. இதற்கு தமிழர்கள் ஞானம் குறைந்துவிட்டது என்பதில்லை, நேர்மையின்மைதான் காரணம்.
வெளிநாட்டில் மட்டும் இல்லை, உள்நாட்டு வேலைகளிலும் நேர்மையின்மை காணமுடிகின்றது. இதை தொழிலதிபர்கள் வெளிப்படையாகவே சொல்கின்றனர். தொழிலதிபர் தமிழராக இருந்தாலும் தமிழனை வேலைக்கு அமர்த்துவதில்லை காரணம் குறைந்து வரும் நேர்மை. தமிழகத்தில் நடக்கும் கட்டிட வேலை, சாலைப்பணிகளில் வடமாநிலங்களிலிருந்து ஒப்பந்த பேரில் ஆள் எடுத்து வேலை செய்கின்றனர். தமிழ் நாட்டில் ஆள் இல்லையா? இல்லை எல்லோரும் தன்நிறைவு பெற்றுவிட்டனறா? பிச்சை எடுக்கும் சோம்பேரிகள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றது. வெளிப்படையாக தெரியும் இந்த தொழில் நேர்மையின்மையை உடன் கழையவில்லை என்றால் தமிழருக்கு உலகில் இடமில்லாமல் போகலாம்....
எந்த தொழிளாகட்டும் நேர்மையும் தூய்மையும் இல்லை என்றால் காலபோக்கில் நசுங்கும். நவின உலகில் எல்லோரும் எல்லா வேலையும் செய்ய நேரமில்லை அதற்காக புரோக்கர்கள் தேவையாகின்றது. தற்போது தமிழகத்தில் நடந்துவரும் ரியல் எஸ்டேட் தொழிலில் நேர்மை எந்த அளவிற்க்கு இருக்கின்றது என்பதும் பல வழக்குகளில் தெரிய வருகின்றது. ஒரே இடத்தை பலருக்கு விற்று பணம் பார்த்தும் இருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலெ சொன்ன விரசமான எடுத்துக்காட்டு பொருத்தமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் மிக மோசமான நிலைக்கு விவசாயம் தள்ளப்பட்டு வருகின்றது. இதற்க்கு வேலைக்கு ஆல் இல்லாதது மேலும் வேலையில் ஈடுபாடு இல்லாமை, நெர்மையின்மையும் காரணங்கள்.. பணம் ஒன்றெ குறிக்கோலாக இல்லாமல் நேர்மையுடன் செய்தால்தான் நாம் நினைக்கும் எதிர்கால இந்தியாவை காணமுடியும் என்பது உண்மை..........
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்
ஆ.ஞானசேகரன்
Saturday, November 8, 2008
ஜார்ஜ் புஷ்ஸை சந்தித்து ரஜினி பேசியது என்ன?
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்குப் பிறகு, அப்பதவியை வகிக்கவுள்ள பராக் ஒபமாவிற்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியாவிடம் நல்லுரவு காணும் வேலையில் ஒபமாவின் வருகை நலமாக இருக்கும் என்றே நம்புவோம்.
ரஜினிசார் பேரைச் சொல்லி, அவரின் செய்தியை வெளியிட்டும் பணம் பார்க்கும் பத்திரிக்கைகள், அரசியல் வாதிகள் மத்தியில் நானும் கொஞ்சம் அவர் பெயரை பயன் படுத்தி ...........ஹி ஹி ஹி
எந்த பத்திரிகைகள் அவர் பெயரை சொல்லி பணம் பார்க்கின்றதோ அதே பத்திரிகைதான் அவருக்கும் அவர் நடிக்கும் படத்திற்கும் விளம்பரமும், புகழும் கொடுக்கின்றது என்பதை ரசிகர்கள் மறந்து பேசலாம். ஆனால் ரஜினி சார் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும் நியாமும் இல்லை. (சிவாஜி படத்திற்கு பெயர் வைக்க நடிகர் திலகம் வீட்டில் அனுமதி வாங்கினார்களாம் என்று விளம்பரம் கொடுக்கவில்லையா என்ன?)
ரஜினி , கமல் பற்றி அவர்கள் ரசிகர்கள் என்ன நினைக்கின்றார்களோ எனனவோ? அவர்களின் நட்பு இன்றும் பாரட்டகூடியதாக உள்ளது. இதில் கமலை விட ரஜினின் எதார்த்தம் அதிகமாகவே தெரிகின்றது. கமலின் கொள்கையில் கருத்து வேறுபாடு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நட்பை நேரடியாக காட்ட தவறிவிடுவார்.....
Tuesday, November 4, 2008
பசியும்! ருசியும்!.....
Sunday, November 2, 2008
இதயமே! என் இதயமே!...
இதயமில்லாதவனை இரக்கமில்லாதவன் என்று சொல்கின்றொம், இரக்கதிற்கும் இதயத்திற்கும் தொடர்புயில்லை என்றாலும் தொடர்ச்சியான இதயத் துடிப்புதான் மனிதனை இயங்க வைக்கின்றது. பாதுகாப்பற்ற உணவு முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், ஊக்கமின்மையால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் சொல்கின்றது.
வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் வெகுவாக இதயநோய் பாதிக்கும் என்று எச்சரிக்கை சொல்கிறது. இந்தியாவில் கொள்ளை நோய்பொல இதயநோய் பரவகூடும் என்று உலக சுகாதர நிறுவனம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஹெட்போன் பயன் படுத்துவதும் இதயம் பாதிக்கும் என்றும் ஆராட்சியாளர்கள் சொல்கின்றனர். ஹெட்போன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை, மன எரிச்சல் உண்டாகின்றது அதனால் பலருக்கு இதய அழுத்தம் மற்றும் இதய அடைப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்...
லண்டனில் உள்ள வெல்கம் பவுண்டேஷனும், பிரிட்டிஷ் இதய அமைப்பும் இணைந்து `பாலிபில்' என்ற மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மாத்திரையானது அனைத்து வகையான இதய நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்பதும் மகிழ்சியான விடயம். மேலும் ஆஸ்பிரின் மாத்திரையை நடுத்தர வயதுடையவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்... ஆஸ்பிரின் எல்லொரும் எடுத்துகொள்ளலாம் என்றாலும் தகுந்த மருத்துவர் அலோசனை பேரில் எடுப்பதுதான் நல்லது.
இதநோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் பொருத்தபடுவதும் சமிபத்தில் இந்தியாவில் வெற்றியடைகின்றது. ஆனால் மாற்று இதயம் கிடைப்பது அரிதான விடயம். மாற்று இதயம் வேண்டி காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே இதயம் கொடுக்கமுடியும். இதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் வரவில்லை.... இப்படிபட்ட நிலையில் தற்போது மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான விடயம் வெற்றிப்பெற்றால் வருகின்ற காலங்களின் இதயநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.. இப்படி மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் ஒரு மனமகிழ்சியுடன்... இத்துடன் இணைத்துள்ளேன்....
விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்
மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட,இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.
கடந்த 15வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது."உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்"என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்"இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.
"இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது"என அவர் கூறினார்.கார்மட் நிறுவனமானது,பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள்,எறிகணைகள்,விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் 15புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது.இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.1980களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேகஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.
எனினும்,அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது.ஆனால்,இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
29 Oct 2008