_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 31, 2008

பயம் என்னை வென்றதா?

பயம் என்னை வென்றதா?

வணக்கம்!
சின்ன வயசு நினைவுகளை பற்றி சொல்லனும்னா ஒரு மகிழ்ச்சியான மனசுதாங்க வரும். அதிலும் பால்ய வயசு நினைவுகள் சொல்லவே வேண்டாம்.. இப்படி எல்லாமே ஒரு சுகமான நினைவாக வந்து செல்வது பிடித்தமான ஒரு விடயம். சின்ன வயசுல நடந்த பல விடயம் காரணமே புரியாமல் இருக்கும்.


சின்ன வயசு நினைவுகளை சொன்னால் இயக்குனர் தங்கர்பச்சன் சாரோட "அழகி" படம் எல்லோருக்கும் வந்து போகும். அப்படி ஒரு இயல்பான நிகழ்வை கொடுத்து இருப்பார். அதில் பார்த்திபன் சார் தன் குழந்தையின் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போடும்போது சொல்லும் இயல்பு ரொம்பவும் எதார்த்த வார்த்தை....


இப்படி அசைபோட்ட நிகழ்வு ஒன்று........ 4வது படித்துக்கொண்டிருந்த நேரம் என் நண்பன் ஒருவன் என்னிடம் டேய்! உனக்கு சாமிக்கு பயமா? எனக்கு பயமா? என்றான், நான் சாமிக்கு பயம் என்றேன். அவன் என் கண்முன்னே கையை வேகமாக ஆட்டினான், நான் கண்ணை சிமிட்டினேன். இதோ எனக்கு பயந்துடே! என்றான். பிறகு இல்லை இல்லை உனக்கு பயபுடுவேன் என்றென், மறுபடியும் கையை கண்முன் ஆட்டினான் என் கண்கள் சிமிட்டியது. இப்பொ சாமிக்கும் பயந்துடேன்.......


இப்படி பயம் என்பது எப்படியும் வெற்றிப் பெற்றது. மனிதன் வாழ்கை ஒன்றை சார்தே இருப்பது பொல் பயமும் மனிதனை சார்ந்து உள்ளது. ஆனால் பயம் இருக்கும் நிலை பொருத்துதான் அவனை அடையாலம் காணமுடிகின்றது.


பரினாம வளர்சியில் மனிதன் மனிதனாக வாழத்தொடங்கியதும், தன்னை சுற்றி நிகழும் இயற்கை புதுமைகள் எல்லாம் தன்னை அடக்கியாலும் சக்தியாக நினைத்தான். அவைகள் நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக எண்ணியதால், இவன் மீது இயற்கை ஆழ்மைக் கொண்டதன் உணர்வுதான் பயம் உண்டாக்கியது. இயற்கையின் மீது கொண்ட பயம்தான் மனிதனால் கடவுளை உண்டாக்க முடிந்தது. அது இன்றுவரை தொடந்து வரும் படைப்புகள். மனிதனை கடவுள் படைத்தான் என்று மனிதன் கடவுளை படைத்துக் கொண்டே இருக்கும் நிலைதான்..........???????.....!!!!!!....(எந்த குறியை எங்கே பொடுவது தெரியவில்லை)

இப்படி மனிதன் கடவுளுக்கு பயப்புடுகின்றானா என்றால்? ... தெரியவில்லை. நடந்துவரும் கோர நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லிவிடும். தனி மனிதன் பயமின்றி வாழ்வது இயலாத ஒன்று. ஏதோ ஒரு நிகழ்வுக்கு பயந்தே அகவேண்டிய நிலை எப்பொழுதும் உண்டு. உதாரணமாக மாபெரும் வீரன் சதாம் உசேன் சிறையில் இருந்தபோது தன் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளையும் காய வைத்த நிலைமை இருந்ததால் கிருமித் தொற்றினால் தனக்கு எய்ட்ஸ் வந்துவிடுமோ என்று பயந்தாராம். இதை அவரே தன்னுடைய ஜெயில் டைரியில் எழுதியிருக்கிறார் . இப்படி மனிதன் உணர்வுகளில் மிக முக்கிய இடத்தில் இருப்பது இந்த பயம் தான்.


பயம் மனிதனை வழிநடத்தும் கைகாட்டி.... எந்த பயத்தை எதற்கு பயன் படுத்துவது என்பதில் தான் நல்லது கெட்டது உருவாக்க முடியும்.... விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைதுளியில் பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனதின் தோழன்; உறுதியிக்கு எதிரி; மனித பயங்களூக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப் பயத்தை கொன்றுவிடுபவன் தன்னை வென்றுவிடுகின்றான்; அவந்தான் தனது மனசிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.


இப்படி பயத்தை வென்றவன் எதற்க்கு பயந்து வாழ்கின்றான். இப்பொழுதுதான் இன்றய சிந்தனையில், நான் என் நண்பனுக்கு பயப்புடுகின்றேனா? இல்லை கடவுளுக்கு பயப்புடுகின்றேனா? எப்படியும் பயம் என்பது மனிதன் உணர்வுகளில் ஒன்றுதான். வாழ்நாள் முழுவதும் பயம் இன்றி வாழ்வது முடியாத காரியம். எதற்கு?, எப்படி?, ஏன்? நம்மை பயம் ஆழ்கின்றது என்பதுதான் மனிதனை வழிநடத்தும் கரு.


புரட்சி தலைவர் MGR ன் என் அண்ணன் பட பாடலில்
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு

நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு"
என்று பயத்தை போக்கும் வார்த்தைகள் சொல்லப்படும்...


மருத்துவியலில் தொடர் பயம் என்பது ஒரு மனநோய்.. உடன் கவணிக்க வேண்டியது என்று கூறுகின்றது. அப்படிப் பட்ட பாத்திரத்தில் பத்மஸ்ரீ கமலஹாசன் "தெனாலி" என்ற படத்தில் நடித்துருப்பார். கண்டிப்பாக கண்ணொளியை பார்க்கவும்



யாமிருக்க பயம் ஏன்? கடவுளின் தத்துவம்

பயமின்றி வாழ்வதா? இல்லை பயத்தை வென்று வாழ்வதா? முடிவை நம் பக்கம் வைத்து விட்டு தேவையற்ற பயத்தை வென்று மனிதனாக வாழ வாழ்த்துகள் !

Monday, October 27, 2008

விளக்கமான விளக்கு....

விளக்கமான விளக்கு.....
"விளக்கு" ஒரு பெயர் சொல், இது ஒரு வினைச் சார்ந்த பெயராக இருப்பதால் "விளக்கு"(விளக்கம் சொல்) என்பதும் வினைச்சொல்லாகவும் செயல்படுகின்றது.

பூமி தன்னை தானே சுற்றி சூரியனையும் சுற்றுகின்றது. பூமி தானே சுற்றுவதால் இரவு பகல் எற்படுகின்றது. இதில் பகல் என்பது சூரிய ஒளியால் பூமி வெளிச்சம் அடைகின்றது. ஒளி அல்லது வெளிச்சம் என்பது நிறங்களின் கூட்டு. ஒளி ஏழு நிறங்களின் கூட்டு என்பதாகும். வெள்ளை என்பது ஒரு நிறமே இல்லை நிறங்களின் கூட்டு.

ஒரு பொருளை உணரவேண்டுமானால் தொட்டுப் பார்த்து அறியலாம். ஆனால் ஒரு பொருளை பார்க்க வேண்டுமானால் அங்கேதான் வெளிச்சம் (ஒளி) தேவைப்படுகின்றது. இருளில் உள்ள பொருளை பார்க்க முடிவதில்லை. ஆனால் தொட்டு உணர முடியும்.

பகலில் சூரிய வெளிச்சத்தால் நம்மால் பார்க்க முடிகின்றது. ஒரு பொருள் நம் கண்ணுக்கு தெரிகின்றது என்றால் அந்த பொருளில் படும் வெளிச்சம்(ஒளி) நம் கண்ணை வந்து அடைகின்றது என்று பொருள். அப்படி அந்த பொருளில் படும் வெளிச்சம் நம் கண்ணை அடையாமல் தடுக்கப் படுமேயானால் அந்த பொருள் நமக்கு தெரியாது. இதில் பொருளின் தூரம், அமைப்பு, பொருளின் இயற்பியல் குணம் அடிப்படையில் நம் கண்ணால் காணப்படுகின்றது. இதில் ஒளியின் வேகமும் தூரமும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.


ஒவ்வொருப் பொருளுக்கும் நிறத்தை உற்கிரகரிக்கும் தன்மை உண்டு. இதிலிருந்து ஒரு பொருள் சிகப்பு நிறத்தில் இருப்பதாக கண்ணுக்கு தெரிகின்றது என்று வைத்துக் கொண்டால் அந்த பொருள் ஒளியில் உள்ள எல்லா நிறத்தையும் உற்கிரகரித்துவிட்டு சிவப்பு நிறத்தை மட்டும் வெளிவிடுகின்றது. எனவேதான் அந்த பொருள் நம் கண்ணுக்கு சிவப்பு நிறமாக தொன்றுகின்றது. உண்மையில் அந்த பொருளில் சிவப்பு நிறம் இல்லை என்பது இயற்பியல்.

மனிதனின் முக்கிய கண்டுபிடிப்பு "விளக்கு". இருளில் பொருளை காணவேண்டுமானால் வெளிச்சம் தேவை. அந்த வெளிச்சம் உருவாக்க பயன் பட்டதுதான் இந்த விளக்கு. இருளில் உள்ளப் பொருளை நம் கண்ணிற்கு விளக்குவதால் தான் அந்த பொருளுக்கு பெயர் விளக்கு என் பெயர் வந்தது.

மனிதனில் செயல்பாடுகளை அதிகப்படுத்தியதின் பெருமை இந்த விளக்கையே சாரும். நெருப்பை கண்டுபிடிச்ச அந்த கனமே விளக்கும் பயன் படுத்த பட்டது. முதலில் தீப்பந்தம் பிறகு விளக்கு எனப்படும் கருவிகள் பயன்பாடுகள் வரத்தொடங்கின.

விளக்குகள் முதலில் எண்ணெய் விளக்குகள், பின் படிப்படியாக மின் விளக்கு அதன் பிறகு விஞ்ஞான மாற்றம் செய்யப்பட்ட ஆவி விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்தன. எண்ணெய் விளக்குகள் தாவர எண்ணெய், விலங்கூகளின் கொழுப்பு மற்றும் நெய்கள்,அதன் பின் மண்ணெய் (பெட்ரோலிய எண்ணெய்) பயன் பட்டது.

எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும். இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

விளக்குகள் அகல் விளக்கு, குத்து விளக்கு, தூண்டாமணி விளக்கு, சட்ட விளக்கு, பாவை விளக்கு. என இன்றும் பயன் பாட்டில் இருப்பதை காணலாம். இதில் ஆர்கண்ட் விளக்கை அய்மே ஆர்கண்ட் என்பவர் கண்டுபிடித்தார். ஆர்கண்ட் விளக்கு மேன்படித்திய விளக்காகும். முதலில் ஆர்கண்ட் விளக்கில் திமிங்கில எண்ணெய்யும் பின் மண்ணெயையும் பயன் படுத்தும்படி வடிவமைக்கப்பட்டது. சமிக்ஞை விளக்கு தொடர்பு கொள்ள பயன் படுத்தும் விளக்கு. இவற்றை லாந்தர் விளக்கு எனவும் சொல்லப்பட்டது. மேலும் கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கத்தில் பயன்படும் ஒளிமூலம் விளக்கு எனப்படும். இது மின் விளக்காகவோ எண்ணெய் விளக்குகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து வெளியாகும் ஒளி வில்லைகளை பயன்படுத்திக் குவியச் செய்யப்படுகின்றன. தொடக்ககாலக் கலங்கரை விளக்கங்களில் திறந்த தீச்சுவலைகள் பயன்பட்டன பின்னர் மின்விளக்கு பயன்ப்பாட்டுக்கு வரத்தொடங்கின.

விளக்குகளில் மின்விளக்கு ஒரு பெரும் புரட்சியை உண்டாக்கியது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலேயே முயற்றிகள் செய்யப்பட்டு வந்தது. 1879 இல் கார்பன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 40 மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரவிட்டதன் மூலம் மின் விளக்கைக் கண்டு பிடித்த பெருமை தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்தது.

மின் விளக்குகள் 1. வெள்ளோளிர்வு (Incandescent lamp) 2. உடனொளிர்வு (Fluorescend lamp) 3. உலோக ஹேலைட்டு விளக்கு(Medtal Halide lamp) 4. தங்ஸ்தன் அலன் விளக்கு (Tungstan-Halagen lamp)5. பாதரச ஆவி விளக்கு(Mercury Vapour lamp) 6. சோடியம் ஆவி விளக்கு(Sodium Vapour lamp) பயன்பாட்டுக்கு இருக்கின்றன.

மேலும் விஞ்ஞானிகள் சூரிய ஒளியை மிக பெரிய கண்ணாடி மூலம் உலகில் இரவிலும் வெளிச்சமூட்ட ஆராய்ந்து வருகின்றனர். இப்படியாக நம் கண்ணுக்கு பொருளை விளக்குவதால் தான் விளக்கை அவ்வாறாக அழைக்கின்றோம்.....

Thursday, October 23, 2008

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

வந்துவிட்டது திருவிழா! தீப திருநாள் "தீபாவளி" வந்துவிட்டது.
மனம் அழுத்தம், வேலையின் பழு, குடுப்பத்தில் குழப்பம், நாட்டில் மின் தட்டுபாடு போன்ற பிரச்சனைக்கு மத்தியில் மனிதன் சிறிதேனும் மனம் இழப்பாற இது போன்ற திருவிழாக்கள் தேவையான ஒன்றுதான்.

இதில் தீபாவளி தமிழனுக்கு தேவையா? தீபாவளியின் பொருள் மற்றும் கொண்டாடும் காரணம் என்ன? என்ற கேள்விகளும் வருவதிலிருந்து தீபாவளியின் நோக்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதும் தெளிவாகின்றது. என்னை பொருத்தவரை மனிதம் பேசாத, மனித நேயம் சொல்லாத, மனிதத்தை பிரித்து பார்க்கும் விழாக்கள் தேவையே இல்லை. (சரியான வரலாற்று காரணம் இருந்தாலும் கூட). தற்பொது தமிழ்நாட்டை கவ்வும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதூர்த்தி. முஸ்லிம் சகோதரனின் கொட்டத்தை அடக்க வந்த விழாவாக கொண்டாடப்படுவது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதற்காக பலத்த பாதுகாப்பு அத்துமீறும் வன்முறை இதுதான் நாம் காணும் நல்விழாவா?... இதைதான் மனிதம் சொல்ல வந்த கொண்டாட்டமா?

அது இருக்கட்டும், நாம் அவலோடு எதிர்பார்க்கும் தீபாவளின் கொண்டாட்டத்தின் வரலாற்று காரணம் பலவும் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.

கோவி. கண்ணனின் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ? ஆய்வு கட்டுரையாக இருக்கட்டும்...

சு'னா 'பா'னா வின் இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது.........

இருபெரும் ஆய்வு கட்டுரைகளில் அவரவர் வாதத்தை ஞாயபடுத்தி சொன்னாலும்...
தீபாவளி ஒரு அர்த்த மற்ற பண்டிகையானாலும் சரி. வரலாற்று காரணங்களால் சமுக பண்டிகையானாலும் சரி. இன்று நான், நாம் அர்த்தமுடன் கொண்டாடுகின்றேனா? சமூக நல்லிணக்கம் கொடுக்கும் எண்ணதில் கொண்டாடுகின்றோமா என்பதில்தான் தீபாவளிக்கு அர்த்தம் கொடுக்குமேயொழிய உங்கள் வரலாற்று காரணங்கள் ஒன்றும் செய்வதிற்கில்லை. மனிதனுக்கு விழாக்கள் தேவையற்றது என்ற போக்கும் ஞாயமற்றது. விழாக்களுக்கு காரணம் சரியாக இருக்க வேண்டும் என்பதும் முடியாத காரியம். ஆனால் கொண்டாடப்படும் தீபாவளி போன்ற விழாக்களை மனிதம் ஒளிப்பட நாம் செய்யலாமே!!!!

1. ஆதரவற்ற குழந்தகளுக்கு நாம் செய்யும் உதவிகளை அதிக படுத்தலாம்.
2. முதியோர்களின் இல்லங்களுக்கு உணவழிக்கலாம்.
3. பெற்றோர்களால் கைவிடப்பட்ட எய்ஸ் நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு திருவிழா பதார்த்தங்கள் கொடுக்கலாம்( அடுத்த தீபாவளிக்கு இவர்கள் இருப்பார்களா என்பது?????) திருச்சி தஞ்சை மாவட்டங்களில் மட்டும் 45 குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டும், அனாதைகளாகவும் இருப்பதாக அறிந்தேன்.
4. படிக்க வசதியில்லா குழந்தைகளுக்கு ஒரு சிறு உதவிகள் செய்யலாம்.

பின்குறிப்பு: பக்கத்து வீட்டார் மெச்சும் 1000 வாலா சரவெடி தவிற்த்து உதவிகள் செய்யலாமே!!!!

நான் ஒருவனால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை எடுத்து விடுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி பல மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளி கொண்டாட்டங்களை அர்த்தமுடையதாக்குங்கள்... போலி வேதாந்தங்களை ஞாயப்படுத்த வேண்டியதில்லை. தீபாவளி தேவையோ? இல்லையோ? உதவிகள் செய்யும் சந்தர்ப்பமாக பயன்படுத்தினால்... அர்த்தமற்ற தீபாவளியை அர்த்தமுள்ள விழாவாக்கலாமே!! அப்படியே அர்த்தமுல்ல தீபாவளியானால் மேலும் அர்த்தமுல்ல விழாவாக ஆக்கலாமே!!!!

வாருங்கள் மனிதம் காப்போம்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வோம்!!!!!........

அடிமனதை ரணமாக்கும் செய்தி
ஆறு மாத பெண் குழந்தையை உயிருடன் சுடுகாட்டில் புதைக்க முயற்சி :செய்தி தினமலர்

Tuesday, October 21, 2008

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

"யாதும் ஊரே யாவரும் கேளீர்! "

நெற்றியில் குறிப்பார்த்து துப்பாக்கி முனையில் சுட்டெரிக்கும் கணியன் பூங்குண்றனாரின் வைரவரி இது. நாடு, இனம், மொழி, மதம் கடந்து மனிதனைக் காட்டும் முத்தான வரி இது. ஆஆஆஆஆ என்று கதரும் மனிதத்தை காக்கும் மகிமை வரியல்லவா இது.

நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சினாப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரதில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26.(இன்னும் கூகுல் மேப்பில் இடம்பெறவிலை). நான் வசிக்கும் ஊரைப்பற்றி சொல்வதிற்க்கு காரணம் உண்டு.

ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராய் இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றாராம் அங்கு அவர் பார்த்த நகரத்தின் பெருமைதான் நான் வசிக்கும் அண்ணாநகர். அவர் பார்த்த நகரத்தில் எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும் நம்நாட்டில் இதேபோல் ஒரு நகரம் அமைக்க வேண்டும் என்று கனவில் ஏற்ப்பட்ட ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர்.

தென்கிழக்கில் பாரத் மிகுமின் தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, வடக்கில் பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை ரயில்பெட்டி தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் அவர்களால் தமிழ்நாட்டு வீட்டு வசதித் துறையினால் துவங்கப்பட்ட ஊர்தான் அண்ணாநகர் திருச்சி-26.

அப்படி என்னதான் நான் வசிக்கும் ஊரின் பெறுமை. இது ஒரு கனவு நகரம்... மக்களின் மனிதநேயம் உருவாக்கும் பட்டரை. இங்கு கிறிஸ்துவ தெரு, முஸ்லீம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையன் தெரு, பல்லன் தெரு, கள்ளன் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீலோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம்தான் இதன் தனி சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மனின் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரின் சமய ஊர்வலமும் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்ப்பதும் எங்கள் வழக்கம்.

இதை எதிபார்த்துதான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி விலாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையும் ஆரம்பமாகின. காலதின் ஓட்டம் அவர் 1987 ல் டசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டன. இப்படி சிறப்பான ஊரை மேன்படுத்த முடியாத அரசுதான் மதச்சண்டைகளில் குளிர்காய்கின்றது. இன கலவரத்தில் ஒப்பாரி நாடகம் ஆடுகின்றது. மதநல்லிணக்கம், இன நல்லிணக்கம், உருவாக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. மாறாக வேற்றுமையில் அரசியல் நடத்தும் கேவலத்தில் இருப்பதும்....." யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற வரிகள் காணாமல் பொகின்றது.
பின்குறிப்பு: இப்படி மதநல்லிணக்கம் கொண்ட ஊரை அரசு கவனிப்பாரற்று சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள அவலம். அவ்வப்போது பெய்யும் மழையில் வெள்ளம் நீர் வீடுகளில் வந்து விடுவதும், பின் மக்கள் போராட்டத்தில் இடுபடுவதும் அதன் பின் அதிகாரிகள் வந்து வாக்கு சொல்வதும் இன்றும் நடக்கும் சடங்கு ....... பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு மதம், இனம், சாதி என்ற போர்வையில் இருக்கும் ஊர்களை மாற்றி மேன்படுத்தி அண்ணாநகர் பொன்ற நகரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு யதார்த்தமான உள்ளங்கள் உருவாக்கும் பட்டரைகள் வளம்வர அரசு அவனம் செய்தால் நாளைய நம் நாடு மக்கள் நல்லிணத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் எண்ணம்.

Saturday, October 18, 2008

மந்திரக்கோல்

மந்திரக்கோல்
உயரத்தில் பறக்கும் பறவைகளில் ஒன்று பருந்து. பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தன் கூறிய கண்களால் கீழே போகும் பாம்பு, கோழிக்குஞ்சு போவது தெரிந்துவிடும். பருந்துக்கு கோழிக்குஞ்சு என்றால் கொல்லை பிரியம். பருந்து கோழிக்குஞ்சை பார்த்ததும் மின்னல் வேகத்தில் வந்து லபக் என்று எடுத்து சென்றுவிடும். இப்படி வரும் பருந்தை பொராடி விரட்டும் கோழிகள். இப்படி காப்பாற்றி மீதம் உள்ள குஞ்சுதான் கோழியாகும்.

பருந்து கூடுக்கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இனம். பருந்து கூடு மிக உயரமான மரகிளையில் (உச்சானிக் கொம்பில்) கூட்டை கட்டும். இக்கூட்டைப் பற்றிய சிறப்பு, இதன் கூட்டை எதிரிகள் யாரும் நெருங்க முடியாதாம் உயரமும் ஒரு காரணம். இதன் கூடு முள் குச்சியினால் கட்டி அதன் மேல் சில புல்களை வைத்து அதன் மேல்தான் முட்டையிடும். மேலும் நம்பிகையற்ற சிறப்பு என்னவென்றால், இதன் கூட்டில் ஒரு முக்கிய வகை குச்சி ஒன்றை வைக்குமாம். இந்த குச்சியை ஏழு கடல் ஏழு காடு தாண்டி எடுத்து வந்த குச்சியாம். இந்த குச்சிதான் இந்த கூட்டிற்கு பாதுக்காப்பு. பருந்து எங்கே சென்றாலூம் கூட்டை பற்றிய எல்லாம் இந்த குச்சிதான் தகவல் சொல்லுமாம் (இணைய வழி தகவல் தொலைத் தொடர்பு). இதன் மூலம் தன் குஞ்சிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி கொள்ளும் என்பது நாட்டுபுற வலக்கு. மேலும் இந்த குச்சிக்கு ஒரு அபூர்வ சக்தி இருக்குமாம். இந்த குச்சியை வைத்து எல்லா வகையான பூட்டையும் சாவியின்றி திறக்க முடியுமாம். இந்த குச்சியை வைத்துதான் திருடர்கள் பூட்டை திறக்க பயன்ப்படுத்துகின்றனர் என்பது ஒரு நம்பிகையற்ற வலக்கு. ஆனால் அந்த குச்சியை எடுப்பது அவ்வளவு எழிதான காரியமில்லை. உயரம் மற்றும் பருந்து நம்மளை சும்மா விடாது.

இப்படிப்பட்ட மந்திரக்கோலை (பாரதிராஜாவின் முதல்மரியாதை காதலர்கள் போல) நானும் ஒருநாள் இந்த மர உச்சனிக்கு போயி அந்த மந்திர குச்சியை எடுத்து வந்து எல்லா பூட்டையும் திறப்பேன். என்ற கனவு இன்னும் தொடுவானத்தை பிடிப்பது போல உள்ளது எனக்கு.

இந்தக்கால நவீன திருடர்கள் கையில் கடவுசொல் திறக்கும் குச்சி வைதிருப்பார்கள் போல. பெருகி வரும் "இணையத்தில் வழிப்பறி" வங்கி கணக்குகளை மோசடிமுறையில் கைமாற்றம் செய்து ஏப்பம் விடுவது. உலகில் முதல் பத்து இடங்க்களுக்குள் இந்தியா இருப்பதும் வருத்த படவைக்கிறது. இதற்கான தடுப்பு சட்டங்கள் சரியாக இல்லை என்பது மேலும் கவலையை கொடுக்கின்றது. இதனை தடுக்க நாம் கவனத்துடன் பயன்ப்படுத்துவதுதான் சிறந்த முறை. தேவையில்லாமல் பொழுதுபோக்காக இணைய வங்கி பயன்ப்படுதுவதையும் தவிற்கலாம்.

இப்படிதான் சென்றமாதம் என் தோல்ப்பையில் வைத்திருந்த 4GB Memory stick with reader காணவில்லை நூதன முறையில் களவாடி விட்டார்கள். சென்றது சென்றதுதானே. என் வருமாணத்தில் மற்றொன்று வாங்க முடியும் இருப்பினும் அந்த மன அதிர்வு இன்னும் நீங்கவில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். இதற்கு கோவி. கண்ணனை (காலம்) வம்புக்கு இழுக்கவில்லை . அல்லது (அறிவகம்)த்திடம் புகார் சொன்னால் காலச்சக்கரத்தை பின்சுழற்றி திருடனை கண்டுபிடிக்க முடியுமா? பார்க்கலாம்.

இருப்பினும் நாம் கவனத்துடன் இருப்பதுதான் சிறந்ததாக உள்ளது. அதற்காக எல்லொரையும் சந்தேக படவா முடியும். அதுக்குதான் நானும் ஒருநாள் அந்த மர உச்சானிக்கு போயி அந்த மந்திரக்குச்சி எடுத்து வந்து எங்க வீட்டு அடுப்புல வச்சி சாம்பலாக்குவேன்......

Friday, October 17, 2008

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள்..

தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் : "நாட்டிலுக்கா' அழிவில் அரங்கேற்றம் : தசாவாதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கண்ணாடி குடுவையில் உள்ள வைரஸ் கிருமி (கடல் தண்ணீரில் விழுந்தால்) காற்றில் கலந்தால் அது கண்மூடி திறப்பதற்குள் பல மடங்கு அதிகரித்து உலக அழிவை ஏற்படுத்தும் என்பதால் அந்த குடுவையை கைப்பற்றும் முயற்சியில் போலீஸ் அதிகாரியாக நடித்த கமல் ஈடுபட்டிருப்பார். இருப்பினும் வில்லனால் அந்த குடுவை கடல் தண்ணீரில் விழுந்து வைரஸ் கிருமிகள் வெளியேறும். அப்போது மழை பெய்வதோடு சுனாமி ஏற்பட்டு அந்த வைரஸ் கிருமிகளுக்கு முற்றுபுள்ளியை ஏற்படுத்தும். அதேப்போன்று தற்போது மன்னார் வளைகுடாவிற்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அழிவு மழையினால் தடுக்கப்பட்டுள்ளது. தனது பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருந்த "நாட்டிலுக்கா' கனமழையினால் காணாமல் போனது. அதேப்போன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த சிப்பிகள், மீன்கள் அனைத்தும் கடல் அலைகளால் இழுக்கப்பட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விட்டன. இதனால் கடற்கரை தூய்மையாக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதை நினைவு கூர்ந்த விஞ்ஞானிகள் இயற்கைக்கு என்றும் அழிவில்லை என்ற கருத்தை உறுதிபடுத்தினர்.

மேலும் அதிகப்படியான செய்தியைப் படிக்க தினமல்ர் சுட்டியை சுட்டவும் நன்றி தினமலர்

Thursday, October 16, 2008

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..
ஏல பொன்னுதாயி, அப்பத்தா எப்படியிருக்கு? இன்னும் அப்படியேதான் இருக்கு சித்தப்பு, இந்த அம்மாவாசை வந்தா தெரியும் பாக்கலாம்.... நல்ல மவராசி ரொம்ம சிரமபடுது பொறந்த புள்ளைக்கு சொல்லியனுப்பி இந்த அம்மாவாசைக்கு எண்ணெய் தேச்சி விடலாமில்ல சொல்லும் சித்தப்பு. ஆமாம் சித்தப்பு அப்பாதான் வேணாங்குது... எத்தனை நாளைக்குதான் வேலை வெட்டி போகாம சிரமப்படுரது....

இப்படி கிராமபுறங்களில் பெசிக்கொள்வதை கேட்டுயிருக்கலாம். அப்பத்தாவிற்கும் அம்மாவாசைக்கும் என்ன தொடர்பு? அப்பத்தாவிற்கு என்ன பிரச்சனை, எதற்காக எண்ணெய் தெய்க்க வேண்டும்? மனிதன் வயதாவதும் முதுமையை அடைவதும் இயற்கைதானே! இந்த முதுமையின் கொடுமை மரணத்தை எதிர்நோக்குவது. இப்படி மரணத்தை நோக்கி செல்லும் அப்பத்தாவை பற்றிதான் இவர்கள் பேசிக்கொள்வது.

இந்த அப்பத்தா 80 வயதை தொட்டவள், இப்பொது உயிர் மட்டுமே இருக்கு. அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை ஏதொ கொஞ்சம் எப்பொதாவது பால் மற்றும் நீர் உணவு, கழிப்பிடம் எல்லாமே அதே இடம்தான். படுத்த நிலையில் இருப்பதால் உடம்பெல்லாம் புண்ணாகி எறும்புக்கு உணவாகி கொண்டிருக்கின்றாள்.. எப்போதாவது உடலில் அசைவு வரும். இந்த மரண அவஸ்தையை பற்றிதான் இப்படி ஒரு பேச்சி.

அம்மாவாசையை எதிர்பார்ப்பது, இவளின் முழுநித்திரைக்குதான். அம்மாவாசையன்று சூரியனின் கதிர்கள் சற்றே தடுக்கப்படுவதால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது விஞ்ஞானம். (குறைந்த விஷத்தன்மை பூச்சி கடித்தவர்களுக்கு அம்மாவாசையன்று தடிப்பதும் இந்த எதிர்ப்பு தன்மை குறைவால்தான்).

எண்ணெய் தேய்ப்பது எதனால்? நம்மில் பலர் மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குழிப்பார்கள் உடம்பில் உள்ள சூடு குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் எந்த பயனும்மில்லை என்பது நவீன மருத்துவம். எண்ணெயிட்டு குழிப்பதனால் உடலின் எதிர்ப்பு சக்தி தற்காலியமாக குறைகின்றது. இதனால்தான் உடல் சோர்வும் தூக்கமும் வரும் என்பது விஞ்ஞானம். இந்த சோர்வு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை. அம்மாவசையன்று அப்பத்தாவிற்க்கு எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் ஏற்படுவதுதான் நிரந்தர நித்திரை.....

மரணப்படுக்கையில் சிரமப்படும் முதியோர்களுக்கு செய்யும் கருணை கொலைதான் அம்மாவாசையில் எண்ணெய் தேய்த்து குழிப்பாட்டுவது. அம்மாவசையில் எதிர்ப்பு சக்தி குறைந்த நேரத்தில் எண்ணெயிடுவதால் மேலும் சக்தியிலந்து மரணத்தை தொட்டுவிடுகின்றது.

இந்திய சட்டத்தில் இன்னும் கருணைக் கொலைக்கு அனுமதியில்லை, பரிந்துரை நிலையிதான் உள்ளது. இந்த எண்ணெய் தேய்ப்புக்கு விஞ்ஞான அதாரம் இல்லை ஆனால் இன்னும் சில இடங்களில் நடத்தப்படுகின்றது.

ஒரு சில: முதல்மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் முதுமை மரணகாட்சியை நம் கண்முன் காட்டுவார். மரணப்படுகையில் இருப்பவர் ஆசையை தவிற்காமல் இருந்தால் மரண சிரமம் நீடிக்கும் என்பதும் நம்பிக்கை. சிவாஜியின் ஆசை தன் காதலி ராதவை பார்த்துவிடவேண்டும், ராதா சிறையிலிருந்து வந்து பார்த்ததும் மரணம் சம்பவிக்கும்படி காட்சி இருக்கும்... இன்றும் மனதை தொட்ட காட்சி...

Wednesday, October 15, 2008

பாவாடை தாவணியில் சினேகா.

பாவாடை தாவணியில் சினேகா.


Tuesday, October 14, 2008

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

என்னப்பா, ரஜினி அரசியலுக்கு வந்தா எல்லொரையும் போல நாலு காசு பாக்கலாம் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றமே! அவருக்கொ தன்னுடைய வியாபாரம் முக்கியம் ரசிகனுக்கோ நாலு காசு முக்கியம் என்னபன்னுரது. இடையில் பொறுமையிலந்த கோவை ரசிகர்கள் கட்சியும் அரம்பித்து போஸ்டரும் கலக்கிவிட்டனர்.


கடந்த 7ம் தேதி ரஜினி பெயரில் சிலர் கட்சி துவங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கட்சியில் ரஜினி சேர வேண்டும் என கெடுவும் விதித்திருந்தனர். இது அபத்தமான, கண்டிக்கத்தக்க செயல். விரைவில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார். அரசியல் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ரசிகர்கள் அவரை நிர்பந்திக்கக் கூடாது. "ரஜினி ரசிகர்' என்ற போர்வையில் கேலிக்கூத்து நடத்திய, மாஜி மாவட்ட துணைச் செயலர் அபு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார். கோவையில் கட்சி துவங்கி, ரஜினியின் புகழுக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்றவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நபர்கள் மேற்கொண்டு போஸ்டர்கள் ஒட்டி பிரச்னை ஏற்படுத்தினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்; போலீசிலும் தெரிவிக்கப்படும். இவ்வாறு உலகநாதன் கூறினார்

இதற்க்கு மேல் ரஜினி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களிடம் எதிர்ப்புதான் வரும். இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர் குழப்பத்திலிருந்து இன்னும் வெளிவராமல் மீண்டும் ரசிகனை குழப்பியும் உள்ளார். இதுதான் எந்திரனிம் வியாபரயுத்தி!...

அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகி
றேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்


இதுபோதும் எந்திரனின் வெற்றி விழாவிற்கு, அப்பரம் எந்திரனில் தான் அரசியலுக்கு வருவதாக சொல்லியுள்ளதாக ஒரு அறிக்கையும் வரும். சாமானிய ரசிகன் எந்திரனை 10 முறை பார்த்து தெரிந்துக் கொள்வான்.. என்ன ரஜினி சார் மனிசனை இப்படியா குழப்புவது? ஓஓஓ நீங்களே குழம்பிதான் இருகின்றீகளா! அதுசரி எப்பதான் உங்கள் குழப்பமும் ரசிகனை குழப்புவதும் நிறுத்துவீர்கள்.... ஒன்னுமட்டும் நிச்சயம் உங்கள் ரசிகர்களை உங்கள் கட்டளையின் கீழ் கொண்டுவரமுடியாது. நீங்களும் ஏமாற வேண்டாம்,... பாவம் உங்களை நம்பி குழம்பிய ரசிகனின் கெதி! அய்யோஓஓஓஓஓஒ.....

பாவபட்ட ரசிகனே! உங்களை நீங்கள் அறிய பல காலகட்டங்களில் தவற விட்டுவிட்டீகள். இது ஒரு அறிய சந்தர்ப்பம் சலுகை முறையில் வாய்ப்புகள்! உங்களை நீங்கள் எண்ணிப்பார்க்க புதியதோர் வாய்ப்பு! புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்குள் உங்கள் குடும்பம் இருக்கின்றது............ ஊதுர சங்கை ஊதிவிட்டேன்!...

நன்றி தினமலர்

வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி

ரஜினி பெயரில் கட்சி ரசிகர்களுக்கு 'கல்தா'

Thursday, October 9, 2008

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...களின் பின்னூட்ட தொடர்ச்சி

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...களின் பின்னூட்ட தொடர்ச்சி

சென்ற பதிவின் (அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...) கருத்து பறிமாற்ற பின்னூட்டங்கள் விரிவாகவும் பயன் உள்ள கருத்துகளாக உள்ளதால் அதையும் பதிவாக இடுகின்றென் சென்ற பதிவை பார்க்க இங்கே அமுக்கி பாக்கலாம்


முதலில் RajK said... அவர்களின் இரண்டு பின்னூட்டத்தையும் அதன் பின் என் கருத்தையும் சொல்லியுள்ளேன். இக்கருத்தை கோவி. கண்ணன் அவர்களும் வழிமொழிந்துள்ளார் அவர்களுக்கும் இதே கருத்தைதான் சொல்லமுடியும்......( குழப்பமாக இருந்தால் படிப்பவர்கள் மன்னிக்கவும்)

ஒன்று:>>>>>>


RajK said...
சமயம், திருமணம், கூட்டு குடும்பம் இவையாவும் நாம் ஏற்படுத்திக் கொண்ட கோட்பாடுகள். இந்த சித்தாந்தாங்கள் சிறு வயதில் திணிக்கபடுவதால், பெரும்பாலோர் இச்சமூக கோட்பாடுகளின் கைதிகளாக வாழ்கின்றனர். சூழ்நிழைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது. ஒரு காலத்தில் கூட்டு குடும்பத்திற்காக போராடினோம்; இன்று அதைப் பற்றி பெரிதாக பேச்சில்லை

பல விசங்களில், நம்முள் திணிக்கப்பட்டுள்ள நம்பிக்கைகள் (Beliefs and Moral-values) இன்றைய அறிவுக்கு (Scientific knowledge and understanding) முரன்பாடுகளாக உள்ளன. இதில் இன்றைய இளைஞர்கள் குழம்பிபோய் உள்ளனர். இவர்களை இச்சமூகம் நவீன உலகிற்க்கு தயார்படுத்தவில்லை. ஆனால், இவர்கள் எடுக்கும் புதிய பாதையில் (சரியானதோ அல்லது தவறானதோ) இச்சமூகம் புதிய சூழலை நோக்கி அனுபவ‌மடைகிறிது.

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு துனை, குடும்பம், குழந்தைகள் யாவும் வேண்டும். அவ்வாறே நாம் பரிமான வளற்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் குடும்ப, சமூக கட்டுபாடுகள் அவனை அவ்வாறு வாழவிடாமல் (It won't be peaceful to live without listening our genes), அதைவிட சத்திவாந்த சுதந்திரத்தை நோக்கி அவனை தள்ளுகின்றன. இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.

ஒரு படி மேல்...

ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா? மரபணுக்களை, குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்! மக்கள் மனித விலங்குகளாக (I mean it in scientific sense; living with basic instinct and emotional brain) வாழ்தில் வறுத்தம் இல்லை. ஆனால் அதைவிட மேலாக வாழ்வதை (living with thinking brain - neocortex) குறைசொல்லுவதில் தான் வறுத்தம்.

இன்னும் ஒரு படி மேல்...

வாழ்வின் அர்த்தம் தான் என்ன? மரபணுக்களுக்கு கட்டுபட்டு வாழ்வதா? இன்றைய அறிவின்படி (based on current scientific understanding) அப்படி பெரிதாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை!(
http://theory-of-theory.blogspot.com/2008/08/origin-of-orders.html)
எப்படி ஆனாலும், அடுத்தவற்கு தொல்லை தராமல் எப்படி வாழ்தாலும் சரி. அது அவரவர் முடிவு. இதில் சரி, தவறு என்று பெரிதாக ஒன்றும் இல்லை!


இரண்டு:>>>>>


RajK said...
இப்பொழுது உலக மக்கள் தொகை, புவியின் இயற்கை வளங்களை பாதிக்கும் வகையில் பெரிகியுள்ளது. பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும். இது இந்தியாவிற்க்கு இன்னும் அவசியமானது. இதை நாம், கலாச்சாரம் என்ற பெயரில் செயற்கையாக தடுத்து வைத்துள்ளோம்.

* மலடிகளை கேவலப்படுத்தாதீர்கள்
* அலிகளை கேலி செய்யாதீர்கள்
* ஓரின பால் ஈர்ப்பு கொன்டோரையும் வாழவிடுங்கள்
* குழந்தைகள், திருமணம் வேண்டாம் என்போரையும் ஏற்று கொள்ளுங்கள்

எல்லா வகையினர்க்கும் சரியான வழிகால்கள் மற்றும் அங்கீகரிப்பும் கிடைத்தால் சுமூகமான சமன்நிலை கிடைக்கும். அவர்களால் எல்லாருக்கும் நன்மை பயக்கும். அவர்களுடைய உழைப்பும், அறிவும் பயன்பெறும். Diversity is the secret of evolution, life, and also for a healthy society!
இதை ந‌ம் கலாச்சாரம் அவ்வ‌ளவு எளிதாக‌ அங்கீகரிக்க‌ப்போவ‌தில்லை. இதை நாம் த‌ள்ளி வைத்தாலும், இய‌ற்கையே செய்யும் சமன்நிலை இன்னும் கொடூர‌மாக‌த்தான் இருக்கும்.
October 8, 2008 7:23 PM

கோவி.கண்ணன் said...
மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்.
October 8, 2008 7:40 PM


மெலேகண்ட பின்னூட்டத்திற்கு என் கருத்தாக

ஆ.ஞானசேகரன் said...
// RajK said... // 1,2 அனைத்தும் அறிவு ஏற்றுக் கொண்டதுபோல் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை... வாதத்திற்கும், வலையில் எழுதிக் குவிப்பதற்க்கும் சரியாக இருக்கும். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்பாது. உதாரணமாக அழகான பெண்ணை ரசிப்பதில் தவறொன்றும் இல்லை தான் என் அறிவிற்க்கு சரி என்றே படுகின்றது. ஆனால் தன் தமக்கையோ, தன்மனைவியையோ வேறொருவன் ரசிப்பதில் மனம் ஏற்றுகொள்ளவில்லை. நடைமுறை வாழ்க்கைக்கு முரனாக வாழ்வதுதான் தியரி என்றால் சாப்பாட்டை எழுதிவைத்து வாழ்ந்துவிடலாம். உயிர் வாழ உணவு அவசியம் என்பது தியரி.உணவுக்கு சுவை நடைமுறை வாழ்க்கை.


>>>>>>>>>>>

//சூழ்நிலைகள் மாறும் போதும், இக்கோட்பாடுகள் மாற மறுக்கின்றன; பெரிய போராட்டத்திற்க்கு பிறகே இதன் பிடி மெல்ல‌ தளற்கிறது.//சூழ்நிலை மாறுபொது கோட்பாடுகள் மாற போராடதான் வேண்டும் என்பதும் இயற்கையே! அதில் எது மனித வாழ்கைக்கு தேவையோ அது வெல்லும் அதற்காக நான் மட்டும் மாறிவிட்டேன் என்பதும் மடமைதான் அறிவிற்க்கு அபாற்பட்டதுதான்...

>>>>>>>>>

//ஆணும், பெண்ணும் இணைந்து குழந்தைகள் பெறுவது மரபணுக்களின் கோட்பாடு. குழந்தைகளை பெறுவதும், வளற்பதும், அவற்களுக்காக வாழ்வதும்; நம்முடைய அன்பும், நேசமும்; பிறர்க்கு செய்யும் உதவிகளும், தியாகங்களும் ‍‍- மரபணுக்களின் ஆதிக்கமே! இதையே மற்ற விலங்குகளும் செய்கின்றன. இந்த மரபணுக்களுக்கு (சில வேதியல் மூலகூறுகள்) கட்டுபட்டு வாழ்வதில்தான் வாழ்வின் அர்த்தம் உள்ளதா// இப்படி எல்லாம் மரபணு கட்டுபாடாக இருக்கட்டும், இதில் மாற்றுக்கூறு எதன் கட்டுபாடாக இருக்ககூடும். அதில் கட்டுப்பட்டு வாழ்வது மட்டும் ஞாயம் கற்பிக்கமுடியுமா?

>>>>>>>

//குழந்தைகள் பெறுவதின் மூலம் விட்டு செல்வதில் மூலம் தான் சுவடுகளை இவ்வுலகிற்க்கு தரவேண்டுமா? அதை இன்னும் எளிதாக செய்ய முடியும்! (Preserving our one cell, or clone, or just having our personal genome). அதற்க்கு பதில், அறிவை (new ideas, knowledge, understanding) சுவடுகளாக இவ்வுலகிற்க்கு விட்டு செல்வதை சிறந்தது என்பேன்!//இவ்வுலகிற்கு அறிவை சுவடுகளாக விட்டு செல்வதிற்க்கு மாற்று கருத்து இல்லை. இதில் குழந்தைகளுடன் விட்டு செல்வதில் என்ன குற்றம் காணமுடியும்...

>>>>>>>>

///இப்படி வெளியே தள்ளியவனை, முதுமை, நோய் என்று பயமுறுத்தி (கடவுள் பயம் போல்), பழைய சித்தாங்களுக்கு இழுத்து அலைகழிக்கப்படுகின்றான்.///முதுமையும் முதுமையில் நோயும் நடைபெறும் உயிரியல் மாற்றம்தானே! மேலை நாடுகளில் முதியோருக்கும் குழந்தைகளுக்கும் தேவையான பாதுகாப்பு அரசு மற்றும் சமுகத்தால் கிடைப்பதால் உங்களின் கருத்து சரியானது போல தோன்றும். இந்தியா போன்ற நாடுகளில் சமுக அமைப்பு ஒருவர் மற்றொருவருடன் அன்பு , பாசம் என்ற வலைப்பின்னலில்தான் இருக்கின்றது.மேலை நாடுகளில் பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாது, என்னைப் பொருத்தவரை குழந்தை வளர்ப்பதில் சிறந்து விளங்குகின்றனர்.

>>>>>>>>

//பல உயிர்கள், விலங்குகள் அழிந்து விட்டன, இன்னும் அழிந்து வருகின்றன. உயிரியல் மற்றும் சமூகவியலின் படி, எந்த உயிர்களின் தொகை அதிகமாக உயரும் போது, சில மாறுதல்கள் (Biologically, Socially, Behaviorally) ஏற்பட்டு சமன்நிலை செய்யப்படும்.//இயற்கையே சமன் படுத்தும்போது நாம் ஏன் செயற்கையாக சமன் படுத்தவேண்டும்... இதற்காக உங்களுடைய சோம்பல்களையும், பொறுப்பின்மையும் ஞாயப்படுத்த வேண்டுமா? மனிதசமுதாயம் கலாச்சரம் மற்றும் சமுக அமைப்பு காலத்திற்கேற்றவாறு மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதான் வருகின்றது. அதற்காக மாற்றங்கள் சமசீர்யின்மை அழிவை கொடுக்குமேயொழிய நன்மையேதுமில்லை...புரிந்துவாழ்தலால் தமக்கும் தம்மை சார்தவர்களுக்கும் நலன் கொடுக்கும்....

///கோவி.கண்ணன் said... மேலே உள்ள பின்னூட்டத்தை வழிமொழிகிறேன்./// இதை வழிமொழிந்த கண்ணன் சாருக்கும் இதே கருத்துதான் சொல்லமுடியும்
October 9, 2008 8:13 AM

Tuesday, October 7, 2008

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

அறிவுரை அவசியமா! மாறுபட்ட சூழல்கள்...

விஞ்ஞானம், நவீனம், அதிநவீனம், தொலைப்தொடர்பு வசதிகளில் தொலைப்பேசி, கையடக்க தொலைப்பேசி, கனனி, இணையம்..... என்று வளர்ந்துக்கொண்டே போகிறகாலம். தனக்காகவும், குடும்பத்திற்காகவும் செலவிட கொஞ்சமும் நேரமும் மனநிலையும் இல்லாத சூழ்நிலைகளை உருவாக்கி வருகின்ற காலமிது.

இக்கால இளஞர்களில் பலருக்கு குடும்ப சூழல்களிலிருந்து விலகியிருக்கும் மனோநிலையும் மெத்தன போக்கும் உருவாக்கிக் கொண்டுள்ளது. ஏன் திருமண சடங்கே தேவையா? என்ற போக்கும், ஒரு பெண்ணை துணையாக்கிக் கொண்டு அவளுடன் காலமெல்லாம் இருக்க வேண்டுமா? என்ற கேள்விகளும் இன்றைய இளஞர்களுக்கு வந்துக்கொண்டுள்ளது. இதே போல் இளஞிகளும் திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுக்கு நான் அடிமையாக விரும்பவில்லை என்றும் நாங்கள் குழந்தை பெறும் இயந்திரம்மில்லை என்றும். உடலுரவுக்காக திருமணம் செய்யவெண்டிய அவசியமும் தேவையும் இல்லை, தேவைப்படும்போது விருப்பியவர்களுடன் உடல்கொள்ளுதல் தவறொன்றுமில்லை என்று சொல்லும் நிலைக்கு இளஞிகள் வந்துகொண்டுள்ளார்கள்.

இன்னும் சில இடங்களில் பெற்றொர்களின் விருப்பத்தின் பெயரில் திருமணம் செய்துவிடுவதும், பின்னர் தானும் தன் துணையும் நிம்மதியில்லா சூழலுக்கு செல்லும் பலர். இவர்கள் திருமணத்தை தவிற்பவர்களை விட மோசமான மனபோக்குயுள்ளவர்கள்.

இன்னும் சிலர் திருமணத்திற்க்கு பிறகு குழந்தையும் அதன் வளர்ப்பை தவிற்கின்றனர். குழந்தைகள், தங்களின் சுதந்திரத்திற்க்கு தடையாக கருதுகின்றர்.

இப்படியாக குடும்பம், பெற்றோரிடம் அன்புக்கொள்ளுதல், எதாற்த்த வாழ்க்கையை தொலைக்க துடிக்கும் இளஞர் இள்ஞிகளுக்கு கனைக்கள்.....
1. நீங்கள் நம்பும் சுதந்திரமும் மகிழ்ச்சியையும் உங்கள் பெற்றவர்கள் நினைத்திருந்தால் நீங்கள்தான் இந்த மண்ணில் தவழமுடியுமா?
2. உங்களை பெற்றவர்கள் சுமையாக கருதியிருந்தால் நீங்கள் சுவைக்கும் மகிழ்ச்சி எங்கிருந்து வரும்?
3. இன்றய இளஞர்கள் நாளைய முதியோர்கள், நாளைய நிலையை எப்படி கழிப்பீர்கள்?
4. இளஞிகளே! உங்கள் இளமையும் அழகும் உள்ளவரை நீங்கள் நீங்களாக இருப்பீர்கள் இரண்டில் ஒன்று போனால் உங்களின் நிலை?
5. இளஞர்களே! இளமையும் நோயின்மையும் உள்ளவரைதான், உங்களை நீங்கள் உணரமுடியும். ஒன்று போய் ஒன்று வந்தால்! உங்களால் உணரதான் முடியுமா?
6. இதற்க்காக காலமெல்லாம் ஒரு பெண்ணுடனோ! ஆணுடனோ! வாழவேண்டிய அவசியமில்லை என்றால் உங்களால் உங்களுக்குதான் என்ன லாபம்? உலகிற்க்கு விட்டுச் சென்ற சுவடுகள்தான் என்ன?
7. நாம் சாப்பிடும் உணவு ஆற்றலாக எரிக்கப்பட்டும் கழிவாக தள்ளப்படுகின்றது, எனவே சாப்பிடாமல்தான் இருக்க முடியுமா?

உயிர்களின் ஆண், பெண்... அதில் ஆணுக்கு பெண்துணை! பெண்ணுக்கு ஆண் துணை! இருவரின் வாழ்வின் அர்த்தமான சுவடுகள் குழந்தைகள்...... இதுதான் நியதி....

தான் தனக்காகவும் தன் சுதந்திர மகிழ்ச்சிக்காகவும் வாழும் இளஞர் இளஞிகளே!!!.. உங்களை நீங்கள் இழக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்ற கேள்வியை உங்கள் முன்வைக்கின்றேன்........

இப்படி வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பலரின் பதில் எங்களால் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் வரை வாழ்வோம்! அதன் பிறகு தானே மரணத்தை நேசிப்போம் என்பதுதான்........

வாழ்கையில் தோல்விகளை சுவைத்த ஒருவரிடம் பேச நேர்ந்தது,. மிகவும் சந்தோஷ சலிப்புடன் அவர் சொன்னார் நான் யாருக்காகவும் வாழவேண்டிய அவசியமில்லை இருக்கும் வரை பணம் சம்பாரிப்பேன். கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக செலவு செய்வேன். எதைப்பற்றியும் கவலையில்லை என்றார். எனக்கோ, என்னமோ மனதில் பட்டது! எதை சொல்லுவது எப்படிச் சொல்லுவது ஒரு பொராட்டம். ஆனால் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

நாம் இந்த வலிமையும் ஆரோக்கியமும் உள்ளவரைதான். இப்படியெல்லாம் பேசமுடியும். இதில் ஒன்று போனால்கூட எதை செய்யமுடியும் எதை இழக்கமுடியும்.... எல்லாமே மனதிற்க் கொள்ளுதல்தான் நம்மை நாம் காப்பாற்றிகொள்ள முடியும். இதில் "தானே உயிர் நேசிப்பு" என்பது கசப்பான நிலை இதற்காக இத்தனை நாற்கள் கடக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு மனிதனுக்கும் முதுமைத் தொடும்போது இன்னும் வாழவேண்டும் ஆசைவரும். மரணப்படுக்கையில் இருப்பவனுக்கும் நாம் பிழைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையும் ஆசையும் இருக்குமேயொழிய மரணத்தை நேசிக்க மாட்டான் . இதை என் அறிவுறையாக சொல்லாமல் விளையாட்டாக அவரிடம் சொல்லியே விட்டேன்.

ஒருவாரம் கழித்து அவர் என்னிடம் வந்து நன்றி என்று சொன்னார். உங்களிடம் பேசியதிலிருந்து தூக்கமில்லை, என்னமோ சிந்தித்துக்கொண்டே இருந்தேன். பின்னர் நான் எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்தேன்.... என் முதுமைகாலத்தை கருத்தில்கொண்டு மாதம் சேமிக்கும் முறையை தேர்வு செய்து வங்கியில் அதற்கான பதிவையும் செய்துவிட்டேன் என்றார்.. பின் இயலாதவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்கின்றேன், மேலும் செய்வேன் என்றார். இப்படி என் மனமாற்றதிற்க்கு காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி என்று மனமகிழ்ந்து சொன்னார். மேலும் நான் கண்ட சிரமம் என்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று கண்கலங்கி சொன்னார்.. அன்று என்னால் சாப்பிடமுடியவில்லை, அவர் மனமாற்றம் அந்த அளவிற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த நண்பர் எடுத்த முடிவில் எக்காரணத்தாலும் நிலைமாறாமல் இருக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பதிவை எழுதுகின்றேன்.. மேலும் இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்...........
(பி.கு: ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் நண்பர் பெயரும் சூழலும் தவிற்க்கப்பட்டுள்ளது)

Saturday, October 4, 2008

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..
ஆமங்க! கொஞ்சம்,... கொஞ்சனாலும் இங்கீதம் இருக்கனுங்கோ!.. நாம நம்மலப்பத்தி நினைப்பது போல மத்தவங்களையும் நினைக்குறதுல என்ன தப்புன்னு சொல்லுங்க. உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்வதும் சரிதாங்க. அதை செய்யும் முன் மற்றவர்களுக்கு என்ன சங்கடத்தைக் கொடுக்கும் என்பதையும் கொஞ்சம், கொஞ்சனாலும் நினைப்பது என்ன தப்புன்னு சொல்லுங்க!...

இப்படிதான் சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட சென்றேன், கும்பல் அதிகமாக இருந்தது கடைசியில் இரண்டு இருக்கை மட்டும் இருந்தது, நான் அதில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருவர் இடமில்லாமல் நின்றிருந்தார் அவரை கூப்பிட்டு என் பக்கத்தில் உள்ள இருக்கையை காட்டினேன். நான் வலதுப் பக்க சுவர் ஓரமாக அமர்ந்தேன்,வலது கை பக்கம் சுவர்யிருந்ததால் சாப்பிட சிரமம்தான். இருப்பினும் அருகில் உள்ளவர் நன்றாக உண்ண வசதியாக இருக்கட்டுமே என்று ஒடுங்கியமர்ந்தேன். அவர் பூரி சாப்பிட்டார், என்னமோ இவர்மட்டும் தான் சாப்பிட வந்தவர் போல அகன்று அமர்ந்து வெள்ளகார துரை தோசையை கடினப்பட்டு கையில் சாப்பிட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு அலட்டல். அவர் முலங்கை என் முகம் அருகில் வந்து செல்கிறது, எனக்கோ சாப்பிட சிரமமாக இருந்தது. என்னபன்னுவது இதுபொன்ற மனிதர்களையும் சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

இன்னும் சிலர் பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்வது. அப்படியே மற்றும் ஒருவர் வந்து அமர்ந்தால் அவர்மட்டுமே அகன்று அமர்ந்து தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.

நண்பர்களுடன் இருக்கும்போது யாருடனோ தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது.

வீட்டுக்கு வந்த நண்பரை கவணிக்காமல் தொலைகாட்சியில் மூழ்கி விடுவது.

யாரை பற்றியும் கவலைப்படாமல் நால்வர் மத்தியில் புகை ஊதித் தல்லுவது.

இப்படி மற்றவர்களை சங்கடங்களுக்கு உற்ப்படுத்துவது பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்கும் உதவி செய்ய வேண்டாங்க இம்சை கொடுக்காமலிருந்தாலே கோடி புன்னியமுங்கோகோகோ.....

Wednesday, October 1, 2008

கிருஷ்ணன்! கிருஷ்ணன்!

கிருஷ்ணன்! கிருஷ்ணன்!
ஒரு சின்னப் புள்ளைத்தனமான பதிவுதான், சிறுவர்கள் விளையாடும் சின்னப் புள்ளைத்தனமான விளையாட்டை பற்றிய பதிவுதான்...

சிறுவர்கள் விளையாடும்போது சிலநேரங்களில் தன்னுடன் விளையாடுபவரை திட்டுவதுமுண்டு. அப்படி திட்டும்போது அவர்கள் பேரை சொல்லி திட்டுவார்கள். பேரை பழிக்கும் விதமாக திட்டுவதை நாம் அனைவருக்கும் தெரியும். உதாரணமாக,.....
குமாரு!... கிமாரு!....
ரஜினி!... கிஜினி!....
கமலு!.... கிமலு!...
குஸ்பு!... கிஸ்பு!...
என்று பழித்து திட்டுவதை பார்த்துள்ளோம். அப்படி திட்டுவதும் அவர்களுக்கு கோபம் வருவதும் உண்டு.....

இப்படி பழித்து சொல்ல முடியாத பெயர்! அந்த பெயருக்கு சொந்தகாரனை பழிக்க முடியாத அந்த பெயர்!.....
கிருஷ்ணன்!..... பழித்த பெயர் கிருஷ்ணன்!....
கிருஷ்ணமூர்த்தி!... பழித்த பெயர் கிருஷ்ணமூர்த்தி!...
பழித்த பின்னும் அவர் பெயர் அப்படியேதான் இருக்கும்!...

கிருஷ்ணா! என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....