_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 28, 2009

காந்தியும் நேரும் கலந்துரையாடல் - காதில் கேட்டவை

காந்தியும் நேரும் கலந்துரையாடல் - காதில் கேட்டவை

சிந்திப்பதற்காக என்று நினைக்க வேண்டாம் கொஞ்சம் நையாண்டி நகைச்சுவை என்று வைத்துக்கொள்ளலாமே.


=>ஒரு முறை மகாத்மா காந்தியும் நேரு மாமாவும் தோட்டத்தில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். வழியில் ஒரு சிறிய வாய்க்கால் இருந்தது அதை கடக்க வேண்டிய சூழலில் நேரு பின்னாடி சிறிது தூரம் சென்று வேகமாக ஓடிவந்து வாய்க்காலை லாபகமாக தாண்டி அடுத்த பக்கம் சென்று விட்டார். காந்தியோ பொறுமையாக மெதுவாக நடந்து வாய்காலில் இறங்கி அடுத்தப் பக்கம் சென்றார். அதை பார்த்த நேரு நக்கலாக சிரித்தார். அதுக்கு காந்தி நேருவிடம் " நீ இந்த ஐந்தடி வாய்க்காலை தாண்ட நீர் பின்னாடி பதினைந்தடிகள் சென்றாய் நான் எப்பொழுதும் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை எந்த நேரத்திலும் நிதானமாக ஒவ்வொரு அடிகளையும் வைக்கின்றேன்" என்றாராம். இதை கேட்டதும் நேருவின் முகம் ஆச்சரியத்தில் வியந்ததாம்.


=>மற்றொருமுறை காந்தியும் நேருவும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போழுது ஒரு நாய் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது. நேரு அவர் தட்டில் இருந்த கொஞ்சம் சாப்பாடை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிட்ட பிறகு மீண்டும் அவர்களை பார்த்து முறைத்தது. இந்த முறை காந்தி தன் தட்டிலிருந்து கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து நாய்க்கு போட்டார். நாய் அதை சாப்பிடாமல் அவர்களை பார்த்து முறைச்சிகிட்டே இருந்தது....... "ஏனா காந்தி கையில் கைதடி இருந்ததாம்"

அடுத்து
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... கடைசி பாகத்தில் சந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Wednesday, August 26, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

உணவின் அவசியம் மற்றும் தேவைகள் நாட்டில் அதிகரித்து வருகின்ற பொழுதும் இந்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது மிக வருத்தப்பட கூடியது. உலக நாடுகளில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா இருந்தாலும் அதை முறைப்படி பயன்படுத்தாத நாடாகதான் இன்றும் இருக்கின்றது. நான் படித்த வரலாற்று பாடங்களில் அந்த அரசன் கோவில் கட்டினான், இந்த அரசன் குளங்கள் வெட்டி அணைகள் கட்டினான் என்றுதான் படித்துள்ளேன். ஆனால் நாளைய வரலாற்று பாடங்களில் அந்த அரசு இலவச கஞ்சி ஊத்துச்சி, இந்த அரசு இலவச கோவணம் கொடுத்துச்சி என்றுதான் படிக்க வேண்டி வரும். அந்த அளவிற்கு தொலை நோக்கு திட்டங்கள் இன்று நடந்துக்கொண்டு உள்ளது. அந்த கால அரசர்கள் மக்களை சுறுசுறுப்புடன் வைத்திருந்து வேலைகளை கொடுத்து கூலியும் அதற்காக உணவும் கொடுத்தான் என்பதுதான் வரலாறு. குளங்கள் தூறு வாருதல், சாலைகள் அமைத்தல், சாலையோரம் மரங்கள் நடுதல் போன்ற வேலைகளை கொடுத்து மக்களுக்கு உணவளித்தான். இன்று கிட்டதட்ட 20 வருடங்கள் மேலாக எந்த குளமும் தூறு வாரவில்லை என்பதுதான் கவலைக்கிடமான விடயம். மக்கள் தொகை அதிகரிப்பு, நலிந்து வரும் விவசாயம் போன்றவைகள் நாளை உணவின் பற்றாகுறை மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்பதுதான் உண்மை. இனிமேலும் இதனை கவணிக்காமல் விட்டுவிட்டால் ஒரு பெரிய வறட்சியை பார்க்க வேண்டி வரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை.


தரமான பிஸா கிடைக்கவில்லையே என்பது உயர் மட்ட மக்களின் எண்ணம். நாங்கள் பிஸா சாப்பிட்டோம் என்பது நடுதர மக்களின் மகிழ்ச்சி. என்றுமே பட்டினி என்பது கீழ் தட்ட மக்களின் நிலை. இதுதான் இன்றய இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி. காடுகளை அழித்து குளங்கள் வெட்டி நாடாக்கினான் என்பது வரலாறு. வயல்காடுகளை அழித்து துண்டுப்போட்டு வீட்டு மனையாக்கி காசாக்கியதுதான் இன்றைய நிலை. பல ஏரிகள் குப்பை காடாக காட்சியளிக்கும் நிலை.

ஒரு வேளை உண்பவன் யோகி (யோகம் பன்னுகிறவன்),... இரு வேளை உண்பவன் போகி,... முன்று வேளை உண்பவன் ரோகி (நோயுடையவன்),... என்பார்கள். உணவின் தேவைகள் அப்படி அதேபோல் உணவின் அவசியம் அப்படி. எல்லா உயிர்களுக்கும் இயற்கையே உணவழிக்கும் என்றாலும் அப்படி இயற்கையால் உணவழிக்க முடியாத சுழல் வந்தால் இயற்கையே உயிர்களை சமன் செய்துவிடும். அப்படிதான் உயிரை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தன காலரா, மலேரியா, அம்மை போன்ற நோய்கள். இவற்றிலிருந்து மனிதன் தன்னை காப்பாற்றிக்கொள்ள கற்றுகொண்டான் ஆனால் இன்னும் உணவிற்கான சமன்பாட்டை கற்றுகொள்ளவில்லை. மாறிவரும் சூழல்களில் பட்டினிசாவுகள் அதிகரிக்கின்றன.

மரபியல் ஆராய்ச்சி மட்டும் வெற்றி கிடைக்காமல் போயிருந்தால் இன்று மனிதன் உணவிற்கான சமன்பாட்டில் அழிந்தேயிருப்பான். இன்று 50% உணவை மரபணு மாற்றம் வெற்றியினால் கிடைக்கின்றது. இறைச்சி, காய்கறிகள் எல்லாம் மரபணு மாற்றம் முறைகளால் உற்பத்தியை அதிகப்படுத்தியும் அதே போல் குறைந்த கால வளர்ச்சியும் கொடுக்கின்றது. இதன் பின் விளைவாக சில நோய்களையும் சம்பாரிக்கின்றான் என்பது உணமை. உணவின் தேவையை கருதியும் வியாபார வெற்றிக்காகவும் ஆராய்ச்சியாளர்கள வெளியில் சொல்வதில்லை. இதுபோன்ற மரபணு பின்னனியில் சார்ஸ், பறைவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் வந்திருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்துகள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

முன்பெல்லாம் நெல் விளைச்சல் 10 மாதம் முதல் ஒரு வருடம்வரை கால வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும். ஆனால் இன்றைய நிலை பல ரக நெல்மணிகள் வந்துள்ளது. மரபணு மாற்றம் பயனாக குறைந்த பச்ச நாள் 60 முதல் 80 நாட்களின் முழு வளர்ச்சியை பெறுகின்றது. அதே போல்தான் பழங்களும் விரைவாக பழுக்க பல ரசாயண முறைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதன் நோய்க்கு அழாக வேண்டிய நிலையுள்ளது.

"உழுதவன் கணக்கு பார்த்தால் ஒழக்கு கூட மிஞ்சாது" என்பது பழமோழி. அந்த அளவிற்கு லாபமே இல்லாத தொழிலாக இருந்து வருவதால் எந்த ஒரு விவசாயியும் தன் மகனை விவசாயம் பார்க்க அனுமதிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் உணவுக்காக அன்னிய நாடுகளில் கையேந்த வேண்டிய நிலைதான் வரும். இதற்கு முக்கிய பிரச்சனை நீர் பங்கீடு , வேலை செய்ய ஆள் இல்லா பற்றாகுறை. அதன் பின் கொள்முதலில் குறைபாடுகள். இதனால் இன்னும் நான்கு ஐந்தாண்டுக்களில் அரசிடம் உள்ள உணவு கையிருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் யோசிக்க வேண்டிய நிலை.

விவசாயச்துறையில் இந்தியா விஞ்ஞானத்துவத்தில் பின் தங்கியுள்ளது. இஸ்ரேல், சீனா போன்ற நாடுகளை ஒப்பிடும்பொழுது நாம் 30 வருடம் பின் தங்கிய நிலையில்தான் இருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில்தான் நாம் வல்லரசு கனவில் இருக்கின்றோம். விவசாயம் மற்றும் உணவுப் பற்றாகுறையை சமாளிக்க வழிகாணுதல் இல்லாமல் இந்தியா வல்லரசு என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதுதான் உண்மை.

மேலும் பசி மற்றும் உணவின் தேவைகளையும், உற்பத்திகளையும் பின் வரும் இடுகையில் பார்க்கலாம். உங்களின் ஆலோசனைகள் பின்னூட்டத்தில் எதிர்ப்பார்க்கின்றேன்.

அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.



Monday, August 24, 2009

விருதுகளும் சில நன்றிகளும்..

விருதுகளும் சில நன்றிகளும்...

என்ன தான் உலகம் ஒரு மாயை வலைக்குள் சென்றாலும் ஆங்காங்கே மானுடம் காக்கப்படுகின்றதை நம்மால் உணரமுடிகின்றது. இதில் சமீபத்தில் கண்டநெகிழ்வு சகப்பதிவர் செந்தில் நாதனுக்கு உதவிய அன்பு நெஞ்சங்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை பார்க்கின்ற பொழுது இன்னும் மனித உணர்வுகள் இருக்கின்றது நிருபணம் ஆகின்றது. அதே போல் என் வலைப்பக்கத்தில் செந்தில் நாதனுக்கு உதவி வேண்டி இணைப்பு கொடுத்துள்ளேன். என் வலைப்பக்கம் வரும் நண்பர் ஒருவர் அந்த சுட்டியையும் பார்த்துவிட்டு தாமாகவே என்னிடம் ஒரு சிறு உதவியை கொடுத்தார். அந்த சிறு உதவியும் செந்தில் நாதனை நலமாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டானது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி, நண்பர் லூயிஸ் அவர்களுக்கு சிங்கை தமிழ் பதிவர் குழுமம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி.

=0=0=0=

என்ன தான் எழுதி எழுதி வந்தாலும் ஊக்கங்களும் பாராட்டுகளும் எழுதுபவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் துளியும் சந்தேகங்கள் இல்லை. அப்படிதான் பதிவர்களுக்குள் கொடுக்கப்படும் பாராட்டுகளும் விருதுகளும். அப்படிப்பட்ட மகிழ்வான விருதை நண்பர் ராச குமாரன் - குறை ஒன்றும் இல்லை!!! மற்றும் நண்பர் சூர்ய கண்ணன் - சூர்ய கண்ணன் அவர்களும் எனக்கு விருதுகளை வழங்கி மகிழ்வித்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். இதன் மரபுப்படி நானும் இந்த விருதை பத்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம். இந்த விருதின் பெயர் Scrumptious blog award (தமிழில் தெரியவில்லைபா). இந்த விருதை உங்கள் தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு உங்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு உங்களை பிடித்தமானவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டுமாம். அப்படிப்பட்ட சிலரில் பத்து பேர்கள் ...

1.மனம்- கடையம் ஆனந்த்

2.என் பக்கங்கள்-சுரேஷ் குமார்

3.குழந்தை ஹாஜர் - நட்புடன் ஜமால்

4. வீட்டுப்புறா- சக்தி

5.வானம் வெளித்த பின்னும்- ஹேமா

6.தமிழ்த்துளி - தேவன் மாயம்

7.சும்மா- வலசு-வேலணை

8.ஷீ-நிசி கவிதைகள்- ஷீ-நிசி

9.அத்திவெட்டி அலசல் - ஜோதி பாரதி

10.உழவனின் உளறல்கள் - உழவன்

விருது பெற்ற நண்பர்கள அனைவருக்கும் வாழ்த்துகள்...
என்றும் அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Sunday, August 23, 2009

என்னை அழைத்த தொடர் இடுகை...

என்னை அழைத்த தொடர் இடுகை...

ஹேமா அவர்கள் என் இடுகைகளை படித்துவிட்டு என்றுமே பாராட்ட தயங்காத தோழி. வாங்க உப்புமடச் சந்திக்கு கதைப் பேசலாம் என்று அழைத்து என்னை இந்த தொடர் பதிவுக்கு வித்திட்டார். அழகு,காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய உங்களின் நினையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. முதலில் அந்த ஐவரை அழைத்துவிட்டு பின்னர் அழகு, காதல்,பணம், கடவுள்? இவைகளைப் பற்றிய என் நிலையில் நான் நினைப்பதையும் சொல்லி விடுகின்றேன்.

1.அகநாழிகை-பொன்.வாசுதேவன்
2.சில கவிதைகள்-உமா
3.லக லக லக- நையாண்டி நைனா
4.அன்புடன் அருணா-அருணா
5.அடர் கருப்பு-காமராஜ்


முதலில் இந்த தொடருக்கு அழைப்பு விடுத்த தோழி ஹேமாவிற்கு வணக்கங்களும் நன்றியும். முதலில் அழகு, காதல், பணம், கடவுள் என்று பார்க்கின்றபொழுது மிக எளிதாகதான் தெரிந்தது பின்னர் அதை பற்றி யோசிக்கின்றபொழுது அதனின் அழுத்தமும் தேவையும் புரிய ஆரம்பித்துவிடுகின்றது. இவற்றை தனியாக பார்ப்பதைவிட அவற்றின் தலையில் அன்பு என்ற மந்திரத்தை வைத்து பார்த்தால்தான் அவற்றின் உண்மை நிலை புரியும். அழகின் தலையில் அன்பை வைக்கவேண்டும், காதல் தலையில் அன்பை வைக்கவேண்டும், பணத்தின் தலையில் அன்பை வைக்கவேண்டும், கடவுளின் தலையில் அன்பை வைக்கவேண்டும். இவற்றிலிருந்து அந்த அன்பை எடுத்துவிட்டு அவற்றின் மேல் அன்பு வைத்தோமேயானால் அதன் உண்மை திரிந்தே போய்விடுகின்றதை நம்மால் உணரமுடியும்.

அழகு: ஒரு உணவிற்கு சுவை என்பது அந்த உணவில் இல்லை நாம் சாப்பிடும் பொழுது நாவில் உணரப்படுகின்றது. எப்படி சுவை என்பது உணவில் இல்லாமல் உணரும் நாவில் உள்ளதோ அதைப் போல அழகு என்பதும் அந்த உருவத்தில் இல்லை பார்த்து சுவைக்கும் கண்களிதான் இருக்கின்றது. உலக அழகியாக இருந்தாலும் அன்பினால் உணரமுடிந்தால்தான் உண்மையான நிரந்தரமான அழகாக இருக்கும். பார்க்க மிக அழகான பூவாக இருந்தாலும் அதன் வாசனையில் துர்நாற்றம் அடித்தால் அந்த பூ நம் காலுக்கடியில்தான் இருக்கும். அதே போல என்னதான் அழகானவளா, அழகானவணா இருந்தாலும் அவர்களிடத்தில் அன்பு இல்லை என்றால் நம்முடைய கால் தூசிக்கு சமமானதே.

காதல்:
காலை முதல் மாலை வரை..
எப்பொழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்.
கண்ணுரங்கும் பொழுதிலும்..
அப்போழுதும் அவள்(ன்) நினைவுகள்தான்...
நான் நடந்த கால் சுவடுகளில்..
அவள்(ன்) நினைவுகளாய் பார்க்கின்றேன்..
ஓ நான் அவளை(னை) காதல் கோண்டேனோ!....

காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களை விட கல்யாணம் செய்து காதலிப்பவர்களிடம் அதிகம் அன்பு இருப்பதுபோல நான் உணர்கின்றேன். நானும் கல்யாணம் செய்து காதலிப்பவன் என்பதாலோ என்னவோ!. காதல் இல்லா உயிரும் இல்லை அதைவிட அன்பில்லா காதலுமில்லை. வெறும் காதல் மட்டும் வீடு வந்து சேராது, வீதியிலேயே போய்விடும். காதலுக்காக வாழ்கின்றோம் என்று சொல்வதை விட காதலில் வாழ்கின்றோம் என்பதுதான் நிஜம்.

பணம்: பொய்யான உருவதிற்கு மதிப்பையும் கொடுத்து அதன் பின்னால் நாம் செல்கின்றோம் என்பது ஒரு வேடிக்கையான விடயம்தான். பண மதிப்பை பற்றிய முந்தய இடுகை சாமானியனுக்கு தெரிந்த பணமதிப்பு. பணம் எல்லோரிடம் இருக்கலாம் பண இருப்பவர்கள் மதிக்கப்படலாம் ஆனால் பணம் எங்கே மதிக்கப்படுகின்றது என்றால் அது அன்பு உள்ளவர்களிடம் தான்.

கடவுள்: என்னை பொருத்தவரை கடவுள் என்பது ஒரு நிருபிக்க முடியாத ஒரு கற்பனை, அது ஒரு அலுவுனியாட்டம். இந்த அழுவுனியாட்டம் பற்றிய என் முந்தய இடுகை கடவுள் நம்பிக்கையில் ஓர் அழுவுனி ஆட்டம். கடவுளை பற்றிய நிருபணமும் இல்லை அதே போல் இல்லை என்பதற்கும் நிருபணமும் இல்லை. கடவுளை சொல்லி ஏமாற்றுவர்களை விட இல்லை என்று சும்மா இருப்பதே மேல். கடவுள் இருப்பதாகவே வைத்துக்கொண்டால் இத்தனை மதங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதில் சண்டைகளுக்கு வாய்ப்புகள் இல்லை. கடவுள் இருந்துவிட்டு போகட்டும் அது எழைகளின் நீதி மன்றம். மதம்பிடித்த மதங்கள் அழிந்துபோகட்டும். அன்புக்கு நிகரான கடவுளை பார்த்தவர்கள் சொல்லுங்களேன்.

என்றும் உங்களுடன்.
ஆ.ஞானசேகரன்

Friday, August 21, 2009

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...

பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...


உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உயிர் வாழ உணவு அவசியம். உயிர்களின் உடம்பில் சக்தி தேவைப்படும்பொழுது அதன் தூண்டுதலால் ஏற்படுவதுதான் பசி. இந்த பசி இல்லா உயிர் இல்லை. அப்படிப்பட்ட பசியை போக்க உணவு மிக அவசியம். பசியை படைத்த இயற்கை கூடவே அந்தந்த உயிர்களுக்கான உணவையும் படைத்துள்ளது. இருப்பினும் உலகெங்கும் பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம்'' என்றான் பாரதி. ஆனால் இன்றைய நிலைமையில் பட்டினி சாவுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றது. இந்தியாவில் வறுமையின் காரணமாக 20 கோடி மக்கள் உணவின்றி பட்டினிகிடக்கின்றார்கள். என்று அண்மையில் ஒரு தொண்டுநிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரியப்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உணவில்லை என்ற நிலை உள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலையில்லை உலகின் பணக்கார வரிசையில் உள்ள அமேரிக்கா போன்ற நாடுகளில் கூட பட்டினி சாவுகள் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலைக்கு காரணம் மனிதனா? இயற்கையா?..

"மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?....."
மேற்கண்ட பைபிள் வாசகம் சரி என்றால் பட்டினி சாவுக்கு காரணம் யார்? இதுதான் இன்றய கேள்வி... உண்டு கொழுப்பவன் ஒரு புறம் இருக்க, பட்டியால் சாவோர் மறுபுறம் ஏன்? மனிதனின் மாறுப்பட்ட கொள்கைகளால் மடிந்துபோகும் மக்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லமை பெற்ற நாடுகளும் இருக்கு, சோமாலியா போன்ற வறுமைகள் உள்ள நாடுகளும் இருக்கு. இதில் எந்த மனுதருமம் பொது உடமைப் பற்றி பேச போகின்றது.

பசி என்றால் பத்தும் பறந்துபோகுமாம். ஒருமுறை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஒரு மனநோயாளி என்று நினைக்கின்றேன், தான் வாந்தி எடுத்த உணவை தன் பசிக்காக எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். என்ன கொடுமை பாருங்கள்! இந்த நிலமைதான் இன்றைய இந்தியாவில் இருக்கின்றது. உலக பணக்காரர் வரிசைகளில் எட்டு இடங்கள் நமக்குதான். அதே போல் இந்தியாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் உணவின்றி பட்டினி. இதுதான் நம் நாட்டின் இறையாண்மை.

"வசதியிருக்கின்றவன் தரமாட்டான்
வயிறுப் பசித்தவன் விடமாட்டான்"
உண்மைதான் வயிறுப் பசித்தவன் ஒருநாள் பிச்சி சாப்பிடும் காலங்களும் வரலாம். இன்றுவரை நில உச்சவரம்பு சட்டம் இந்தியாவில் அமுல் படுத்த முடியால் இருப்பதற்கு காரணம் என்ன? பல நிலப்பிரபுகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதால்தானே!.

பசியில்லா உணர்வும் ருசிக்காது அதற்காக பசியே வாழ்கையாக இருப்பதும் வெட்ககேடு. ஆதி மனிதன் தொட்டு இன்றைய மனிதன் வரை பசிக்காக அவற்றிக்கான உணவுக்காக போராட்டங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. குழுக்காளாக வாழ்ந்த மனித இனம் தனது உணவை சேமித்து வைக்கும் பழக்கம் வந்தது. இப்படி சேமித்த உணவுகளை வலியவர்கள் வந்து அபகரிப்பதும் இன்றைய தினம் வரை நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்வதுபோல்...
"பசியும் சுண்டல் ருசியும் போனால்,..
பக்தியில்லை பசனையில்லை
சுத்தமான சோம்பேறிகளின் வேசத்திலே!"
பசியும் அந்த உணவிற்கான ருசியும் இல்லை என்றால் வாழ்வில் போராட்டங்கள் இருக்க வாய்பில்லை என்றே சொல்லலாம். அதேபோல் மனிதன் வாழ்க்கை முறைகள் பசியும் உணவையும் பொருத்தே வளர்ந்து வருகின்றது. அப்படிப்பட்ட பசியை பற்றி இன்னும் கொஞ்சம் அடுத்த இடுகைகளில் சிந்திப்போம்...

அதற்குமுன் பின்வரும் காணோளியை பாருங்கள்..



அடுத்த சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, August 17, 2009

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....(சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....(சிங்கை தமிழ்ப் பதிவர்கள் குழுமத்திற்காக)

உலக நாடுகளிலேயே எந்த நேரமும் செயல்ப்பட்டுக்கொண்டிருக்கும் நகரம் என்றால் அது சிங்கப்பூர் என்றே சொல்லலாம். தற்போழுது நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஏதோ திடீர் என குதித்துவிட்ட நாடு இல்லை. சிங்கப்பூரும் மற்ற நாடுகளை போல பல படிகளை கடந்துதான் இந்த நிலையை தொட்டுயுள்ளது. இந்த புதிய சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை பெரும் பகுதியை முன்னால் பிரதமரும் இன்று மூத்த அமைச்சருமாய் உள்ள திரு. லீ குவான் யூ வை சாரும்.

மேலும் படிக்க சுட்டியை தட்டுங்கள்..

மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....



அன்புடன்
ஆ.ஞானசேகரன்


Wednesday, August 12, 2009

பச்சை முத்து தாத்தாவும் நானும்...

பச்சை முத்து தாத்தாவும் நானும்...பச்சை முத்து தாத்தா ஒரு சுதந்திர போராட்ட வீரர். இந்திய மக்களால் நேதாஜி என்று அன்புடன் அழைகப்படும் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அன்பாலும் சிந்தனைகளாலும் ஈக்கப்பட்டு அவர் வழியில் போராடிய ஒரு சுதந்திர போராட்ட வீரர்தான் என்றாலும், இன்றைய இந்திய அரசால் சுதந்திர போராட்ட வீரர்களுக்காண உதவிதொகை பெறமுடியாதவர். இந்திய தேசிய ராணுவத்தில்(INA) சேர்ந்து சுபாஸின் வழியில் போராடிய பலருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கவில்லை என்பது இவர் சொல்லிதான் எனக்கு தெரியும். போராட்டக்  காலத்தில் இவர் சிங்கபூர், மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அடிக்கடி சொல்லுவார். சுதந்திர போராட்டத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி இருந்துவிட்டதால் திருமணம் ஆகாமலே இருந்துவிட்டார். நான் ஊருக்கு எப்பொழுது சென்றாலும் இவரை பார்க்காமல் வருவதில்லை....

நான்: தாத்தா நல்லாயிருக்கிங்களா?

தாத்தா: யாரு சேகரா? வாப்பா பேராண்டி எப்படியிருக்க? சிங்கபூரிலிருந்து எப்ப வந்த? மனைவி பிள்ளைங்க எல்லாம் நல்லாயிருக்காங்களா?

நான்: நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் தாத்தா. நீங்க எப்படியிருக்கீங்க? நம்ம நாட்டின் 63வது சுதந்திர தினம் வருகின்றது. உங்களை போன்றவர்களை பார்ப்பதில் பெருமையா இருக்கு தாத்தா. இந்த வயதிலும் கம்பீரமாக இருக்கின்றீர்கள் எப்படி தாத்தா?

தாத்தா: இந்த உடம்பு வெள்ளக்காரனுக்கு முன்னாடி துப்பாக்கியை தோளுல தூக்கிய உடம்பு. ஒருபக்கம் காந்திமகான் அமைதி வழியிலேயும் மறுபக்கம் சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி பெற்ற சுதந்திரம் தான் நாம் இப்பொழுது அனுபவிப்பது. இவர்களுகுள் கருத்து வேறுபாடு இருந்ததென்னவோ உண்மைதான் ஆனால் நோக்கம் ஒன்னுதான், இந்தியா அடிமை தளத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணங்கள இவர்களுக்கு இருந்தது. ம்ம்ம்.. இப்ப என்ன சொல்லுரதுன்னு தான் தெரியல மறுபடியும் இந்த அரசியல்வாதிகள் நாட்டை துண்டு போட்டு அந்த ஆங்கிலேயனுக்கே வித்துவிடுவானுங்க போல இருக்கு. நான் சாகரதுக்குள்ள அப்படியெல்லாம் நடக்க கூடாதுப்பா....

நான்: அப்படியெல்லாம் நடக்காது தாத்தா இந்த காலத்து இளைஞர்கள் தெளிவா இருக்கின்றார்கள். நாளைய அரசியலிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு தாத்தா. (என்று தாத்தாவிற்காக சொன்னாலும் நடந்துவரும் லஞ்சம், அரசியல் அராசகம் எல்லாம் பார்த்தால் என்னாலும் பொறுக்க முடியவில்லைதான்)

தாத்தா: நீ சொல்லுரதும் சரிதான் ஆனால் இப்ப நடக்குர சாதிக்கலவரம், படிக்கரதுக்கு காசு வாங்குரானுங்க, நோவுனு போனா பணம் பணமுனு பேயா அழையுரானுங்க. இதெல்லாம் பார்க்க முடியலப்பா. வெள்ளைக்காரனுக்கு எதிரா துப்பாக்கி ஏந்திய எனக்கு இந்த கொள்ளை காரனுக்கு எதிரா ஏந்தனுமோ என்ற எண்ணம்தான் இருக்கு. வயசாயிருச்சி கண்ணும் மங்கி போச்சு ஆனா நம்ம நாடு நல்லாயிருக்கனும் என்ற வேறி மட்டும் அடங்கலப்பா சேகர்.

நான்: நீங்க சொல்லுரதும் சரிதான் தாத்தா. இதுகெல்லாம் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டதான் முடியும்னு தோனுது. லஞ்சம் வாங்குறவன், பணம் பணமுனு பேயா அழையுறவன் எல்லாம் யாரு தாத்தா. நம்மல ஒருத்தன் தானே! நம்ம அண்ணனோ தம்பியோ தானே! இவங்கள நாம திருத்த முடியாதா என்ன?

தாத்தா: பேராண்டி நீயும் சரியாதான் பேசுர ... அதுகெல்லாம் என்ன செய்யலாம்னு நீ நினைகிற? சுதந்திரம் வாங்கி 62 வருசம் ஆகியும் ஏழை ஏழையாதான் இருக்கான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆகிட்டான்.

நான்: ஆமாம் தாத்தா இந்தியா ஒரு ஏழை நாடு ஆனால் பணம் படைத்தவர்கள் அதிகம் உள்ள நாடு. அம்பானி வாழ்க்கை சரித்திரம் புத்தகம் ஒன்றில் படித்தேன் " நான் எனது முன்னேற்றதிற்கு காரணம் இந்திய அரசை நான் சரியாக புரிந்துக்கொண்டேன்" என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு சரியான அர்த்தம் நமக்கு புரியாமலா போகும். ஆமாம் தாத்தா பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கியவர்கள் தானே நம்முடைய பிரதிநிதிகள். இவர்களை சட்டதிற்கு முன் நிறுத்தி தண்டனை பெறமுடியுற காரியமா என்ன?...

தாத்தா: அதுக்குதான் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்று முன்னால் குடியரசு தலைவர் அப்துல்கலாம் சொன்னாரு. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு போங்க நல்லது செய்யுங்க.

நான்: தாத்தா நீங்க சொல்லுவது பேச்சுக்கு நல்லாதான் இருக்கு ஆனா இந்த பாழபோன அரசியலுல போராடி வெற்றிபெற முடியுமா? அப்படி வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்கள் செய்யுற தவற்றைதான் நாமும் செய்யனும். அதுல என்ன ஞாயம் இருக்கு?

தாத்தா: நீ நினைப்பதை போல மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ்சந்திர போஸ், பகத்சிங் போன்றவர்கள் நினைத்துருந்தால் இன்றைய சுதந்திர இந்தியாவை பார்க்கமுடியுமா? பேராண்டி... "போராடினால்தான் வெற்றி! உழைத்தால்தான் உணவு!"

நான்: இப்படிதான் தோழர் கக்கன் போன்றோர் நேர்மையா அரசியல் பன்னுனாங்க அவர்களுக்கு இந்த சமுதாயம் என்ன செய்தது? ஒரு தகர பெட்டியும், உடுத்திகொள்ள ஒரு சில வேஷ்டியும் தானே இருந்தது.

தாத்தா: அப்படி நேர்மையா இருந்ததாலேதான் அவரைப் பற்றி பெருமையா நீ பேசுகின்றாய்.. அப்படிதான் நல்லது செய்யனும், ஒதுங்கி நின்னு கேள்வியை கேட்டுட்டு போரதுல என்ன முன்னேற்றம் காணமுடியும். ஏரில இறங்கி கலக்கினாதான் மீன் பிடிக்க முடியும். அப்படிதான் நாங்க அந்த வெள்ளையனை எதிர்த்து நின்னோம். அப்ப எங்கள் மனசுல நினைத்தது எல்லாம் நம்ம நாடு, நாட்டின் சுதந்திரம் மட்டும்தானே!

நான்: தாத்தா போன பாராளுமன்ற தேர்தலில் (2009) சென்னை சேப்பாக்கம் தொகுதில் படித்த இளைஞர் சரத் பாபு நின்றார். நல்ல நேர்மையாக உள்ளவர் அவருக்கு இந்த மக்கள் வாக்களித்தார்களா? இதை பார்த்த எந்த இளைஞன் அரசியலுக்கு வருவான்.

தாத்தா: அரசியலுக்கு வரவேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெர வேண்டும் என்று யார் சொன்னது. அப்படி வெற்றிப்பெற்றால் அவர்கள் செய்வதைதான் நீங்களும் செய்வீர்கள். போராடனும் சேவை செய்யனும் அதுதான் அரசியல். அப்படிதான் காமராஜர், அறிஞர் அண்ணா போன்றவர்கள் வெற்றி பெற்றார்கள். இன்னக்கி எல்லா கிராமத்திலயும் பள்ளிகூடம் இருக்குனா காமராஜர் புண்ணியம்தானே. அப்படிப்பட்ட அரசியல்வாதிகளை வேண்டிதான் நாம் நாடு இருக்கு... வெற்றி பெற்று சட்டசபைக்கோ நாடாளும் மன்றதிற்கோ போனால்தால் மக்களுக்கு நல்லது பன்னமுடியுமா? அப்படி அங்கே போனவர்களுக்கு நாமதானே புரியவைக்கனும். அதுக்கு மக்களோட மக்களாதானே போராடனும் சேவையும் செய்யனும்..

நான்: நீங்கள் வெள்ளையனை எதிர்த்து போராடினீங்க. வெற்றியும் கண்டீர்கள். நாங்கள் எதுக்காக போராடனும் எங்களின் அடிப்படை உரிமைகளை கொடுப்பது அரசின் கடமையள்ளவா?... பிறகு ஏன் அது மறுக்கப்படுகின்றது?

தாத்தா: அதுக்குதான் நீங்களெல்லாம் அரசிலுக்கு போங்கனு சொல்லுறேன். நல்லது பன்னுங்க யாரு வேனாமுன்னு சொன்னாங்க?.. விவேகாணந்தர் சொன்னது போல
இந்நாட்டை வளப்படுத்த துடிப்புள்ள 100 இளைஞர்கள் போதுமே, தேவை நேர்மையும் உழைப்பும் மட்டும்தானே!... என்ன புரியுதா பேராண்டி?.....

நான்: ""தலைய சொருஞ்சுகிட்டு நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதைதான் நானும் நினைத்துக் கோண்டு இருக்கேன்!""

வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்கள்!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(முற்றிலும் கர்ப்பனையானாலும் செய்திகள் உண்மை)




Monday, August 10, 2009

இப்படிக்கு உதவும் கரம்...

இப்படிக்கு உதவும் கரம்...

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவம் ஒன்று. அவரசமான வேலையாக சென்றுக்கொண்டிருந்தார், கடைவீதி என்பதால் மக்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக இருந்தது. அந்த கூட்டத்திலும் ஒரு தாய் கைகுழந்தையுடன் "அண்ணா குழந்தை பசிக்காக அழுகின்றது உதவி செய்யுங்கள்" என்று சட்டையை பிடித்து கேட்டாள். கொஞ்சம் இரக்க குணம் உள்ளவர் வேறு வழியின்றி பணப்பையை சட்டையிலிருந்து எடுத்து உதவி செய்துவிட்டு அவசரமாக சென்று பேருந்து ஏறியதும்தான் தெரிந்தது அவரின் பணப்பை காணவில்லை. என்ன பன்னுவது உதவி செய்ததிற்கு கிடைத்த சன்மானம் ஏற்றுக்கொள்ளதானே வேண்டும். இதை அவர் வழியாக நான் கேட்டதிலிருந்து அப்படிப்பட்ட உதவிகளை நான் செய்வதில்லை என்றே சொல்லாம். ஏனனில் பயமும் ஒரு காரணம்.
இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் மேலே ஜென் கதை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சாது ஒருவன் குதிரையில் மலைப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தார். மாலை நேரம் இன்னும் நகரத்தை அடைய வெகுதூரம் இருந்ததால் வேகத்தை கூட்டினார். போகும் வழியில் ஒருவன் சாலை ஒரம் மயங்கி கிடந்தான். அதை கண்டதும் சாது குதிரையை விட்டு இறங்கி அவனை நகர்த்தி பார்த்தார். அவன் அசையாமல் கிடந்ததால் குதிரையில் தொங்கவிடப்பட்ட குடுவையில் நீரை எடுத்து முகத்தில் தெளித்து பின் சிறிது அவனை அருந்த செய்து அவனை குதிரையின் மேல் ஏற்றினார். குதிரையில் அந்த நபர் ஏறி குதிரையின் கடிவாளத்தை ஆட்டியதும் குதிரை சிட்டாக பறந்தது. குதிரை சென்று சிறிது நேரத்திற்கு பின் தான் சாதுக்கு புரிந்தது வந்தவன் திருடன் என்றும் தன்னுடைய குதிரை களவாட பட்டது என்றும். இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதையும் புரிந்துக் கொண்டார் சாது.

குதிரையை பறிக்கொடுத்துவிட்டு மெதுவாக நகரத்தை நோக்கி நடக்க தொடங்கினார். பொழுது புலரும் நேரத்தில் நகரத்தை அடைந்தார். பின் குளித்து உடை மாற்றிக்கொண்டு சந்தைக்கு சென்றார் சாது. சந்தையில் தன் குதிரையுடன் அந்த திருடன் நின்றுக்கொண்டிருந்தான். மெதுவாக சாது அவன் பின் புறம் கையால் தட்டினார். திருடன் பேயறைந்தது போல நின்றான்.

சாது மெல்ல சிரித்துகொண்டே "சொல்லாதே" என்றார். அவனோ என்னவென்று புரியாது விழித்தான்.

சாது சொன்னார் " குதிரையை நீயே வைத்துக்கொள் ஆனால் நீ அந்த குதிரையை எப்படி பெற்றாய் என்ற வித்தையை மட்டும் சொல்லி விடாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரிந்தால் எதிர் காலத்தில் உண்மையிலேயே மயங்கிகிடக்கும் ஒருவனுக்கு உதவி செய்யமாட்டார்கள் என்ன புரிகின்றதா? " என்று சாது கூறியதும் திருடன் கலங்கினான்.

இப்படிப்பட்ட ஏமாற்றுவாதிகள் இருப்பதால் தான் உண்மையில் உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு உதவி கிடைக்காமலே போய் விடுகின்றது. அதே போல் லஞ்சமும் பொய் வாக்குறுதிகளும் கொடுக்கும் அரசியல் வாதிகள் மத்தியில் தோழர் கக்கன் போன்றவர்களுக்கு மதிப்பு இல்லாமலே போய்விடுகின்றது. உண்மையும் எதார்த்தமான வாழ்க்கையும் புதைந்துகொண்டுள்ளது என்பது தான் நாளைய உலகத்தின் கேள்விக்குறி?????........

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Saturday, August 8, 2009

சோதனை பதிவு (நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5)

சோதனை பதிவு (நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5)

சுட்டியை தட்டுங்கள்

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5


அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Friday, August 7, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-5

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

நீரையும் நிலத்தையும் பற்றி சொல்லிகொண்டே போனால் முடிவுக்கு வருவது சிரமம்தான், ஆனாலும் இதற்கு மேல் சொல்லிக்கொண்டே போனாலும் அலுப்பு வந்துவிடும். அதனால் இந்த பகுதியை இறுதியாக வைத்துக்கொள்வதுதான் உத்தமம். இருந்தாலும் சமயம் கிடைக்கும் பொழுது மேலும் யோசிக்கலாமே!.....

பூமியில் உள்ள உயிர்கள் தோற்றதிற்கு ஆதாரமே நீர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதே போல் நீரின் தேவைகள் இன்று அதிகரித்துள்ளது என்பது நமக்கு தெரிந்ததே ( அனுபவித்துக் கொண்டுள்ளோம்). ஒவ்வொரு துளி நீரும் ஏதோ ஒரு உயிர் அணுவை இயக்கிகொண்டுதான் இருக்கின்றது. "ஆக்கமும் பெண்ணாலே அழிவும் பெண்ணாலே" என்ற ஒரு பழமொழி வழக்கில் இருக்கின்றது அதுபோல உயிரின் ஆக்கத்திற்கும் நீரே, உயிரின் முடிவிலும் நீரே என்று எண்ணங்கள் இருக்கின்றது.

எனக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது என் அம்மாச்சி(அம்மாவின் அம்மா) பத்து காசு கொடுத்தார்கள். என்னிடம் பத்துகாசு கொடுத்ததும் மிக மகிழ்ச்சியாக நான் விளையாடினேன். எனக்கு சின்ன பொருள்களை வாயில் போட்டு விளையாடும் பழக்கம் இருந்திருக்கின்றது, அதேபோல் அந்த பத்து காசையும் வாயில் போட்டு விளையாடும் பொழுது விழுங்கிவிட்டேன். விழுங்கிய காசு தொண்டையில் படுக்கை வசமாக நின்று விட்டது. என்ன செய்தும் காசை எடுக்க முடியவில்லை. மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் ஓடியது. என் அதிஸ்ட்டம் (தமிழில் சொல்லுங்களேன்) பத்து காசின் ஓரங்களில் வலைவுகள் இருக்கும், அதனால் நீர் ஆகாரங்கள் உள்ளே செல்லமுடிந்தது. அந்த நீர்தான் என்னை இப்பொழுதும் உங்ளுடன் பேச வைத்துள்ளது என்றால் நீரின் முக்கியத்துவம் புரிகின்றது. பின்னர் மருத்துவமனையில் அந்த காசை எடுத்துவிட்டார்கள் என்பது வேறு விடயம்.

வயதானவர்களுக்கு திட உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு செறிமானம் ஆக சிரமம் வந்துகொண்டு இருக்கும். அதனால் அதிகம் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளுவார்கள். அதே போல் உயிர் போகும் நிலையில் இருக்கும் வயதானவர்கள் சிறிது பால் அல்லது நீரே ஆகாரமாக கொண்டு சிலநாட்கள் வாழ்வார்கள். அந்த நீரும் நின்று போனால் உறவினர்களுக்கு சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஒரு மனிதன் வாழ்வில் கடைசி மூச்சு இருக்கும் வரை நீரே ஆதாரமாக இருக்கின்றது. இப்படி மனித வாழ்வில் ஒட்டியே வரும் நீரை நமக்கு பின் உள்ள சந்ததினர்களுக்கு எப்படிப்பட்ட நிலையில் விட்டு செல்கின்றோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியது நம் கடமை.

இயற்கையை நாம் என்னதான் கட்டி காப்பாற்றினாலும் ( அப்படி இல்லை என்பது வேறு விடயம்) அவற்றின் சில மாற்றங்களை நாம் சந்தித்துதான் ஆகவேண்டும். சுனாமி போன்ற மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பருவ சூழ்நிலை காரணிகள்தான் ஒரு உயிரின் பரிணாம வளர்ச்சிக்கு காரணமாகின்றது. அப்படிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்தான் நாம் ஏற்றுக்கொண்ட மனித பாத்திரமும். ஒவ்வோரு காரணிகளின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியில் சில மாறுதல்கள் இருப்பதை அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இன்று நம் குழந்தைகளின் அறிவுத்திரண் நாம் அந்த வயதில் இல்லை என்பதும் உண்மைதானே.

மாறி வரும் பருவக்காலங்கள், உலகின் வெப்பம் அதிகரித்தல், குடிநீரின் பற்றாகுறை இப்படி பல காரணிகளால் நாளைய பரிணாம வளர்ச்சியில் என்ன மாற்றங்களை நாம் (மனிதன்) காண போகின்றோமோ????? யார்கண்டது! மாறிவரும் பருவ காலங்களால் உடலில் உரோமங்கள் அதிகரிக்கலாம். வெப்பத்தின் அதிகரிப்பால் தலையில் கொம்புகள் முளைக்கலாம். குடிநீரின் பற்றாகுறையால் ஒட்டகம் போல முதுகில் நீர்ப்பையுடன் பிறக்கலாம். கணனியில் உற்கார்ந்து உற்கார்ந்து கூனி குறுகி மீண்டும் நான்கு கால்களில் நடக்கலாம்..

கவலையை விடுங்கள் இப்படிபட்ட பரிணாம மாற்றங்கள் காண பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்... இருந்தாலும் நாம் இயற்கை கொடுத்த கொடைகளை நாம் தீண்டாதவரை இயற்கையும் நமக்காகவே இருக்கும்.... இயற்கை இயற்கையாக

அதற்காக மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து விட்டு பசுமை புரட்சியை பற்றி பேசவேண்டாம். காடுகள் மழையின் ஆதரமாக இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை குறைசொல்வதை விட்டுவிட்டு நாமும் குறைந்து வரும் நீர் வளத்தை காப்பாற்ற ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம். நாம் வீணாக செலவழிக்கும் நீரின் ஒரு துளியும் நாளைய உலகின் சொத்து என்பதை கவணத்தில் கொள்வது நல்லது. வீட்டு தோட்டங்களின் இன்றைக்கு ஒரு மரமாவது நட்டுவையுங்கள். வீட்டின் தோட்டத்தில் காரைத்தளங்களை எடுத்துவிட்டு புள்வெளிகளை உருவாக்குங்கள் மழைநீர் சேமிக்கப்படும். என்னை பொருத்தவரை மனிதன் நினைத்தால் கல்லும் கவிபாடும்! கன இரும்பும் நடனமாடும்!..... ஆம் தோழர்களே! நீரை சேமித்து நாளைய உலகை வளமாக்குவோம்!....

தினமலரில் வந்த சில ஆவணப்புகைப்படம்....



ஒரு காணோளி பகிர்வு...




என்று அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

(அடுத்து எதைப்பற்றி அலசல் ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் நட்புகளே!)

Wednesday, August 5, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-4

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

நீரும் நீரின் ஆதரங்கள் மற்றும் தேவைகளை பற்றி முந்தய பகுதிகளில் பார்த்தோம். அதே போல நிலந்தடிநீரின் முக்கியதுவம் பற்றியும் நிலத்தடிநீரை பாதுக்காக்க வேண்டியதின் கடமையையும் பற்றியும் தெரிந்துக்கொண்டோம்.


அந்த காலங்களில் ஒரு நாட்டின் அரசன் மந்திரியாரைப் பார்த்து "மந்திரியாரே நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..?" என்று கேட்பாராம் அதற்கு மந்திரியார் "அரசே மாதம் மும்மாரிப் பொழிகிறது நாட்டில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்" என்று சொல்வதிலிருந்து மழையின் முக்கியத்துவம் நமக்கு புரிவதுடன், நாட்டில் விவசாயமும் நன்றாக உள்ளது என்பது புலணாகின்றது.

அதே போல மக்கள் மழையை தெய்வமாக கருதினார்கள். மழை இல்லாத காலங்களில் மழைக்காக பூஜைகள் செய்வதும் உண்டு. இவர்களின் நம்பிக்கை சில நேரங்களில் பலித்துவிடுவதும் உண்டு. நான் சிறுவானாய் இருந்த பொழுது எங்கள் ஊரில் நீண்ட நாட்களாக மழையின்றி பயிர்கள் வாடின, மக்கள் குடிப்பதற்கு நீர் எடுக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. ஊரில் உள்ள பெரியவர்கள் யோசனையில் வைக்கோலில் ஒரு பொம்மை செய்யப்பட்டது, சாய்ங்காலம் பொழுதில் அந்த பொம்மையை ஒரு பாடையில் வைத்து மழைபகவாண் இறந்துவிட்டதுபோல் நினைத்து பெண்கள் கூடி அழுவார்கள் பின்னர் பாடையில் எடுத்து சென்று ஊர் கோடியில் தீயிட்டு கொழுத்தி விடுவார்கள். இதுபோல் செய்தால் மூன்று நாட்களுக்குள் மழை வரும் என்பது நம்பிக்கை. இவர்கள் நம்பிக்கையோ என்னவோ சில நேரங்களில் மழை வருவதும் உண்டு.

இப்படிப்பட்ட சடங்குகளிலிருந்து மக்கள் மழையையும் மழை நீரையும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது தெரிகின்றது. சில ஊர்களில் கழுதைக்கு கல்யாணம் செய்தால் மழை வரும் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதேபோல் வெறு எந்த தெய்வங்களை வணங்காத ஒரு பெண் கணவனை வணங்கியவளாக இருந்தால் அவள் பெய் என்றால் மழை பெய்யும் என்று திருவள்ளுவர் கூறுகின்றார். ( இவற்றின் நோக்கம் எப்படியோ மழையின் மேன்மை புரிகின்றது)

1980 துகளில் நடந்த சம்பவம் வறட்சியின் காரணமாக சென்னையில் குடிநீர் பிரச்சனை அதிகரித்தது. வயலின் வித்துவான் குன்னகுடி வைத்ய நாதன் செம்பரம் பாக்கம் ஏரியில் மழை பெய்யும் பொருட்டு மழைக்கான ராகத்தில் வயலின் வாசித்தாரம் (ராகம்: ஹம்சவர்த்தினி). மழையும் சிறிது பெய்ததாக நண்பர்கள் சொன்னதுண்டு.

மேலும் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் சென்னையின் வறட்சியை போக்க செயற்கை மழையை செயல்படுத்தினார். ஒரு மணி நேரம் மழையும் பெய்து சிறிது வறட்சியையும் சரியானது. சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜவின் திரைப்படம் கருத்தம்மா படப்பிடிப்புக்காக (தென்மேற்கு பருவகாற்று பாடலுக்காக) செயற்கை மழையை உருவாக்கியதாக செய்திகள் வந்ததுண்டு.

செயற்கை மழை என்றால் என்ன? எப்படி உருவாக்கப்படுகின்றது?:
செயற்கை மழை என்பது செயற்கையாக மேகத்தை உருவாக்குவது என்பதல்ல
வளிமண்டலத்தில் இருக்கின்ற மேகங்கள், நாம் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கின்ற இடத்திற்கு நேர் மேலே வரும்போது வேதிப்பொருட்களை தூவி மழை மேகங்களாக்கி மழை பெய்ய செய்வதாகும். இதனை சாதாரணமாக செய்துவிட முடியாது அதற்காக இரண்டு மூன்று நாட்கள் கடினமாக உழைத்து பெறக்கூடியது, செலவும் அதிகம். இப்படி கடினமாக அரும்பாடுபட்டு ராக்கெட்டுகள் விமானங்கள், பீரங்கிகள் ஆகியவற்றின் மூலமாக மழையைக் உருவாக்கும்படி மேகங்களைத் தூண்டுகின்றனர். அதாவது உப்பு, சில்வர் அயோடைடு போன்ற ஐஸ் உருவாக்கும் பொருட்களை ஆகாயத்தில் தெளிக்கின்றனர். இதனால் உருவாகும் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

உலகெங்கும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் செயற்கை மழையை வரவழைக்க முயன்று கொண்டிருந்தாலும் சீனாவில் தான் பெரிய அளவில் செயற்கை மழையை உருவாக்கிகொண்டுள்ளார்கள்.

இப்படி அந்த காலங்கள் முதல் இன்றைக்கு வரை மழைக்காக மனிதன் அவனின் திரனுகேற்றப்படி வேண்டுதலுகளும் எதிர்ப்பார்ப்புகளும் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படி கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன்படுத்தி வருகின்றோமா? என்ற கேள்விகளுடன் இந்த இடுகை யோசிக்க வைக்கப்படுகின்றது.

இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.


Tuesday, August 4, 2009

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-3

இதற்கு முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-1


நீரும் நிலமும் மனிதன் வாழ்வில்....பகுதி-2

நீரின் அவசியமும் அதேபோல் நீரினை சேமிக்கும் விழிப்புணர்வும் வேண்டும் என்பதால்தான் இந்த மூன்றாவது பகுதிக்கு செல்கின்றோம். இயற்கையின் விசித்திரமான விளையாட்டில் பூமியில் மூன்று பங்கு நீரால் சூழப்பட்டாலும் குடிந்நீரின் அளவில் 3% தான் இருக்கின்றது. இதில் பெரும்பான்மை இடங்களில் நிலத்தடிநீரை நம்பிதான் வாழ்கின்றோம். மக்களின் நீர் தேவைகள் அதிகரிப்பால் நிலந்தடிநீர் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு கூறுகின்றது.


குடிக்க தண்ணீர் இல்லாமல் நா வறண்டு போன நிலையில் தான் ஒரு சொட்டு தண்ணீரின் அருமை நமக்கு புரியும். இயற்கை நமக்கு கொடுத்த கொடைகளில் குறை வைக்கவில்லை. ஆனால் நாம்தான் இயற்கையை பேணிக்காக்க தவறிவிட்டோம்.

"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே" என்ற பழமொழி உண்டு. அந்த அளவிற்கு நம் முன்னோர்கள் தண்ணீரை பற்றி அறிந்தே வந்துள்ளார்கள். பூமியில் இருக்கும் எல்லா வளத்திற்கும் ஆதாரம் முதன்மை என்பது தண்ணீர்தான். பூமியை தவிர எந்த கோள்களிலும் உயிர்கள் இல்லை ஏனெனில் அங்கெல்லாம் நீர் இல்லை. உயிர்களின் ஆதாரம் நீர்தான் என்பதிலிருந்து நீரின் முக்கியதுவம் புரிகின்றது.

மனித கழிவுகள், தொழிற்சாலைகளில் வெளியேரும் வேதிக்கழிவுகள், மாமிச கழிவுகள் எல்லாம் ஏரிகளிலும், நதியோரங்களிலும் கலந்து விடப்படுவதால் நீரின் தன்மை மாற்றம் கண்டு அது அதனை சார்ந்த நிலத்தடிநீர் மாசுப்பட்டு உவர்ப்பு தன்மைக்கு கொண்டு செல்கின்றது. அதனால் அங்கு வளரும் தாவரங்கள் உயிரிழக்க நேரிடுகின்றது. தாவரங்களின் அழிவு நம் இயற்கை சூழலை மாசுப்பட வைக்கின்றது. இதனால் ஆக்ஸிசனின் அளவும் வளிமண்டலத்தில் குறைகின்றது. இதனால் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் பாதிக்க வாய்ப்புள்ளதாக 1980 ல் கண்டறியப்பட்டது.

நம்நாட்டு பொருளாதர கொள்கையின் அடிப்படையில் (உலகமயமாக்கல்) பண்நாட்டு வர்த்தகங்கள் கோக்கோ கோலா போன்ற நிர்வணங்கள் பல இடங்களின் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடிநீரை உருஞ்சி தண்ணீரை காசாக்கி பார்க்கின்றனர். இப்படி ஆழ்குழாய்கள் மூலம் நீரை உறிஞ்சப்படுவதால் அருகில் உள்ள கிராமங்களுக்கு நிலத்தடிநீர் தட்டுபாடாகவும், கிடைக்கும் நீர் உவர்ப்பாகவும் ஆக்கப்பட்டு வருகின்றது. மேலும் அதனின் கழிவுகள் விளைநிலங்களை மாசுப்படுத்தி விளைச்சலை பாதிக்க செய்துவிட்டது. இது போன்ற நிலைகளை அரசுகள் பொறுப்பற்ற நிலையில் நடந்துக்கொள்வதன் மூலம் நாட்டின் நீர் செல்வத்தை வீணடிக்கின்றது.
நிலத்தடிநீரை பாதுக்காக இடதுசாரி கட்சிகள் போராடியும் எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட நிலை நீடித்தால் நாளைய சந்ததியர் நீருக்காக போராடும் நிலைதான் உருவாகும். இதை கவணத்தில் கொண்டு அரசுகள் நிலத்தடி நீரை பாதுக்காக்க தோலைநோக்கு திட்டங்களை அறிமுகம் படுத்த வேண்டும். மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

மழை நீர் சேமிப்பின் அவசியம்: சாதாரணமாக நிலத்தில் பெய்யும் மழை நீர் 40% நிலத்தில் ஓடி கடலில் கலந்துவிடுகின்றது. 35% சூரிய வெப்பத்தால் ஆவியாகியும் மீதம் உள்ளநீர் பூமியில் உறிஞ்சப்பட்டு மண்ணின் ஈரப்பதம் போக அதில் 5% தான் நிலத்தடி நீருக்கு செல்கின்றது. மேலும் நகரங்களில் உள்ள கட்டங்கள், சிமெண்ட் காரைகள் மற்றும் தார் ரோடுகளின் காரணமாக மழை நீர் நிலத்தில் ஓடி சாக்கடைகளில் கலந்து வீனாகின்றது. மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக நீரின் தேவையும் அதிகரிக்கும் பொழுது மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

2001 ல் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த வீடுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டம் பலனை கொடுத்தாலும் அதன் பின் வந்த அரசு திட்டத்தை உடப்பில் போட்டதுமில்லாமல், அதற்கான நல்வழிகளையும் அறிமுகம் பன்னாமாலும், ஆய்வு செய்யாமலும் விட்டது வருத்தப்படவைகின்றது. அதே போல் விவசாய கிணறுகளில் மழை நீர் சேமிக்கும் திட்டமும் காணாமல் போய்விட்டது.

மழைநீரை சேமிக்க வீடுகளில் கட்டிடங்களை சுற்றி ஆங்காங்கே 3 அடி ஆழமும் 12 அங்குல விட்டமும் கொண்ட துளைகளை அமைத்து அதில் கூலாங்கல், மணல் போன்றவற்றல் நிறப்பி தூவாரங்கள் உள்ள சிலாப்பில் மூடிவிடலாம். இதன் மூலம் இரண்டு வருடங்களில் நிலத்தடி நீரை உயர்த்த முடியும் என்று சொல்லப்படுகின்றது. பழங்காலங்களில் மழைக்காலங்களில் கூரைகளில் வரும் நீரை சுண்ணாம்பினால் வடிகட்டி தொட்டிகளில் சேமித்து பயன்படுத்தினார்கள் என்று சில வரலாறுகள் சொல்கின்றது. மகாத்மா காந்தியடிகள் தன் வீட்டில் இதுபோன்ற தோட்டிகள் மூலம்தான் நல்ல தண்ணீரை பயன்படுத்தினாராம்.

என்னதான் இயற்கை நமக்கு நீரை வழங்கினாலும் நாமும் நீரை சேமித்து பயன்ப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் நாளைய உலகம் நம்கைகளில். இந்த இடுகையில் நீரை சேமிக்கும் அவசியம் பற்றி பார்த்தோம். அடுத்து வரும் இடுகைகளில் நீரை எவ்வாறு சேமிக்கலாம் என்பதையும். எப்படிப்பட்ட முறைகளில் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும் என்பதைப்பற்றி கலந்து யோசிப்போம்.

நீர் சேமிப்பு பற்றிய நல்ல காணோளி கண்டிப்பாக பார்க்கவும்.





இன்னும் நீரை பற்றிய யோசனையில்
ஆ.ஞானசேகரன்.

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்....

என்னமோ போங்கடா! பொல்லாத உலகம்....

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ...
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்! -பாரதியார்




உணர்வுகளில்
ஆ.ஞானசேகரன்

Monday, August 3, 2009

நட்பில் விளைந்த!....

நட்பில் விளைந்த!....

நீரும் நிலமும் மனிதன் வாழ்வில் அடுத்த பகுதி தொடங்கும் முன் ஒரு சிறிய இடைவெளியில் நண்பர்களுடன் ஒரு இனிய உறவுகள். நான் பதிவு தொடங்கியதிலிருந்து நண்பர்களும் அவர்களின் உறவுகளும் மேலோங்கி இருப்பதை என்னால் உணரமுடிகின்றது. அப்படிப்பட்ட உறவுகளால் என் எழுத்தின் வேகமும் மேன்மையும் பெருகின்றது என்பதை நினைத்து பார்க்கின்றேன். என் இனிய நண்பர்களுக்கு நண்பர்கள் தின நாளில் வாழ்த்துகளுடன் என் நன்றிகளையும் சமர்ப்பணம் செய்கின்றேன்.

எங்கிருந்தோ கிடைக்கும் நண்பர்களின் ஊக்கமும் அவர்கள்பால் கிடைக்கும் பாராட்டுகளும் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இன்னும் சிலர் நண்பர்கள் தங்களுக்குள் கொடுக்கும் விருதுகளை வழங்கி மகிழ்கின்றார்கள். அப்படிதான் எனக்கும் கிடைக்கும் விருதுகள் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்துவிடுகின்றது. அந்த மகிழ்ச்சியின் ஆதாரமாக இன்றும் நண்பர் யோகராஜ் சந்திரகுமார் சந்ருவின் பக்கம் பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து மகிழப்படுத்தினார். அதே போல் நண்பர் SUREஷ்(பழனியிலிருந்து) கனவுகளே.., 100 நண்பர்களுக்கு இந்த பதிவர் நண்பர்கள் விருதை கொடுத்து சாதனை செய்துள்ளார். அந்த 100 நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே.... என்னை நண்பர்களில் ஒருவனாக ஏற்று விருதையும் கொடுத்து மகிழ்வித்த நண்பர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும். அவர்களுக்கு என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!


இந்த விருதின் மரபுப்படி நானும் சில நண்பர்களுக்கு கொடுக்க வேண்டுமாம். என்னை பொருத்தவரை அனைத்து நண்பர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் என் சோம்பலின் காரணமாகவும் பணியிடத்து பழுவின் காரணமாகவும் பத்து நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு என் இதயத்தில் விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளேன். அனைத்து என் நண்பர்களுக்கும் என் இனிய நண்பர்கள்தின வாழ்த்துகள்!

1.சொல்லரன்
2.முனைவர் கல்பனா சேக்கிழார்
3.ஆதவா-குழந்தை ஓவியம்
4.தமிழரசி-எழுத்தோசை
5.முனியப்பன் பக்கங்கள்
6.ஹேமா-வானம் வெளித்த பின்னும்

7.கார்திகை பாண்டியன் - பொன்னியின் செல்வன்
8.சக்தி- வீட்டுப்புறா
9.தேவன் மாயம்-தமிழ்துளி
10.அன்புடன் அருணா

இன்னும் என் இதயங்களின் அனைத்து நட்புகளும்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.