_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, February 28, 2009

அழுகின்ற இதயங்கள்; ஆறுதல் அடையட்டும்!....

அழுகின்ற இதயங்கள்; ஆறுதல் அடையட்டும்!....
இதயம் என்று எடுத்துக்கொண்டாலே கனிந்த உள்ளம் என்ற பொருள் மறைந்தே இருக்கும், அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகின்றது. கல்நெஞ்சக்காரனை இதயமில்லாதவன் என்றே கூறுகின்றோம்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய "அர்த்தமுள்ள இந்துமதம்" என்ற நூலில், தாய் அன்பை பற்றி சொல்ல வருகையில் ஒரு காதலியின் கதையையும் சொல்லுகின்றார். உலகில் உள்ள அனைத்து அன்புகளில் தாய் அன்பை உயர்ந்தது என பெருமையுடன் கூறுகின்றார். ஒரு காதலனிடம் அவன் காதலி நான் உன்னை மணமுடிக்க வேண்டும் என்றால் உன் தாயின் அன்பு இதயம் எனக்கு காணிக்கையாக வேண்டும் என்று கூறுகின்றாள். அந்த காதலனும் தன் தாயின் இதயம் வேண்டி தாயிடம் சென்று தன்னுடைய கத்தியால் தன் தாயின் நெஞ்சை பிளந்து இதயத்தை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியில் இதயத்தை தன் காதலிக்கு கொடுக்க வேண்டி வேகமாக ஓடுகின்றான், ஓடும்போழுது வழியில் கால் தடுக்கி விழுகின்றான், அப்பொழுது அந்த தாயின் இதயம் என்னபா வழிக்கின்றதா?, என்று கேட்கின்றது.=> இங்கே ஒரு தாயின் இதயம் அழுகின்றது.......... (மேலும் செய்தி: கவிஞர் கண்ணதாசனிடம் வாசகர் ஒருவர் கேட்கின்றார், தாய் அன்பே உலகில் சிறந்தது என கூறுகின்றீர்கள் அப்படி என்றால் தாய் ஏன் பிள்ளைகளிடம் பாரபச்சமான அன்பை கொடுக்கின்றாள் என்றார். கவிஞரோ உண்மையான தாய் அன்பைதான் இங்கே கூறியுள்ளேன் தாயை போல உள்ளவர்களை இல்லை என்றார்.....)

பைபிள் லூக்கா23: இயேசுவை யுதர்கள் பிலாத் மன்னனிடம் புகார் செய்ய கூட்டி சென்றார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: மக்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை என்றார், முடிவில் அவர்கள் அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள்... வேறுவழியின்றி அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்தான்.... அதன்படி தண்டனை கொடுக்க இயேசுவை சிலுவை சுமக்க செய்து அடித்து சென்றார்கள்... அப்பொழுது திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்சென்றார்கள்... இயேசு அவர்களை பார்த்து எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார். மேலும்
இதோ மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும்.
அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.....
=>இங்கேயும் இதயங்கள் அழுகின்றது......

இப்படிபட்ட அழும் இதயங்களுக்கு முன் இலங்கை தமிழர்களின் இதயங்களும் அழுதுக்கொண்டுதான் இருக்கின்றது. இவர்களிடம் உள்ள இதயங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? தமிழ்நாட்டின் தொப்புள் கோடிகள் ஆறுதல் அடையுமா?
பைபிள் மத்தேயு5: துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
இங்கே அழுகின்ற இதயங்கள் அமைதி பெறும்..... ஆறுதலடைவார்கள் என்பது உறுதி!.....






புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்
என்றும் அன்புடன்....
ஆ.ஞானசேகரன்

Tuesday, February 24, 2009

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...

நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...
நாமும் ஏதாவது உறுப்புடியா செய்யனும்மில்லையா? சாதனை செய்யனும்னா கொஞ்சனாலும் ஞானம் வேண்டாமா?.. சாதனைக்கு என்னதான் படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம்.

படம் பார்க்கும்பொழுது நானும்(நீயும்) ஒரு மில்லினியராகலாம் என்ற எண்ணங்களை உருவாக்கிவிடுகின்றது. இந்த படத்தின் விமர்சனம் தேவையில்லை, அதை எல்லொரும் சொல்லி முடிந்த விடயம். ஒரு மில்லியனரை உருவாக்கும் ஞானம் நம்மிடைய உள்ள கல்வி முறையில் இருக்கின்றதா? என்பதுதான் என் எண்ணங்களாக இங்கே!!!!!!....

இந்தப் படத்தில் சேரியில் வளர்ந்த "ஜமால்" வாழ்க்கை போராட்டதினால் பக்குவப்பட்ட அனுபவ சம்பவங்களினால் எல்லா கேள்விகளுக்கும் கலக்கமில்லாமல் விடையழிக்க முடிந்தது. இந்த அனுபவ கல்விதான் இன்றய தலைமுறைக்கு தேவைப்படுகின்றது. இந்த அனுபவக் கல்வியால்தான் பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களும் சாதனைப் புரிந்தார்கள்.. இப்படிதான் என்னுடன் படித்த கடைசி பென்ச் நண்பர்கள் கூட தொழிலில் சிறந்து விளங்குகின்றார்கள்.... கொட்ட கொட்ட முழுச்சி நல்லா படிச்சி மார்க்கு வாங்குன எல்லோரும் இப்போ பேந்த பேந்த முழிக்குறாங்க,.. இவங்க முழிக்குறது அறிவில்லாமல் இல்லங்க, இவர்கள் அறிவு உலகத்தாரோடு ஒத்துபோகாததுதான்.

மார்க்கு(மதிப்பெண்) மட்டுமே அறிவாகாது என்பதை ஆசிரியர்களும், பெற்றொர்களும் என்று புரிந்து கொள்கின்றார்களோ!.... அன்று நானும்(நீயும்) மில்லியனியர்தான் போங்க! படத்தில் உள்ள கதைப்பொல கஷ்டப்பட்டு வாழ்கை கல்வியை அறியமுடியும் என்பதில்லை, இயல்பான வாழ்கைமுறையை புரியவைத்து சொல்லிக்கொடுத்தாலே வெற்றிகள் நம்பக்கம் இருக்கும்....
எண்ணங்களில் மில்லியனியராக நீங்களும்,....
நானும்....... ஆ.ஞானசேகரன்

Thursday, February 19, 2009

காலங்களால் வரும் விடைகள்!....

காலங்களால் வரும் விடைகள்!....
சென்றப் பதிவின் தொடர்சியாக மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... என்ற ஒரு விவாதத்தை கடைசியில் வைத்து சென்றேன். எனக்கும் இந்த விவாதத்தில் ஒரே குழப்பங்கள்தான். இன்றைய இளஞர்களிடம் எதார்த்தமான மனோபக்குவம் காணமுடிகின்றது. இவர்கள் இப்படிப்பட்ட நிலையை ஒரு பிரச்சனையாக நினைப்பதில்லை. சூழ்நிலையால் தவறுகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை காலத்தால் இவர்கள் பக்குவப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இருப்பினும் நாம் பல கண்ணோட்டங்களில் சிந்திக்க வேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம்.. சமீபத்தில் நடிகை குஸ்புக்கு நடந்த விவாகாரத்தையும் நாம் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. சூழ்நிலைக் காரணமாக ஏற்பட்ட தவற்றை சரி என்றோ இல்லை என்றோ சொல்ல நாம் வரவில்லை, அப்படிப்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் முழுமையாக வந்துவிட்டோமா என்ற கேள்வியின் விடையை வைத்துதான் மேற்கண்ட முடிவை சரிப்பார்க்க முடியும். ஏதோ ஒரு காரணத்திற்காக நான் அவளை திருமணம் செய்ய தயக்கப்பட மாட்டேன் என்று கூறினாலும், அவளுக்கு வாழ்க்கை கொடுத்த தியாகிப் போல நடந்துக் கொள்வதனால் என்னப் பயனாக இருக்க முடியும். சூழ்நிலையால் செய்த தவற்றை மன்னிக்கும் பக்குவம் இவர்களிடம் இருந்தால் சாதாரண திருமணப் பந்தங்களில் முறிவுகள் எப்படி வரமுடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையோ திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் ஒருப் பெண் நான் சூழ்நிலையால் தவறிவிட்டேன், இனி செய்யமாட்டேன் என்று கூறும் நிலை இருக்கின்றது என்று வைத்தாலே, இங்கு எதார்த்தமான நிலை இன்னும் வரவில்லை என்றுதான் பொருள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பெண்ணைப்பற்றி தெரிந்த பின் திருமணம் செய்தால் காலச்சுழலால் அவளை பிரிய வேண்டிய நிலையும் வரலாம் என்று கூறலாம். இங்கு எதார்தமான நிலையிருந்தால் அவள் சொல்ல வேண்டியதும் தேவையில்லையே. அவர்கள் திருமணத்திற்கு முன் அல்லது பின் பிறசூழல்கள் காரணமாக தெரிய வந்தால் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருக்கும் நிலைதான் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட நிலை காலத்தால்தான் வரமுடியும். ஒருவர்கொருவர் சொல்லிக் கொள்வதினால் எந்த பயனும் வராது என்பதுதான் என்நிலை.

மேலைநாடுகளில் ஒருவனுக்கு வரப்போகும் மனைவியானவள் இதற்குமுன் வேரு ஒருவனிடம் பழகி அவன் அவளுக்கு ஒத்துவரவில்லை என்ற நிலையில் இவனை திருமணம் செய்கின்றாள். இதை அங்கு ஒரு பொருட்டாக நினைக்கும் நிலை இல்லை என்பதும் மேலும் இவனும் இதே நிலையில்தான் வந்தவன் என்பதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிலை நம் சமுகத்தில் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றே சொல்லலாம். மேலைநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளிகள் கூட கலாச்சாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்....

சூழ்நிலையால் தவறு செய்தவளை (இருபாலும்) ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று யாரும் நினைக்கும் நிலை இங்கில்லை. அதற்காக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நமது காலம் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்று சொல்லிகொள்வேன். அந்த காலமும் வரவேண்டிய கட்டாயம் வரும் அதுவரை பொருத்திருக்க வேண்டும். மேற்சொன்ன வாதத்தின் முழுமையான விடை காலத்தினால் தான் சொல்லமுடியும் என்பது என் விளக்கம்....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

Monday, February 16, 2009

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி...
காடுவரை பிள்ளை,.. கடைசிவரை யாரோ?.. -கவிஞர் கண்ணதாசனின் வரிகள்......
கடைசிவரை பிள்ளை வருவது இருக்கட்டும், உயிர் உள்ளவரை கூடவே இருப்பவள் அது மனைவியாகதான் இருக்கும், இது மனைவிக்கும் பொருந்தும். இந்த கணவன், மனைவி உறவு என்பது பல பந்தங்களை உருவாக்கும் உறவாகதான் இருக்கும். இதுபோகட்டும் இந்த உறவுகளில் உள்ள மனக் குழப்பங்களைதான் வருடிவிட பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் பேச்சுவாக்கில் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண் கொடுங்கள் உங்கள் மனைவியிடம் உங்களை பற்றி சொல்லி வைக்கவேண்டும் என்று எல்லொரையும் போல கேட்டார். அதற்கு நான் அதுவும் சரி நானும் என்வீட்டு எண்ணை தருகின்றேன், நீங்களும் உங்கள் வீட்டு எண்ணை கொடுங்கள்,... ஒரு மணி நேர அவகாசம் பொய்யான தகவல்களை சொல்லிப் பார்க்கலாம் என்றேன், நண்பர் சிறிது ஆடிப் போய்விட்டார். மேலும் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று விலகிவிட்டார்.. ஆனால் அவர் மனதில் ஒரே குழப்பம் வீட்டுக்கு சென்றதும் அவர் மனைவியிடம் நடந்ததை சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி நம்பும்படி இருந்தால் நம்பிதானே ஆகவேண்டும் என்று சொல்லியதும் அவருக்கு மேலும் குழப்பமாக இருந்தது. மறுநாள் அவர் மனைவிடம் கேட்டதை என்னிடம் சொல்லி, எப்படிதான் உண்மையாக இருந்தாலும் இந்த மனைவிமார்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் சில விவாதங்களை சொன்னேன், நம்பிக்கை என்பது மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ இருப்பது காலத்தின் கட்டுபாடாகதான் எனக்கு தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு எவ்வளவு காலங்கள் கட்டியாள முடியும். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களினால் தகற்ககூடிய இந்த நம்பிக்கையால் என்ன பயன் இருக்கமுடியும். நம்பிக்கை என்பது வேண்டும்தான் ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் வைத்து என்ன சாதிக்க முடியும். இந்த கணவன் மனைவி உறவில் மன்னிப்பு என்ற ஒரு மருந்து இருந்தால் நம்பிக்கைக்கு உரமாக இருக்கும். இந்த உறவுகளில் நம்பிக்கையுடன் மன்னிக்கும் பழக்கம் இருக்குமாயின் எத்தனை சென்மங்களாயினும் உறவில் பிரிவில்லை என்பதுதான் என்வாதமாக இருந்தது.

மன்னிப்பார்கள் என்பதற்காக தவறுகள் செய்யலாம் என்று அர்த்தமில்லை. பொய்யான தகவல்களாலும், புரிதலின் தவறுகளினாலும் உருவாகும் பிரிவுகள் இந்த மன்னிப்பால்தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதுதான் என் வாதமாக இருக்கும். அதற்காக நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை எல்லா உறவுகளின் நம்பிக்கை மன்னிக்கும் பண்பினால் உருவாக்கப்பட வேண்டும் எனபதே என் கருத்தாக வைக்கின்றேன். அதன்பின் உங்கள விருப்பம் விஜய்காந்த் (திரைப்படம்) பாணியில் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றால், உறவுகளை நீதிமன்றத்தில்தான் சந்திக்கவேண்டும். நீதிபதியிடம் வைக்கும் நம்பிக்கையை உறவுகளிடம் வைத்து மன்னித்தால் காலம் நம் கைகளில்......!

இயக்குனர் பாக்கியராஜ் சின்னவீடு திரைப்படத்தில் " பொதுவா ஆம்பளங்க உண்மையில் நல்லவங்க, சமயம் கிடைச்சா சங்கதில வல்லவங்க" என்னை பொருத்தவரை இந்த வரிகளில் சமயம் என்பது பெண்ணால் எற்படும் சூழல்கள் என்றுதான் கூறுவேன். இதில் பெண்ணுக்கு ஆணால் ஏற்படும் சூழல் என்பதும் பொருள்தானே!... இதில் மேற்கூறிய நம்பிக்கையில் மன்னிப்பு என்ற நிலை இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் போய்விடும்.

நான் திருமண வயதில் இருக்கும்போது நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு விவாதம் வைக்கப்பட்டது. ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... இந்த விவாத அடிப்படையில் நான் என் கருத்தாக அடுத்த பதிவில் கூறுகின்றேன்..

Thursday, February 12, 2009

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...
தற்போது எல்லா அரசியல் வாதிகளும், ஆய்வாளர்களும் சொல்வதுபோல இலங்கையின் நடந்துவரும் போர் சூழல்கள் இந்தியாவை பொருத்தமட்டில் முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு முன் அல்லது பின் என்ற நிலைப்பாடுதான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதில் எந்த நிலைபாடானாலும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது எல்லா சாமானியனின் எதிர்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும் முத்துகுமார் போன்றவர்களின் தீக்குளிப்புகளும் உருவாக்கியுள்ளது. எதுவாகினும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது. அது இலங்கை தமிழாரக இருந்தாலும் இல்லை ஈழத்தமிழராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் அது ஒரு பிரச்சனையில்லை.

இப்படி இலங்கை மற்றும் புலிகளின் நிலைப்பாடு இந்தியாவை பொருத்த மட்டில் ராஜிவ் காந்தியின் படுகொலையை வரைகோடாக வைத்துக்கொண்டாலும், ராஜிவின் கொலை சம்மதப்பட்ட வழக்குகள் மற்றும் சாட்சிகள் முழுமைப்படாமல் இருப்பது மோசமான நிலைபாடை குறிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு 1993 ம் ஆண்டு தொடங்கி , 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. இவர் முன்னிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் மற்றும் சந்திரசேகர் வாதங்கள் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2009வரை பதில் இல்லை என்பதே இந்திய அரசின் இலங்கைப் பற்றி கூறும் வாதம் சொத்தையாக்கப்படுகின்றது.... அன்று கேட்கபட்ட கேள்விகளின் சாரம் சுட்டியில் சுட்டி படித்து பாருங்கள்.... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் விடை தெரியாமல் இருப்பது, நாளைய இந்தியாவிற்கு ஆபத்தாக கூட இருக்கலாம்.... சுட்டியை சுட்டவும் ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன

இலங்கையில் நடப்பது ஒரு இன அழிப்பு என ஊடகங்கள் பல சுட்டிக் காட்டுகின்றது. இப்படி ஒரு இன அழிப்பு போர் பக்கத்தில் உள்ள அண்டை நாட்டில் நடப்பதால் இந்தியாவின் நிலைபாடு என்ன என்பதை குறித்து அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகின்றது. இதற்கு முன் இந்தியா எந்த ஒரு நாட்டையும் அபகரிக்கும் நடவடிக்கையோ, எண்ணமோ கொண்டதில்லை என்பதுதான் வரலாறு. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா பக்கத்து நாடான இலங்கை மீது நட்பு நாடாகதான் இருக்க நினைக்கின்றது. இதை ஆட்சியில் உள்ளவர்கள் ராஜிவ் கோலையை சொத்தை சாக்காக சொல்வதுதான் மக்களின் எரிச்சலை கொடுக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஞாயப்படுத்தி அப்பாவித் தமிழர்களின் படுகொலையை ஊக்குவிக்க முடியாது என்பதும் என் எண்ணங்கள். அதே சமயம் இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது முடியாத காரியம். அது தற்போது உள்ள காங்கிரஸ் அரசானாலும் சரி, மற்றும் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் சரி இந்த நிலைப்பாட்டில்தான் இருக்க முடியும் என்பதும் உண்மைதான். இதுவே திராவிட கட்சிகளின் நிலையும். அப்படியிருக்க முத்துகுமார் போன்றோரின் தீக்குளிப்புகள் உணர்ச்சியில் உருவாகவேண்டாம் என்பதும் மேலும் உணர்வுபூர்வமாக புத்திசாலியான தீர்வை உருவாக்க முயல வேண்டும் என்பதும் என் எண்ணங்கள்.

இந்தியா போன்ற நடுநிலையான நாடு ஒரு இயக்கம் சார்ந்த பிரிவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ கரம்கோர்க்க முடியாது. மேலும் இந்தியா தன் அண்டை நாட்டுடன் நட்பு நாடாகதான் இருக்க நினைக்கும். இந்த நிலைதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பாக இருக்க முடியும். நாளை புலிகள் வசம் இலங்கை வந்தாலும் இந்தியா இலங்கையின் நட்பு நாடாகதான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள். இதிலிருந்து தெரிவது இந்தியா ஒரு அரசுடன் நட்பு விரும்புகின்றது புரியும்.. ஆனால் இந்தியா சொத்தை சாக்கை சொல்லிக்கொண்டு அப்பாவி ஈழதமிழர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு காட்டாமல் மேலும் அவர்களை பாதுக்காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையை கொடுக்கின்றது. மேலும் கண்டிக்கதக்கதும் கூட. இன்னும் மெளனம் சாதிப்பது மொத்த ஈழத்தமிழர்களுக்கு சவக்குழியில் மெளன அஞ்சலியும், இறங்கல் கவிதையும்தான் சொல்ல வேண்டிவரும்.

இந்தியா போன்ற நாட்டின் தலையிட்டால் தான் சொர்க்க பூமியான இலங்கை அமைதிப் படுத்த முடியும். அதே போல் இலங்கையில் உள்ள அனைத்து பிரிவுசாரார்களும் தங்களின் கொள்கைகளை கொஞ்சம் தளர்த்தி அப்பாவி மக்களுக்கு தரமான சுதந்திர காற்றை சுவாசிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பது என் போன்ற சாமானியனின் ஆசைகள். அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுதை ஐ. நா சபை மூலம் இந்தியா தடுப்பதர்காண ஆவணம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். தமிழகத்தில் திரட்டிய நிதி 150கோடி என்ன சொல்கின்றது என்பதும் புரியவில்லைதான், இதற்கும் அரசு மெளனமே பதிலாக இருக்குமா? பல விடயங்கள் செய்திகள் சுதந்திரயின்மையால் என்னைபோல் சாமானியனுக்கு புரியவில்லை. எதுவாகினும் விரைவில் ஈழத்தமிழனுக்கு உண்மையான சுதந்திர காற்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்......
ஆ. ஞானசெகரன்.

Monday, February 9, 2009

சும்மானாச்சிக்கு!....

சும்மானாச்சிக்கு!....
நாம் பேசுர வார்த்தைகளில் பல வார்த்தைகள் தமிழில் இருக்கின்றதா? என்றால் இல்லைதான் அதற்காக அந்த வார்த்தைகளை பேசாமல் விட்டுவிட்டால் நாம் பேசுவது செயற்கையான தோற்றத்தை கொடுக்கும் என்பதே என் எண்ணங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளில் "சும்மா"வும் ஒன்று இந்த சும்மா இல்லாமல் சும்மா எதையும் பேசுவது சும்மா சொல்லகூடாது பேசுவதே கடினம்தான். இப்படிதான் சென்றப்பதிவில் முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?... என்ற பதிவில் கொஞ்சம் குத்தலாக இருக்கட்டுமே என்று இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்
- என்று எழுதியதை பார்த்த நண்பர் ஒருவர் இந்த வார்த்தை பேச்சில் உள்ள தமிழாக உள்ளது இதற்கு பதிலாக சரியான தமிழ் சொல்லை பயன் படுத்தி இருக்கலாமே என்று கூறினார். அவர் கூற்று சரி என்றாலும், நான் அவரிடம் அந்த இடத்தில் கொஞ்சம் கடுமையாக இருக்க இந்த சும்மானாச்சிக்கும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சும்மானாச்சிக்கும் சும்மா போட்டுவிட்டேன் சும்மா இருக்கட்டுமே இந்த சும்மானாச்சிக்கும் என்றதும், அவரும் சும்மா போய்விட்டார். இப்படி பல வார்த்தைகளை சும்மா பயன் படுத்திதான் வருகின்றோம்.

இப்படிதான் கோவையில் இருக்கும் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கையில் " எச்சாதானே" இருக்கு என்னிடம் கொடுங்கள் என்றார்" எனக்கு முதலில் புரியவில்லை பிறகு எச்சா என்றால் அதிகமாகவா என்றேன். அவர் ஆம் என்றார், அது ஆங்கில வார்த்தை எக்ஸ்ட்ரா (extra) போல் உள்ளதே ஆங்கில வார்த்தை மறுவி வந்துள்ளத்தா? என்று கேட்டேன். தெரியவில்லை கோவையில் என் பாட்டி முதல் இந்த வார்த்தையை பயன் படுத்துகின்றோம் என்றார். அதை சரி பார்க்கும் எண்ணத்தில் மற்றொரு கோவை நண்பரிடம் நான் சென்று வேண்டும் என்றே, எச்சா எதாவது இருக்கா? என்று கேட்டேன், அவரும் இல்லை என்று சாதாரணமாக சொன்னதால் அந்த வார்த்தை அவர்களிடம் பழகியுள்ளதை புரிந்துக்கொள்ள முடிந்தது. மேலும் அவரிடம் எச்சா என்ற வார்த்தையை சரிப்பார்க்கதான் நான் கேட்டதாக சொன்னதும் அவர் என்னிடம் சில கேள்விகளாக விளக்கமும் சொன்னார். அதேபோல் காய்ச்சல் என்பது தமிழ் மொழி என்றால் ஜுரம் என்பது என்ன மொழி? மருத்துவமனை என்பது தமிழ் என்றால் ஆஸ்பத்திரி என்பது என்ன மொழி? .. என்று கேட்டதும் ம்ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டினேன்.

பிறகு எம்டன்மகன் எந்த மொழி என்று கேள்விகளுடன் ஒரு விளக்கமும் சொன்னார். எனக்கும் சரிதான் என்றே தோன்றியது. இரண்டாம் உலகபோரில் ஜெர்மன் நாட்டு சர்வாதிக்காரன் ஹிட்லர் தலைமையில் இந்தியாவின் கடலோரத்தில் M10என்ற நீர்முழ்கி கப்பல் காத்திருந்து அந்த கப்பலினால் இந்தியாவிற்கு எதேனும் ஆபத்தா? என்று நடுங்கிக் கொண்டு இருந்தார்களாம், பிறகு அந்த கப்பலால் ஆபத்தின்றி கப்பல் திரும்பி சென்று விட்டதாம். இந்த பயம்தான் பயன்காட்டும் அப்பாக்களுக்கு எம்டன் என்று கூறுகின்றார்கள். என்று கூறிய விளக்கமும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது. இதில் மாற்று விளக்கம் இருந்தால் ஆய்வாளர்கள் யாரேனும் சொன்னால் நலமாக இருக்கலாம்..

Sunday, February 8, 2009

சொர்க்கம் என் கைகளில்!...

சொர்க்கம் என் கைகளில்!...
பாட்டினா கதை சொல்லனும், அப்படிதான் என் பாட்டியும் அப்ப அப்ப கதை சொல்லுவாங்க இல்லை கதை சொல்ல சொல்லி அடம் பிடிப்பேன்... என் பாட்டி கதை சொல்லனும்னா நான் ங்ங்ங்ங்.. சொல்லனும். நான் ங்ங்ங்ங்.. சொல்லனா நான் தூங்கிடேனு அர்த்தம். எப்பவும் இப்படிதான் என் கதை கேட்கும் நேரம். பாட்டி சொன்ன கதைனா நல்லதங்காள் கதை, அர்ச்சந்திரன் கதை அப்பறம் சாமி கதைகள். சாமி கதைனா நான் கொஞ்சம் ங்ங்ங்ங்... அதிகமா சொல்லுவேன். சாமிக்கு நல்லது செய்யுறவுங்களதான் புடிக்கும் என்று சொல்லும் பாட்டியிடம் நான் எப்பவும் கேட்கும் கேள்வி தப்பு செஞ்சா என்ன பன்னும் சாமி கேட்பேன். தப்பு பன்னுறவுங்களை சாமி அவுங்க இறந்த பிறகு நரகத்தில் போடுவார்கள் என்பாள். எப்பவும் நல்லது செய்தால் நாம் சொர்க்கத்திற்கு போகாலாம் என்றும் சொல்லுவாள் என் பாட்டி....

எனக்கு நரகம்னா பயம் அதிகம் ஏனா நரகத்தைப்பற்றி பாட்டி சொன்ன விபரதான். தப்பு பன்னுனவுங்களுக்கு நரகத்தில தண்டனை கொடுப்பார்களாம். தப்பு ஏற்றமாதிரி கொதிக்கும் எண்ணையில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்கள் கொடுப்பார்களாம். எனக்கு பயம் வரும் ஆனா ஒன்னும் புரியாது. அப்போ சொர்க்கதில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்பேன், பாட்டி அதற்கு சொர்கத்தில பசி இருக்காது, நோய் இருக்காது, எந்த கடினமும் இருக்காது கடவுளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறுவார்...

இப்படிதான் நரகம் அப்பறம் சொர்க்கம் என்று கானாத ஒன்றை நாம் நம்பும்படி இன்னமும் காலம் கடத்திக்கொண்டே இருக்கின்றோம். அப்பறம் சில கேள்விகள் என் மனதில் தோன்றிய காலங்கள் அர்ச்சந்திரன் மாதிரி உண்மை பேசி எந்த துண்பதிலும் நல்லதே செய்து காத்திருந்த சொர்க்கம் என்னா என்றால் பசி இல்லா உலகம் உழைபே இல்லா உலகமுனு நினைச்சா! புரியலங்க ...... இந்த பூமியை விட சிறந்த சொர்க்கம் இருக்கா என்னால ஒத்துக்க முடியலங்க! இதுதான் சொர்க்கமா தோனுது. எனக்கு பசிக்கனும் அதனால உழைக்கனும் இதுல கிடைக்குற மகிழ்சியை பாட்டி சொன்ன சொர்க்கத்தில இருக்கா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இப்படி சொர்க்கமா இருக்குற பூமியை சொர்க்கமாவே இருக்க நாம தாங்க நல்லது பன்னனும். இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு எங்கேயோ இருக்கா இல்லையா என்று தெரியா சொர்க்கத்தை காண இந்த வாழ்நாள் எல்லாம் தேடிகொண்டே இருப்பதுதான் தெரியலங்க.

நல்லது பன்னனும் என்பதில் எனக்கு எந்த வித கருத்து வேறுபாடு இல்லை. அதற்காக பகுத்தறிவை வீணடிக்கனுமா? என்பதில்தான் என் கேள்வி. ஒவ்வொறு வலியும் நமக்கும் தெரியனும், அந்த வலி நம்மால் மற்றவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்வதுதான் நாம் காணும் சொர்க்கம் நம் கைகளில். நாமக்கு பசிக்கனும் பசிக்காக உழைக்கனும் என்பதே சொர்க்கம் அதற்காக மற்றவனை அழிக்கனும் என்பதில்தான் நரகத்தை நம்ம பூமிக்கு விட்டு செல்கின்றோம்.
போதை பொருள் கடத்துவது மகா பெரிய குற்றம் எல்லா நாடுகளிலும் சட்டம் கடுமையாக தண்டனை கொடுக்கப்படுகின்றது. அதனால் கட்டுப்படுத்த முடிகின்றதே தவிற முழுமையாக தடுக்க முடியவில்லை. இதேதான் நரகத்தின் பயமும், இந்த நரகத்தின் பயம் கண்டிப்பாக மனிதனை பயம் கொள்ள வைக்க முடியாது. நம் அருகில் உள்ள சொர்கத்தை அனுபவிக்க சொல்லிக் கொடுத்தாலே போதும் தவறுகள் திருத்தப்படலாம். இந்த சொர்க்க பூமியில் எல்லோரும் மகிழ்ச்சியுடம் வாழ முடியும் என்பதே என் எண்ணங்கள். பூமியின் உணர்வுகள் புசிக்க கற்றுகொண்டால் சொர்க்கத்தை தேடி செல்ல வேண்டியதில்லை சொர்க்கம் நம் கைகளில் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதே எண்ணங்கள்!.......

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,...
ஆ.ஞானசேகரன்.

Tuesday, February 3, 2009

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...
கடந்த 25ஆண்டுகாளாய் அனலை கக்கும் எரிமலையாய், தமிழனை பூண்டோடு அழிக்க நினைக்கும் சிங்கள அரசின் கோரத்தாண்டவம்.... கொடூரமான கொலைகள், மற்றும் பள்ளிசிரார்களை சுட்டுத்தள்ளும் சிங்கள ராணுவம், கற்பழிப்புகள் என இன்று மட்டும் இல்லை ஒரு தலைமுறைகளாக நடந்து வருகின்றது..

சிங்கள ராணுவத்திற்கெதிராக பொதுவாக தமிழனின் பாதுகாவலாக புலிகளின் படைகள் சன்டையிட்டு வருகின்றது. இன்று இலங்கை அதிபர் ராஜபக்சே இன்னும் சிலநாட்களில் புலிகளை முழுமையாக அழித்துவிடுவோம் என்று போரை தீவிரப்படுத்தியுள்ளார். போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதுதான் முத்துகுமாரை உருவாக்கி உள்ளது... அதுமட்டுமில்லை தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழனை சொந்த அரசியல் லாபத்திற்காக ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதும், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்...

முத்துகுமார் தீகுளிப்பு நடந்து முடிந்து விட்டது.... நம்மால் தடுக்க முடியாமல் போனது நிச்சயம் நமக்கு ஒரு தலைகுனிவுதான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் தீக்குளிக்கும் முன் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பின்னர்தான் தான் வைத்திருந்த மண்ணெயில் தீக்குளித்துள்ளார்...

(முத்துகுமாரின் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... சுட்டி சுட்டவும்) நான்கு பக்கங்கள் எழுதிய முத்துகுமாரால் ஒரு நிமிடம் சிந்தித்து தவிற்த்திருக்கலாம்.... அல்லது பிரசுரம் படித்தவர்களாவது காப்பாற்றியிருக்காலாம் என்றே தோன்றுகின்றது. மாறாக அரசியலாக்கி தினம் கொள்ளப்படுகின்றார் என்பதை எண்ணும் போழுது வேதனைதான் மிச்சம். என்னை பொருத்தவரை தமிழனுக்கு வீரன் தேவையே ஒழிய தியாகிகள் தேவையில்லை.. முத்துக்குமாரின் இழப்பு உண்மை தமிழனுக்கு ஒரு பேரிழப்புதான். போராட்டத்திற்கு இதுதான் வழியா? தமிழா சிந்தித்து பார்? இன்று நாம் இழந்த ஒரு முத்துகுமார் போதும்..... இலங்கை போரில் தமிழனின் உயிர்கள் சூரையாடப்படுகின்றன. அவனுக்கு உயிர்கள் தேவையில்லை வீரர்கள்தான் தேவை.. தொடரும் முத்துகுமாரர்கள் நிச்சயம் தேவைப்படாது...

இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி விஷம் குடித்த மாணவர்களுக்கு சிகிச்சை
டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியவர் கைது நன்றி தினமலர்

இளஞர்களே! போராடுங்கள்... ஒன்றுபடுங்கள்! முத்துகுமாரால் கொடுக்கப்பட்ட தீ உங்களிடம் உள்ளது, அந்த தீ தமிழனின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் பயன்படுத்த படவேண்டுமேயொழிய உயிரை விடுவதற்கு இல்லை.... முத்துக்குமாரின் இந்த எண்ணம் ஒரு தியாகம் என்று சொல்லி பல முத்துக்குமார்களை உருவாக்க வேண்டாம்.. தினம் செத்து மடியும் இலங்கை தமிழனுக்கும் தியாகிகள் தேவையில்லை... போராடும் வீரர்கள்தான் தேவை.. இந்த போராட்டம் பத்தாது சிந்தித்து கலம் இறங்குகள்! மொத்த இந்திய அரசை திசைதிருப்பி போரை நிறுத்துங்கள்... காலம் கடந்துவிட்டோம் மிச்சமுள்ள உயிர்களையாவது காப்பாற்றலாம்... தயவுசெய்து முத்துக்குமாரின் மரணசாசனத்தில் அரசியல் நடத்தாதீர்கள்..
என்னால் தீகுளிப்பை ஞாயப்படுத்தவோ, இல்லை கொச்சப்படுத்தவோ முடியாது... இன்று மரணதில் போராடும் இலங்கை தமிழனுக்கு நம்முடைய ஒன்றுப்பட்ட போராட்டம்தான் தேவையே இன்றி உயிர்கள் இல்லை.... தியாகிகளும் தேவையில்லை..... மேலும் முத்துக்குமாரர்கள் உருவாகவேண்டாம், உருவாக்கப்பட வேண்டாம் என்பது தமிழர்களிம் எண்ணம்....

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் நன்றி நக்கீரன்

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

அன்புடன் ஆ.ஞானசேகரன்