_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, December 18, 2010

Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...

Dog show மற்றும் இந்திய நாய்களின் தனித்தன்மை...

நான் ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து விமானம் வழியாக சென்னைக்கு ஆப்பில் பழம் எடுத்து வந்தேன். சுங்க அதிகாரிகள் அவற்றை பார்த்துவிட்டு " சார் பழத்தை சாப்பிட்டதும் விதைகளை எரித்து விடுங்கள்" என்று கூறினார். பின்னர் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் " நம் நாட்டின் நலன் கருதி எரித்து விடுங்கள் நம் நாட்டு சூழலை கெடுத்துவிடும் அதே போல நம் நாட்டின் தனி தன்மையையும் பாழ்படும் என்றார்". அவர் கூறிய விளக்கம் என்னை சிந்திக்க வைத்தது. அன்று முதல் நான் பழங்களை எடுத்து வருவதில்லை. ( இன்று உலகமயமாக்கலில் எல்லாம் கலந்துவிட்டது என்பது ஒரு வருத்தமான விடயம். இந்திய நாட்டின் தனி தன்மையும் அழிந்தே வருகின்றது என்பதும் உண்மை).



அதே போலதான் வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள், நம் நாட்டு நாய்களின் தனித்தன்மையை அழிக்கும் நிலையில் உள்ளது. நம் முன்னோர்கள் நாய்களை வேட்டைக்காகவும், காவலுக்காகவும் மேலும் அழகுக்காகவும் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்கள் பழங்கால கல்வெட்டுகளில் காணமுடிகின்றது. சிந்து சமவெளி மக்கள் நாய்களை தங்களுடன் வளர்த்து வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.

நமது மன்னர்கள் நாய்களை வேட்டைக்காகவும் காவலுக்காகவும் வளர்த்து வந்துள்ளார்கள். அப்படி மன்னர்கள் வழிவந்த நாய்களில் ஒன்று ராஜபாளையம் நாய்கள். அப்படி அரிகிவரும் நாய் இனத்தை பாதுக்காக்கும் எண்ணம் இல்லாத நமது அரசு, வெளிநாடுகளிருந்து நாய்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுக்கின்றது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நாய் விருது காட்சியில் சிலர் அதற்கான எதிர்ப்பையும் முன் வைத்தார்கள்.

ஆதி மனிதன் காடுகளின் சுற்றி திரிந்து கண்டதை திண்று வாழ்ந்த காலங்களுக்கு பின் என்று விவசாயம் செய்ய கற்றுக்கொண்டானோ அன்று முதல் தனித்தனி குழுக்காளாக வாழ ஆரம்பித்தான். அப்பொழுது தன் குழுவில் சேர்த்துக்கொண்ட முதல் பிராணி நாய்தான் என்றும் சொல்லப்படுகின்றது.

வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்களுக்கு லட்சகணக்கில் செலவு செய்கின்றார்கள். இப்படிப்பட்ட நாய்களை வளர்ப்பதால் ஒரு அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றார்கள். அதற்காக வெளிநாட்டு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள். அந்த நாய்களுக்கு பயிற்சி கொடுக்க சிறப்பு பணியாளர்களும் உள்ளார்கள்.


நம்நாட்டில் சிறப்புமிக்க நாய்கள் இருக்கின்றது. அப்படிபட்ட அரிய நாய்கள் இன்று கலப்பினங்களாக இருக்கின்றது. கலப்பினங்களின் நன்மைகள் சில நேரங்களில் இருக்கலாம் ஆனால் அந்த நாயின் தனிதன்மை கெட்டுபோகும். வெளிநாடுகளிலிருந்து நாய்களை இறக்குமதி செய்யும் எண்ணங்களை விட்டுவிட்டு அரிகிவரும் நம்நாட்டு நாய்களை பாதுகாக்கலாமே!. ஒருவகை இந்திய நாய்களுக்கு
ஆஸ்திரியாவில் மதிப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. அங்கு விவசாயம் செய்பவர்கள் வளர்க்கின்றார்களாம்.

அரிகிவரும் நாய் இனத்தை கண்டுபிடித்து பாதுகாப்போம்...
வெளிநாட்டு நாய்களின் மேல் இருக்கும் மோகத்தை விட்டுவிட்டு நம் நாட்டு நாய்களின் தனிதன்மையை வெளிகொணர்வோம்...
நம் நாட்டு நாய்களுக்காக விருது காட்சியும் நடத்துவோம்.....Add Video


அன்புடன்...

ஆ.ஞானசேகரன்

Wednesday, December 15, 2010

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....

FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் ....



ஆதிமனிதன் தனித்தனி குழுக்களாக வாழ ஆரம்பித்தப்பொழுது தன்னோடு சில வீட்டு பிராணிகளையும் சேர்த்துக்கொண்டான். அப்படி சேர்த்துக்கொண்ட பிராணிகளில் மிக முக்கியமான பிராணியாக நாய் இருந்தது. நாய்களை காவலுக்கும் வேட்டையாடவும் கற்றுக்கொடுத்து பயன்படுத்திக் கொண்டான். இன்றும் நாய்கள் மனிதனோடு மனிதனாக வாழ்கின்றது. அதிலும் பணக்கார வீடுகளில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுள்ளது. இதில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் அழகு பொருளாக வளர்த்து வருகின்றார்கள். இன்று அந்த நாய்களுக்கு பயிற்சிகள் கொடுத்து அதனை மற்ற நாய்களுடன் சேர்த்து dog show வும் நடத்தி வருக்கின்றார்கள். இதனை பலர் கவுரவமாகவும் நினைக்கின்றார்கள்.




சென்னையில் 11-12-2010 மற்றும் 12-12-2010 இரண்டு நாட்கள் Madras Canine club's சார்பாக தனது 9th & 10th FCI Internationl championship Dog show நடத்தியது. இதில் சிங்கப்பூர், தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளிருந்து கலந்துக் கொண்டார்கள். இதற்கு நடுவர்களாக இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்ரியா, இஸ்ரேல், இங்லாந்து, ஜாப்பான் போன்ற நாடுகளிருந்து வந்திருந்தனர். இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் தயாநீதிமாறன் அவர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

இந்த போட்டியில் கர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகளும் கலந்துக் கொண்டார்கள். இந்திய நாட்டு நாய்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசமாக வழங்கப்பட்டது. கர்நாடக விவசாயிகளுக்கு தங்களுடைய நாய்களை எடுத்து செல்ல சில சலுகைகள் அரசு வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

கல்கத்தா, பூனா, பஞ்சாப், மத்தியபிரதேசம் போன்ற இடங்களிருந்து பெரிய பெரிய பணக்காரர்கள் தங்களிடைய நாய்களை எடுத்து வந்து கலந்துக் கொண்டார்கள்.

அழகு நாய்கள் எதற்காக வளர்க்கின்றார்கள்? பெரும்பாலும் அழகுக்காக வளர்கின்றார்கள். சிலருக்கு நாய் வளர்ப்பு ஒரு பொழுது போக்காகவும் இருக்கின்றது. அதிலும் நாம் சொல்வதை அந்த நாய்கள் கேட்கின்றது என்றால் அந்த நாய்களுக்காக இவனும் வாழ பழகிகொள்கின்றான்.

விழாவின் இடையில் சில குழப்பங்களும் வந்தது. சில வக்கில்கள் நீதிமன்றத்தில் தடைக்கோரி விழாவை நிறுத்த சொன்னார்கள். பிராணிகள் வதைப்பு சட்டம் காரணமாகவும், வெளிநாடுகளிலிருந்து நாய்கள் இறக்குமதி செய்ய தடை செய்ய கோரியும் இது போன்ற விழாக்கள் தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்கள். வெளிநாடுகளில் நாய்கள் இறக்குமதி செய்வதால் இந்திய நாய்களின் இறையாண்மை பாதிப்பதாக கூறுகின்றார்கள்.

சில நாய்களின் விலை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கின்றது. நாய் வளர்ப்பதினால் என்ன லாபம்? பொதுவாக இதன் குட்டிகள் விற்கப்படுகின்றது. பரிசுபெற்ற நாய்களின் குட்டிகள் விலை அதிகமாக இருக்கும்.

பெரிய பணக்காரர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதற்கும் அதற்கு பயிற்சி கொடுப்பதற்கும் பயிற்சியாளர்கள் அமர்த்தப்படுகின்றார்கள். சென்னை போன்ற நகரங்களில் பல பயிற்சியாளர்கள் இருக்கின்றார்கள். விழாக்களின் நாய்களை கையாள கையாளர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு நாய்க்கு ஆயிரம் ருபாய் வரை வாங்குகின்றார்கள். இதுபோன்ற போட்டிகளில் 20 ஆயிரம் வரை சம்பாரித்துவிடுவார்கள். பலர் நாய் வளர்ப்பவர்களே கையாளர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்த விழாவில் நாய்களிடம் அன்பு வைப்பவர்களை பார்க்க முடிந்தது. நாய்களை அடிப்பதோ திட்டுவது பார்க்கவில்லை. உண்மையில் நாய் ஒரு செல்ல பிரணிதான்.....

உங்களின் பார்வைக்கு சில புகைப்படங்கள்
மேலும் புகைப்படங்கள் காண கடைசியில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சுட்டியை தட்டி பாருங்கள்.




















மேலும் புகைப்படம் பார்க்க இங்கே கிளிக் பன்னுங்கள் =>
FCI International championship dog show பற்றிய ஒரு கண்ணோட்டம் புகைப்படங்கள்


அன்புடன்.
ஆ.ஞானசேகரன்

Tuesday, December 14, 2010

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show

FCI தேசிய நாய் காட்சி விருதுகள்...(11-12-2010 மற்றும் 12-12-2010) 9th & 10th FCI International championship dog show





வணக்கம் நண்பர்களே!
நீங்கள் மேலே பார்த்த நாயின் புகைப்படம் சமீபத்தில் (11-12-2010 & 12-12-2010) சென்னையில் நடைப்பெற்ற மாபெரும் தேசிய நாய் காட்சி மற்றும் விருதுகள் விழாவில் எடுக்கப்பட்டது. இரண்டு நாட்களும் அங்கிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. அந்த விழாவை பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடுத்து வரும் பதிவில் பார்க்கலாம் அதுவரை ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...






அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Monday, November 22, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....13

ஏன்? எதற்கு? எப்படி?....13

மூளை ஒரு இயற்பியல் மற்றும் வேதியியல் கூட்டு செயல்பாடு. உயிரை முற்றிலும் கட்டுப்படுத்துவது இந்த மூளைதான். இது வரை நமது அறிவியல் முழுமையாக மூளையின் கட்டமைப்பை கண்டறியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூளை செயலற்று போனால் அந்த உயிர் இறந்துவிட்டதாக சட்டமே சொல்லுகின்றது. மூளை செயலிழந்தால் சிறுக சிறிக அனைத்து உறுப்புகளும் செயலற்று போகும். இறுதியில் அந்த உயிர் இறந்துவிடும்.

நாம் ஒரு பொருளை குறிப்பார்த்து கல்லால் அடிக்கின்றோம் என்றால் கண்ணால் பார்க்கப்பட்ட அந்த பொருளை கையால் எப்படி சரியாக அடிக்கப்படுகின்றது? அதே போல எல்லோராலையும் அப்படி சரியாக அடிக்க முடிவதில்லையே ஏன்? கண்ணால் பார்க்கப்படும் பொருள் விழித்திரையில் படும்பொழுது அந்த பொருளின் தூரம் மற்றும் முப்பரிமாணம் மூளையால் கணக்கிடப்படுகின்றது. எந்த அளவிற்கு உற்று பார்க்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு அதன் கணிப்பும் சரியாக இருக்கும். அதனால்தான் எல்லோராலையும் சரியாக செய்ய முடிவதில்லை. இதற்கு தகுந்த பயிற்சி தேவையாகின்றது. உற்று நோக்குதல் மற்றும் ஒரு நிலைப்படுத்துதல் முக்கியம். அந்த நிலையை எட்ட மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமீபத்தில் வந்த ஆங்கில திரைப்படம் (The_karate_kid_2010) கராட்டே கிட் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி "ஒரு பெண் பாம்பின் கண்களை உற்று நோக்கி பயிற்சி பெறுவதாக இருக்கும்"... இப்படிப்பட்ட பயிற்சிதான் மூளைக்கு தேவை. இந்த காட்சிதான் படத்தின் இறுதி காட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி சன்னலுக்கு அருகில் மாங்காய் மரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். சன்னலில் படாமல் மாங்காயை மட்டும் கல்லால் அடிக்க வேண்டும் என்றால் பல முறை கல் சன்னலை பதம் பார்த்துவிடும் ஏன்? சன்னலை அடிக்க கூடாது என்பது முக்கியமாக கருதுவதால் மூளை சன்னலைதான் அதிகமாக பதியவைக்கின்றது எனவேதான் கல் சரியாக சன்னலை பதம் பார்த்துவிடுகின்றது. மாங்காவை மட்டுமே மனதில் பதிய வைக்க முறையான பயிற்சி தேவையாகின்றது.


மேலும் சிந்தனைகளுடன்


ஆ.ஞானசேகரன்.

Monday, October 11, 2010

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? "I do weddings at Sentosa 2010 Singapore"

"No love no life" காதல் இல்லையேல் சாதலே மேல் என்று சொல்லும் அளவிற்கு மனிதனும் அவனை சுற்றிய காதலும் இருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் கல்யாணம் என்ற நிபந்தனை அவனை இந்த காலக்கட்டத்தில் ஏனோ பயப்படுத்துகின்றது. இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேலைநாடுகளை தாண்டி இந்தியாவில் நகரங்களிலும் இருக்கதான் செய்கின்றது. " மனிதனின் பிறப்பின் முக்கியதுவம் தனது சந்ததிகளை விருத்தி செய்வது" எனற ஒரு தத்துவம் மறைந்து வெகுகாலமாகின்றது.

இந்த அவசரக்கால உலகில் கல்யாணம் மற்றும் குழந்தைகளை பெற்றல் என்பது ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. பலர் கல்யாணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழல் கடந்தால் நாளைய உலகம் பெரியவர் இல்லமாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த சில நாட்டில் அரசாங்கமே கல்யாணங்களுக்கு ஊக்கப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் சிங்கப்பூர் அரசும் கல்யாணம் செய்ய ஊக்கப்படுத்தியும் அதற்காண சந்தர்ப்பங்களை உருவாக்கியும் வருகின்றது.

அப்படி ஊக்கப்படுத்தும் விதமாக 10.10.2010 சிறப்பு தினமாக "I do" Wedding at sentosa 2010" என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அதன்படி 140 க்கு மேற்ப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம் நடத்தியது. குறைந்த செலவில் நிறைவான மகிழ்வாக நடத்தியது சிறப்பாகும். இந்த கல்யாண வைபோவத்திற்கு நிர்வாக புகைப்பட கலைஞராக (Official Photographer) சென்றேன். அங்கு நான் எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

கீழே சில புகைப்படங்கள் உங்களுக்காக ..... மேலும் அதிக படங்களை பார்க்க சுட்டியை தட்டுங்கள்.

பின் குறிப்பு: மேலை நாட்டு நாகரிகம் பல நாடுகளிடம் தொற்றிக்கொண்டு இருப்பது உண்மை. அதே போல் சிங்கப்பூரிலும் மேலை நாட்டு நாகரிகம் பல தொற்றியுள்ளது. அது பொல தொற்றிக்கொண்ட பழக்கம் ஒன்று கல்யாண சடங்கின் பொழுது முத்தமிடல். பதிவு திருமணத்தின் பொழுது முதலில் மோதிரம் மாற்றிக் கொள்கின்றார்கள் பின்னர் பதிவாளர் சொல்லின் பேரில் ஜோடிகள் முத்தமிடுவார்கள்... அந்த நிகழ்வைதான் இங்கு புகைப்படம் பதித்துள்ளேன். சில நண்பர்கள் சங்கடங்களின் பேரில் இந்த பின் குறிப்பு.










கல்யாண வைபோவம் புகைப்படங்கள்....

கல்யாண ஜோடிகளின் அணிவகுப்பு புகைப்படங்கள்....


அன்புடன்,...
ஆ.ஞானசேகரன்.

Monday, October 4, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....12

ஏன்? எதற்கு? எப்படி?....12

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதிற்கு என்பது வாசல்"

மனிதன் உடல் ஒரு மிக பெரிய கூட்டு வேதிப்பொருள். மனித உடல் என்பது சதை, எலும்பு, நரம்பு ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளதாக அறிவியல் சொல்லுகின்றது. ஆனால் சித்தர்களும் ஞானிகளும் உடல் என்பது நீர், நிலம்,நெருப்பு,
காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களால் ஆனது என்று கூறியுள்ளார்கள்.

உடலுக்கு 9 வாசல் என்பன இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், வாய், மலவாய், சிறுநீர்பாதை. இப்படியாக சொல்லப்படுகின்றது. இப்படி சொல்லப்படும் கணக்கு சரிதானா? பெண்களுக்கும் இந்த கணக்கு ஒன்றுதானா? கண், காது, மூக்கு என்பது ஏன் இரண்டாக இருக்கின்றது? அப்படி இரண்டாக இருப்பதால் பாதகம் மற்றும் சாதகம் என்ன? என்பதுதான் இன்றைய ஏன்? எதற்கு? எப்படி?....

மனிதன் தன்னுடைய தாய் வயிற்றில் கருவாக உருவானதும் தாய்க்கும் கருவிற்கும் பாலமாக இருப்பதுதான் தொப்புள் கொடி. இந்த கொடியின் வழியாகதான் தாயிடமிருந்து உணவு சக்தி கருவிற்கு செல்கின்றது. ஆக கருவிலேயே உருவாகிய தொப்புள் கொடி வயிலை ஏன் கணக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை? அப்படி பார்த்தால் 10 வாசல் என்பது சரிதானே! மேலும் பெண்ணிற்கு இன்னும் கூடுதலாக மூன்று வாசல்கள் இருப்பதும் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அதாவது பெண்ணிற்கு சிறுநீர் பாதையும், கருப்பை பாதையும் வேறு வேறாக இருப்பதும் மேலும் ஒரு வாசல் பெண்ணிற்கு உண்டும் என்பதும் உண்மைதானே!..... ஆக பெண்ணிற்கு 11 வாசல்லவா இருக்கின்றது. அதே போல் பிறந்த குழந்தைக்கு உணவாக பால் சுரக்கப்பட்டு ஊட்டுகின்றாளே பாற்காம்புகள் அதுவும் உடலிருந்து வெளிப்படும் வாசல்தானே! ஆக இந்த வாசல்களையும் பார்த்தால் பெண்ணிற்கு 13 வாசல்கள் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும். ஓ... இப்படியே போனால் உடலில் இருக்கும் ஒவ்வொரு வேர்வை துளைகளும் உடலிருந்து வரும் வாசல்கள்தானே! இப்படிப்பட்ட கேள்விகள் உங்களை போல எனக்கும் இருக்கின்றது.

ம்ம்ம்ம்.... அது இருக்கட்டும் இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துளைகள், இரண்டு பாற்காம்புகள் என ஏன் இரண்டு இரண்டுடாக இருக்கின்றது? அதனால் என்ன பயன்? ஒரு கண்களால் பார்க்க முடியாதா? ஒரு காதால் கேட்க முடியாதா? ஒரு மூக்குதுளையால் சுவாசிக்க முடியாதா? ஒரு பாற்காம்பால் பாலூட்ட முடியாதா? இப்படிப்பட்ட கேள்விகள் என்னையும் துளைத்தது.....

கண்களில் இரண்டால் மட்டுமே ஒரு பொருளின் முப்பரிமாணத்தை உணரமுடியும். ஒரு கண்ணால் அந்த பொருளின் முப்பரிமாணத்தை உணர்வது மிகவும் கடினமாக இருக்கும். அதே போல் ஒரு பொருள் எவ்வளவு தூரத்தில் எவ்வளவு அளவில் இருக்கின்றது? என்பதையும் கணிக்க இரண்டு கண்கள் தேவையாகின்றது. அதனால் இயற்கையே உயிர்களுக்கு இரண்டு கண்கள் கொடுத்துள்ளது. மனிதனுக்கு இரண்டு கண்களும் முகத்தில் நேராக வைக்கப்பட்டுள்ளது. மற்ற விலங்களுக்கு பக்கதிற்கு ஒன்றாக இருக்கும். எனவேதான் மற்ற விலங்குகள் ஒரு பொருளை பார்க்க தலையை ஆட்டி ஆட்டி பார்க்கும். மனிதன் கண்களில் நிறமி செல்கள் உள்ளது. ஆகவேதான் பொருளின் நிறத்தையும் உணர முடிகின்றது. மற்ற விலங்குகளுக்கு நிறமி செல்கள் இல்லை ஆகவே கருப்பு வெள்ளையாகவே அவைகளுக்கு தெரியும். ( என் காளை மாடுக்கு சிகப்பு கலர் புடிக்காது சிகப்பில் உடையணிந்தால் முட்டும் என்பதேல்லாம் கட்டுகதையே! ) ஆரோக்கியமான பார்வை என்பது இரண்டு கண்களும் சரியாக இருக்க வேண்டும்.

இரண்டு காதுகள் நம்முடைய உடலை சமசீராக வைத்துகொள்ள உதவுவதாக அறிவியல் சொல்லுகின்றது. காதின் சமச்சீர் குறைந்தால் வயிற்று போக்கு, வாந்தி ஆகையவை ஏற்படும். ஒரு காதில் அலைபேசி தொடர்ந்து பேசுவதாலும், ஒரு காதில் பாடல் கேட்பதும் இப்படிப்பட்ட குறைகள் வர வாய்புள்ளது. விமான ஓட்டுனர், பாராசூட்டில் குதிப்பவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு காதின் சமச்சீர் மிக முக்கியம். நாம் நேராக நடந்து செல்லவும் இந்த சமசீர் காதுகள் தேவையாகின்றது. இரண்டு காதுகள் இருப்பதினால் ஒலி வரும் திசை மற்றும் துரத்தை உணரமுடிகின்றது.

மூக்கு என்பது மனிதனின் சுவாசத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது. மேலும் வாசனை அறியவும் பயனாகின்றது. இந்த மூக்கு முகத்தின் முன்பக்கம் நீட்சியாக இருக்கும். இதன் துவாரம் இரண்டாக பிரிந்து செல்லும்..... இதனால் மூச்சு காற்று சத்தமிடாமல் உள்சென்று வெளியாகின்றது. மேலும் மூச்சுக்காற்றை உள்ளிழித்து வெளியேற்ற மிக வசதியாக இருக்கின்றது. ஒரே துளையில் அப்படிப்பட்ட நிகழ்வு மிக கடினமாக இருக்கும். மூச்சு தினறல் இல்லாமல் காற்றுழுக்க இந்த இரண்டு துளைகள் பயனாகின்றது.

குழந்தைகளுக்கு பாலுட்டதான் முலைகாம்புகள் பயனாகின்றது. ஒரு பகுதியில் பாலுட்டும் பொழுது மறுபகுதியில் பால் சேகரிக்கபடுகின்றது. அதனால் தொடர்ச்சியாக குழந்தைக்கு பாலுட்ட முடிகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.


Sunday, September 19, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....11

ஏன்? எதற்கு? எப்படி?....11

வணக்கம் நண்பர்களே!...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம். அவ்வப்பொழுது வந்தாலும் பதிவுகள் எழுதுவது மிக குறைவே. நான் எழுதிய சிந்தனை இடுக்கைகளின் தொடர் "ஏன்? எதற்கு? எப்படி?" அப்படியே நின்றுவிட்டது. அதை கொஞ்சம் தூசி தட்டி எழுப்பலாம் என்ற எண்ணத்தில் "தூக்கத்தைப்" பற்றி எனக்குள் எழும் கேள்விகள் இந்த பதிவாக இருக்கின்றது. இதற்கு முன் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி?.... இடுகைகளின் தொகுப்பு கீழே புதியவர்களுக்கு பயனாக இருக்கும்.


அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?....

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 2

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 3

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 4

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 5

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 6

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 7

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 8

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 9

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 10




தூக்கம் என்றால் என்ன? தூக்கம் ஏன் வருகின்றது? யாரேல்லாம் தூங்க வேண்டும்? தூக்கத்தினால் என்ன பயன்? ஏன் தூங்க வேண்டும்? தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்கும் மட்டுமில்லை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எனக்கும் இருக்கின்றது. இது போல பல விஞ்ஞானிகளும் கேட்டுள்ளார்கள், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கான விடைகளை முழுமையாக அறியப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல விடயங்கள் பதிலழிக்கப்பட்டுள்ளது. இன்னும் துருவி துருவி பார்க்ககூடியவையாகவே இருக்கும் ஒரு ஆய்வு நிலைதான் தூக்கம்.

தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. நமது மூன்னோர்கள் கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள்தான் இருந்தது. ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.

தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப்பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டாயம். சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.

தூக்கம் எதனால் வருகின்றது? 'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது. நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள். இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கிதான் ஆக வேண்டும். " பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.

எவ்வளவு நேரம் தூங்கலாம்? அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. சாதாரணமாக மனிதன் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். முதியவர்களுக்கு 8 மணி நேரம் தூக்கம் போதுமானது. பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூக்கம் அவசியம் இந்த தூக்கம்தான் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதாக சொல்கின்றார்கள். பள்ளிக்கு செல்லாத வயது குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரம் தூங்கலாம்.

தூக்கத்தினால் என்ன பயன்? சமீபத்தில் ஒரு ஆய்வு ஜெர்மனியில் நடந்தது. அதன் முடிவில் தூக்கத்தினால் நினைவாற்றல் அதிகப்படுத்துகின்றது என்று கூறப்பட்டது. தூக்கம் புத்துணர்வை அதிகப்படுத்துகின்றது. தூங்கும் பொழுது இதயம் , மூளை போன்றவை இயக்க நிலையில் இருக்கின்றது. தூக்கம் என்பது மூளைக்கு ஒரு கட்டாய நிகழ்வாக இருக்கின்றது. தூக்கத்தின் பொழுதுதான் மூளை தன்னை அனைத்து பகுதிகளையும் சரி பார்க்க பயன் படுத்துகின்றது. தூக்கம் என்பது மூளையின் ஓய்வு என்பது முற்றிலும் உண்மையில்லை. மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது. மூளை தன் கட்டளைகளை அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தி சரியாக செயல்படுகின்றதா? என்று சரிபார்க்கின்றது. அதாவது (overhaul) ஓவர்கால் செய்கின்றது. இந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் புதிய செல்களில் உற்பத்தி இல்லாமேலே போய்விடும். நாம் செய்யும் செய்ய நினைக்கும் அனைத்து செயல்களையும் கட்டளைகளாக செலுத்தி பார்த்து அதில் குறைகள் இருந்தால் தானாகவே சரி செய்துவிடுகின்றது. காலை தூக்கு, கையை ஆட்டு , தலையை சொரி போன்ற கட்டளைகலாக இருக்கும். ஆனால் அந்த கட்டளைகள் செயல் படுத்தாமல் தன்னைதானே சரிபார்க்க உபயோகித்துக்கொள்ளும். சில வேலைகளில் அந்த கட்டளைகள் செயல் வடிவம் செல்ல வாய்ப்புகள் இருக்கும் அந்த சமயங்களில் கலை தூக்க முடியாமல் கடின படுவதாக நமக்கு இருக்கும். இதைதான் ஏதோ ஒன்று நம்மை அமுக்கி செல்கின்றதாக சொல்லுவார்கள். நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு ஆழ்ந்த தூக்கமே நல்லது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக்கொள்ள வேண்டும். தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்துவிட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. சீரான உணவு பழக்கம் நல்லது.எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....

தூக்கமின்மை என்பது என்றால் என்ன? பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படி பட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும்...

நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவும் 16 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவது கேடு விளைவிற்கும். இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் ஆளாக வேண்டி வருவதாக ஆய்வு சொல்லுகின்றது.
தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, September 13, 2010

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்....

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்.....

(இணையத்தில் சுட்டப்படம்)

இதற்கு முன் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
வலைப்பக்கத்தில் மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....
என்ற ஒரு இடுகை எழுதியிருந்தேன், சுட்டியை ஒரு முறை சுட்டுங்கள். நன்றி நண்பர்களே! உங்களின் எனர்ஜி உங்களின் கைகளில் இருக்கும்பொழுது எங்கே தேடுகின்றீகள்? அட ஆமாங்க நல்லா பாருங்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை எடுத்து சுவைக்கதான் நாம் மறந்துவிடுகின்றோம்.

என்னோடு வேலை செய்யும் ஒரு சீன நண்பர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில் அவருக்கு தோண்டை புற்று நோய் வந்து சிகிச்சையில் இருக்கின்றார் என்றும் பிழைப்பது மிக கடினம் என்றும் சொன்னார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் அவர் வேலைக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்தது. அவரை பார்த்து "நான் (How are you sir?) நலமாக இருக்கின்றீர்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே" ( Till i am live) இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்" என்றார். அதை கேட்டதும் எனது மூச்சு காற்று சிறிது நின்றே வந்தது. என்ன வார்த்தை அது! ஆனால் அவர் அதை சிரித்துக்கொண்டே சொன்னார். அவரின் எதார்த்தம் இன்னும் அவரை வாழவிடுகின்றது. இன்னும் பல அவர் சொல்லுவார்..... " நான் தினமும் காலையில் எழுந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்"..... அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. " என்று கூறுவார்..... ஏன் அப்படி என்று கேட்டால் " ஆகா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்.... இன்னும் அப்படியே இருப்பேன் என்ற நம்பிக்கை வரும் அதனால்தான் நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்" என்று சொல்லுவார். நம்மில் எத்தனை பேர் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளோம்... அவர் இன்றும் அதே நம்பிக்கையில் நலமாக இருக்கின்றார். அவரிடம் இருக்கும் எனர்ஜி பூஸ்டை சுவைப்பதினால் அவரால் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகின்றது. (பின் குறிப்பு: உறக்கம் என்பது தற்காலிக மரணம் என்று சீனர்கள் நம்புவதுண்டு. உறக்கதிலிருந்து எழுந்ததும் கடவுளிடம் நன்றி சொல்வதும் அவர்களின் பழக்கம்).

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......

கவணக்குறைவாக சாலையை கடக்கும்பொழுது எதிரே வரும் வண்டியை கவணிக்காமல் செல்கின்றோம். வண்டி ஓட்டுனர் விரைவாக வண்டியை நிறுத்துகின்றார். அப்போழுதான் நம்முடைய கவணக்குறைவை உணர்கின்றோம்.. உடனே வண்டி ஓட்டுனருக்கு கையை உயர்த்தி நம்முடைய நன்றியையும் சிரமபடுத்தியதற்கு வருத்ததையும் தெரியப்படுத்தலாம். ஏன் மன்னிப்பை கூட தெரிவிக்கலாம். இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

அலுவலகம் ஒன்றிக்கு மகிழுந்தில்(car) செல்கின்றோம். காவலாளி கதவை திறந்து விடுகின்றார். கதவை திறந்த காவலாளிக்கு கையை உயர்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரியப்படுத்துகின்றோம். கதவை திறந்துவிடுவது அவரின் வேலையாக இருக்கலாம், நீங்கள் அப்படி செய்வதினால் அவரால் அந்த வேலையை சோர்வின்றி செய்ய முடிகின்றது. மறுமுறை நீங்கள் வரும்பொழுது உங்களை இன்னும் மகிழ்வுடன் வரவேற்று கதவை திறந்துவிடுவார்...... காலதாமதமாக அவர் திறந்துவிட்டால் நீங்களும் மன அழுத்ததிற்கு ஆளாவீர்கள் அதனால் அவரும் மன அழுத்தம் கொள்வார்..... இது அனைவருக்குமே நற்பயனை அழிக்காது..... நீங்க செய்வது ஒன்றுதான் சிறிது கையை உயர்த்தி வணக்கமும் நன்றியும் சொல்வதுதான்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் கத்திரிக்கா வாங்குகின்றார்.... கத்திரிக்கா கொடுத்ததும் அதற்கு சாமமான காசை கொடுக்கின்றார். வாடிக்கையாளருக்கு ஒரு " நன்றிங்க" என்று சொல்வதினால்!............ வாடிக்கையாளர்க்கு கத்திரிக்காவின் விலையின் கடினம் அற்றுபோய் மகிழ்வைதான் கொடுக்கும். அதனால் மீண்டும் பல முறை உங்கள் கடைக்குதான் வருவார்.... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட நம்கைகளில்தான் இருக்கின்றது!

நன்றி, வணக்கம், சிரமத்திற்கு கொடுக்கும் வருத்தம், சிறிய மன்னிப்பு இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை தாரளமாக கொடுப்பதினால் நம்மால் நாமும், நம்மால் அவர்களும் உச்சாகமுடன் மகிழ்வை அடைய முடிகின்றது......

எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் சிறு துளியில் இருக்கும்பொழுது.... அதை பயன்படுத்தி பயனாகலாம்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்




Sunday, August 15, 2010

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

இனியொரு விதி! 64 வது சுதந்திர தினம்...

Photobucket

இப்படி இருந்த நான்!..... இப்போ எப்படினு சொல்ல தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை மனதில் பல கேள்விகள் இல்லாமல் இல்லை. இந்தியா 64 வருடங்களுக்கு முன் வெள்ளையர்களிடம் அடிமைபட்டு இருந்தது. "அதனால் என்ன? இன்றுதான் சுதந்திரமாக இருக்கின்றோமே!... " அந்த சுதந்திரத்தில் தான் எனக்குள் இருக்கும் கேள்விகள். எப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனுபவிக்கின்றோம்?

முறையாக அரசு சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் அரசு சார்ந்த சான்றிதழ்கள் பெற முடிகின்றதா?..... கையூட்டு கொடுக்காமல் வாங்க நினைக்கும் என்னால் குறித்த நேரத்தில் சரியான சான்றிதல் பெறமுடியாமல் தவிற்பதேன்? அட குடும்ப அட்டை பெறுவதில் எத்தனை சிக்கல்?..... எப்படிப்பட்ட உரிமை இந்த அரசு நமக்கு அழித்துள்ளது? முறையாக குடும்ப அட்டை இல்லாத குடும்பங்கள் எத்தனை? இதுதான் 64 ஆண்டுகால சாதனையா? இன்னும் நாம்முடைய பழைய அரசியல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செல்வதால்தான் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு பெறுவதற்கும் சாதகமாக இருக்கு... சட்ட ஒழுங்கும் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றது.

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு கேள்வி.... இந்தநாள் வரை கையூட்டு கொடுக்காமல் மற்றும் உயர் அதிகாரி சிபாரிசு செய்யாமல் நான் அரசிடமிருந்து எனது சரியான சான்றிதழ்கள், அரசு ஆவணங்கள் பெற்றுள்ளேன் என்று சொல்ல முடியுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கையூட்டு கொடுத்தவர்களாகவே இருக்கின்றோம்.......... இவற்றுக்கெல்லாம் காரணம் நம்முடைய அவசரம் மட்டும் காரணமாக சொல்ல முடியாது. அரசு தன் கடமைகளை சரியாக கவணிக்காமல் போகின்றது. சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு சிறு மாறுதல்கள் செய்யாமல் இருப்பதனால் அதிகாரிகள் அவற்றை முறையின்றி பயன்படுத்துகின்றார்கள்.

இந்நாட்டின் மிக பெரிய சொத்து இடம் மனைகள். மனைகளை விற்க வாங்க எத்தனை சட்ட சிக்கல்கள். ஒரு இடத்தை பலருக்கு விற்பது. மற்றவர் இடத்தை வேறு ஒருவன் விற்பது. அப்படியே சரியாக விற்றாலும் அந்த இடத்திற்கான பட்டா முறைகேடாக இருப்பது. எல்லாமே இந்த அரசு அதிகாரிகளின் கையூட்டுதான் காரணமாக இருக்கு. இவற்றையெல்லாம் கடந்து நீதி மன்றம் சென்றால் அது இல்லை இது இல்லை என்று சொல்லி பாதிக்கபட்டவன் மீண்டும் பாதிக்கபடுகின்றான். இந்த நாட்டை ஆழ்பவர்கள் உண்மையில் தாதாக்களும் கட்டப்பஞ்சாத்துகாரர்களுமே..... அரசு ஒரு சும்மாதான்.... நீதி மன்றத்தில் கிடைக்கா பல நியாம் கட்டபஞ்சாயத்தில் கிடைப்பதாக மக்கள் நம்ப வேண்டிய சூழல்கள் இருக்கின்றதை மறுக்க முடிவதில்லை.... நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தாதாக்களிடம் கிடைக்கும் என்றுதான் தோற்றம் உள்ளது. பல குற்றவாளிகள் சுதந்திரமாக வேளிவந்து விடுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் மகளிர்க்கெதிரான வன்முறை, பாலியல் கொடுமை, சிறார்களின் வன்கொடுமை என்று செய்திகளில் வருகின்றதே தவிற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்களா? 15 நாட்களில் ஒப்புதலின் பேரில் வெளிவந்து மீண்டும் அதே தவறுகளுக்கு ஆய்த்தமாகின்றார்கள். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வெளியில் சொல்வதேயில்லை..... அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நியாத்திற்காக நிதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் இடம் இருக்காது. அந்த அளவிற்கு குற்றம் மலிந்துள்ள சமூகமாக இருக்கின்றது....

"மக்களையும் மக்கள் வாழ்க்கை முறையும் பாதுக்காக்க வேண்டியது காவல்த்துறையின் கடமை". தனக்கும் தன்குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டி வேண்டுகோள் கொடுக்க எந்த ஒரு குடிமகனுக்கும் காவல் நிலையம் செல்ல துணிவுள்ளதா? அப்படி பட்ட சூழல் இருப்பதாக தெரிகின்றதா?... பாதுகாப்புக்காக மற்றொரு ரெளடியை நாட வேண்டியுள்ளது...... இவற்றையெல்லாம் காணும்பொழுது இந்த கொள்ளையர்களை விட அந்த வெள்ளையர்களே மேல் என்றல்லாவா தோன்றம் கொடுக்கின்றது.

எல்லோருக்கும் முறையான கல்வி கிடைப்பதில் அரசு கவணம் செலுத்தாமல், கல்வியை தனியாரிடம் கொடுத்து "காசுக்காக கல்வி" என்ற நிலையில் இன்று நாம்...... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விவசாயிகள் விளைவித்த தானியங்களை கொள்முதல் தனியாரிடம் கொடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவது...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

நாளுக்கு குறைந்தது நான்கு மணிநேரம் மின்வெட்டு... பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் மின் வழங்குதல்..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

தெற்கு எல்லையில் அவ்வப்போழுது சுட்டுக்கொள்ளும் தமிழக மீனவர்களை கண்டு கொள்ளாமல் மெத்தன இருப்பது..... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

சாதாரண குடிநீர் கொடுப்பதில் தன்நிறைவு பெற முடியாமல் வல்லரசு கனவில் நாம்.... காசு கொடுத்து தண்ணீர் பெறும் நிலையில்.... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

மனிதன் மலத்தை சக மனிதன் கையில் அள்ளிப்போடும் அவலமான நிலையில்தான் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டுள்ள நாம்.... அனுபவிப்பது 64வது சுதந்திர தினம்.

விளைநிலங்கள் எல்லாம் மனைகளாக மாற்றி பணம் பார்க்கும் கொள்ளையரை கண்டும் காணாமல் இருக்கும் அரசு...... அனுபவிப்பது 64 வது சுதந்திர தினம்.

இப்படி எண்ணற்ற சாதாரண கேள்விகளுக்கே பதில் கிடைக்காமல் போகின்றது. அப்படி பட்ட சூழ்நிலையில் இந்த 64 வது சுதந்திர தின உணர்வு தேவையா? என்ற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கலாம்..... என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட தேச உணர்வு இல்லாமல் இருப்பதே இந்த சுழல்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்வேன்.....

நாம்!...
நம் நாடு!....
நம் மக்கள்!....
என்ற உணர்வை நம் சந்ததினர்க்கு விட்டு செல்லாமல் இருந்தோமேயானால் மீண்டும் ஒரு சுதந்திர தினம் கொண்டாட வேண்டிய நிலமையும் வரலாம். அரசை தட்டி கேட்பது நமது உரிமை அதே சமயம் நாட்டையும் நாட்டின் உணர்வையும் மதிக்க வேண்டியது நமது கடமை...... உலகிலேயே மிக பெரிய முழு சனநாயக நாடு இந்தியா..... முறையான சட்டங்கள் இருந்தும் ஒழுங்கற்ற சூழல்களினால் தடம் புரண்டு ஓடுகின்றது. சரியான தலைமை இல்லாமல் இருப்பதும் நமது பாக்கியமின்மை. நல்ல தலைவர்களுக்காக இன்னும் எத்தனை காலம் காக்க வேண்டும் என்றுதான் தெரியவில்லை?....... அப்படிப்பட்ட நல்ல நாளை எதிர்பார்ப்பவர்களில் நானும் ஒருவன்..... வல்லரசு கனவை தூக்கி எரிந்துவிட்டு நல்லரசை காண விழைவோம். அந்த நல்லரசே வல்லரசாகும்......

நாமும் இந்த நாட்டுக்கு என்ன செய்தோம்?, என்ன செய்துக்கொண்டுள்ளோம்?, என்ன செய்ய போகின்றோம்? என்று எண்ணிப்பார்க்கும் தருணமாக கருதுவோம்!... குற்றவாளிகளும் முறைகேடானவர்களும் நம்மில் ஒருவர்தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றங்களை நம்மிலிருந்து தோடங்கலாமே!.....


64 வது சுதந்திரன தின வாழ்த்துகள் சொல்லிக்கொள்பவன்..
ஆ.ஞானசேகரன்.

Tuesday, July 27, 2010

எல்லாம் தெரிந்தாலும்!.......

எல்லாம் தெரிந்தாலும்!.......

(படம் இடுகைக்கு தொடர்பில்லை)

மின்னஞ்சலில் படித்த ஒரு கதை .... தன்னுடை நண்பரை தேடி ஒருவர் அவர் வீட்டிற்கு செல்கின்றார். அந்த நண்பரோ வெளியில் சென்றுவிட்டார், அவரின் பாட்டி மட்டும் இருந்தார். அவர் பாட்டியிடம் நண்பரே பற்றி கேட்கிறார். நண்பர் வெளியில் சென்று விட்டதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் நாற்காலியில் அமர செய்துவிட்டு தேனீர் எடுத்து வர பாட்டி சென்று விடுகின்றார்.... அவர் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன் உள்ள சிறு மேசையில் சில பாதாம் பருப்பு தட்டில் இருந்தது. அவர் அவற்றில் ஒன்றை வாயில் போட்டு சாப்பிட்டார். சுவையாய் இருந்தது எனவே மற்றொன்றை வாயில் போட்டார்.... இப்படியே எல்லாவற்றையும் முடித்துவிட்டார். பாட்டி வந்ததும் " பாட்டி இங்கிருந்த பாதாம் சுவையாய் இருந்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன்" என்றார். பாட்டியோ " பரவாயில்லை தம்பி நான் தான் சாக்லைட் சாப்பிடும்பொழுது பல் இல்லாததால் பாதாம் பருப்பை மட்டும் துப்பி வைத்திருந்தேன், நல்ல வேலை வீனாகாமல் நீ சாப்பிட்டுவிட்டாய்" என்றார். அவருக்கு என்னவோ போல ஆகிவிட்டது.

மேல் சொன்ன கதை ஒரு சின்ன காமடியோடு முடிந்தது பரவாயில்லை. இது போல தன்னுடைய நண்பனை தேடி அவன் வேலை செய்யும் இடத்திருக்கு சென்றான். நண்பர் வெளியில் சென்றுள்ளதால் காத்திருக்க வேண்டிருந்தது. வந்த கலைப்பு தாகமாக இருந்ததால் அருகில் இருந்த தண்ணிர் வைத்திருக்கும் கண்ணாடி குடுவையை எடுத்து மலமலவென்று குடித்துவிடுகின்றார். பிறகுதான் தெரிந்தது அவன் குடித்தது தண்ணீர் இல்லை "தின்னர்".... பின்னர் உயிருக்கு போராடி பிழைத்துவிட்டார்.....
நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம்.... இருந்தாலும் நமக்கு பழக்கமில்லாத இடத்தில் கேட்டு செய்வதுதான் பாதுகாப்பு என்பது மேற்கண்ட நிகழ்வு தெளிவுப்படுத்துகின்றது.

" எல்லாம் தெரிந்திருந்தாலும் கேட்டு செய்வதினால் எந்த கெடுதலுமில்லையே!"


அன்புடன்,
ஆ.ஞானசேகரன்.

Thursday, July 22, 2010

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

பெண்ணே நீயும் பெண்ணா?.... பெண்ணல்ல ஓவியம்!....

"பெண்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் ஒரு பெண்ணால் புரிந்து உணர்ந்துக்கொள்ள முடியும். ஒரு ஆணால் கேட்டு புரிந்து தெரிந்துக்கொள்ள முடியும்.........."


வணக்கம் நண்பர்களே!
நான் வீட்டுக்கு வரும் வழியில் நான்கு பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள், அதில் ஒரு பெண் கர்ப்பிணி. கர்ப்பிணி பெண்ணிடம் ஒரு பெண் " ஏங்க நீங்க உட்காந்து பேசுங்க எனக்கு கால் வலிப்பதுபோல இருக்கு" என்று சொன்னார்கள்.... அந்த நிமிடங்களில் எனக்கு ஒரு வித மகிழ்ச்சி வந்துசென்றாலும் சில சில வாங்கியங்கள் நினைவில் வந்து சென்றதை தவிற்க முடியவில்லை......... அதுவும் பெண்களிடமிருந்து வந்த வார்த்தைகள்தான்.
" என்னமோ இவ மட்டும் புள்ளதச்சியா இருப்பதாக நிணைச்சி இந்த ஆட்டு ஆட்டுரா.."
"நாங்களெல்லாம் புள்ளபெத்துகல இவ என்ன? இங்க நோவுது அங்க நோவுது என்று நடிக்கின்றா..."

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

என்னோடு வேலை செய்யும் சீன பெண் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் " இன்று காலை மருத்துவரை பார்த்தேன் மருத்துவர் உறுதிப்படுத்தினார்..... இது மூன்றாவது மாதம்" என்று சொல்லிவிட்டு எப்பொழுதும் போல அவள் வேலையை பார்த்துக்கொண்டுருந்தாள்..... இது அவளுக்கு முதல் குழந்தை.

பக்கத்து வீட்டில் தங்கிருக்கும் தம்பதினர் காலையில் வெளியில் சென்றனர்..... என்னை பார்த்துவிட்டு இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள்.... பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பியதும் அவர் வீட்டிற்கு பொழுது போக்காக நான் சென்றேன். அந்த நண்பர் சமையல் அறையில் போராடிக்கொண்டிருந்தார். "என்ன சார் சமையல் எல்லாம் கலக்கலா இருக்கு" என்றேன். " ஆமாம் சார் காலையில் மருத்துவரை பார்க்க சென்றோம் மருத்துவர் உறுதி படுத்தினார்" என்றார். "அடடேய் வாழ்த்துகள் தலைவரே" என்றேன்....... " நன்றி சார் வீட்டுல மயக்கமா இருக்காங்க அதுதான் நான் சமையலுல இறங்கிட்டேன்" என்றார்..... "நல்லது விட்டுலயும் வாழ்த்து சொன்னதாக சொல்லிருங்க"... என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

பேரூந்தில் அன்று கும்பல் அதிகமாகவே இருந்தது அந்த நேரம் பார்த்து ஒரு கர்ப்பிணி பெண் வண்டியில் ஏறுகின்றாள்.... " ஏம்பா புள்ளதாச்சிக்கு யாராவது ஆம்பளங்க ஏந்திருச்சி உட்கார இடம் கொடுங்கப்பா...." முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் சொல்லுகின்றாள்.......

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் கிராமத்தில் சில பெண்கள் வேகமாக வயல் வெளிக்கு சென்றார்கள்.... சிறிது நேரத்திற்கு பின் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஒரு சிறு கைகுழந்தையுடன் வந்தார்கள்.... அவர்களுக்கு பின் மெதுவாக அந்த தாயும் வந்துகொண்டிருந்தாள்..... கழை எடுக்க சென்ற பெண் பிரசவ வலி எடுத்து அந்த வயல் மேட்டுலேயே பிள்ளை ஈண்றாள்....

=> " நான்கு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தாச்சா?" ம்ம்ம்ம் எடுத்தாச்சி அக்கா நல்லாயிருக்குண்ணு சொன்னாங்க.........
=> "ஆறு மாசம் ஆச்சே ஸ்கேன் எடுத்தியா இல்லையா? ம்ம்ம்ம்ம் குழந்தை நல்லா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க.......
=> "ஒன்பது மாசம் ஆச்சா..... டாக்டர் என்ன சொன்னாங்க.? ம்ம்ம்ம்ம் டாக்டர் ஸ்கேன் எடுத்தாங்க குழந்த நல்ல வளர்ச்சியுடன் இருக்கு பயம் வேண்டாம் என்று சொன்னார்........
பிரசவ வலியில் அவள்.... டாக்டர் அவள் கணவனிடம் " குழந்தை திரும்பவில்லை உடன் அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் உங்களின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கின்றோம்....... (செலவு ரூ.20,000)"

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை படிக்கவும்)

ஒரு சில நாட்களுக்கு முன் தினமலரில் வந்த செய்தி...... அது மறக்க வேண்டிய செய்தி அதனால் அதன் சுட்டியை சேமிக்கவில்லை இங்கே சுட்டியை கொடுக்க மனமுமில்லை.... 14 வயது மாணவி கழிப்பறையில் தானாக குழந்தையை பெற்றெடுத்து குப்பை தோட்டியில் வீசி வந்த கொடுமை........
இது எப்படி சாத்தியம் என்று மருத்துவ பதிவர்கள்தான் விளக்கம் சொல்லமுடியும்.... இதுபோல கழிவறையில் குழந்தை பெற்று வீசி எரிந்த சம்பவம் எல்லா நாடுகளிலும் இருப்பதாக பல செய்திகளில் பார்க்க முடிகின்றது.....

( மேலேயுள்ள பச்சை நிற வரிகளை கண்டிப்பாக படிக்கவும்)

என் எண்ணங்களில் வந்து சென்ற விடயங்கள் யாரையும் புண்படுதுவதற்காக இல்லை....

நட்புடன்...
ஆ.ஞானசேகரன்.

Saturday, July 3, 2010

நான் யாரோ!.....

நான் யாரோ!.....


நான் என்பவன் யார்? என்னைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட கேள்விகள் நம் எல்லோருடைய மனங்களிலும் இருக்கும். ஏன் இதைப்பற்றி ஞானிகளும் யோகிகளும் சிந்தித்துக்கொண்டுள்ள கேள்வி. நான் யார்? என்று அறிந்தவன் உண்மையில் ஞானிதான்ங்க. ஆனால் இந்த விடையை முதன் முதலின் அறிவியல் பூர்வமாக கண்டறிந்தவன் டார்வின்.... அதுபோல் நம் பதிவர் CorText என்பவர் நான் யார்? என்ற கேள்வியோடு அதற்கான விடைகளையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.... அவற்றை முழுவதுமாக படிக்க சுட்டியை தட்டுங்கள்.....

நான் யார்?



உன்னை அறிந்தால்... நீ! உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்... (திரைப்பாடல்)


அன்புடன்

ஆ.ஞானசேகரன்