_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, September 16, 2011

திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து....

திருச்சியில் இன்று (16.09.2011) தீ விபத்து.....

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில்யுள்ள ஹோட்டல் சித்திரா கட்டிடத்தில் இன்று (16.09.2011) மாலை 4.30 மணி அளவில் நான்காவது மாடியில் தீ ஏற்பட்டு புகை வெளிவரத் தொடங்கியது.. அதனை தொடர்ந்து தீயணைப்பு மையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மாலை 4.45 முதல் இரவு 7.50 வரை போராடி அணைத்தனர். தீக்காண காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால் கட்டத்தில் பழைய கட்டில் மற்றும் மெத்தைகள் இருந்ததால் தீ அணைப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. நான்காவது மாடி என்பதால் தீ அணைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அந்த அளவிற்கு வசதிகள் திருச்சி தீயணைப்பு மையத்தில் இல்லை என்றே தெரிகின்றது. இருந்தாலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி அணைத்தனர். அதில் ஒரு வீரர் 10 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டார், அவரின் சேவையின் காரணத்தாலும் தலை கவசம் அணிந்த காரணத்தாலும் அந்த விபத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்..... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குடி நீர் வண்டிகளும் நீருக்காக பயன்படுத்தப்பட்டது.

தெரிந்துக்கொள்ள வேண்டியது.....
தீவிபத்தை தவிற்க முன்னேற்ப்படுகள் செய்யப்பட வேண்டும்..
தீயணைப்பு சிறு கருவிகள் பெரிய கட்டிடங்களில் பார்வையில் வைக்கப்பட வேண்டும்...
பெரிய கட்டிடங்களில் வாயில்கள் மற்றும் மாடிப்படிகள் வசதியாகவும் பார்வை படும்படியாகவும் இருக்க வேண்டும்...
தீயணைப்பு வண்டியுடன் மருத்துவ அம்புலன்ஸ்சும் வரவேண்டும்...
அவசர வழிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்....
மாடிக்கட்டிடங்களில் தீ வண்டி தண்ணீர் குழாய்கள் இணைக்க வசதியாக தண்ணீர் குழாய்கள் அமைத்தால் விபத்தை காப்பாற்ற வசதியாக இருக்கும்...

மேலும் புகைப்படங்கள் பார்வைக்காக..........
புகைப்படம் அணைத்தும் செல் போனில் எடுக்கப்பட்டது...

All Photos By
"Lighthouse photos"




























அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Thursday, September 8, 2011

வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!

வேண்டாம்! வேண்டாம்!.... சிதிக்க ஒரு துளி!

நேற்று புது டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பலி........ 76 பேர் படுகாயம். அதை பெருமையாக , "ஹர்கத் - அல் - ஜிகாதி இஸ்லாமி' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

மேலும் நம் நாட்டில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புகள் (நன்றி தினமலர்)


93 மார்ச் 12: மும்பையில் 13 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 259 பேர் பலி, 713 பேர் காயம்.

1998 பிப்., 14: கோவையில் 11 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 200 பேர் காயம்.


1998 பிப்., 27: மும்பையின் விகார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலி.


2003 மார்ச் 13: மும்பையின் முலுந்த் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி, 65 பேர் காயம்.


ஆக., 25: "கேட்வே ஆப் இந்தியா' மற்றும் ஜாவேரி பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் 46 பேர் பலி, 160 பேர் காயம்.


2005 அக்., : டில்லியின் மார்க்கெட் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 62 பேர் பலி.


2006 மார்ச்: வாரணாசியில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கோவிலில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி.


2006 ஜூலை 11: மும்பையின் புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 181 பேர் பலி, 890 பேர் காயம்.


2006 செப்., : மாலேகான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலி. 100 பேர் காயம்.


2007 பிப்., 19: பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 66 பயணிகள் பலி.


2007 ஆக., : ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் பலி.


2008 மே 13: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலி.


ஜூலை 25: பெங்களூரு குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.


ஜூலை 26: ஆமதாபாத்தில்

நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 57 பேர் பலி.

செப்., 13: டில்லியில் ஆறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 26 பேர் பலி.


அக்., 21: மணிப்பூரில் போலீஸ் கமாண் டோ காம்ப்ளக்சில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலி.


நவ., 26: தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலி.


2010 பிப்., 13: புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி.


2011 ஜூலை 13: மும்பை ஓபரா ஹவுஸ், தாதர் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 20 பேர் பலி.


செப்., 7: டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி. 76 பேர் காயம்.


மக்கள் கருத்து: இப்படி பட்ட கோர சம்பவங்கள் கண்டிப்பாக கண்டிக்கக்கூடியது. அப்படி செய்த நாசகாரர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு பல கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் மனிதபிமான அடிப்படையில் செய்து தரவேண்டும். அப்பொழுதுதான் உலக நாடுகள் நம்மை பாராட்டும்.... அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, மரண தண்டனை கண்டிப்பாக கொடுக்ககூடாது.... ஏனனில் "அவர்களால் மரணித்தவர்கள் அதிகம் இருக்க மேலும் எதற்கு மரணம்". இந்தியாவில் மரணதண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்... அந்த அதிகாரம் நாச வேலைக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.......

வாழ்க ஜனநாயகம்!

வாழ்க பாரதம்!......



என்ன? கொடுமை சரவணன் சார்!................


ஆ.ஞானசேகரன்