_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, September 19, 2010

ஏன்? எதற்கு? எப்படி?....11

ஏன்? எதற்கு? எப்படி?....11

வணக்கம் நண்பர்களே!...
பல நாட்களாக நான் பதிவின் பக்கம் வருவது குறைவாகவே இருக்கின்றது. வேலையின் அழுத்தம் மற்றும் மனதில் ஏற்படும் புறத்தாக்குதல்களும் ஒரு காரணம். அவ்வப்பொழுது வந்தாலும் பதிவுகள் எழுதுவது மிக குறைவே. நான் எழுதிய சிந்தனை இடுக்கைகளின் தொடர் "ஏன்? எதற்கு? எப்படி?" அப்படியே நின்றுவிட்டது. அதை கொஞ்சம் தூசி தட்டி எழுப்பலாம் என்ற எண்ணத்தில் "தூக்கத்தைப்" பற்றி எனக்குள் எழும் கேள்விகள் இந்த பதிவாக இருக்கின்றது. இதற்கு முன் எழுதிய ஏன்? எதற்கு? எப்படி?.... இடுகைகளின் தொகுப்பு கீழே புதியவர்களுக்கு பயனாக இருக்கும்.


அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?....

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 2

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 3

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 4

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 5

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 6

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 7

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 8

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 9

அம்மா அப்பா: ஏன்? எதற்கு? எப்படி?..... 10




தூக்கம் என்றால் என்ன? தூக்கம் ஏன் வருகின்றது? யாரேல்லாம் தூங்க வேண்டும்? தூக்கத்தினால் என்ன பயன்? ஏன் தூங்க வேண்டும்? தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்? இப்படி எண்ணற்ற கேள்விகள் எனக்கும் மட்டுமில்லை எல்லோருக்கும் இருக்கும். அப்படிதான் எனக்கும் இருக்கின்றது. இது போல பல விஞ்ஞானிகளும் கேட்டுள்ளார்கள், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதற்கான விடைகளை முழுமையாக அறியப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் பல விடயங்கள் பதிலழிக்கப்பட்டுள்ளது. இன்னும் துருவி துருவி பார்க்ககூடியவையாகவே இருக்கும் ஒரு ஆய்வு நிலைதான் தூக்கம்.

தூக்கம் என்பது தற்காலிக மரணம் என்ற நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு. நமது மூன்னோர்கள் கூட தூக்கம் என்பது மரணத்தை போல என்ற எண்ணங்கள்தான் இருந்தது. ஆனால் தற்கால அறிவியல் தூக்கம் என்பது ஒரு இயற்கையான ஒரு நிகழ்வு. இது எல்லா உயிர்களுக்கும் நடக்கும் ஒரு செயல் என்ற உண்மையை சொல்லியுள்ளார்கள்.

தூக்கம் இல்லா வாழ்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வாழ்கையில் வெற்றிப்பெற்றவர்கள் தூக்கத்தை வெறுக்கின்றார்கள் என்று சொல்வதுண்டு. அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எந்த ஒரு மனிதனும் குறைந்தது ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் கட்டாயம். சிலருக்கு குறைந்த தூக்கமாயினும் நிம்மதியான தூக்கமாக இருக்கும், சிலருக்கு பல மணி நேரம் தூங்கினாலும் நிம்மதில்லா நிலை இருக்கும்.

தூக்கம் எதனால் வருகின்றது? 'மெலட்டோனின்’ (melatonin) என்ற ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகின்றது. நமது உடலில் மூளைப்பகுதியில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரந்தால் தூக்கம் வருகின்றது. இந்த ஹார்மோன் வெளிச்சத்தில் குறைவாகவும் இருளில் அதிகமாக சுரக்கின்றது. அதனால்தான் இரவில் உறங்க முடிகின்றது. நமது முன்னோர்கள் பகல் தூக்கம் கேடு என்றே சொல்லியுள்ளார்கள். இரவு பணியில் உள்ளவர்கள் பகலில் தூங்கிதான் ஆக வேண்டும். " பகலில் தூக்கம் பாடையில் போவான்" என்பது சித்தர்கள் வாக்கு.

எவ்வளவு நேரம் தூங்கலாம்? அதிக தூக்கமும் குறைவான தூக்கமும் நல்லதில்லை. சாதாரணமாக மனிதன் 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். முதியவர்களுக்கு 8 மணி நேரம் தூக்கம் போதுமானது. பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூக்கம் அவசியம் இந்த தூக்கம்தான் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதாக சொல்கின்றார்கள். பள்ளிக்கு செல்லாத வயது குழந்தைகள் 10 முதல் 12 மணி நேரம் தூங்கலாம்.

தூக்கத்தினால் என்ன பயன்? சமீபத்தில் ஒரு ஆய்வு ஜெர்மனியில் நடந்தது. அதன் முடிவில் தூக்கத்தினால் நினைவாற்றல் அதிகப்படுத்துகின்றது என்று கூறப்பட்டது. தூக்கம் புத்துணர்வை அதிகப்படுத்துகின்றது. தூங்கும் பொழுது இதயம் , மூளை போன்றவை இயக்க நிலையில் இருக்கின்றது. தூக்கம் என்பது மூளைக்கு ஒரு கட்டாய நிகழ்வாக இருக்கின்றது. தூக்கத்தின் பொழுதுதான் மூளை தன்னை அனைத்து பகுதிகளையும் சரி பார்க்க பயன் படுத்துகின்றது. தூக்கம் என்பது மூளையின் ஓய்வு என்பது முற்றிலும் உண்மையில்லை. மூளை தூக்கத்தின் பொழுதுதான் அதிகமாக வேலை செய்கின்றது. மூளை தன் கட்டளைகளை அனைத்து பகுதிகளுக்கும் செலுத்தி சரியாக செயல்படுகின்றதா? என்று சரிபார்க்கின்றது. அதாவது (overhaul) ஓவர்கால் செய்கின்றது. இந்த நிகழ்வு நடக்காமல் இருந்தால் புதிய செல்களில் உற்பத்தி இல்லாமேலே போய்விடும். நாம் செய்யும் செய்ய நினைக்கும் அனைத்து செயல்களையும் கட்டளைகளாக செலுத்தி பார்த்து அதில் குறைகள் இருந்தால் தானாகவே சரி செய்துவிடுகின்றது. காலை தூக்கு, கையை ஆட்டு , தலையை சொரி போன்ற கட்டளைகலாக இருக்கும். ஆனால் அந்த கட்டளைகள் செயல் படுத்தாமல் தன்னைதானே சரிபார்க்க உபயோகித்துக்கொள்ளும். சில வேலைகளில் அந்த கட்டளைகள் செயல் வடிவம் செல்ல வாய்ப்புகள் இருக்கும் அந்த சமயங்களில் கலை தூக்க முடியாமல் கடின படுவதாக நமக்கு இருக்கும். இதைதான் ஏதோ ஒன்று நம்மை அமுக்கி செல்கின்றதாக சொல்லுவார்கள். நல்ல ஆரோக்கிய வாழ்விற்கு ஆழ்ந்த தூக்கமே நல்லது.

ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கபடுத்திக்கொள்ள வேண்டும். தூக்கம் வரும் முன் படுக்கைக்கு செல்வதை தவிற்த்துவிட்டு தூக்கம் வந்ததும் தூங்க செல்வது நல்லது. சீரான உணவு பழக்கம் நல்லது.எளிதில் ஜீரனமாகும் உணவும் சமசீர்ரான உணவும் உடலுக்கும் உரக்கத்திற்கும் நல்லது. மது , புகையிலை தவிற்பது நல்லது. தினம் உடற்பயிற்ச்சி சால சிறப்பு.....

தூக்கமின்மை என்பது என்றால் என்ன? பலர் படுக்கையறை சென்று தூங்க முடியாமல் அப்படியும் இப்படியும் புரண்டு படுப்பார்கள். இப்படி பட்டவர்கள் தூக்கமின்மையால் மிகவும் துன்பபடுவார்கள். தூக்கமின்மை மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் போன்ற காரணங்களால் வரும்...

நான்கு மணி நேரத்திற்கு குறைவாகவும் 16 மணி நேரத்திற்கு அதிகமாகவும் தூங்குவது கேடு விளைவிற்கும். இதனால் தற்கொலைக்கு தூண்டுதல் ஆளாக வேண்டி வருவதாக ஆய்வு சொல்லுகின்றது.
தூக்கம் என்பது ஒரு பொக்கிஷம், அவற்றை முழுமையாக அனுபவிற்பதே உயிர்களின் கடமையாகும்...

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, September 13, 2010

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்....

எனர்ஜி பூஸ்ட் (energy boost) ஒரு துளியில்.....

(இணையத்தில் சுட்டப்படம்)

இதற்கு முன் சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்
வலைப்பக்கத்தில் மூன்றே வார்த்தை சிங்கப்பூர் வளர்ச்சியின் மந்திரசொல்....
என்ற ஒரு இடுகை எழுதியிருந்தேன், சுட்டியை ஒரு முறை சுட்டுங்கள். நன்றி நண்பர்களே! உங்களின் எனர்ஜி உங்களின் கைகளில் இருக்கும்பொழுது எங்கே தேடுகின்றீகள்? அட ஆமாங்க நல்லா பாருங்க உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை எடுத்து சுவைக்கதான் நாம் மறந்துவிடுகின்றோம்.

என்னோடு வேலை செய்யும் ஒரு சீன நண்பர் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை. ஏன் என்று விசாரித்ததில் அவருக்கு தோண்டை புற்று நோய் வந்து சிகிச்சையில் இருக்கின்றார் என்றும் பிழைப்பது மிக கடினம் என்றும் சொன்னார்கள். ஆனால் சில மாதங்களுக்கு பின் அவர் வேலைக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சி இருந்தது. அவரை பார்த்து "நான் (How are you sir?) நலமாக இருக்கின்றீர்களா?" என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே" ( Till i am live) இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்" என்றார். அதை கேட்டதும் எனது மூச்சு காற்று சிறிது நின்றே வந்தது. என்ன வார்த்தை அது! ஆனால் அவர் அதை சிரித்துக்கொண்டே சொன்னார். அவரின் எதார்த்தம் இன்னும் அவரை வாழவிடுகின்றது. இன்னும் பல அவர் சொல்லுவார்..... " நான் தினமும் காலையில் எழுந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பேன்"..... அந்த மகிழ்ச்சியை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது. " என்று கூறுவார்..... ஏன் அப்படி என்று கேட்டால் " ஆகா நான் இந்த நிமிடம் வரை உயிருடன் இருக்கின்றேன்.... இன்னும் அப்படியே இருப்பேன் என்ற நம்பிக்கை வரும் அதனால்தான் நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்" என்று சொல்லுவார். நம்மில் எத்தனை பேர் அந்த மகிழ்ச்சியை அனுபவித்துள்ளோம்... அவர் இன்றும் அதே நம்பிக்கையில் நலமாக இருக்கின்றார். அவரிடம் இருக்கும் எனர்ஜி பூஸ்டை சுவைப்பதினால் அவரால் மகிழ்ச்சியுடன் இருக்க முடிகின்றது. (பின் குறிப்பு: உறக்கம் என்பது தற்காலிக மரணம் என்று சீனர்கள் நம்புவதுண்டு. உறக்கதிலிருந்து எழுந்ததும் கடவுளிடம் நன்றி சொல்வதும் அவர்களின் பழக்கம்).

நம் கைகளில் இருக்கும் எனர்ஜி பூஸ்ட் நமக்கு மட்டுமில்லை நம்மோடு இருக்கும் நண்பர்களுக்கும் மகிழ்வை கொடுக்கும்... கொடுப்பதினால் குறையா பொக்கிசம் கொடுக்கப்பட்டால் வளருமேயன்றி குறையாது.......

கவணக்குறைவாக சாலையை கடக்கும்பொழுது எதிரே வரும் வண்டியை கவணிக்காமல் செல்கின்றோம். வண்டி ஓட்டுனர் விரைவாக வண்டியை நிறுத்துகின்றார். அப்போழுதான் நம்முடைய கவணக்குறைவை உணர்கின்றோம்.. உடனே வண்டி ஓட்டுனருக்கு கையை உயர்த்தி நம்முடைய நன்றியையும் சிரமபடுத்தியதற்கு வருத்ததையும் தெரியப்படுத்தலாம். ஏன் மன்னிப்பை கூட தெரிவிக்கலாம். இப்படி செய்வதினால் நாம் நம்முடைய குற்ற உணர்விலிருந்து விடுபட முடியும். வண்டி ஓட்டுனருக்கு மன அதிர்வை குறைக்க முடியும்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

அலுவலகம் ஒன்றிக்கு மகிழுந்தில்(car) செல்கின்றோம். காவலாளி கதவை திறந்து விடுகின்றார். கதவை திறந்த காவலாளிக்கு கையை உயர்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரியப்படுத்துகின்றோம். கதவை திறந்துவிடுவது அவரின் வேலையாக இருக்கலாம், நீங்கள் அப்படி செய்வதினால் அவரால் அந்த வேலையை சோர்வின்றி செய்ய முடிகின்றது. மறுமுறை நீங்கள் வரும்பொழுது உங்களை இன்னும் மகிழ்வுடன் வரவேற்று கதவை திறந்துவிடுவார்...... காலதாமதமாக அவர் திறந்துவிட்டால் நீங்களும் மன அழுத்ததிற்கு ஆளாவீர்கள் அதனால் அவரும் மன அழுத்தம் கொள்வார்..... இது அனைவருக்குமே நற்பயனை அழிக்காது..... நீங்க செய்வது ஒன்றுதான் சிறிது கையை உயர்த்தி வணக்கமும் நன்றியும் சொல்வதுதான்..... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட் நம்கைகளில்தான் இருக்கின்றது!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் கத்திரிக்கா வாங்குகின்றார்.... கத்திரிக்கா கொடுத்ததும் அதற்கு சாமமான காசை கொடுக்கின்றார். வாடிக்கையாளருக்கு ஒரு " நன்றிங்க" என்று சொல்வதினால்!............ வாடிக்கையாளர்க்கு கத்திரிக்காவின் விலையின் கடினம் அற்றுபோய் மகிழ்வைதான் கொடுக்கும். அதனால் மீண்டும் பல முறை உங்கள் கடைக்குதான் வருவார்.... இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்ட நம்கைகளில்தான் இருக்கின்றது!

நன்றி, வணக்கம், சிரமத்திற்கு கொடுக்கும் வருத்தம், சிறிய மன்னிப்பு இப்படிப்பட்ட எனர்ஜி பூஸ்டை தாரளமாக கொடுப்பதினால் நம்மால் நாமும், நம்மால் அவர்களும் உச்சாகமுடன் மகிழ்வை அடைய முடிகின்றது......

எல்லோருக்கும் மகிழ்வை கொடுக்கும் எனர்ஜி பூஸ்ட் சிறு துளியில் இருக்கும்பொழுது.... அதை பயன்படுத்தி பயனாகலாம்...

அன்புடன்
ஆ.ஞானசேகரன்