_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, December 17, 2008

மொழித்தெரியா ஊரில்.......

மொழித்தெரியா ஊரில்.......




நமக்கு கொடுக்கும் அடையாலமுனு சொன்னா நாம் பேசுர மொழிதான்னு எல்லோருக்கும் தெரியும். அப்படி நமக்கு புரியாத மொழி பேசுர ஊருல இருந்தா என்ன என்ன நடக்கும்.... ஜோதிகா மொழி படத்துல ஊமையும் செவிடாகவும் வாழ்ந்திருப்பார்(நடித்திருப்பார்), பிரகாஸ்ராஜ் ஜோதிகாவிடம் இசையை பற்றி உன்னுடைய புரிதல் என்னா? என்று கேட்ப்பார்,... அதற்கு ஜொதிகா உங்கள் எல்லாருக்கும் இசை ஒரு கலை, எனக்கு அது ஒரு மொழி அப்படிதான் நானும் உணர்கின்றேன் என்று கூறுவதுபோல மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும்... அப்படி மொழிப் புரியாத ஊரில தனி ஆளா இருந்தா அந்த மொழிக்கூட ஒரு நாடகமே நடக்க வேண்டிவரும்..

இப்படிதான் நான் 1994ல் மலேசியாவில் வேலைக்காக சென்றேன்। கோலாம்பூர் அருகில் பெட்டாலிங் ஜெயா எனற இடத்தில் தங்கி இருந்தேன் எனக்கோ தமிழ் மட்டும்தான் ஒழுங்காக தெரியும், கொஞ்சம் ஆங்கிலம் அவ்வளவுதான். இதை வைத்துக்கொண்டுதான் சமாளிக்க வேண்டும். மலேசியாவில் மலாய் மொழியில் பேசுவார்கள். நான் தங்கி இருக்கும் இடத்தில் ஆங்கிலம் துளிகூட தெரியவில்லை ஒன்று இரண்டு கூட மலாய்ல்தான் சொல்லுவார்கள்.

சாப்பிட ஒரு குறிப்பிட்ட கடைக்குதான் செல்வேன். ஒரு வித புரிதல் முறையில் ஒரு சில மலாய் வார்த்தைகள் மூலம் காலம் ஓட்டினேன். என்றும் போல அன்றும் கடையில் சாப்பிட்ட பிறகு காசு கொடுக்க செல்லும் பொழுது கல்லாப்பெட்டி அருகில் இருந்த கேக் நல்லா இருந்தது அதனால் ஒன்றை சாப்பிட்டு விட்டேன். பிறகு கேக்குக்கும் சேர்த்து காசு கொடுத்தேன். அந்த கடையில் இருந்த பெண் கேக்குக்கு காசு எடுக்கவில்லை. நான் கேக் எடுத்ததை அவள் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். அந்த கேக்கை காட்டி சத்து என்றேன்(சத்து என்றால் ஒன்று) . ஒன்றை மடித்து கொடுத்தாள்.... நான் no no மக்கான் என்றேன்( மக்கான் என்றால் சாப்பிடுதல்). அவள் சாப்பிட தட்டில் வைத்து கொடுத்தாள்.. நான் சாப்பிட்டுவிட்டதை எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் ஆங்கில வார்த்தைகளை சொல்லி பார்த்தேன் முடியவில்லை. கடைசியில் வெறும் வாயை மென்று முழுங்கி காட்டினேன்.. அவளோ ஓஓ சுடமக்கான் என்று சொல்லி காசை வாங்கி கொண்டாள். ( சுட மக்கான் என்றால் சாப்பிட்டாச்சு) அந்த "சுட" வை மறந்ததால் மொழியில் ஒரு கலையை காட்ட வேண்டியதாயிற்று...

அதேபோல் மற்றொரு சம்பவம் என்மனைவியின் அம்மா அப்பா கர்நாடகத்தில், வசிக்கின்றார்கள் பாகல்கோட் என்ற இடம். என்வீடு திருச்சிலிருந்து செனறால் ஒரு நாள் பயணம் ஆகும். என் மனைவியை அழைத்து வர நான் தனியாக செல்லவேண்டி இருந்தது. எனக்கு கன்னடமும் தெரியாது, ஹிந்தியும் தெரியாது. ஊப்பிலி வரை சென்றுவிட்டேன் அங்கிருந்து பாகல்கோட் பஸ்ஸில் செல்லவேண்டும்... இரவு சாமம் அப்போது அங்கு உள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை ஹிந்தி புரிந்துக்கொள்கின்றார்கள்... பஸ்ஸில் எல்லாம் கன்னடத்தில் எழுதியுள்ளார்கள்.. பாகல்கோட் பஸ் எது எங்கே என்றால் அவர்களுக்கு புரியவில்லை எனக்கு ஹிந்தியும் தெரியாது... எப்படியோ ஒரு சின்ன பையன்னுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் புரிந்துக்கொண்டான்.. அவனிடம் பாகல்கோட் என்று கன்னடத்தில் எழுத சொன்னேன். அதை வைத்து பொருத்திப் பார்த்து பாகல்கோட் பஸ்ஸை பிடித்து ஊர்போய் சேர்ந்தேன்....

பாகல்கோட்டில் ஒருவாரம் தங்கி இருந்தேன். முடி வெட்ட வேண்டும்போல இருந்தது. நான் கடையில் சென்று முடி வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவிக்கு ஒரே ஆச்சரியம் மொழித்தெரியாமல் எப்படி முடிவெட்டிக்கொண்டு வந்தேன் என்று.... எப்படி என்று கேட்டாள்?, முடிவெட்டுற கடையில் சாப்பிடவா செல்வார்கள் முடிவெட்டதானே.. கடைக்கு சென்றேன், தலையில் கையை காட்டி நாற்காலில் உற்கார்ந்தேன், முடியை வெட்டி விட்டார்கள் இருபது ருபாய் கொடுத்தேன் மீதி கொடுத்தார்கள் வந்துவிட்டேன்.

மொழி படத்துல ஜொதிக்காவிற்கு இசை ஒரு மொழி போல, எனக்கு மொழித்தெரியா ஊரில் மொழி ஒரு கலையாக இருந்தது... இந்த கலை இருக்கும் வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான் போங்க!....

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Saturday, December 13, 2008

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...

பயத்தின் பரினாமமும் நடந்து முடிந்த தீவிரவாதமும்...
பயம் என்பது நம்மை நிதானம் இழக்க செய்திடும், பயம் இன்றி யாரும் இருப்பதாக தெரியவில்லை... பத்மஸ்ரீ டாக்டர் காமலஹாசனும் நடிகர் நாசரும் குருதிபுனல் திரைப்படத்தில் பேசும் காட்சியில் வீரம் என்பது பயம் இல்லாதுபோல இருப்பதுதான்(நடிப்பது) என்று கூறுவார். பயம் கண்ணில் தெரிந்துவிட்டால் போதும் உன்னில் இருக்கும் தீவிரவாதம் வெளிப்படும்.. கண்ணொளி பார்க்க>>>>>>>




இதேபோல் இந்திய தேசத்தை நடுக்க வைத்த மும்பை தாக்குதலில் ஈடுப்பட்ட இளஞர்களின் கண்ணில் காணப்பட்ட பயமில்லா உணர்ச்சிதான்,... அவர்களால் இப்படிப்பட்ட கொடுஞ்செயல் செய்ய முடிந்தது... இதை நேரில் பார்த்த மும்பை ரயில் நிலையத்தின் அறிவிப்பாளார் சொல்வதும் அப்படித்தான்... அவர்கள் அப்பாவி மக்களை சுடும் பொழுது அவர்கள் முகத்தில் பயமோ பதற்றமோ காணவில்லை என்று சொல்லுகின்றார். இவர்களிடம் தோன்றிய பயமின்மை உயிரின் விலைத்தெரியாமல் போய்விட்டது. இரத்ததின் துளிகள் அவர்களை பயம்காட்டாமல் விட்டதுதான் இவர்களின் வன்முறைக்கு உதவியது.

இத்தனை வன்முறைக்கிடையில் தன் உயிர் துச்சமென எண்ணிய இந்திய கமோண்டோகளின் துணிவுதான், அவர்களின் வெற்றியின் பலம். எந்த பயமின்மை மானுடனை கொன்றதோ, அதே பயமின்மைதான் மானுடனை காத்தது. இந்த பயத்தின் பல பரினாமம்தான் உயிரைக் குடிப்பதும், உயிரை காப்பதும்.... மேலும் இந்த கண்ணோளியை பார்க்கவும்>>>





இந்த மண்ணில் நடக்கும் தீவிரவாதத்தின் மூலமும் இதே பயத்தின் அடிப்படையில் உண்டானதுதானே! தீவிரவாதம் என்றும் உருவாகிறதில்லை உருவாக்கப்படுகின்றது. பலச்சாலி ஒரு முடவனை குனியும் வரை கொட்டிதீர்க்க மூர்க்கம் கொண்டால், ஒரு எல்லைக்கு மேல் வெகுண்டு எழுவானாயின் அங்கேதான் தீவிரவாதம் உருவாக்கப்படுகின்றது... இதற்கு பொறுப்பு அந்த பலச்சாலிதானே!.. இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை...

தீவிரவாதம் ஏதோ ஒரு இனத்தின் முட்டாள் செயல் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் இந்திய மக்களை துண்டாடி வேடிக்கைப் பார்க்கும் சமுக விரோதிகளின் கொடிய செயல்தான் இன்றுவரை நடக்கும் எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தின் முன்னோடி. பாபர் மசுதி இடிப்புக்கு பின்னர்தான் தீவிரவாதம் கொடியேற்றி வைக்கப்பட்டது. பெரும்பான்மை இனத்தின் வன்முறையான தாக்குதல் சிறுபான்மையினரை பயம்கொள்ள வைக்கப்பட்டது. இந்த பயம்தான் எல்லைத்தாண்டிய தீவிரவாதத்தை வலிமையாக்கியது.

வயதில் முதியவன் ஒருவன் தன்னை விட மிக சிறுவனை அடித்தால், ஒரு நிலைக்கு மேல் அந்த சிறுவன் அவனை வாயால் கடிக்க ஆரம்பித்து விடமாட்டானா? அதேதான் இங்கேயும் நடந்துவிட்டது.... பாபர் மசுதி இடிக்கப்பட்டதும் அதன் தீர்ப்பு இன்னமும் முடிவுக்கு வராமல் இருப்பதும். அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். இதன் தொடராகத்தான் நடக்கும் எல்லைத் தாண்டிய தீவிரவாதத்திற்கு வழிவகை செய்துவருகின்றது.
இதுபோன்ற வன்செயல்களால் நம்பிக்கை இழந்த சிறுபான்மைனர், பயத்தின் காரணமாக எல்லை தாண்டி கரம் கோருகின்றனர்.. அரசியல் ஆதாயத்திற்காகவும், பதவி சுகம் காணவும் பிரதமர் கனவில் இருக்கும் அத்வாணி பொன்றோர்களினின் பொறுப்பற்ற செயல்காளால் அப்பாவி மக்கள் வன்முறையில் பலியாகின்றனர். மோடி போன்றோர் தூண்டும் இனவெறியினால் அப்பாவிகள் செத்து மடிகின்றனர்.

இந்தியாவில் சிறுபான்மைனரால் நடத்தப்படும் தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டுமானால், அவர்களுக்கு நம்பிகையை உருவாக்க வேண்டும். அவர்களின் பயத்தை தெளிவாக்க வேண்டும்... ஏதோ 12 பேர் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையை தாக்கிவிட்டனர் என்று நினைத்தால் முட்டாள்தனம்.. இங்குள்ளவர்கள் உதவியதால்தான் அவர்களால் செயல்பட முடிந்தது.

நம் அருகில் உள்ள வன்முறையும், தீவிரவாதமும் தீர்க்கப்படாமல் போனால் சவகுழியில் விழுவோம் என்பதும் உண்மைதானே! பயம்மில்லா நிலையை எல்லா இன மக்கள் உணரப்படுமேயானால் எல்லைத்தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுச் செல்ல முடியும் எனபது என் விருப்பமும் எண்ணமும்.

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Monday, December 8, 2008

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!....

நான் படித்துகொண்டிருக்கும் பருவத்தில், 7-ம் வகுப்பு என்று நினைக்கின்றேன், எனது பள்ளி அருகில் ஒரு பெரியவர் ஒரு சிறிய துணிப்பையில் அரிசி குருனை எடுத்து வருவார். அந்த அரிசியை தான் போகும்மிடத்தில் உள்ள எறும்பு புற்றுகளில் அரிசி சிறிது பொட்டுக்கொண்டே செல்வார். சிறுதுளி அரிசியானாலும் இதனால் பல உயிர்களுக்கு உணவு கிடைத்துவிடுகின்றது. ஒரே நாளில் பல ஆயிரம் உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் கிடைத்துவிடுகின்றது.

இதை பார்த்த நான் நாமும் இதேபோல் செய்யலாம் என்று நினைத்தேன். பள்ளிக்கு போகும்போது சட்டை பையில் கொஞ்சம் அரிசியை எடுத்துகொள்வேன், நடந்து போகும் பாதையில் எறும்பு, கரையான் கூட்டத்தை பார்த்தால் கொஞ்சம் அரிசியை போட்டுவிட்டு செல்வென். இப்படி பல தினங்கள் செய்துள்ளேன்.

ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியர் உணவு வட்டம் பற்றி பாடம் எடுத்தார். இயற்கையின் சுழற்சியையும் உயிரணங்களின் உணவு பழக்கம் மற்றும் உணவு வட்டம் ஒரு சுழற்சியையும் விளக்கினார். ஒன்றின் அழிவு ஒன்றின் உணவாகின்றது, இப்படிதான் உணவின் வட்டம் சுழற்சியாகின்றது என்பதை உணர்த்தினார். புல்லின் அழிவு ஆட்டின் உணவு, ஆட்டின் அழிவு மனிதனின் உணவு, மனிதனின் அழிவு புல்லிற்கு உரமாகின்றது. இப்படி புல் மீண்டும் உணவாகின்றது... இந்த சுழற்சியின் பாதிப்பு இயற்கையை பாதிக்கும் என்று தோன்றுகின்றது.

எனக்கு நான் எறும்புக்கு உணவழிப்பதில் எதோ ஒரு குறை இருப்பதாக தோன்றியது. வீட்டு விலங்குகளை தவிர்த்து மற்ற விலங்குகளின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு உணவை தேடுவதும் பின் உண்பதும்தான். செயற்கையாக உணவழிப்பதின் மூலம் அவற்றின் இயற்கையான வாழ்கையை தடுப்பதாக தோன்றியது. மேலும் உணவுவட்டத்தில் தடுப்பு ஏற்ப்பட்டால் இயற்கை செய்யும் உயிர்களின் சமன்படுத்துதலில் பெரிய பாதிப்பு உண்டாகும் என்றே தோன்றியதால் அன்றிலிருந்து நான் எறும்புக்கு அரிசி கொடுப்பதை தவிற்த்தேன்.

மத்தேயு-6:26.(பைபிள்) ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?..... மேற்கண்ட பைபிள் எடுத்துகாட்டு கூட இயற்கையில் அவற்றிக்கு உணவுகள் இருப்பதாகவே சொல்கின்றது. இந்த உணவு வட்டம் மனிதனால் சிதைக்க படுமேயானால் கண்டிப்பாக பாதிப்பை சந்திக்கலாம் என்றே எனக்கு தோன்றியது.

இதேபோல் நான் வேலைசெய்யும் இடத்தில் தேனீர் இடைவேளையில் இரண்டு புறா வரும் அவற்றிக்கு சிலர் தான் சாப்பிடும் பண் மற்றும் பதார்த்தங்களை புறாகளுக்கு போடுவார்கள். தினமும் அதே நேரத்தில் வரும் சாப்பிடும்.... இந்த புறாக்கள் மற்ற புறாக்களைப் போல் இல்லாமல் சோம்பலாக சக்தியின்றி தெரிய ஆரம்பித்தது. சிலதினங்களுக்கு பின் அதை காணவில்லை. என்னை பொருத்தவரை மற்ற புறாக்களைபோல் மழைக்காலம் வேயில்காலம் போன்ற நாட்களில் உணவிற்காக போராட பழக்கம் இல்லததால் உணவுக்கிடைக்காமல் இறந்திருக்ககூடும் என்றே தோன்றுகின்றது. நாம் உணவு போட்டு பழக்கப்படுத்தி அவற்றை இயற்கையிலிருந்து பிரித்ததால் வந்த கொடுமை என்று என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது....

மேற்க்கூறிய என் கருத்துகள் முரன்பாடாக தோன்றலாம், சிறிது யோசித்தால் உண்மை புலப்படும். தான் அடைகாத்து ஈண்ட கோழிக்குச்சுகளை கொத்தி விரட்டி தானே இறைதேட ஆயித்தப்படுத்துமே தாய் கோழி, அதைதான் இங்கு சொல்கின்றேன்.

நாம் தீண்டாதவரை இயற்கை, இயற்கையாகவே இருக்கும்!...
இயற்கையாக இருக்கும்வரை பூமி சுற்றிக்கொண்டே இருக்கும்!...

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

Friday, December 5, 2008

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்யர்களாக இருப்பதேன்?

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்த்த
நன்மை பயக்கு மெனின்.-குரள்

சாமி கும்பிட வைக்கப்பட்ட பாலை தன் மகள் காலால் தவறி தட்டிவிட்டாள், அம்மா, யார் இந்த பாலை கொட்டியது என்று மகளிடம் கேட்டாள். சின்ன பொன்னு பயத்தில் நான் இல்லை என்று சொல்லுகின்றாள். தாயோ கொபம் அடைகின்றாள். என்ன சின்ன வயசிலே பொய்சொல்லுகிறாய் என்று அடிக்கவும் செய்கின்றாள்.

வேலை முடிந்து அப்பா விட்டுக்கு வருகின்றார், வரும்போதே ஹெலோ செல்லம் விளையாடுகின்றாயா விஜய் மாமா கேட்டால் அப்பா இன்னும் வரவில்லை என்று சொல்லிவிடு, என்று சொல்லி குளியல் அரைக்கு சென்றுவிட்டார். குழந்தையும் அவ்வாறே சொல்லிவிடுகின்றது. ஒரு சில குழந்தைகள் அப்பா விட்டில் இல்லை என்று சொல்ல சொன்னார் என்று கூறுவதும் உண்டு.

அலுவலகத்திற்கு போக தாமதமானால் எதோ ஒரு பொய்யான காரணத்தை சொல்லி விடுகின்றோம். நண்பர் ஒருவர் கடனாக 100 ரூபாய் கேட்கின்றார். கொடுக்க மனமில்லாமல் நானும் கடந்தான் வாங்கியுள்ளேன் என்று பொய்யாக கூறுகின்றோம். நண்பர் ஒருவர் உங்கள் காரை ஒருநாள் இரவல் கேட்டால், காரில் ப்ரேக் சரியில்லை என்று சொல்லிவிடுகின்றோம். பொய் என்பது நமக்கும் தெரியும் கேட்ட நண்பர்க்கும் புரியும். அவருக்கு புரியும் என்பது தெரிந்தே பொய் சொல்லுகின்றோம்...

இப்படியே பொய்யாகவே வாழ்க்கையை நகர்த்துகின்றோம். கார் இரவல் கேட்ட நண்பரிடம் காரை கொடுக்க விருப்பம் இல்லை என்று சொன்னால் அவர் வருத்தப்படுவார் என்று நாம் பொய்யர் அவதேன்? நாம் பொய்தான் சொல்லுகின்றோம் என்பதும் அவருக்கும் புரியும் என்பது தெரிந்தே சொல்வதேன்? இப்படியே ஏதோ ஒரு காரணங்களுக்காக பொய்யர்களாவே வாழ்கின்றோம்.. இதற்கு யாரும் விதிவிளக்கு இல்லை என்றே தெரிகின்றது...

மீண்டும் ஒரு முக்கியமான பிரச்சனையுடன் சந்திக்கும்..

ஆ.ஞானசெகரன்