_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, September 28, 2008

வலையில் கசிந்த வண்ணப்படம்!...

வலையில் கசிந்த வண்ணப்படம்!...



http:வலையில் கசிந்த வண்ணப்படம்!...//specials.rediff.com/movies/2008/sep/25sld1.htm

இனிதான இதயம்பெற இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!...

இனிதான இதயம்பெற இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!...

இன்று செப்டம்பர் 28ம் தேதி மாதக்கடைசி ஞாயிறு உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர்களின் வாழ்வில் இதயம் முக்கிய பங்கு பெறுகின்றது. இதயமே சக்திகளை மூளை மற்றும் இதறபாகங்களுக்கும் எடுத்து செல்கின்றது. இப்படி முக்கியமான இதயத்தை நோயின்றி காப்பாற்றவும், இதயநோய் பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்தவும் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் விரிவான செய்திகளை தினமலர் சுட்டியை சுட்டி பார்க்கவும்...



இன்று செப். 28 உலக இருதய தினம் இங்கே அமுக்கி பார்க்கலாம்


சுட்டாமல் செய்தி பார்க்க........


வாழ்க்கை முறை மாற்றத்தால் இருதய நோயை தடுக்கலாம் : இருதய நோயால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். மற்ற நோய்களைப் போல இல்லாமல் இருதய நோயை வாழ்க்கை முறை மாற்றங்களால் பெரிதளவு தடுக்கலாம். இந்தச் செய்தியை உலக மக்களுக்கு அறியச் செய்யும் நோக்கத்துடன் கொண்டாடப்படும் தினம்தான் உலக இருதய தினம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு ( 28ம் தேதி) உலக இருதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இருதய நோயை தடுக்கும் முறைகளை எடுத்துச் சொல்லவும் இந்த தினம் உதவுகிறது. இந்த ஆண்டு உலக இருதய தினத்தின் முதன்மைச் செய்தி என்னவென்றால், "இருதய நோய் ஏற்படுவதற்கான எச்சரிக்கை குறிகளை அறியவும்' என்பதே.


முக்கியமான காரணங்கள்:
1) உயர்ந்த ரத்த அழுத்தம், 2) ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருத்தல், 3) சர்க்கரை வியாதி, 4) சிகரெட் புகைப்பது, 5) உடல் பருமன், 6) உடற்பயிற்சி இல்லாமை, 7) தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், 8) மனஅழுத்தம். இவையாவும்தான் இருதய நோய் வருவதற்கான மிக முக்கியமான காரணங்களாகும்.



இவற்றை கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் இருதய நோயை 85 சதவீதம் தடுக்க முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதில் ஒருவருக்கு எந்தெந்த "ரிஸ்க்' இருப்பது என்று தெரிந்து கொள்வதே இந்த ஆண்டின் இருதய தினத்தின் சிறப்பு அம்சமாகும்


ரிஸ்கைக் குறைக்கும் வழி:
உங்கள் "ரிஸ்க்'கை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள் வருமாறு
1. சிகரெட் புகைப்பவரானால் அதனை விடுவதே முதற்படி ஆகும். சிகரெட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் மட்டும் போதாது. அறவே நிறுத்த வேண்டும்.



2. தினமும் உணவில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.


3. எண்ணெயில் பொறித்த உணவு வகைகள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை (பஜ்ஜி, அப்பளம் போன்றவற்றை) தவிர்க்க வேண்டும்.


4. ரத்தக் கொதிப்பு நோய் இருந்தால் ரத்த அழுத்தம் 140 / 90க்கு கீழ் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


5. ரத்தத்தில் எல்.டி.எல்., கொலஸ்ட் ரால் (கெட்ட கொழுப்பு) 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும்.


6. சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு வெறும் வயிற்றில் 100 மி.கி.,யும், சாப்பிட்ட பின்னர் 140 மி.கி.,க்கு மேலும் இருக்கக் கூடாது.


7. தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது முக்கியம்.


8. இன்றைய உலகில் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வெளிச் சூழ்நிலை மனதை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது முக்கியம். யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் இதற்கு உதவும்.

மற்ற நோய்களைப் போல அல்லாமல் இருதய நோயை பெரிதளவில் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமான ஒன்றாகும்.

மேலும்,.அறிந்துக்கொள்ள.. ..நன்றி வெப்துனியா

1.மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

2.மனநோயின் அறிகுறிகள்!

3.மனநோய் ஏன் உண்டாகிறது?

4.மனநோய்க்கு அடிப்படை என்ன?

Saturday, September 27, 2008

இன்னும் ஓர் மானுடம் வென்றது!........

இன்னும் ஓர் மானுடம் வென்றது!........

ஒரிசாவில் இனக்கலவரம், பெங்களூரில் ஆலயங்களில் கல்லெரிதல், சென்னையில் இரண்டு வயது சிறுவனை கடத்தி கொலை, அகாங்கே வெடிகுண்டு சம்பவம், இனம் மதம் சாதிப்பெயரால்..மனிதன் நடத்திவரும் மிருக செயல்களுக்கு மத்தியில்,.... மானுடம் வென்று வருகின்றது. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதனால்தான். உலகம் கடவுளின் பெயர் சொல்லிக்கொண்டுள்ளது. கடவுள் இருகின்றாரோ இல்லையோ நல்லவர்களை உலகம் கைகுப்பி வரவேற்கின்றது......

மறைந்த நல்ல உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!.........

கார்ட்டூனிஸ்ட் மதன் தம்பி மரணம்-உறுப்புகள் தானம் நன்றி தட்ஸ் தமிழ்

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26, 2008
சென்னை: பிரபல கார்ட்டூன் கலைஞர், திரை விமர்சகர் மதனின் தம்பி முரளி மரணமடைந்தார். அவரது இதயம், ஈரல் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.


பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன். இவர் 2 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகளுடன் ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார். மதனின் 2வது தம்பி முரளி (50). தனியார் டிவி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார். இவரது மனைவி மீனா (42). மகன் அர்ஜூன் (16).

கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்தபோது முரளி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயலிழந்துவிட்டதாக கூறி அவரது மரணத்தை உறுதிபடுத்தினர்.

இதையடுத்து முரளியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்யதனர். டாக்டர் செரியன் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு முரளியின் இதயத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு பேருக்கு சிறுநீரகம் தேவைப்பட்டது.

குஜராத்தில் ஈரல் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்காக அவசரமாக ஈரல் தேவைபட்டது தெரிய வந்தது. ஈரலை பொறுத்த வரை 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். இதையடுத்து குஜராத் டாக்டர்களுடன் சென்னை செரியன் மருத்துவமனை டாக்டர்கள் பேசி முடிவு செய்தனர்.

விமானத்தில் சென்ற ஈரல்:விமான நிலையத்துக்கு செல்ல 30 நிமிடங்களும், அங்கு சோதனைகளுக்கு 30 நிமிடமும் ஆகும் என்பதால் விமான நிலைய அதிகாரிகளுடன் டாக்டர்கள் பேசினர். விமான நிலைய அதிகாரிகள் உதவி செய்வதாக கூறியதை அடுத்து நேற்று காலை 5 மணிக்கு முரளியின் ஈரல், இதயம், சிறுநீரகம் அகற்றப்பட்டு ஐஸ்பெட்டிகளில் தனித்தனியாக வைக்கப்பட்டன.

சென்னையில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான இதயம் மற்றும் சிறுநீரகத்தை டாக்டர்கள் குழுவினர் எடுத்துக் கொண்டு விரைந்தனர். ஈரலை எடுத்துக் கொண்டு டாக்டர்கள் குழுவினர் குஜராத் விரைந்தனர்.

செரியன் மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு 30 நிமிடத்தில் இதயம் பொருத்தப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனைகள் அதிவேகமாக நடந்தன.

இதையடுத்து முரளியின் உடல் நேற்று காலை 9 மணிக்கு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் டாக்டர் தம்பதிகள் தனது மகன் ஹிதேந்திரன் மூளை செயலிழந்து இறந்ததை அடுத்து பெங்களூர் சிறுமிக்கு தனது மகனின் இதயத்தை இரு தினங்களுக்கு முன் தானம் செய்தனர். இந் நிலையில் முரளியின் உறுப்புகளும் தானம் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மனித நேயம் இன்னும் சிறப்பாகவே உள்ளது என்பதை இந்த இரு சம்பவங்களும் நினைவுபடுத்துகின்றன.

Thursday, September 25, 2008

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி

சுட்டது தினமலர்.






திருக்கழுக்குன்றம் விபத்தில் இறந்த டாக்டர் மகன் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய டாக்டர் தம்பதியை அனைவரும் பாராட்டினர்.

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் அசோகன்; இவரது மனைவி புஷ்பாஞ்சலி; இருவரும் டாக்டர்கள். திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் கிளினிக் வைத்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் இதயேந்திரன்(15); செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தான். இளைய மகன் லஷ்மண்(11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 20ம் தேதி மாலை, பெற்றோர் கிளினிக்கில் இருந்தனர். சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். இதயேந்திரன் குளிர்பானம் வாங்க வெளியில் செல்ல முடிவு செய்தான். மோட்டார் சைக்கிளில் செல்ல, கிளினிக்கிலிருந்த அம்மாவிடம் அனுமதி கேட்டான். அவர், அப்பாவிடம் கேட்டுவிட்டு, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும்படி கூறினார். இதயேந்திரன், தந்தையிடம் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றான்.

வீடு திரும்பும் வழியில், சாலையோரம் நின்றிருந்த மீன்பாடி வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயமடைந்த இதயேந்திரன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தான். அவனது பெற்றோர், இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். இதயேந்திரனின் உடல், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. பரிசோதனை முடிந்து, இரவு 8 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று டாக்டர் வீட்டில், அவரது மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்த, நகரின் முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் திரண்டனர். இதயேந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். டாக்டர் வீட்டின் அருகில் வசிக்கும் சிறுவன் அசோகன் வந்ததும், டாக்டர் மனமுடைந்து அழுதார். "உன்னுடைய நண்பன் எல்லாரையும் விட்டுவிட்டு போய்விட்டான். நீங்கள் பெற்றவர்களை தெய்வமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள்' என்றார்.

பின் அவர், நமது நிருபரிடம் கூறியதாவது: இதயேந்திரன் டாக்டருக்கு படிக்க மறுத்துவிட்டான். எனவே, கம்ப்யூட்டர் இன்ஜினியராக்க முடிவு செய்தோம். அவன் இப்போது இல்லை. மனிதனுக்கு மூளை இறந்துவிட்டால் 10 நாட்களில் உயிரிழப்பது நிச்சயம். இடைப்பட்ட நாட்களில், மற்ற உறுப்புகள் உயிரோடு தான் இருக்கும். எங்கள் மகன் இறந்துவிட்டாலும் அவனது உறுப்புகளால் மற்றவர்கள் பிழைக்கட்டும்; அவர்கள் மூலம் எங்கள் பையனும் வாழ்ந்துகொண்டு தான் இருப்பான். அவன் இறந்துவிட்டான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொழிலில் பிசியாக இருந்ததால் அவனை கவனிக்க முடியாமல் இழந்துவிட்டேன். விபத்தில் காயமடைந்ததும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஓடோடி வந்த திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனை டிரைவருக்கு நன்றி. அவர் வந்திருக்காவிட்டால் அங்கேயே இறந்து, மற்றவர்கள் பிழைக்க வாய்ப்பு இருந்திருக்காது. குழந்தைகள், வாகனத்தை திருட்டுத்தனமாக ஓட்டிச் செல்லக்கூடாது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும். இவ்வாறு டாக்டர் அசோகன் கூறினார்.

இதயேந்திரனின் பள்ளி தோழர்கள் அருண், பிரவீன் ஆகியோர் கூறும்போது, ""நல்ல பழக்கவழக்கங்களுக்கு இதயேந்திரனை உதாரணமாகச் சொல்லலாம். யாரிடமும் வம்பு செய்ய மாட்டான். இரக்க குணம் உண்டு. ஏதேனும் தேவை என்று சொன்னால் தனது பணத்தில் வாங்கி கொடுப்பான். படிப்பிலும் திறமையானவன். என்.சி.சி., ஸ்கவுட் செயல்பாடுகளில் விருது வாங்கியுள்ளான்,'' என்றனர். டாக்டர் அசோகன், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த எழில் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி; பெங்களூரில் இன்ஜினியராகப் பணிபுரிந்தவர். அசோகன் இரண்டாவது மகன். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படித்தார்.
இலவச மருத்துவ முகாம்களுக்கு அதிகம் செல்வார். திருக்கழுக்குன்றத்தில் கிளினிக் நடத்திய டாக்டர்கள், கிளினிக்கிற்கு வரமுடியாத நிலையில், மாணவராக இருந்த அசோகனை தங்கள் மருத்துவமனைக்கு வரவழைத்தனர். திருக்கழுக்குன்றத்திற்கு அடிக்கடி சென்ற அசோகன், அங்கு ஏழைகள் அதிகளவில் இருப்பதைக் கண்டார். எனவே, படிப்பு முடித்ததும் அங்கேயே கிளினிக் துவக்கினார்.

அப்பல்லோவில் உறங்கும் உறுப்புகள்: மூளைச் சாவு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்ட இதயேந்திரனின் உடல் உறுப்புகள், அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் வேண்டுகோளின்படி, அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி அபிராமிக்கு, இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. இறந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளையும் அவனது பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கிட்னி, கல்லீரல், எலும்பு மஜ்ஜை ஆகியவை அகற்றப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கண்கள் இரண்டும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டு, சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டன.

கிட்னி, கல்லீரல் உறுப்புகள், தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட உள்ளன. புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எலும்பு மஜ்ஜை பயன்படுத்தப்பட உள்ளது. உறுப்பு தானம் குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ""இதயேந்திரனின் உறுப்புகள் யாருக்குப் பொருத்தப்படுகின்றன என தெரிந்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பிழைத்தது என் மகனால் தான் என்பதை அறிந்து, அவனை புகழ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,'' என கண்ணீர் மல்கக் கூறினர்.

20 கி.மீ., தூரம்; 120 கி.மீ., வேகம்; 12 நிமிடம்: கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திராபுரத்தில் வசிக்கும் தமிழ் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). பிறந்தது முதல் சுட்டியாக, மற்ற குழந்தைகள் போல் இருந்த அபிராமிக்கு, திடீரென மூச்சடைப்பு, கால்வீக்கம், உணவு சாப்பிடுவதில் சிரமம், மயக்கம், மார்புவலி என தொடர் பாதிப்புகள் ஏற்பட்டன. பெற்றோர், அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். நாள்கணக்கில் அலைந்தும் மகளின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன், சென்னை முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து வந்தனர்.

அங்குள்ள டாக்டர்கள், சிறுமிக்கு பல்வேறு உடல் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது சிறுமி அபிராமி, "டைலேட்டர் கார்டியோ மையோபதி' என்ற இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரை உட்கொண்டாலும் பலன் இருக்காது என்பதை சிறுமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் எடுத்துக் கூறினர். இருப்பினும் ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை (எலும்பில் உள்ள செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் முறை), சிறுமிக்கு பலனளிக்குமா என்பது குறித்து டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போதைய நிலையில், அதுவும் சிறுமியின் உயிர் காக்க உதவாது என்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்தனர். கடைசியாக இதய மாற்று சிகிச்சை மட்டுமே இப்பிரச்னையை தீர்க்கும் என்ற தகவலை அபிராமியின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாத உறுப்பை டாக்டர்கள் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், செய்வதறியாது திகைத்தனர். பத்து மாதம் சுமந்து பெற்று ஒன்பது ஆண்டுகள் பாசத்தைக் கொட்டி வளர்த்த தங்கள் மகள் உயிர் பிழைக்க, இறைவனிடம் சிறுமியின் பெற்றோர் வேண்டினர்.

அந்த நேரத்தில் தான், விபத்தில் மூளை செயல்பாடு இழந்த டாக்டர் தம்பதியர் மகன் இதயேந்திரனின் இதயம், சிறுமி அபிராமிக்கு உயிர் கொடுக்க துடித்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. 20 நிமிடங்களுக்குள் இதயம் தனது கைக்கு கிடைத்தால், சிறுமியை மீண்டும் சுட்டிக்குழந்தை ஆக்க முடியும் என்று பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையின் இயக்குனர் செரியன் நம்பிக்கை தெரிவித்தார். இதையடுத்து தான் அந்த இதயம், அப்பல்லோ மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து 20 கி.மீ., தூரத்தை 12 நிமிடத்தில் 120 கி.மீ., வேகத்தில் கடந்து முகப்பேரில் உள்ள பிராண்டியர் லைப் லைன் மருத்துவமனையை வந்தடைந்தது.

டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணிநேரம் சிறுமிக்கு இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போதில் இருந்தே, இதயம் கொடுத்த சிறுவன் இதயேந்திரனையும் அதற்கு பெரிய மனதுடன் சம்மதித்த அவனது பெற்றோர்களான டாக்டர் தம்பதியையும், சிறுமி அபிராமியின் உறவினர்கள், கடவுளாக நினைத்து வணங்கினர்.
இதயம் இடம் மாறியது எப்படி?: இதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்பானது தான். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா போன்ற வெளிநாடுகளில் இந்த சிகிச்சை சர்வசாதாரணம் ஆகிவிட்டது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகச்சிரமம். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தொடர்ந்து 10 நாட்கள் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

அந்த நாட்களில், சிகிச்சை பெற்றுக்கொண்டவருக்கு எலும்பு சோதனை, எக்ஸ்ரே மற்றும் ஈ.சி.ஜி., சோதனைகள், நடப்பதற்கான சோதனை, ரத்த அழுத்த சோதனை, எலக்ட்ரோ கார்டியோகிராம் எனப்படும் இதயத் துடிப்பு சோதனைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். அதன்பிறகே சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளிகள், வீட்டிற்கு அனுப்பப்படுவர். தொடர்ந்து, ஆண்டுக்கு ஒரு முறையாவது அவர்கள் இந்தச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி, நாள்தோறும் இரண்டு வேளை என, வாழ்நாள் முழுவதும் சைக்ளோஸ் போரிக், இமுரான், பிரட்னி சொலோன் ஆகிய மருந்துகளையும் அவர்கள் உட்கொள்ள வேண்டும்.

மாற்று உடலில் இருந்து பெற்ற இதயம் சீராக செயல்படுவதற்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. ஒருவரது உடலில் இருந்து எடுக்கப்படும் இதயம், நான்கு மணி நேரம் வரை செயல்படும். இந்த நான்கு மணி நேரத்திற்குள்ளேயே இதயத்தின் செயல்பாட்டில் மாற்றம் தெரியும். அதனால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்று உடலில் இதயத்தை பொருத்திவிட வேண்டும். ஒரு முறை ஒருவரது உடலில் இருந்து எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்த இதயத்தை, மீண்டும் மற்றவர் உடலில் பொருத்த முடியாது. மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர் உடலில் இதயத்திற்கும், சதைகளுக்கும் இடைவெளி குறைந்துவிடுவது தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் இதய சிகிச்சை நிபுணர்கள்.

சாதனை: கடந்த 1995ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த 24 வயது வாலிபருக்கு டாக்டர் செரியன் இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். அவரிடம் சிகிச்சை செய்துகொண்ட அந்த நபர், இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல் தற்போது உள்ளார். இதேபோல 2000ம் ஆண்டில், இந்தியாவிலேயே முதல் முறையாக 11வயது சிறுவனுக்கு, இதயமாற்று சிகிச்சையை செரியன் செய்து, சாதனைப் படைத்தார். தொடர்ந்து இந்தியாவில் இரண்டாவது முறையாக 9 வயது சிறுமிக்கு அவர் மீண்டும் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளார்.

நன்றி தினமலர்:

சாதி ,மதம், இனத்திற்கு அப்பால் இன்னுமும் மனிதம் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. மாணவன் இதயேந்திரனை இழந்த பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரியபடுத்துவோம்.... இறந்தும் இறவா மாணவன் இதயேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி!........

Wednesday, September 24, 2008

சாகும் உரிமை, அனுமதி யாரை கேட்கவேண்டும்? ...

சாகும் உரிமை, அனுமதி யாரை கேட்கவேண்டும்? ...
சாவு என்பது எதை குறிக்கும்? உயிர் என்பது எதை கண்டு உணரமுடியும்? உயிர் சென்றுவிட்டது என்பது எப்படி உணரமுடியும்? உயிர் உள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இவன் (அல்லது இவள்) இறந்துவிட்டான் என்பதை சட்டம் எப்படி பார்க்கின்றது?

மனிதனுக்கு முக்கிய மூலம் மூளை, மூளைதான் உடலுக்கு எசமான். மூளை செயலிலந்தால் அந்த உடல் இறந்ததாகவும் சொல்லலாம். மூளைக்கு சக்தியை இரத்த அனுக்கள் மூலம் கொண்டுச்செல்வது இதயம், இதயம் செயலிலந்தால் அதனுடன் மூளையும் செயலிலக்கும் அந்த உடல் இறந்ததாக சொல்லலாம். இப்பதான் ஒரு சிக்கல் உள்ளது, 1. மூளை செயலிலந்த நிலையில் உள்ள ஒருவரின் இதயம் நல்ல நிலையில் வேலைச் செய்துக் கொண்டுயிருக்கும் இவரை சட்ட முறையிலும், மருத்துவமுறையிலும் இறந்தவராக சொல்ல முடியவில்லை. 2.மூளை வேலைச் செய்யும் நிலையில் இருக்கும் ஒருவரின் இதயம் செயலிலக்க நேரிட்டால் இவரையும் சட்ட முறையிலும் மாருத்துவ முறையிலும் இறந்தவராக சொல்ல முடியவில்லை.

திடீர் விபத்து காரணமாக (உதாரணம் மின்சாரம் தாக்குதல்) இதயம் நின்றுவிடும். இப்படிப்பட்ட சமயத்தில் வாயில் காற்றை ஊதி இதயத்தை அமுக்கி செயல்படுத்தலாம்(சிவாஜி படத்தில் காட்டியது பொல) . இன்னும் சிக்கலான முறையில் அருவை சிகிச்சை செய்து இதயத்தை இயங்க வைக்கப்படுகின்றது. மேலும் கருவிகள் பொருத்தி செயல்ப்படுத்த முடியும்.
மாற்று இதயம்கூட பொருத்தி இயக்கமுடியும். இப்படி இதயம் செயலிலந்த நிலையில் உள்ளவரை இறந்தவராக கூறமுடியவில்லை. சட்டமும் இதேதான் சொல்லும்.

ஒருவர் மாரடைப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும், அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்படுகின்றது. இப்பொழுது இவர் செயற்கையாக சுவாசிக்கின்றார், இதயம் செயற்கையாக வெலைச்செய்கின்றது. இப்பொழுது இவர் உயிருடன் இருக்கின்றார். இவருக்கு பொருத்தப்பட்ட கருவிகள் இல்லை என்றால் இந்த உடல் செயல்ப்படாது என்பதும் உண்மை. இந்த கருவிகளை எடுத்துவிட்டால் இவரை கொலைச் செய்தாக அர்த்தம் சட்டமும் இதைதான் சொல்கின்றது. மாரடைப்பால் தற்காலிகமாக செயலிலந்த இதயத்தை இயக்கவைக்கும் முயற்சிதான் இந்த கருவிகள். இதில் பலருக்கு வாய்ப்பும் குறைவுதான் இரண்டு மூன்று நாட்களில் சகசநிலை எட்டாத பச்சத்தில் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். இப்பொழுது இந்த உயிர்க்காக்கும் கருவியை எடுப்பதா? வேண்டாமா? எடுத்தால் உயிர் நின்றுவிடும், கருவிகளை வைத்துக்கொண்டு வாழவும் முடியாது. செலவோ மிக மிக அதிகம், சாமானியனுக்கு பொருந்தாது. இந்த நிலையில் உறவினர்களின் ஒப்பம் பேரிலே கருவிகளை எடுத்துவிடுவார்கள். இதுவும் ஒரு கொலைதான் என்றாலும் கருணைக்கொலையாக எடுத்துக்கொல்லப்படுகின்றது..

இன்று (24-09-2008) தினமலரில் வந்த செய்தியை இங்கே கொடுத்துள்ளேன் அமுக்கி பார்க்கலாம் மேலும் கீழே கொடுத்துள்ளேன்

சாகும் உரிமைக்கு சட்ட அனுமதி : கேரள கமிஷன் சிபாரிசு
செப்டம்பர் 24,2008,00:00 IST
திருவனந்தபுரம் : "கருணை கொலைக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்க வேண்டும்; எந்த வித கட்டுப்பாடும் இதில் விதிக்கக்கூடாது!' பல முறை இந்த விஷயம், தேசிய அளவில் ஆலோசிக்கப்பட்டு அரசிடம், சிபாரிசு செய்யப்பட்டும் நிராகரிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில், கேரளாவில், ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிருஷ்ண அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட சட்ட சீர்திருத்த கமிஷன் இப்படி சிபாரிசு செய்துள்ளது. சாகப்போகும் நோயாளிக்கு உயிர் காக்க பொருத்தப்பட்டுள்ள கருவிகளை, நோயாளியின் அனுமதியுடன் அகற்றுவது தான் கருணைக்கொலை. அதுபோல, மருந்துகள் தந்து தற்கொலை செய்ய உதவுவதும் இந்த வகையில் அடங்கும். கருணைக்கொலை, தற்கொலைக்கு உதவுவது ஆகிய இரு விஷயங்கள் பற்றி தேசிய சட்ட கமிஷன் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது. கேரள கமிஷன் ஒரு படி மேலபோய் பரிந்துரை செய்துள்ளது. சாகக்கிடக்கும் ஒரு நோயாளி இனி பிழைக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்தால், அங்கீகரிக்கப்பட்ட மூன்று டாக்டர்களின் ஒப்புதல் கடிதத்தை பெற்று, அந்த நோயாளியை கருணைக் கொலை செய்யலாம் என்பது தான் கமிஷன் பரிந்துரை. கேரள சட்டசபையில் இதை மசோதாவாக தாக்கல் செய்ய சிபாரிசும் செய்துள்ளது கமிஷன். இதன்படி, தாக்கல் செய்யப்படலாம்; தாக்கல் செய்ய அனுமதியும் மறுக்க வாய்ப்புண்டு. "கருணைக்கொலைக்கு தயாராகும் நோயாளியின் நெருங்கிய உறவினர்கள் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். டாக்டர்களுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர்கள் முடிவெடுக்க முடியும்' என்றும் கிருஷ்ணய்யர் கமிஷன் கூறியுள்ளது. தற்கொலை முயற்சியை குற்றம் என்று சொல்லும், இந்திய குற்றச்சட்டம் 309 ம் பிரிவை நீக்க வேண்டும் என்றும் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.


இப்படி சாகும் நிலையில் இருக்கும் நோயாளியை, மரணக் கொடுமையிலிருந்து விடுவிக்க கருணை கொலைச் செய்யலாமா? இதை சட்டத்தில் வழிகொடுப்பதும் சரிதானா? சிங்கபூர் போன்ற நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டுவிட்டனர். இந்தியாவில் இது சாத்தியமா? நமது கலாச்சர பாசம் எந்த அளவிற்கு நம்மிடையே சரிப்படுத்த முடியும்... என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.......... ( பி.கு: இதிலும் அரசியல் தலையிடாமல் இருந்தால் நல்லது)

Tuesday, September 23, 2008

நண்பனின் இட்டு சென்ற மொழிகள்! நான் அறிந்தவையை உங்களுடன்....

நண்பனின் இட்டு சென்ற மொழிகள்! நான் அறிந்தவையை உங்களுடன்....
காணகிடைக்கா, பொன்மொழிகளை தொகுத்து வழங்கிய நண்பர் நாதன் அவர்களுக்கு நன்றிகள்.....
எனனுடன் பணியிலிருக்கும் நண்பருக்கு என் வலைப்பூ பற்றிச்சொல்லி விலாசமும் கொடுத்தேன். என்வலைபூவை படித்துவிட்டு, அவர் பல அறிய மொழிகள் இட்டு சென்றுயுள்ளார். அவற்றின் சிறப்பு நீங்கள் படித்ததும் புரியும். அவருக்கு இந்த பதிவில் நன்றிகள்........ அவற்றை உங்களுக்காக இங்கே நீண்ட பகுதியாக இருக்கும் பொறுமையுடன் படிக்கவும்

செய்!

ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச்
செய்ய வேண்டியது இருந்தால், அதை
இப்போதே செய்ய முடியுமா என்று பார்.

நாளை செய்ய வேண்டியதை இன்றே
செய்ய முடியுமா என்று பார்.

இப்படிச் செய்தால், அறுபது வருட
வாழ்க்கையை, உன்னால் இருபது
வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

--------------------------------------------------------------------------------
முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.- Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.- Martin Luther King Jr.

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.- Dr. David Schwartz
--------------------------------------------------------------------------------

விடாமுயற்சி

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.- Samuel Johnson.

பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.- Abraham Lincoln.

--------------------------------------------------------------------------------வெற்றியாளர்

வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்; அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்; அப்படி எடுத்தமுடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்.- Napoleon Hill.

அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.- George Washington Carver.

வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.- Will Rogers.

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.- George Bernard Shaw.

--------------------------------------------------------------------------------
உயர்வு

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

--------------------------------------------------------------------------------
அறிவு

உன்னை அறிந்தால் - நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!!
- கவிஞர் கண்ணதாசன்.

--------------------------------------------------------------------------------

மனிதர்

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

- மகாகவி சுப்பிரமணிய பாரதி.

--------------------------------------------------------------------------------

வாழ்க்கை

என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜாவுடன் காட்டுக்கு வேட்டையாடச் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா கில்லாடி. கொடிய காட்டுமிருகங்களைக் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் அவர் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

''தாத்தா... கும்மிருட்டாக இருக்கும் காட்டுக்குள் வேட்டையாடப் போகிறீர்களே, உங்களுக்குப் பயமாக இருக்காதா?‘‘ என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒரு முறை கேட்டேன்.

''அடே பையா... வேட்டைக்குப் போவதே அந்த த்ரில்லுக்காகத்தானே!'' சிரித்தார் தாத்தா.

ஆமாம். வேட்டைக்குப் போவதென்பது அவருக்கு ஒரு ஜாலியான பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது பயங்கரமான பிரதேசம். எந்தப் புதரிலிருந்து எந்தக் காட்டுமிருகம் பாயுமோ... எதுவுமே தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடப் போவது திகிலான விஷயம். என்றாலும், ஏன் வேட்டையாடப் போகிறார்கள்?

எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதுமே ஓர் அலாதியான இன்பம். மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ, சிங்கத்தையோ பிடித்து வந்து மரத்தில் கட்டி வைக்கச் சொல்லி அதை அம்பு எய்து கொல்லமுடியும். ஆனால், அதில் என்ன பெரிய சந்தோஷமோ, த்ரில்லோ இருக்கிறது? எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையில் இருந்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவதில்தானே முழுமையான சந்தோஷ மும் திருப்தியும் கிடைக்கும்?

அப்படிப் பார்த்தால் நம் வாழ்க்கையும் ஒரு மாய வேட்டைதானே? எதிர்பாராத நபர்களிட மிருந்து எதிர்பாராத நேரத்தில் சோதனைகள், நெருக்கடிகள் வரும். தாக்குதல்கள் வரும். அதை எதிர்கொள்வதில்தான் சந்தோஷம் இருக்கிறது. 'ஐயோ.. என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்று வான் என்று கனவிலும் நினைக்கவில்லையே! செழிப்பாக ஓடும் என்று நினைத்துத் தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாகப் படுத்துவிட்டதே!‘ என்றெல்லாம் வருத்தப்பட்டுப் புலம்புவதில் அர்த்தம் இல்லை.

வேட்டைக்குப் போகும் யாரும் ''இந்தப் புலி நான் ஏமாந்த நேரம் பார்த்து என் மீது பாய்ந்துவிட்டது. இது நீதியில்லை'‘என்று புலம்பியதுண்டா?

வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்!

- சுவாமி சுகபோதானந்தா.

--------------------------------------------------------------------------------

ஊக்கம்

ஊக்கமூட்டும் சில பழமொழிகள் இங்கே:

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
செய்வன திருந்தச் செய்.
சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
பதறாத காரியம் சிதறாது.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
வாழ்வும் தாழ்வும் சில காலம்.

--------------------------------------------------------------------------------

உதவி

உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!
- சுவாமி விவேகானந்தர்.

சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது. எனக்கு அதிக உதவிகள் கிட்டின. நான் கண்டுகொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள்.
- O. Wayne Rollins.

ஒருவனுக்கு மீனைக் கொடு; அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய். அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு; அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய்.
- Lao Tzu

--------------------------------------------------------------------------------

உழைப்பு = வெற்றி

துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது. நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும். இதுவே உன் உண்மை பலம். மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது. பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட, கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
- சுவாமி விவேகானந்தர்.

--------------------------------------------------------------------------------

நம்பிக்கை

இது நான் சமீபத்தில் படித்து வியந்த ஒரு நிகழ்ச்சி:
தன் சிறு வயதில், வாரியார் சுவாமிகளின் ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், காலை எடுத்து விட ரூ 500 கேட்டார்.

வாரியார் சுவாமிகள், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே இவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த முருகனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று யோசிக்கலானார். காலை , மாலை என்று இருவேளைகளில் 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்தார்.
புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.

--------------------------------------------------------------------------------

வெற்றி-தோல்வி

நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: "வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது."
- W. Clement Stone

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
- Albert Einstein

--------------------------------------------------------------------------------

பயம்

கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

--------------------------------------------------------------------------------

பார்வை

நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.

உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
- Mark Twain.

சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
- Robert Allen.

நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.
- Dale Carnegie

--------------------------------------------------------------------------------

உயரம்

நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?

--------------------------------------------------------------------------------

முயற்சி

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.

--------------------------------------------------------------------------------

வாய்ப்பு

இது நான் சமீபத்தில் படித்த, ஒரு நண்பரின் அனுபவம்: ஒரு நாள் பணி நிமித்தமாக ஒரு மணி நேரம் காரில் காத்திருக்க வேண்டிய நிலை. அப்போது நான் கண்ட காட்சி என் வாழ்க்கையில் திருப்பு முனையாக இமைந்தது.

நான் காத்திருந்த இடத்தின் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பவர், அந்த குப்பையைக் கிளறி அவருக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துச் சென்றார்.பின் சிறிது நேரம் கழித்து மற்றொரு பழைய பொருள் சேகரிப்பவர் வந்து அப்படியே செய்தார். அது போல் அந்த ஒரு மணி நேரத்தில் ஆறு நபர்கள் வந்து, அந்த குப்பைத் தொட்டியைக் கிளறி தேவையானது கிடைக்க, நம்பிக்கையோடு அடுத்த இடம் சென்றனர்.

வாழ்க்கையில் மிகவும் தோல்விகளைச் சந்தித்து எதிர்காலம் கேள்விக்குறி என்ற நிலையில் அப்போது இருந்தேன். ஆனால் ஒரே ஒரு குப்பைத் தொட்டியில் ஆறு பேருக்குப் பலன் கிடைக்கும் போது, இந்த பரந்த உலகில் வாழ்க்கையில் முன்னேற எத்தனையோ நேர்மையான, நிலையானஒளிமயமான வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து, அதன் பிறகு மனதில் உறுதியோடு செயல்பட்டேன்.

--------------------------------------------------------------------------------

எண்ணம், சொல், செயல்

நமது சொல் அல்லது செயலுக்கு மூல காரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ, அல்லது எதையும் செய்யும் முன்போ, அதற்கான உந்துததல், முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

உங்கள் எண்ணம் பண் பட்டு இருந்தால், உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால், உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண் பட்டுவிடும். இதனால், உங்கள் எண்ணங்களின் மேல் அதீதக் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாதது.

--------------------------------------------------------------------------------

வழி

ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத் தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தெவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக் கூடாது. அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது; எப்போது மலர்களைப் பறிப்பது?

நன்றி.
திருவாளர் நாதன்

Saturday, September 20, 2008

வாங்க! வாங்க! சாப்பிடலாம்....

வாங்க! வாங்க! சாப்பிடலாம்....


என்ன சாப்பிடுரீங்க! அசைவமா? சைவமா? என்ன இறைச்சியை பார்த்ததும் முகம் சுழிக்கிரிங்க, சாப்பிடதிற்கு முன் இதகேழுங்க, ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் என்ன சொல்லுராங்ன்னா,.....

காய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்?
"முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு விட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மூளை சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது"என, ஆக்ஸ்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:"பி12" விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீன், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. "பி12" விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை "ஸ்கேன்" செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

அவர்கள் அப்படிதாங்க சொல்லுராங்க நீங்களே சொல்லுங்க, இயற்கையிலே மனிதனுக்கு இறைச்சி சாப்பிட்டால் செறிமானமாகும் தகுதி உள்ளது. அப்படியிருந்தும் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்லுகின்றனர். ஓ உயிர்களை கொல்லகூடாது என்பதனாலா! என்னங்க தாவரங்களுக்கும் உயிர் இருக்குதே? ம்ம்ம் நீங்க சொல்லுறது புரியுது, தாவரத்தை வெட்டினாலும் வளரும் என்பது, அப்படியினா வேரோட புடுங்கி சாப்பிடும்போது உயிரைப்பற்றி கவலையில்லையா? இன்னும் கொஞ்சம் யோசிச்சி பார்க்கலாமே! ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் என்ன சொல்லுகின்றார்கள்,........

அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து
"சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். "பி12" வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.இவற்றை சாப்பிடாத வர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.குடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை

இந்த விஞ்ஞானிகள் அசைவம் தவிர்ப்பது ஆபத்து என்று கூறுகின்றார்கள். கறி சாப்பிடுவதால் என்னதான் உங்களுக்கு பிரச்சனை, பழக்கமில்லை என்று சொல்லுகின்றீர்களா? இப்பயெல்லாம் சைவர்கள் எல்லாம் முட்டை சாப்பிடுகின்றார்கள். முட்டைகுள்ள முழுகோழியே இருக்குதுங்க! என்ன சொல்லுரிங்க சதையை தின்று சைதையை வளர்ப்பதைவிட சாவதே மேல் என்று பட்டினத்தார் போல கூறுகின்றீர்களா! ஆமங்க இரத்தமும் சதையும் கடிச்சி சாப்பிடனும் என்று நினைத்து பார்த்தால் சாப்பிடமுடியுமா? என்னங்க காரட்டை சாப்பிடும்போது அய்யோ! என்று கத்தினால் சாப்பிடமுடியுமா? காரட்டுக்கும் உயிர் இருக்குங்க, ஊட்டி கொடைக்காணல் போனிங்கினா இலையோட காரட் கிடைக்கும் சிலர் அப்படியே கடிச்சி சாப்பிடிகின்றார்கள். உயிரோட காரட் தலையை பிடிச்சி சாப்பிடுவாதாக நினைத்தால் சாப்பிடமுடியுமாங்க? எல்லமே ஒரு உணவு வகைதாங்க,... இப்ப எனக்கு கண்ணதாசன் சொன்னது ஞாபகம் வருதுங்க, அவர் அரங்கமும் அந்தரங்கமும் என்ற நூலில் "கறி சாப்பிட வந்த பிறகு அது என்ன ஆட்டுகறி மாட்டுக்கறி? அடுப்பு கரியும் சேர்த்து சாப்பிடவேண்டியதுதானே என்று கூறுகின்றார். கறியை பொருத்து மனிதன் தரம் பிரிப்பதும் உண்டுங்க. ஏழைகள், தலித்துகள் சாப்பிடுவது மாட்டு கறி என்று பிரித்து பார்க்கின்றனர். (தற்ப்போது மாட்டுக்கறிக்கும் கிராக்கி அதிகம்)

இதுபோல முஸ்லீம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. இந்துக்கள் பசு இறைச்சி சாப்பிடுவதில்லை, இது இவர்களின் இறைநம்பிக்கை. முதுகெலும்பு வானத்தை நோக்கி இருக்கும் எல்லா விலங்குகளையும் சாப்பிடலாம் என்பது சீனர்களின் பழக்கம். சீனர்கள் இறைச்சி மட்டுமில்லைங்க காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்வார்கள். சீனர் காய்கறிகள் 365 வகைக்கு மேல் உள்ளதாக கூறுவார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு காய் என்றால் வருடம் ஓடிவிடும். இவர்கள் காய்களில் மருத்துவ குணம் நிறைய உள்ளதுங்க.

இப்பபாருங்க விலங்குகளை உணவுப் பழக்கத்தை வைத்து தாவரஉண்ணி, விலங்குண்ணி, அனைத்துண்ணி என்று மூன்று வைகையாக பிரிக்கின்றோம். நாம அனைத்துண்ணி வகையை சார்ந்தவங்க,.... தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணுகின்றோம். இவற்றிக்கு நம்முடல் ஏற்றவகையாக உள்ளது. தாவரங்களில் காய்கள், பழங்கள். கீரைவகைகள், மற்றும் கிழங்கு வகைகள், பருப்பு வகைகள் அனைத்தும் சாப்பிடுகின்றோம். மாமிசத்தில் மீன் இறைச்சி சாப்பிடுகின்றோம். இந்த வகை உணவுகளில் வைட்டமின்கள் நேரடியாக நமக்கு கிடைக்கின்றது. மாமிச உணவுகளில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது. சைவ உணவு சாப்பிடுவதால் மனிதனுக்கு தேவையான அனைத்து சக்தியும் பெற்றுவிட முடிவதில்லை, மாமிச உணவில் மனிதன் சக்தியிழந்த திசுக்களுக்கு சக்தி கிடைப்பதாக அறிவியல் சொல்லுதுங்க.

மனிதன் இறைச்சிக்காக பயன்படுத்தும் விலங்குகள் பொதுவாக தாவரயுண்ணி வகைச் சார்ந்ததாக இருக்கும், இதனால் தாவரச்சத்தும் சேர்ந்தே கிடைக்குதுங்க. மாடு ஆடு போன்றவை தாவரயுண்ணிகள். அதுபோல நாய், பூனை மற்றும் காட்டு விலங்குகளை சாப்பிடுவதில்லை இவைகள் அனைத்துண்ணிகள். (ஆனால் நாகலாந்தில் நாய் இறைச்சி சாப்பிடுகின்றனர், பூனையும் சிலர் சாப்பிடுகின்றனர்) . காகம், பருந்து, கழகு போன்ற அனைத்துண்ணி சார்ந்த பறவைகளையும் மனிதன் சாப்பிடுவதில்லை. பொதுவாக அனைத்துண்ணி வகை விலங்குகளை சாப்பிடுதல் உடலுக்கு கெடுதல் தரும்முங்க,...

சிலர் எலியை சாப்பிடுகின்றனர், இவ்வாறு சாப்பிடும் எலிகள் தாவரங்களை உண்பதாக இருக்கும், நெல்களை உண்டு வாழும் வயல் எலிகளை சாப்பிடுவார்கள்,

முட்டையில் புரொட்டின் அதிகம் உள்ளதுங்க, தற்ப்பொது சைவ விரும்பிகள் பலர் முட்டை உண்கின்றனர். சிலர் பச்சை (வேகவைக்காத) முட்டையை குடிப்பதும் உண்டு. இதில் அரவேக்காடு முட்டையை சாப்பிடுவதை மிகசிறப்பாக சொல்லுகின்றார்கள். முட்டையை சமைக்கும்பொது மஞ்சள் சேர்ப்பது நல்லதுங்கோ. அதேபோல் மாமிசத்தில் மிளகு சேர்ப்பதும் மிக நல்லதுங்க. (ஒரு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி... மிளகு ஒரு விஷ முரிவு..... )

சில சைவ விரும்பிகள் பூண்டு சாப்பிடுவதில்லை. பூண்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் காமத்தை தூண்டும் என்று சாப்பிடுவதில்லை, மாமிசத்தில் பூண்டு சேர்த்து சமைப்பதால் சுவைகூடும்.

மேலை நாடுகளில் கொழுத்த மாட்டை கொன்று பூமியில் புதைத்து குறிப்பிட்ட நாளில் அதில் வளரும் புழுவை வறுத்து சாப்பிடுகின்றார்கள்.

சில கிராமங்களில் ஈசலை வறுத்து சாப்பிடுகின்றனர். மின்மினி பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் மாலைக்கண் நோய் சரியாகும் என்பதும் நம்பிகைங்க.

ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் உயிர் மீன் வாயில் மருந்து வைத்து மனிதன் தொண்டை வழிவிடுவதால், ஆஸ்துமா குனமாகின்றது என்று பலர் சென்று வருகின்றனர்.
ஜப்பானியர்கள் வேகவைக்காத ஒருவகை மீன், கிழிஞ்சல்கள் உண்கின்றார்கள். இந்தியர்களும் சிலர் வேகவைக்காத கிழிஞ்சல்களை உண்கின்றனர்.

உணவு பொருள்களில் கால்சியம் அதிக படுத்துவது என்பது, இறந்த விலங்கு எலும்பு துகள் சேர்ப்பதுதான்.

என்னங்க இன்னும் என்ன யோசிக்கிரிங்க,.... உணவு வட்டம் என்பது இயற்கையானதுங்கோ, இறைச்சி சாப்பிட்டால் நம்முடல் ஏற்றுகொள்ளும் பொழுதும் மெலும் வைட்டமின் சக்திகள் நேரடியாக நம்முடல் திசுக்கு கிடைக்கும்பொதும் என்னங்க யோசனை.. வாங்க சாப்பிடலாம். சைவ உணவுக்கு தனி சிறப்போ அல்லது அசைவ உணவுக்கு தனி சிறப்போ இல்லைங்கோ! உங்களுக்கு எது சாப்பிட முடியுமோ! எது தேவையோ! ரொம்பவும் யோசிகாமல் சாப்பிடுங்க... கொண்றால் பாவம் தின்றால் போச்சி! என்பதும் உண்மைதாங்க.. வாங்க சாப்பிடலாம்.. மனிதன் எல்லொரும் சைவம் சாப்பிட ஆரம்பித்தால் இயற்கையில் உணவு பற்றாகுறையும், மனிதனுக்கு சக்திப் பற்றாகுறையும்தான் வரும். ஆடு, மாடு, மான் எல்லாம் மாமிசம் உண்டால் என்ன நிலை ஏற்படுமோ அதுதான் மனிதன் எல்லோரும் சைவம் மட்டும் உண்பதால் வரும். ரொம்ப யோசிக்காதீங்க எது உங்களால் முடியுமோ அதை சாப்பிடுங்க! பலியிடுதல் போன்று உயிர் வதைப்பை தவிற்கலாம்... இறைச்சிகாக கொல்வதை பற்றி அதிகம் யொசிக்க வேண்டிய அவசியம் இல்லைங்க!....

Monday, September 15, 2008

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு..


அறிஞர் அண்ணா என்று எல்லோராலும் அழைக்கப்படும் சி. என்.அண்ணாதுரையின் 100வது பிறந்தநாள் இன்று(15-09-2008) சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தமிழக அரசும் செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

அறிஞர் அண்ணாவைப்பற்றி மேலும் அறிய கீழெ உள்ள சுட்டியை அமுக்கி பார்க்கவும்....
அறிஞர் அண்ணாவைப்பற்றிய அனைத்து செய்திகள்

அண்ணாவின் பொன்மொழிகள்
=>கடமை கன்னியம் கட்டுப்பாடு
=>எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
=>மறப்பொம் மன்னிப்போம்
=>தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
=>மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

அறிஞர் பட்டம் பாரதிதாசனால் அண்ணாவிற்க்கு கொடுக்கப்பட்டது.
1967 வரை காங்கிரஸ்சின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழகம் அண்ணாவின் ஈர்ப்பால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை பிடித்தது, அதற்கு பின்னர்
இன்றுவரை சுமார் 37 வருடங்கள் திராவிட இயக்கத்தின் வழிவந்த கட்சிகளே உறுதியாகத் தமிழகத்தை ஆண்டுவருவதும், அவைகள் அனைத்துமே அண்ணாதுரையையே முன்நிறுத்தி அரசியல் நடத்திவருவதும், அண்ணாவின் வழிமுறைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

1967 தேர்தல் வாக்குறுதியாக படி அரிசி ஒரு ரூபாய் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அண்ணாவால் நிறைவேற்ற முடியவில்லை. அவர் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் புற்று நோயின் காரணமாக பிப்ரவரி 3-1969 ல் காலமாணார்.

இன்று அண்ணாவின் 100 வது பிறந்தநாள், அதன் நினைவாக முதல்வர் டாக்டர் கலைஞர் இன்று கிலோ அரிசி ஒரு ரூபாய் என்று ரேசன் கடைகளில் வாழங்கப்படுகிறது.


Saturday, September 13, 2008

கானல்நீர் தேடும் தாகம்!....

கானல்நீர் தேடும் தாகம்!....

சாமியில்லை பூதம்மில்லை என்று சுற்றிவந்தவன், கல்யாணத்துக்கு பிறகு கோவில் கோவிலா போகிறான்,......
சாமிமேல கல்லெரிந்தவன் இப்போ காலை மாலை நெற்றியில் விபூதியுடன் பூஜை பன்னுகின்றான்,......
இவன் மட்டும் பகுத்தறிவு சொல்லுவான், இவன் மனைவி பிள்ளைகள் விரதம் மற்றும் பூஜைகள்தான்,...

நித்தம் பூஜை செய்வான், இப்போ கடவுளை வணங்குவன் முட்டாள் என்று சொல்லுகின்றான்,.....
வருடா வருடம் பாதயாத்திரை செல்வான் இன்றோ, சாமியார்கள் எல்லாம் ஏமாற்றுவாதிகள் என்று கோவில் செல்வதேயில்லை,.....

=>இப்படி பல செய்திகள் நம்மிடையே வந்தவண்ணம் இருக்கும், இதற்கு காரணம் என்ன? மனோதியல் அடிப்படையில் என்ன சொல்கின்றது?
ஆன்மீகம் நாத்திகத்தை வென்றதா? நாத்தீகம் ஆன்மீகத்தை வென்றதா?

மகுடி வித்தைகாரன் என்றால் உடன் ஞாபகம் வருவது கவுண்டமணி காமடிதான். திருச்சியில் மகுடி வித்தைக்காரன் அதிகம் தற்போது போலீஸ் அதிகாரிகளின் தயவால் இல்லை என்றே நினைக்கின்றேன். நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சமயம். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தையல் கடைக்காரர் என்னை திருச்சி அல்லிமால் தெருவில் உள்ள கடையில் நூல் மற்றும் இதரப்பொருள்கள் வாங்கிவர சொன்னார். அங்கே (அல்லிமால் தெருவில்) சிலர் கூட்டமாக இருந்தனர். எனக்கு தெரு வித்தைகாரர்களின் தந்திரங்கள் அறிய ஆவல் அதிகம் எனவே நானும் சென்று பார்த்தேன். ஒருவன் பாம்பை காட்டி வேடிக்கை காட்டினான், ஒருவன் ஒரு துணி மூட்டைபோல கட்டி வைக்கப்பட்டுருந்தான். பாம்பாட்டி எல்லோரையும் கையை தலகீழாக நீட்டச்சொன்னான். எல்லோரும் நீட்டினார்கள், நானும் நீட்டினேன். எல்லாருடைய கையையும் தொட்டு சென்றான் பின் எல்லோரையும் கையை பார்க்க சொன்னான். சிலர் கையில் மட்டும் கருப்பு மையிருந்தது. இப்பொழுது துணிமுட்டையிலிருந்தவன் யார்க்கையில் மை இருக்கின்றதோ அவர்கள் மட்டும் நிற்கவும் மற்றவர்கள் சென்றுவிடவும் என்றான். என்கையில் மையிருந்தது அதனால் நானும் நின்றேன். என்னைவிட பெரியவர்களும் இருந்தனர். இப்பொழுது அந்த வித்தைகாரன் இந்த மை போகவேண்டும் என்றால் உங்களிடம் உள்ள காசு எல்லாம் வெளியில் எடுக்கவும் என்றான். எல்லோரும் எடுத்தனர் நானும் எடுத்தேன். பிறகு அவன் அப்படி இப்படி பேசி ஒவ்வொருத்தரிடமும் காசை வாங்கிவிட்டு அனுப்பிவிட்டான். என்முறை வந்தது, காசை கேட்டான் நான் கொடுக்க மறுத்தேன். கொடுக்கவில்லை என்றால் சக்கம்மா உன்னை இரத்தம் கக்கி சாகடிப்பாள் என்றான். எனக்கு நம்மிக்கையில்லை இது என் காசு இல்லை நான் போகிறேன் என்றேன். அப்போது துணிமூட்டையில் இருந்தவன் கத்த ஆரபித்தான், ஹீஈஈஈஈ... நீ போனால் உன் தம்பி அங்கே இரத்தம் கக்குவான் என்றான். என்னைப்பற்றி சொல்லுபோது இருந்த என் நம்பிக்கை இப்பொழுது இழக்க ஆரம்பித்தது. இங்கேதான் மூடநம்பிகை வென்றது. நமது சமுதாயம் பந்தம் பாசம் என்று பின்னப்பட்டது... இதனால்தான் மூடநம்பிகையும், கடவுளைப்பற்றிய எண்ணமும் வெற்றிப்பெற்றுவிடுகின்றது... மூடநம்பிகையை எதிர்க்க எனனை பனையவைக்க தயாராயிருந்த என்னால் என் பந்தத்தை பனையம் வைக்கமுடியவில்லை. இப்படிதான் சில பகுத்தறிவாதிகள் நாளாடைவில் என் மனைவியின் பாசத்தால் கோவிலுக்கு சென்றேன், தற்போது நானும் பக்தனானேன் என்பார்கள்.




இதுபொல 10-09-2008 ஆனந்த விகடனில் பெரியாருடன் வாழ்ந்து அவர் கொள்கையில் ஈர்க்கப்பட்ட பெருமாள் தற்பொது தினம் இரண்டு வேலை பூஜை செய்து நெற்றியில் விபூதியுடன் வாழ்கின்றார். இவர் சொல்வதை அருகில் உள்ள படத்தை அமுக்கி காணலாம்,.. நாம் நல்லதை பண்ணணும் அதை பெரியார் பேரால பண்ணினா என்னா... பிள்ளையார் பேரால பண்ணினா என்னா?.... என்று சொல்லும் பெருமாள்...


எங்கள் ஊரில் மூக்குப்பொடிக்காரர் என்று எல்லோராலும் சொல்லும் ஒருவர்.(ஏனெனில் மூக்குப்பொடி அதிகம் போடுவார்) முற்போக்கு கருத்துகளை சொல்லுவார்.. பெளடர் டப்பா தகரத்தில் விசில், காற்றாடி போன்றவற்றை செய்துகொண்டு எல்லா ஊர்களுக்கும் சென்று வருவார். நல்ல மனிதர் சமூக அக்கறையுள்ளவர் ஆனால் மனநிலையில் குழம்பியுள்ளார்.. இவரிடம் குழப்பம்தான் என்ன? நாத்திகத்திற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் நடந்த போராட்டத்தில் வெற்றி பெராமலே இவரின் இந்த நிலை!,.. மேலெயுள்ள பெருமாள் அவர்கள் மனதளவில் வெற்றிப் பெற்றதால்தான், இன்று அவர் அந்த நிலையில் உள்ளார்,......

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கவியரசு கண்ணதாசன், போலி மதவாதிகளையும் போலி சாமியார்களையும் கண்ட வெறுப்பில் கிருஸ்துவ பாதியாரிடம் சென்று நான் மதம்மாற வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு அந்த பாதிரியார் ஒரு மதம் பிடிக்கவில்லை என்பதற்காக மதம் மாறவேண்டாம் உங்கள் மனதிற்கு பிடித்தால் மட்டுமே மாறுங்கள். உங்கள் மனசாந்திக்காக பைபிளை படிங்கள் என்று ஒரு பைபிள் கண்ணதாசனிடம் கொடுத்தாராம். அந்த பைபிளை படித்துதான் ஏசு காவியம் எழுதினார். அப்பொழுது எனக்கு தெரிந்த கவிஞர் ஒருவர், கவிஞனுக்கு தன் முடிவுகாலத்தை கனிக்க முடியும் அவ்வாறு கண்ணதாசன் தன்னை கனித்துவிட்டதால்தான் ஏசு காவியம் எழுதுகின்றார் என்று கூறினார் ( அதேபோல ஏசு காவியம் முடித்ததும் இயற்கை எய்தினார்) மேற்கண்ட செய்தி செவிவழி கேட்டதே.....

தாழ்த்தப்பட்ட சமுகத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்டவர்களுக்காக அரும்பாடுப்பட்ட டாக்டர் அம்பேத்கார், தான் சார்ந்த இந்துமதத்தில் தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக பார்க்கின்றது என்று, நான் ஒரு இந்துவாக சாக விரும்பவில்லை இந்திய சட்டத்தில் மதம் சாராமைக்கு பிரிவு இல்லை என்பதால் அவர் பெரியாரில் அலோசனையின் பேரில் புத்த மதத்தில் சேர்ந்தார்,....

மரணத்தின் விளிம்பில் உள்ள மனிதன் தளர்ந்த நிலையில் மனதை அமைதிப்படுத்த நம்பியோ! நம்பாமலோ! கடவுளின் தஞ்சம் புகுந்துவிடுவது இயற்கையே! கொடூர கொலையாலி ஆட்டோ சங்கர் தனது மரணத் தண்டனையின் போது கையில் பைபிள் வைத்திருந்தானாம்..

இப்படி மனிதன் பல்வேறு சூழ்நிலைகளில் தன்னை மாற்றி அமைத்துக்கொள்வது தன்னை சார்ந்தவர்களுக்காகவும், தனது மனம் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தினாலுமே!......

Thursday, September 11, 2008

பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி

பிரபஞ்ச ரகசியங்களை அறிய விஞ்ஞானிகள் நடத்திய சோதனை வெற்றி நன்றி தினமலர்

முந்தய பதிவுஅதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி. இந்தப் பிரபஞ்சத்தை ஆக்கியுள்ள கூறுகளிற்கான அடிப்படைக் கூறை (கடவுளின் துகளை) கண்டறிய என்று, பிரான்ஸ் - சுவிஸ் எல்லைகளூடு நிலத்தின் கீழே உருவாக்கப்பட்டுள்ள 27 கிலோமீற்றர்கள் பரிதியுடைய வட்டக் குழாய் வடிவ Large Hadron Collider இல் திரவ நிலைக் கீலியத்தையும் பல ஆயிரம் மின்காந்தங்களையும் பயன்படுத்தி ஆழமான விண்வெளியில் உணரப்படும் வெப்பநிலைக்கும் குறைவான வெப்பநிலையை உருவாக்கி இருக்கின்றனர்
ஜெனிவா: உலகின் மிகப்பெரிய "பிக்-பேங்' (பெரிய வெடிப்பு) இயற்பியல் பரிசோதனை பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் வெற்றிகரமாக நடந்துள்ளது.

பிரபஞ்சம் தோன்றிய போது, ஒரு மாபெரும் வெடிப்பு நடந்ததாகவும் அந்த வெடிப்பின் போது சிதறிய துகள்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் உருவாகின என்பது அறிவியல் கருத்து. இதை பரிசோதித்துப் பார்க்க நீண்ட காலமாக முயற்சி நடந்த போதும், விஞ்ஞானிகள், நேற்று சோதனையை வெற்றிகரமாக நடத்தினர். "கடவுளுக்கு' இணையான ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது என்றால் - அது எது என்பதையும் விளக்கம் பெற விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். "ஹிக்ஸ் பாசன்' எனும் துகளை விஞ்ஞானிகள் "கடவுள் துகள்' என்று அழைக்கின்றனர்.

முதன்முதலில் பிரபஞ்சம் தோன்றிய போது, நடந்த பெரிய வெடிப்பின் போது (பிக்-பேங்) இந்த துகள் 25 வினாடிகள் மட்டுமே வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பின் இது பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. தற்போது மீண்டும் செயற்கையாக "பிக்-பேங்' நடத்துவதன் மூலம் அந்த "கடவுள் துகளை' கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் காத்திருக்கின்றனர். நேற்று துவங்கிய இந்த பரிசோதனை முடிவை உடனே தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் கூட ஆகலாம். அப்போது பிரபஞ்சம் தோன்றியது குறித்து இதுவரை பதில் கிடைக்காத சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் .

கடந்த 30 ஆண்டுகளாக இதுகுறித்து ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், கடந்த 2003ம் ஆண்டு கட்டுமானப் பணியைத் துவங்கினர். உலகம் முழுவதிலும் இருந்து ஒன்பதாயிரம் இயற்பியல் விஞ் ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சோதனைக்காக சுவிட்சர் லாந்து - பிரான்ஸ் எல்லை அருகே "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (மிகப்பெரிய ஹாட்ரான் துகள் மோதல் கருவி) எனும் பெரிய கருவியை ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தை(செர்ன்) சேர்ந்த விஞ்ஞானிகள் லின் இவான்ஸ் என்பவர் தலைமையில் நிர்மாணித்தனர்.

இதற்கான செலவு 900 கோடி டாலர். வட்ட வடிவமான 27 கி.மீ., நீளம் கொண்ட சுரங்கம் போன்ற பாதையுடன் கூடியது. இந்த சுரங்க வளையத்துக்குள் அணுவின் ஒரு பகுதியான புரோட்டான் கற்றைகளை பெரிய வெடிப்புக்காகச் செலுத்தினர். இந்திய நேரப்படி, மதியம் 1 மணி 5 நிமிடத்துக்கு பரிசோதனை துவங்கியது. 1 மணி 56 நிமிடங்களுக்கு சோதனை வெற்றிகரமாக நிகழ்ந்ததற்கான புள்ளிகள் "செர்ன்' மைய கம்ப்யூட்டர் திரையில் தோன்றியது. இதனால் உற்சாகம் அடைந்த விஞ்ஞானிகள், "ஷாம்ப் பெய்ன்' பாட்டில்களைத் திறந்து வெற்றியைக் கொண்டாடினர்.

தற்போது, இடமிருந்து வலமாக துகள்கள் சுரங்க வளையத்துக்குள் வினாடிக்கு 11 ஆயிரம் தடவை சென்று வரும்படி புரோட்டான் துகள் கற்றைகளை அனுப்பியுள்ளனர். அடுத்த கட்டமாக வலமிருந்து இடமாக துகள்களை அனுப்பும் போது தான், அந்த "பெரிய வெடிப்பு' நிகழும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். அப்போது கோடிக்கணக்கில் வோல்ட் மின்சார சக்தி வெப்பம் உருவாகி, அதில் கிடைக்கும் துகள் தான் இத்தனை நாள் காத்திருக்கும் கேள்விக்குத் தகவல் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, பிரபஞ்சம் உருவான பெரிய வெடிப்புக் கோளம் ஒரு குறுகிய நேரத்துக்கு உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், பால்வீதி, கிரகங்கள் என நாம் அறிந்தவை வெறும் 4 சதவீதம் மட்டுமே. மீதம் உள்ளவற்றில் 73 சதவீதம் "அறியப்படாத சக்தியாகவும்' (டார்க் எனர்ஜி), 23 சதவீதம் அறியப் படாத பருப்பொருளாகவும் (டார்க் மேட்டர்) உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இது போன்ற மர்மங்கள் விலகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். "பிக்-பேங்' நிகழ்ந்தவுடன் அடுத்த கணத்தில் என்ன நடந்தது? புரோட்டான்கள் அழிந்து "உயிர்க் குழம்பு' எவ்வாறு உருவானது? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண உள்ளனர்.

விஞ்ஞானிகள் எதிர்ப்பு: இந்த ஆய்வு காரணமாக உலகமே கூட அழிந்து போகலாம் என சில விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வாறு செயற்கை மோதல்களை நிகழ்த்துவதால், 'பிளாக் ஹோல்' எனும் கருந்துகள் உருவாகி பூமி உட்பட கிரகங்கள், சூரியன் அனைத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும் என்றனர். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த ஆய்வுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வைக் கண்டறிய நடந்த முயற்சியில் வெற்றி பெற்ற இயற்பியல் விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

பயம் வேண்டாம்: "பிக் -பேங்' பற்றிய பயம் தேவையற் றது என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்த செர்ன் தளத்துக்கு தானே சென்றுள்ளதாகக் கூறிய கலாம், "இந்த ஆய்வால் எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இது போன்ற பரிசோதனைகள் அவசியம்' என்றார்.

ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் உட்பட உலகின் முன்னணி இயற்பியல் விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை ஆதரித்துள்ளனர். இந்த புரோட்டான் துகள் கதிர்கள் அதிக திறனுடன் இருக்கும் போது, அதன் மீதான கட்டுப்பாட்டை விஞ்ஞானிகள் இழப்பதால் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு ஏற்பட முடியும். ஆனால், அப்போதும் அந்த கருவிக் கும், சுரங்கப் பாதைக்கும், சுற்றியுள்ள பாறைகளுக்கும் மட்டுமே பாதிப்பு ஏற்படும். உலகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தனர். முதற்கட்ட ஆய்வுகள் நேற்று நடந் தன. இந்த ஆய்வு 2009ம் ஆண்டுவாக் கில் தான் உச்சகட்டத்தை அடையும். அப்போது தான் தேவையான தகவல் களை முழுமை யாகப் பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கும் பெருமை: உலகை அதிரச்செய்த இச்சோதனை நடந்த "லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (எல்.எச்.சி.,) கருவியை உருவாக்குவதில் இந்தியா சார்பிலும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டன. இதன் கட்டமைப்பில் இந்தூரில் உள்ள "ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்டு டெக்னாலஜி' பங்களித்துள்ளது. "மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச்,' "டிராம்பே பாபா அணுசக்தி ஆய்வுமையம்,' பனாரஸ் இந்து பல்கலை' போன்றவையும் இந்த ஆய்வுப்பணிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு உதவியுள்ளன. இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தியா சார்பிலும் 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பீதி: "பிக்-பேங்' சோதனையால் பேரழிவு ஏற்படலாம் என இந்தியாவின் சில பகுதிகளில் அச்சம் நிலவியது. மேற்குவங்கத்தில் சிலிகுரி நகரில் சூரியனை சுற்றி செயற்கை வட்டம் தெரிந்ததால் மக்கள் மத்தியில் பீதி நிலவியது. இதனால், பலரும் வீட்டுக்குள் பதுங்கிவிட்டதால், சாலைகள் வெறிச்சோடின. சூரிய ஒளி பனிப்படலத்தின் இடையே ஊடுருவுவதால் தான் இத்தகைய வட்டம் உருவானதாக கோல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் துவாரி தெரிவித்தார். "இது வழக்கமான நிகழ்வே, இது குறித்து அச்சமடைய அவசியமில்லை' என்றார். ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள மக்கள் "பிக்-பேங்' நிகழ்வை ஒட்டி கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். "இந்த சோதனையால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா என தொடர்ந்து விசாரித்ததாக' கோளரங்க இயக்குனர் சுபந்து பட்நாயக் தெரிவித்தார்.

Tuesday, September 9, 2008

ஆஆவியாஆஆஆஆஆ!... ஆவிகள் பற்றிய மனிதன் நம்பிக்கை

ஆஆவியாஆஆஆஆஆ!...ஆவிகள் பற்றிய மனிதன் நம்பிக்கை

நான் படித்துக்கொண்டிருந்த காலங்கள், என் தங்கையும் பக்கத்துவீட்டு பெண்களும் விளையாடிக்கொண்டிருந்தனர். நானும் மெதுவாக என்ன விளையாடுகின்றார்கள் என்று கவனித்தேன். ஆவியுடன் பேசபோவதாக சொன்னார்கள். தரையில் A B C D... மற்றும் 1 2 3... எழுதப்பட்டு அதன் நடுவில் ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியை கவுத்து வைக்கப்பட்டிருந்தது. எந்தங்கை மற்றும் இரு பெண்கள் நானும் கலந்துகொண்டேன். அந்த மூடியின் மேல் எல்லோரும் ஒரு விரலை சாதாரணமாக வைத்து நல்ல ஆவியே! இந்த மூடியின் மேல் வா! என்று பலமுறை நம்பிக்கையுடன் சொல்லவேண்டும், அதன்படி எல்லோரும் சொன்னொம். எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் என்ன நடக்கும் என்ற ஆவலுடன் நானும் சொன்னேன். சில நிமிடத்தில் அந்த மூடி நகர ஆரம்பித்தது, எனக்கு யாரோ நகர்த்துவதாக எண்ணம். எந்தங்கையின் தோழி நல்ல ஆவியே நீ யார்? என்று கேட்டது... அந்த மூடி நகர்ந்து R என்ற எழுத்து பின் A J I V... என்று நகர்ந்தது.. ஓஓஓ ராஜிவ்காந்தியா! பின் அவரவர் கேள்விகளை கேட்டலாம் என்று சொல்ல மூடிக்குள் என்ன இருக்கு என்று நகர்த்தி விட்டேன்... மூடியும் நின்றுவிட்டது மூடிக்குள் ஒன்றுமில்லை.......(என் கவனத்தில்: மூடியின் மேல் எல்லொரும் விரல் வைத்ததால் நம்முடைய உடல் வெப்பத்தால் மூடியின்னுள் உள்ள காற்று வெப்பமடைந்து மூடி நகர ஆரப்பித்தது பின் நம் நம்பிக்கையின் மனநிலைக் காரணமாக தேவையான எழுத்துக்கு நமக்கு அறியாமல் நகர்த்தியுள்ளோம். நான் மூடியை ஆர்வகோளாரால் நகர்த்தியதும் வெப்பம் சமநிலையடைந்து மூடி நின்றுவிட்டது)

எல்லா மதநம்பிக்கையிலும் ஆவிகள், பேய்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆவிகளை கெட்ட ஆவிகள், நல்ல ஆவிகள் இருப்பதாகவும் நம்பிக்கை.
இறந்தவர்களின் ஆன்மாதான் அவற்றின் நிலையைப்பொருத்து ஆவிகளாகவும் பேய்களாகவும் வருவதாகவும் ஒரு நம்பிக்கை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பதும் ஒருசாராரின் நம்பிக்கைகள்.

ஒரு மரணம் நிகழ்கிறது. அப்ப உடலை விட்டு உயிர் பிரியும். அப்படி பிரியும் போது அது இன்னொரு இடத்தில் போய் மீண்டும் உருவெடுக்கிறது. இது சில ஆத்மாக்களுக்கு உடனடியாக வாய்ப்பு தரப்படுவதில்லை. சில காலம் கழித்துதான் அந்த வாய்ப்பு தரப்படுகிறது. அதுவரை அந்த ஆன்மா ஆவிகளாக உலகை சுற்றுகிறது என்பதும் ஒருசாரர் கருத்து.

இறந்தவர்களின் சில ஆசைகள் நிறைவேராமல் இருந்தால் அந்த ஆன்மா ஆவிகளாக வருகின்றது. அந்த ஆவிகளின் ஆசையை நிறைவேற்றினால் நம்மை தீங்கு செய்யாது என்று ஆசை சம்மந்தமான பொருள்களை வைத்து பூஜை செய்வது சீனர்களின் நம்மிக்கை.

இப்படிப்பட்ட ஆவிகளை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மந்திரவாதிகள் செய்வினை மற்றும் தீதுகள் செய்வார்கள் என்று நம்பிக்கையும் உண்டு. இப்படி நல்ல ஆவியின் துணையுடன் சிலர் இந்த உலகின் பினி பொக்க போவதாகவும் பலர் இன்னும் இருக்கின்றார்கள். இப்படி சமிபகாலமாக செய்திகளில் வருவது "ஆவி உமா" 11-09-2008 ல் குங்குமம் வாரயிதழில் அவரைப்பற்றிய செய்தி....அருகில் உள்ள படத்தை அமுத்தி பெரிதுப்படுத்தி பார்க்கவும்....



இந்த "ஆவி உமா" காரணம் இருக்குமாயின் பகுத்தறிவாதி பெரியார் ஆவியுடன் பேசமுடியும் என்றும் கூறுகின்றார்.. பகுத்தறிவதிக்கும் சமுக ஆராச்சியாளர்களுக்கும் ஆவிப்பற்றிய கருத்துப் போராட்டம் இருக்கத்தான் செய்கின்றது. ஆவிகள் ஒரு மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாதிகளும், ஆவிகள் நம்மை அடக்கியாளூம் வல்லமையுள்ளது இவற்றை பாக்தி தியானம் முறையில் அறியலாம் என்ற ஒரு பிரிவினரும் காலம்காலமாக சொல்லிய வண்ணம் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட பழக்கங்களை ஆராய்ந்த அறிவியலறிஞர் உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்ட தலைசிறந்த ஓர் அறிவியலறிஞர் ஆவார். ஆதன், ஆதனல்லாதவை, ஆவி ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும், ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்.“இயற்கையை மீறிய ஆற்றல்களை எவரும் எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை; அப்படடிப் பட்டவர்கள் மதநூலின் பக்கங்களிலும், உணர்ச்சிகளை வணிகமாக்கும் செயதித்தாள்களின் பக்கங்களிலுமே இருந்து வருகிறார்கள்” எனகிறார் கோவூர்.நன்றி தமிழ்நம்பி

ஒருமுறை எங்கள் கிராமத்தில்யுள்ள ஆலயத்திற்க்கு ஜேர்மனிலிருந்து ஒரு பாதிரியார் வந்திருந்தார். இவர் சக்திவாய்ந்தவர் என்றும், இவர் ஜெபம் செய்தால் நோய் மற்றும் சிரமங்கள் எல்லாம் தீரும் என்றும், பேய் கெட்ட ஆவிகளை விரட்டி விடுவார் என்றும் எங்கள் கிராமத்தில் எல்லொரும் அவரிடம் ஜெபம் செய்ய சென்றனர். நானும் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் ஆசையில் வரிசையில் நின்றேன். அந்த பாதிரியார் ஒவ்வொருவராக அவர்கள் தலையில் கைவைத்து ஜேபம் செய்தார். அப்படி ஜேபம் செய்யும்போது அவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள், இப்பொது எல்லா பினி பிசாசுகள் சென்றுவிட்டதாக அவர்களும் நம்பி மகிழ்ந்தனர். என்முறை வந்தது என்தலைமேல் கைவைத்து ஜெபம் செய்தார் ஒன்றும் நடக்கவில்லை அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். உனக்கு நம்பிக்கையில்லை மீண்டு நன்றாக ஜெபம் செய்துவிட்டு வா என்று அருகிலிருந்த அவர் உதவியாளர் சொன்னார். நான் மறுபடியும் செல்லவில்லை

சிங்கபூர் ஒலி 96.8 வானொலியில் நல்லிரவு நிகழ்சியில் பேய் கதைகள் நேயர்கள் தொலைபேசியில் பகிர்ந்து கொள்ளுதல் நிகழ்ச்சி. அவரவர் தான் கண்டதாக பல பேய்கதைகள் சொல்லுவார்கள். தற்பொது இல்லை என்று நினைக்கின்றேன். நானும் கலந்துக்கொண்டு இந்த கதை என்தாத்தா சொன்னதாக சொன்னேன். ஒரு பாதிரியார் பேய் பிசாசுக்கு பயப்படகூடாது, கடவுள் மேல் நம்பிக்கை வைய்யுங்கள் என்பார். நான் நல்லிரவில் சுடுகாடுவரை என்னால் செல்லமுடியும் என்றதும், அவ்வூரில் சிலர் அப்படியானால் நல்லிரவில் சுடுகாடு சென்று இந்த ஆணியை அடித்துவிட்டு வாருங்கள் என்றார்கள். அதேபோல் அன்று இரவு சென்றார் ஆனால் திரும்பி வாரவேயில்லை. காலையில் எல்லொரும் சென்றுபார்த்தனர் அந்த பாதியார் சுடுகாட்டில் இறந்து கிடந்தார். அருகில் சென்று பார்த்ததும்தான் தெரிந்தது அவர் இரவில் ஆணியை அடிக்கும்போது அவர் அங்கியையும் சேர்த்து அடித்துவிட்டார். அடித்த மகிழ்ச்சியில் செல்லும்பொது அங்கியை யாரோ இழுப்பதாக உணர்ந்து அதிர்ச்சியில் இறந்துவிட்டார் என்று... இந்த கதையை சொன்னதும் நிகழ்ச்சியாளர் நம்பிக்கையிருந்தால்தான் பேய்கள் கண்ணுக்கு தெரியும் என்று முடித்துக்கொண்டார்..

இந்த நூற்றாண்டுவரைலும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையில்லாமைக்கும், பகுத்தறிவுக்கும் ஆன்மீகத்துக்கும் போராட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது. நாளைய நம்முடிவு நமக்கு தெரியாதவரை இந்த பொராட்டம் இருந்துக்கொண்டேதான் இருக்கும். ஆசையும் அதை அடையவேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால் இப்பட்டி பட்ட நிலை இருக்கத்தான் செய்யும் என்பது என் எண்ணம்.........

நடிகை சினேகாவிற்கு பாடவும் தெரியுமா!...

நடிகை சினேகாவிற்கு பாடவும் தெரியுமா!...
தன் சிரிபாலே ரசிகர்களை கவர்ந்த நடிகை சினெகாவிற்கு பாடதெரியுமா? இந்த விடியோவை(ஒளிப்படம்) பார்த்து சொல்லுங்கள்..



Sunday, September 7, 2008

வாங்க ரஜினி சார்!...

வாங்க ரஜினி சார்!...

30 நாளில் புது முடிவு அறிவிக்கிறார் ரஜினி: ரசிகர்கள் கோரிக்கை ஏற்பு
அரசியல் கட்சி துவக்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தன் புதிய முடிவை அடுத்த 30 நாளில் அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நன்றி viduppu.com


=>வாங்க ரஜினி சார்! நல்லது செய்ய தொனுச்சினா வாங்க ரஜினி சார்!

=>வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவீர்களாமே! வாங்க ரஜினி சார்!

=>நல்லது செய்யனும்னா நல்லநாள் நேரம் தேவையில்லை, தொண்டுழியனை யார் தடுக்க முடியும் வாங்க ரஜினி சார்!

=>வாய்ஸ் மட்டுமே கொடுப்பதை நிருத்திவிட்டு ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>இங்கே அரசியல் செய்ய ஆயிரம் பேருள்ளனர், இமயமலை சாக்கு சொல்லாமல் நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>இயக்குனர் பாரதிராஜாவின் "முதல்மரியதை" பாணியில் எனக்கு ஒரு உண்மை தெரியுனும், உங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் நாலுகாசு பாக்கலாம் என்று காத்திருப்பவர்களுக்காக நிர்பந்தம் காரணமாக அரசியலுக்கு வருவீர்களாமே! நல்ல பெரும்தன்மை ரஜினி சார்! ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>கடினப்பட்டு தூக்கிய கையை படம்பிடித்து பின் பின்னனியிசையிட்டு, தொழில்நூட்பக் கலைஞர்களின் பெருமுயற்சியில் ஸ்டைலாக காட்டி ரசிகனின் சாபாஸ் வாங்கலாம்! அரசியலில் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>"ஒருதுளி ஓருபவுனு" கவிஞர் வைரமுத்து வரிகளுக்கு வாயசைத்தது போதும் வாங்க சார் ஏதாவது நல்லது செய்யுங்க ரஜினி சார்!

=>நல்லா படித்த நண்பர் நான்காவது முறையாக பாபா படம் பார்க்க சென்றார் ஏனெனில் தலைவர் அரசியலுக்கு வருவதாக இந்தப் படத்தில் சொல்வதாக சொன்னார்கள் தெரியவில்லை அதுதான் எங்கேயாவது சொல்லியுள்ளாரா என்று பார்க்கப் போறேன் என்றார்.. எனக்கு தலைசுற்றியது அரசியலுக்கு வருவதை ஏன் படத்தில் சொல்லவேண்டும்? பத்திரிக்கையாளர்களிடம் சொன்னா பொதுமே.... இவர்கள்தான் உங்கள் வாக்கு வங்கிகள், இவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்! 25 ஆண்டுகளாக திரைப்படதுறைக்கு என்ன செய்தீர்களோ? அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!

=>சுனாமி காலங்களில் ஓடோடி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினீர்கள் அதுபொல ஏதாவது செய்யனும் ரஜினி சார்!

=>குசராத் பூகம்பத்தில் உங்கள் சேவை உங்கள் மன்றத்தின் சேவைகளை பாராட்டதவர்களில்லை அதுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!

=>திட்டமிடாத காவேரி கங்கை இணைப்பு திட்டதிற்கு ஒரு கோடி நன்கொடை செய்ததுபொல ஏதாவது செய்யுங்க ரஜினி சார்!

=>இந்தியா உலகிலே முழுஜனநாயக நாடாகும். இங்கு யார்வேனாலும் அரசியலுக்கு வரலாம்.. உங்களை பொன்ற மக்கள் பலம்கொண்டவர்கள் ஏதாவது நல்லது செய்யனும் ரஜினி சார்!

=>சிவாஜி படத்துக்கு சங்கர் கதை வசனம் எழுதிக்கொடுத்தார். அரசியலில் நீங்கள்தான் எழுதனும் செயல்படுத்தனும்(நடிக்கனும்) . நல்லது செய்யுனும்ன்னு தோனுச்சினா வாங்க ரஜினி சார்! ஏதாவது செய்யுங்க! பொங்கி வரும் வெள்ளத்தை யார் தடுக்க முடியும்..

=> என்றும் நல்லதுக்காக காத்திருக்கும் மக்களின் ஒருவன்

Thursday, September 4, 2008

மனிதனும்! குரங்கும்!

மனிதனும்! குரங்கும்!....

சார்லஸ் ராபர்ட் டார்வின் இயற்கையியல் அறிஞர் கூற்றின்படி மனிதனின் இனம் குரங்கு இனத்திற்க்கு தொடர்புடையது.

உலகத்தில் உள்ள ஆறு அறிவு உடைய மனிதன் உயர்ந்த உயிரினம் என்றும், இந்த உயிரினத்தின் மூதாதையர் குரங்கு என்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை டார்வின் உலகத்தை கப்பலில் சுற்றித் தெரிந்துகொண்டார்.

மனிதன் குரங்கிலிருந்து பார்வையில் குறைந்த வித்தியாசம் குரங்கின் வால்தான். மனிதக்குரங்கு போல உள்ள குரங்கினத்திற்கு வாலும் இல்லை. குரங்குகள் சேட்டை எல்லா வயதினர்க்கும் பார்க்க ஆர்வமாக இருக்கும். பாபநாசத்தில் உள்ள குரங்குகள் புத்திசாலிகள் என்றும் கூறுவார்கள். ஒருமுறை தன் காலில் பட்ட புண்னுக்கு வைத்தியம் பார்க்க டாக்டரிடம் வந்தாகவும், அதை பார்த்த டாக்டர் மருந்திட்டார். அதன் பிறகு அந்த குரங்கு தன் வாயில் அடக்கி வைத்திருந்த நாணயத்தை கொடுத்ததாகவும் செய்திதாளில் படித்துள்ளேன்.

குரங்கு சேட்டைகளை ரசிகாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அப்படி ரசித்த ஒரு சிலதான் இந்த பதிவு.

மனிதன் இடதுப்பக்க இடுப்புப் பகுதில் அரிப்பு வந்தால் வலது கையை எடுத்து சென்று சொரியுவான். அதேபோல் வலதுப்பக்க இடுப்புப் பகுதியில் அரிப்பு வந்தால் இடதுக் கையை எடுத்து சென்று சொரியுவான்......ஆனால் குரங்கு வலதுப்பக்க இடுப்பை சொரிய வலதுகையையும், இடதுப்பக்க இடுப்பை சொரிய இடதுக்கையையும் பயன் படுத்தும். மனிதன் வலது இடதுமாற்றி சொரிவதன் விளக்கம் என்ன?

குரங்குகள் காடுகளில் கிடைக்கும் உணவுப் பண்டங்களையும், நாம் கொடுக்கும் பண்டங்களையும் வேகமாக வாயில் போட்டுக்கொள்ளும். வாயில் போட்ட உணவை கீழ்தாடைப்பகுதியில் சேர்த்து வைத்துக்கொண்டு பின் ஓரிடத்தில் உற்க்காந்து மெதுவாக அரைத்து உண்ணும். ஆனால் மனிதன் லபக்கு டபக்குன்னு வாயில் போட்டு முழுங்கி முழுங்கி முடித்து விட்டு செறிமானத்திற்காக டாக்டரை அனுகுவான்..( இந்த அவசர காலத்தில் சொல்லவேண்டியதேயில்லை)

பரங்கிபழம் பொன்று பொருளை தூக்க வேண்டி குரங்கு முதலில் அதை சுற்றி சுற்றி வரும் பின் யோசிக்கும், அதன் பிறகு அதன் அருகில் உற்க்காந்து இரு கைகளால் தூக்கி மெதுவாக எழுந்து வயிற்றுப்பகுதில் அனைத்து தூக்கி செல்லும் ( இதுதான் நமக்கு எடுத்து சொல்லும் பாதுக்காப்பான முறை) ஆனால் மனிதன் டமால்னு குனிந்து டபக்குனு தூக்கி பலத்தை காட்டி பிறகென்ன இடுப்புவலியால் அவதிபடுவான்....



நவீனயுகத்தில் கனனி மற்றும் அலுவலக வேலையில் தன்னை மறந்து தன்னுடைய முதுகுதண்டைப் பாதுகாக்க மறந்த நிலைதான் மேலேயுள்ள படம் காட்டுகிறது.


பின்குறிப்பு: கனனியில் வேலை செய்யும் நண்பர்கள் அரை மணிக்கொருமுறை நடந்து வருவது நல்லது. உற்காரும் பொது பாதங்களை அசைத்த வண்ணம் இருப்பதும் நல்லது. நிமிர்ந்து உற்காருதல் மானிடரை கொஞ்சம் தொலைவில் பயன்படுத்துதல் நலனை கொடுக்கும்.... தலைவலியும் வயிற்றுவலியும் வந்தபிறகுதான்............?

Wednesday, September 3, 2008

மனிதரின் முகம் காட்டுங்கள்....

மனிதரின் முகம் காட்டுங்கள்....
ஆதிமனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு, குகைகளிலும் மரக்கிளைகளிலும் தங்கி வாழ்ந்து வந்தான்.. பிறகு சின்ன சின்ன குழுக்களாகவும் வாழத்தொடங்கினான். ஒவ்வொருக் குழுவிற்கும் வலிமையுள்ளவன் தலைவனாகவும் இருப்பான்.

இப்படிப்பட்ட தனித் தனி குழுக்களில் தங்கள் வாழ்க்கை முறைகேற்றவாறு கொள்கைகளும் வகுத்துகொண்டான். அவர்களுகென்று வகுக்கப்பட்ட கொள்கைக்கு மாறாக நடந்தால் தண்டனைகளும் வகுத்துகொண்டான்..
இப்படிப்பட்ட கொள்கைகள்தான் பின்னர் மதங்களாகவும், சமையங்களாகவும் வகுக்கப்பட்டது. மதம் என்பது மனிதன் நல்வழிப்படுத்தும் கொள்கைகளாகதான் உருவானது. மதம் என்பது குறிப்பிட்ட குழுக்களின் கொள்கைகளே! . இப்படிப்பட்ட மதம்(கொள்கைகள்) கடவுளின் பின்னனில் உருவானதுதான் வேடிக்கையும் பிரச்சனைகளூம். கடவுள் என்பது கொள்கைகளுக்கு கொடுக்கப்பட்ட காப்புறுதியாகதான் படைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களும் தனக்கென கடவுள் உருவாக்கப்பட்டது. அதுபோல ஒவ்வொரு காலக்கட்டதிலும் பல சமயங்கள் உருவாகவும் மறையவும் பின் ஒன்று மற்றொண்டோடு கலப்பும் உண்டானது.

மனிதன் தனக்கென்ன ஒரு மதத்தை சார்ந்தே வாழ்கின்றான். மதம் என்பது கொள்கை பொருள் எனக்கொண்டால், பெரியார் போன்றொரின் பகுத்தறிவு கொள்கையும் மதம் சார்ந்த கொள்கையே! இக்கொள்கைக்கு கடவுளை இனம் காட்டாமல் மனிதனை காட்டுகிறது. கடவுளின் பெயரால் காட்டப்படும் மூடபழக்கத்தை வெறுக்கப்படுகின்றது. அறியாமையால் உண்டான பழக்கங்களை மனிதனிடமிருந்து நீக்கி பகுத்தறிவை சொல்கிறது.

மதங்களை தன் பிள்ளைகளையும் கடைப்பிடிக்க சொல்லியும் வருகின்றது. (இதில் பெரியார் கொள்கையும் விதிவிளக்கல்ல). நான் இந்து வீட்டில் பிறந்ததால் நான் ஒரு இந்து. நான் முஸ்லீம் வீட்டில் பிறந்ததால் நான் ஒரு முஸ்லிம். நான் கிறிஸ்துவ வீட்டில் பிறந்ததால் நான் ஒரு கிறிஸ்துவன்.. இப்படிதான் இந்திய சட்டமும் சொல்கின்றது. எந்த மதமும் மனிதனை நெறிப்படத்தான் சொல்கிறது. தான் சார்ந்த மதத்தை உணர்ந்து கொள்ளவே உன் வாழ்நாள் போதாது, அப்படியிருக்க மற்ற மதத்தின் குறைகளை எப்படி உணரமுடியும். எந்த மதமும் கொலைவெறியை தூண்டவில்லை, மனிதன்தான் மதத்தை தூக்கிக்கொண்டு வெறிப்பிடித்து அழைகின்றான்..

உன்மதத்தின் சிறப்பை உன்னைப் பார்த்து தெரிந்துக் கொள்வேன். உன் நேர்மையில் உன்மதத்தை காண்பேன். அப்படியிருக்க மதவெறி வருவது எதற்காக? மதம் உன்கொள்கையே தவிர கொலை வெறியில்லையே!.. மதத்தின் பெயாரால் அரசியலாக்குவதும், அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவிப்பதும் தற்ப்போது நடந்துவரும் கொடுமைகள்..

நாட்டின் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரு சாபகேடாக இருப்பது இந்த மதவெறியும் மதம்சார்ந்த அரசியலும். மதம்சார்ந்த முகதிரையை கிழித்துவிட்டு மனிதா எப்பொழுது மனிதனின் முகம் காட்டுவீர்கள்?.... மனிதன் முகம் காட்டி நாளைய சமுதாயத்தை வாழவிடுங்கள்!.... நாட்டை பிளவை ஏற்ப்படுத்தும் மதம் சார்ந்த அரசியல் போக்கை பற்றி "வெப்துனியா" வில் விரிவாக 30 ஆகஸ்ட் 2008ல் வெளிவந்தவை கீழே சுட்டியும் சுட்ட செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளது..


நமது நாட்டை அரிக்கும் மதவாதம்!
சனி, 30 ஆகஸ்ட் 2008( 16:00 IST )


சமூக, பொருளாதார ரீதியாக எழும் ஒவ்வொரு சிக்கலையும் மதவாதப் பிரச்சனையாக்கி நமது சுமூகமான சமூக வாழ்வில் பிளவை ஏற்படுத்தும் ஒரு அரசியல் போக்கு சமீப காலமாக அபாயகரமான அளவிற்கு தலைதூக்கி வருகிறது.
சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்னரும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சிக்கல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவைகள் எதுவும் இப்படி முற்றிலுமாக வேறு பார்வையுடன் திரிக்கப்பட்டு பிரச்சனையாக்கப்பட்டதில்லை.


இதற்கு முன்னரும் மத ரீதியான சிக்கல்களை நமது நாடு சந்தித்துள்ளது.
1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக நமது நாட்டில்
ஒரு மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திடப்பட்டு, அதன் காரணமாக பல ஆயிரம் உயிர்கள் பலியாகி, நாட்டின் பல பகுதிகள் இரத்தக் களமாயின.


அதன் காரணமாக ஏற்பட்ட சமூகப் பிளவு அரசியலில் பிரதிபலித்தது. மதக் கோட்பாட்டை மையக் கொள்கையாக கொண்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கட்சி தேச அளவில் வளர்ந்து பிறகு (கூட்டணி அமைத்து) ஆட்சியையும் பிடித்தது.

அந்தக் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி அரசு மத்தியில் அமைந்ததால் அதனால் தனது வெளிப்படையான எந்த ஒரு மதவாத திட்டத்தையும் - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவது உட்பட - நிறைவேற்ற முடியவில்லை.

ஆனால் அன்று பற்றவைக்கப்பட்ட அந்தத் தீ பல இடங்களில் தனது கோர நாக்கை நீட்டிட, அதன் காரணமாக ஆங்காங்கு பல மத வன்முறைகள் வெடித்தன. கோத்ரா இரயில் எரிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த மதக் கலவரமும் 2,000 அப்பாவி மக்களின் உயிரைக் குடித்தன.

இப்படி மதவாத கண்ணோட்டத்தோடு தூண்டிவிடப்பட்டு பெரும் பிரச்சனையாக்கப்பட்டு அதன் காரணமாக கலவரம் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது அரசியல் ரீதியான பலனை - ஆட்சியைப் பிடிக்க வகை செய்யும் வாக்கு வங்கியை - உருவாக்கியதால் அதனையே ஒரு அரசியல் வழிமுறையாக இந்து மதவாத சக்திகள் மட்டுமின்றி, மற்ற மதவாத சக்திகளும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால் நமது நாட்டின் சுதந்திரத்திற்கும், சமூக கட்டமைப்பிற்கும், அரசியல் போக்கிற்கும் ஒரு பெரும் ஆபத்தை விளைவிக்கக் காத்திருக்கிறது.

அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரம்!
மிக மிகச் சாதாரண பிரச்சனை இது, ஆனால் மதவாத சக்திகளால் பெரும் பிரச்சனையாக்கப்பட்டு இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் அப்படி என்ன ஒரு உரிமைப் பிரச்சனை ஏற்பட்டது என்று புரியவில்லை. இமய மலைப் பகுதியில் உள்ள புனித அமர்நாத் கோயிற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாகத் தங்கி, இளைப்பாறிச் செல்ல பால்டால் என்ற இடத்தில் அவர்களுக்கு தற்காலிகமாக தங்குமிடங்களை அமைக்க (கட்டிக்கொள்வதற்கு அல்ல) ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு 40 ஹெக்டேர் நிலத்தை ஜம்மு-காஷ்மீர் அரசு ஒதுக்கியது. இது தற்காலிகமான ஒதுக்கீடு என்று அறிவித்தே அரசு உத்தரவும் பிறப்பித்தது.

ஆனால் அதற்கு காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு மதவாத-அரசியல் அமைப்புகளான ஹூரியாத் மாநாட்டின் இரண்டு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் இந்த நடவடிக்கை காஷ்மீரத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என்று கூறினர். இந்த எதிர்ப்பு சாதாரண அளவிற்குத்தான் இருந்தது. காரணம் ஹூரியாத் மாநாட்டில் இருந்த பெரும்பாலான இயக்கங்கள் மதவாத - பாகிஸ்தான் சார்புடையவையே. இவைகளு‌க்கு காஷ்மீர் மக்களிடத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை.

இப்பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கியது உமர் ஃபரூக்கின் தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியே. தேசிய மாநாட்டுக் கட்சி, ஃபரூக் அப்துல்லா தலைமையில் இருந்தபோதுதான், அமர்நாத் யாத்ரிகர்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுத்து, அவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. ஏனேன்றால், 1995ஆம் ஆண்டு அமர்நாத் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல யாத்ரிகர்கள் உயிரிழந்தனர். எனவே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டது.


யாத்ரிகர்கள் தங்கிச் செல்ல தற்காலிக தங்குமிடங்களைக் கட்ட நில ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது தேசிய மாநாட்டுக் கட்சி அரசே. அதை எதிர்த்து அப்பொழுதே ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த எதிர்ப்பு மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், அமர்நாத் யாத்திரை நடைபெறும் பொழுது அந்த இடம் (அரசால் ஒதுக்கப்படும் இடம்) அமர்நாத் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், யாத்திரை முடிந்ததும் அது மீண்டும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே தற்பொழுது நில ஒதுக்கீடு செய்யும் உத்தரவை காங்கிரஸ் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து தேசிய மாநாட்டுக் கட்சி தனது தொண்டர்களைத் தூண்டிவிட்டு எதிர்ப்புப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வது அந்த வனப்பகுதியில் சுற்றுச் சூழலை கெடுத்துவிடும் என்று எதிர்‌ப்பாளர்கள் (மதவாதிகள்) வாதிட்டனர். ஆனால் அமெரிக்கா சென்று படித்துவிட்டுத் திரும்பிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தலை கருத்தில்கொண்டு மிகப் பெரிதாக ஓலமிட்டார்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கத் துவங்கியது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக கலவரம் வெடிக்க, துப்பாக்கிச் சூட்டிற்கு பலர் பலியாயினர்.
இந்த நிலையில்தான், அதுவரை காங்கிரஸூடன் ஆட்சியைப் பகிர்ந்துக் கொண்டு நில ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்த மக்கள் ஜனநாயகக் கட்சி, திடீரென பல்டியடித்து நில ஒதுக்கீட்டை ரத்து செய்யாவிட்டால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று அறிவித்தது. அதன் காரணமாக குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஆட்சியும் கவிழ்ந்தது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணை ரத்து செய்யப்பட்டது. காஷ்மீரில் கலவரம் ஓய்ந்தது. ஆனால், ஜம்முவில் போராட்டம் தீவிரமடையத் துவங்கியது.

அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு செய்யப்பட்ட நில ஒதுக்கீட்டை திரும்பத் தரவேண்டும் என்று கோரி ஜம்முவில் போராட்டம் வெடித்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாகவுள்ள காஷ்மீரில் மதவாத-அரசியல் நோக்குடன் நடத்தப்பட்ட போராட்டம் அதே மதவாத-அரசியல் எதிர்வினையாக ஜம்முவில் தொடர்ந்தது. பன்னெடுங்காலமாக ஒரே மாநிலத்தின் மக்களாக இருந்தவர்கள் மத ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு பிரிந்து நின்றார்கள். அவர்கள் விரும்பாமலேயே மத்த்தின் பெயரால் பிரிந்து நிற்க நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள்.

அமர்நாத் பிரச்சனையை பெரிதாக்கி, அங்கு காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து அரசியல் குளிர்காய்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, டெல்லி அரசியலில் காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட ஆதரவளித்தார். அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் பெரும்பான்மை இழந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டுவந்த போது அரசை ஆதரித்து உரையாற்றிய உமர் அப்துல்லா, காஷ்மீரின் நிலம் அபகரிக்கப்படுவதை உயிரைக் கொடுத்தாவது தடுப்போம் என்று மக்களவையில் முழுக்கமிட்டார்.

அடேயப்பா, எவ்வளவு பெரிய பிரச்சனை? அமர்நாத் யாத்ரிகர்கள் தங்கிச் செல்ல 40 ஹெக்டேர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்தது அபகரிப்பாம். என்ன அயோக்கியத்தனம். நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அரசு உத்தரவு தெளிவாக உள்ளது. ஆனால் உமர் கர்ஜிக்கிறார்... காஷ்மீரிகளின் உரிமையாம்... பறிபோகிறதாம்.


இதேபோன்ற வேடத்தை மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவி மெஹ்பூபா முப்ஃதியும் அணிந்து காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார். என்ன அடிப்படையில்? மதவாத சக்திகளுக்கு எதிராகவாம்!ஆட்சியைப் பிடிக்க கொள்கையோ திட்டமோ இல்லாமல், மத ரிதியாக மக்களைப் பிளக்கும் அரசியல் கட்சிகள் மதச்சார்பின்மை பற்றிப் பேசுகின்றன.

ஒரிசா: மதமாற்றமும், மதக் கலவரமும்!ஒரு பக்கத்தில் காஷ்மீரும், ஜம்முவும் ஒன்றுக்கு ஒன்று எதிராக, மதவாத ரீதியில் எரிந்துக்கொண்டிருந்தபோது, ஒரிசாவில் மதவாத கலவரத் தீ பரவ ஆரம்பித்தது.

விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தைச் சேர்ந்த சுவாமி லட்சுமானந்த சரசுவதி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதற்கு கிறித்துவ அமைப்புகளே காரணம் என்று கூறி, அம்மாநிலத்தில் உள்ள கிறித்தவ வழிபாட்டுத் தலங்களையும், தேவாலயங்களையும் இந்து மதவாத அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் கொளுத்தி தீக்கீரையாக்கி வருகிறது. ஒரு வழிபாட்டுத் தலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரையும் சேர்த்து கொளுத்தி வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர்.

சுவாமி லட்சுமானந்த சரசுவதியைக் கொன்றது கிறித்தவ அமைப்பினர்தான் என்று எந்த ஆதாரத்தை வைத்து வி.இ.ப. கூறிவருகிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை.




கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் அது. அ‌ன்று, "ஒரிசாவின் கந்த்மால் மாவட்டம், புல்பானி என்ற இடத்தில் உ‌ள்ள ஜலேஷ்பதா ஆஸ்ரம‌த்‌தி‌ல் கோகுலாஷ்டமி பண்டிகை கொண்டாடப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஆஸ்ரமத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய 30 மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்வாமி லட்சுமானந்தாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலையை தடு‌க்க முயன்ற மேலும் நால்வரையும், அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இறந்த ம‌ற்றவர்கள் வி.ஹெச்.பி. அமைப்பின் முக்கியத் தலைவர்களான அரூபானந்தா, சின்மயானந்தா மற்றும் மாதாபக்தி மயி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தவிர அடையாளம் தெரியாத மற்றொருவரும் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஏற்கனவே ஸ்வாமி லட்சுமானந்தாவை மாவோ தீவிரவாதிகள் 8 முறை கொல்ல முயன்றனர். எனவே இப்படுகொலையை அவர்கள் தான் நடத்தியிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று செய்தி வெளிவந்தது, அதனை தமிழ்.வெப்துனியா.காம் மறுநாள் காலை வெளியிட்டுள்ளது.

சுவாமி லட்சுமானந்த சரசுவதியை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தான் சுட்டுக் கொன்றிருக்கக் கூடும் என்று உறுதியாக சந்தேகிக்கும் அளவிற்கு செய்திகள் வந்துள்ளபோது, இவர்கள் கிறித்தவர்களையும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் தாக்குவதும், தீ வைத்துக் கொளுத்துவதும் எதற்கு?


இந்த மத வன்முறையாளர்களால் மாவோயிஸ்ட்டுகள் போன்ற தீவிரவாத அமைப்புகளோடு மோதும் மன வலிமை படைத்தவர்கள் அல்ல என்பது தெரியும். இவர்கள் அப்பாவி மக்களை மத ரிதியாக பிரித்துக் குளிர்காயும் அரசியலிற்கு அல்லவா பழக்கப்பட்டவர்கள். அதனால்தான் தங்களுடைய மதவாத கொள்கைத் திட்டத்தின்படி, கொன்றவர்கள் யார் என்று தெரிந்தாலும் பிரச்சனையை திசை திருப்பி மதக் கலவரத்திற்கு வித்திடுகின்றனர்.

ஏற்கனவே, 1999ஆம் ஆண்டு ஒரிசாவில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஸ்டெய்ன் என்ற பாதிரியாரும், அவருடைய இரண்டு மகன்களும் இரவு தங்கள் வாகனத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த மதவெறியாளர்களால் கொளுத்திக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையை திட்டமிட்டுச் செய்த தாராசிங் மற்றும் இரண்டு பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.

ஒரிசாவில் கடுமையான வறட்சியும், பஞ்மும், பட்டினியும் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை மற்றும் திருவிழா போல மாறாமல் தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. அதனை எதிர்கொண்டு கொள்கைத் திட்டம் வகுத்து ஒழிக்க திராணியற்ற மதவாத இயக்கங்களும், பா.ஜ.க.வும் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு பிரச்சனையை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றன.

இராமர் பெயரால் சேது திட்டத்திற்கு எதிர்ப்பு!
பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போதுதான் சேதுக் கால்வாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முழுமையான ஆய்விற்குப் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவக்கப்பட்ட அந்த திட்டத்தை, அத்திட்டப் பகுதியில் குறுக்கே இருக்கும் நிலத்திட்டை இராமர் கட்டிய பாலம் என்று கூறி பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத சக்திகள் எதிர்த்து வருகின்றன.

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்று தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்த அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலரும், முன்னாள் முத‌ல்வருமான ஜெயலலிதா, அந்த நிலத்திட்டை இடித்து இந்துக்களின் மத உணர்வுகளை அலட்சியப்படுத்தினால் நாடு கொந்தளிக்கும் என்று கர்ஜனை செய்கிறார்.
தான் முதலமைச்சராக இருந்தபோது சென்னை கடற்கரை சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு அந்த இடத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை கட்ட திட்டமிட்டபோது, மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு தடுத்துவிட்டதற்கு பழிக்குப் பழிவாங்க சேதுக் கால்வாய் திட்டத்தை புதைத்துவிட வேண்டும் என்பதில்
ஜெயலலிதா அழுத்தமாக உள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதை கேட்கும்போது, இது கூட உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இல்லையென்றால், அவருடைய கட்சி தொடர்ந்து ஆதரித்துவந்த ஒரு திட்டத்தை இவ்வளவு மூர்க்கமாக எதிர்ப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

இப்படி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது நாட்டில் எழும் ஒவ்வொரு பிரச்சனையையும் மதச்சாயம் பூசி, பூதாகரமாக்கி மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் ஆட்சி அதிகாரக் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் முடிவுடன் மதவாத சக்திகள் உறுதியாக உள்ளன.

இது ஆபத்தானது. நமது நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் விலைவாசி, பணவீக்கம், வேலையின்மை, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் பலியாகும் பல்லாயிரக்கணக்கான மக்கள் என்று எத்தனையோ பிரச்சனைகள் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் தீர்வு காண கூட்டுச்சேர்ந்து செயல்படவேண்டிய ஒரு நாட்டில் இப்படி மதவாத சக்திகள் எல்லா பிரச்சனைகளையும் தங்கள் நோக்கத்திற்கேற்ப திசை திருப்பி அரசியல் இலாபம் தேட அனுமதிக்கப்பட்டால் அது நமது நாட்டை மிகப் பெரிய ஆபத்தில் வீழ்த்திவிடும். அதன்பிறகு இந்நாட்டை மீட்பது இயலாத காரியமாகிவிடும்.