_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, January 25, 2009

நாம் கண்ட குடியரசு!........

நாம் கண்ட குடியரசு!........
"சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாதவையாகும். சமத்துவம் இல்லாத சுதந்திரம் பல பேர் மீது ஒரு சிலர் ஆதிக்கம் செலுத்திட வழி செய்யும். சுதந்திரமில்லாத சமத்துவம் தனி மனிதனின் தன்னெழுச்சியான இயல்புகளை குலைவுறச் செய்யும், சகோதரத்துவம் இல்லாத சுதந்திரமும், சமத்துவமும் இயற்கையாக கொண்டிருக்க வேண்டிய தன்மைகளைப் பெற்றிருக்கமாட்டா. சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம் ஆகிய இரண்டும் இந்தியச் சமுதாயத்தில் அறவே இல்லை என்ற உண்மையை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்"------- இதை கூறியவர் இந்திய நாட்டின் அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய மாபெரும் தலைவர் பாபா சாஹேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள்.......
நன்றி விக்கிபீடியா
பல நூற்றாண்டுகள் மன்னர் ஆட்சியும், முகலாய ஆட்சியும் கொண்டதுதான் நம் நாடு அதற்கு பின் 200ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் அடிமை பட்டு பின்னர் நடந்த போராட்டத்தின் விளைவாகதான் இந்த சுதந்திர காற்றை நம் நாடு சுவாசிக்கின்றது. 1947ல் ஆகஸ்டு மாதம் 15ம் நாள் நாம் நாடு சுதந்திர இந்தியாவாக நடைப்போட்டதில் பலரின் போராட்டத்தினால் உருவாணதை யாரும் மறக்க முடியாது. அதன்பிறகு நாட்டின் ஆட்சி முறையைத் தீர்மானிக்க அரசியல் நிர்ணய சபை நியமிக்கப்பட்டது. 1946 டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 1950 ஜனவரி 25 ஆம் தேதி வரை பணியாற்றி உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்துடன் அதற்கு மறுநாள் அதாவது 1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்தியக் குடியரசு தொடங்கியது. அதனையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நம்முடைய அரசியல் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய பெருமைக்குறிய அமைப்பு. அதன் பெருமை அதன் நடைமுறையில்தான் சிக்கல் காணமுடிகின்றது. நமக்கு கொடுக்கப்பட்ட முழு சுதந்திரம் சட்டத்தை உதாசீனப்படுத்தப்படுவது கேவளத்துக்குறியது. 60வது குடியரசு தினத்தில் நம் நாட்டையும் நாட்டின் அரசியல் அமைப்பையும் நாம் எந்த அளவிற்கு மதிக்கின்றோம் என்பதை கொஞ்சம் சிந்திப்போம்........ நம் நாட்டின் சட்டதை அரசியல் அமைப்பை நாம் மதிக்கவில்லை என்றால் நம் தாயை அவமதிப்பதாகும்.

அரசியல் சாசனத்தில் 10ஆண்டுக்குள் எல்லோருக்கும் கல்வி என்ற நிலை இன்னுமும் நாம் எட்டவில்லை மாறாக கல்வியை வியாபாரமாக்க பட்டுள்ளது. மதுவை அரசு ஏற்று நடத்துவதும், கல்வியை தனியாரிடம் விற்பனை செய்வதும், அரசியல் சாசனத்தை அடகு வைப்பதற்கு சாமமான செயல்தானே?...

இன்னும் தனிமனித சுதந்திரம் பாதுக்காக்க படுகின்றதா? காவல் துறையில் கூட பாதுகாப்பில்லை. படித்த இளைஞன் கூட காவல் நிலையம் தனியாக சென்று தன் குறைகளை கூற முடியாத நிலைதான் இங்குள்ளது. பெண்கள் நிலை சொல்ல வேண்டியதில்லை. மகாத்மா கண்ட கனவு காவல் நிலையத்தில் கூட காணமுடியாத சட்டசாசனம்தான் நம் காண்கின்றோம்... சட்டங்கள் உள்ளது, சட்டத்தை மதிப்பதிலும் பயன் படுத்துவதிலும்தான் சிக்கல் உள்ளது.

நம் அரசியல் சாசனத்தை மதிப்பதில் கல்விக் கற்றவர்கள் மதிக்கின்றார்களா என்றால்?...... இவர்கள்தான் நம் நாட்டின் தேர்தலை உதாசினப்படுத்துகின்றனர். பெரும்பான்மை படித்தவர்கள் ஓட்டு போடுவதேயில்லை என்பதும், நாட்டை சவக்குழிக்கு கொண்டு செல்வதிற்கு சமமான செயல்தானே.... எத்தகைய சட்டங்கள் இருந்தாலும் நம் நாட்டையும் நம் அரசியல் சாசனத்தையும் மதிக்காமல் ஒன்றுமே செய்ய முடியாது என்பதை இந்த 60வது குடியரசு தினத்தில் நினைவில்கூறுவோம்....

நம் நாட்டின் சட்ட சாசனம் ஒரு தொலைநோக்கு பார்வையில்தான் உருவாக்கப்பட்டது. அதை முழுமையாக நடைமுறைப் படுத்த நம் அரசியல் தலைவர்களின் பொறுப்பிலும் உள்ளதை மறக்க முடியாது. அதேபோல் மக்களின் அறிவினாலும் நம்முடைய உரிமைகளை பெறமுடியும். அதற்கு முறையான கல்வியும் அவசியம்.

பொதுவான வளர்ச்சியை இந்தியா கண்டாலும், எல்லா இன மக்களும் அந்த வளர்ச்சியை பெற முடியாமல் இருப்பது சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் கோளாருதானே. இதை இந்த நன்னாளில் நினைவில் கொள்ள வேண்டும்.

உலகம் வியக்கும் அரசியல் சாசனம் இருந்தும் நம்முடைய பொறுப்பின்மையால் உலக அரங்கில் பல இழந்துள்ளோம். ஓங்கும் கைகளால் இந்தியாவை நல்ல குடியரசாக உயர்த்துவோம் என்று சொல்லி 60வது குடியரசு வாழ்த்துக்களை பருகுவோம்......
இந்தியாவின் எதிர்காலம் நம்கைகளில்!..
வாழிய இந்தியா!
வாழிய இந்தியர்!......

அன்புடன்
ஆ.ஞானசெகரன்.

2 comments:

Anonymous said...

குடியரசு தினம் விளக்கம் மிக்கநன்று

ஆ.ஞானசேகரன் said...

// DHANABAL said...
குடியரசு தினம் விளக்கம் மிக்கநன்று//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா