"No love no life" காதல் இல்லையேல் சாதலே மேல் என்று சொல்லும் அளவிற்கு மனிதனும் அவனை சுற்றிய காதலும் இருக்கின்றது. அதற்கு அடுத்த கட்டமாக இருக்கும் கல்யாணம் என்ற நிபந்தனை அவனை இந்த காலக்கட்டத்தில் ஏனோ பயப்படுத்துகின்றது. இதில் பலர் சேர்ந்து வாழ்வோம் (live together) கல்யாணம் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மனவருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட கலாச்சாரம் மேலைநாடுகளை தாண்டி இந்தியாவில் நகரங்களிலும் இருக்கதான் செய்கின்றது. " மனிதனின் பிறப்பின் முக்கியதுவம் தனது சந்ததிகளை விருத்தி செய்வது" எனற ஒரு தத்துவம் மறைந்து வெகுகாலமாகின்றது.
இந்த அவசரக்கால உலகில் கல்யாணம் மற்றும் குழந்தைகளை பெற்றல் என்பது ஊக்கப்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கின்றது. பலர் கல்யாணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழல் கடந்தால் நாளைய உலகம் பெரியவர் இல்லமாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த சில நாட்டில் அரசாங்கமே கல்யாணங்களுக்கு ஊக்கப்படுத்தி வருகின்றது. அப்படித்தான் சிங்கப்பூர் அரசும் கல்யாணம் செய்ய ஊக்கப்படுத்தியும் அதற்காண சந்தர்ப்பங்களை உருவாக்கியும் வருகின்றது.
அப்படி ஊக்கப்படுத்தும் விதமாக 10.10.2010 சிறப்பு தினமாக "I do" Wedding at sentosa 2010" என்ற ஒரு நிகழ்வை நடத்தியது. அதன்படி 140 க்கு மேற்ப்பட்ட ஜோடிகளுக்கு கல்யாணம் நடத்தியது. குறைந்த செலவில் நிறைவான மகிழ்வாக நடத்தியது சிறப்பாகும். இந்த கல்யாண வைபோவத்திற்கு நிர்வாக புகைப்பட கலைஞராக (Official Photographer) சென்றேன். அங்கு நான் எடுத்த புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.
கீழே சில புகைப்படங்கள் உங்களுக்காக ..... மேலும் அதிக படங்களை பார்க்க சுட்டியை தட்டுங்கள்.
பின் குறிப்பு: மேலை நாட்டு நாகரிகம் பல நாடுகளிடம் தொற்றிக்கொண்டு இருப்பது உண்மை. அதே போல் சிங்கப்பூரிலும் மேலை நாட்டு நாகரிகம் பல தொற்றியுள்ளது. அது பொல தொற்றிக்கொண்ட பழக்கம் ஒன்று கல்யாண சடங்கின் பொழுது முத்தமிடல். பதிவு திருமணத்தின் பொழுது முதலில் மோதிரம் மாற்றிக் கொள்கின்றார்கள் பின்னர் பதிவாளர் சொல்லின் பேரில் ஜோடிகள் முத்தமிடுவார்கள்... அந்த நிகழ்வைதான் இங்கு புகைப்படம் பதித்துள்ளேன். சில நண்பர்கள் சங்கடங்களின் பேரில் இந்த பின் குறிப்பு.
கல்யாண வைபோவம் புகைப்படங்கள்....
கல்யாண ஜோடிகளின் அணிவகுப்பு புகைப்படங்கள்....
அன்புடன்,...
ஆ.ஞானசேகரன்.