_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, January 23, 2012

எல்லை தாண்டி......

எல்லை தாண்டி......


* எல்லை தாண்டி வந்ததாக கூறி, இந்திய மீனவர்கள் 31 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்
* படகு பழுதானதால் தவித்துக் கொண்டிருந்த ராமேசுரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு (இலங்கை கடற்படை அட்டூழியம்)
* ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் (வலைகளை அறுத்து மீன்களை அள்ளி சென்றனர்)

ஆதிமனிதன் பெண்ணிற்கு பின்னால் ஒரு குடும்பமாக, பின்னர் குழுக்களாக வாழத்தொடங்கினான். அந்த குழுக்கள் பெரும் குழுக்களாகவும் மாறியது. வலிமையுள்ளவர்கள் குழுவின் தலைவராக இருந்தனர். ஒவ்வொரு குழுவும் தாங்கள் வாழும் இடத்தை எல்லைகளாக வகுந்துக்கொண்டனர். எல்லை தாண்டி வேற்று குழுவினர் வந்தால் அங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. எல்லை தாண்ட காரணிகளாக இருப்பது, உணவிற்காக அதற்கு மேல் மண்ணிற்கும் பெண்ணிற்கும்தான்.

இந்த எல்லை தாண்டிய பிரச்சனையின் தீர்வுதான் என்ன? இரு குழுக்களும் பேசி வகுத்த கட்டுப்படுகள்தான். அந்த கட்டுப்படுகளை மீறும் பொழுது பிரச்சனைகளும் உருவாகின்றது. சின்ன சின்ன குழுக்கள் இன்று கிரமமாக, நாடக, கண்டமாக உருவாகியுள்ளது. வலியவன் நாட்டாமையாகின்றான், மக்களே! மக்கள் தேர்தெடுத்து நாட்டை ஆழ அதிகாரம் கொடுக்கவும் செய்ய தொடங்கிவிட்டான்......

இப்படி இருக்கும் நிலையில் மேலே கண்ட செய்தி நம் சிந்தனையை தூண்டுகின்றது. எல்லை தாண்டிய பிரச்சனை தினம் ஒரு செய்தியாக இருக்கின்றது. நம் நாட்டு மீனவர்கள் தினம் தண்டிக்கப்படுகின்றார்கள். இதை நம் அரசு இன்னுமும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? நம் நாட்டின் எல்லையை கடந்து கள்ள நோட்டுகள் மூலம் பொருளாதரத்தையே நசுக்க பார்கின்றபொழுதும், இன்னும் நம் அரசு மெளனமாக இருக்கின்றது ஏன்?

மீனவர்கள் உண்மையில் எல்லையை கடந்துவிடுகின்றார்களா? நமது எல்லை காவல் படையினர் அதற்கான பாதுகாப்பு எச்சரிக்கை சொல்லவில்லையா?

நமது மீனவர்கள் எந்த காரணிகளால் எல்லையை கடக்க வாய்புள்ளது? அதை நமது அரசு சிந்தித்து அதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை?

மீனவர்கள் எல்லை தாண்ட பல காரணிகள் இருந்தாலும், 1. வழிதவறி செல்ல வாய்புள்ளது. 2. மீன்களை தேடி எல்லையும் தாண்ட வாய்புள்ளது. அரசு அதற்காக என்ன என்ன நடவடிக்கை எடுக்கலாம், எல்லையை அறிந்துக்கொள்ள அனைத்து மீனவர்களுக்கும் எல்லையை கண்டறியும் கருவிகள் வழங்கலாம். நமது மீன் வளத்தை பெருக்க விஞ்ஞான முறைப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளணமாக இருப்பது நம்மை நாமே அடகு வைப்பதற்கு சமமாகும். நமது எல்லை காவல் படையை நவீனத்துவம் செய்யும் காலகட்டத்தில் இருக்கின்றோம். நம் மீனவர்கள் எல்லை கடப்பது நமது காவல் படைக்கு தெரியாமல் இருப்பது நம்முடைய பலவீனம்தான்...... இந்த பலவீனம் நாட்டின் பாதுகாப்புகே பிரச்சனைதான். உடனே இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்களாக!


--------------------------------------------@-------------------------------------------

"தமிழுக்கு அமிழ்தென்று பெயர்"

தமிழ் மழலையில் இன்னும் அழகாக இருக்கின்றது...

"கவிதை" எனற வார்த்தையில் எந்த ஒரு எழுத்தையும் நீக்கினாலும் ஒரு பொருளை கொடுக்கும்.... ( நண்பர்களிடம் அறிந்துக்கொண்டது)

விதை- விதை
விதை- கதை
கவிதை- கவி
கவிதை- தை
விதை- ( ஒன்றை குறிக்கும், பிரமன், அக்னி என்ற பொருளும் உண்டு)

டிஸ்கி : பாகிஸ்தானிலிருந்து எல்லைத்தாண்டி கள்ள நோட்டுகளை புழங்கவிட உடந்தையாக இருந்த இந்திய குடிமகனுக்கும் , அதிகாரிகளுக்கும் என்ன நடவடிக்கை எடுக்கலாம்?....... எடுக்கப்படும்?......

5 comments:

ஹேமா said...

ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்னு அறிவுப்புச் செய்தமாதிரி ஒரு பதிவு போட்டிருக்கீங்க.சுகம்தானே.நானும் சுகம் !

பதிவின் சாரம் சொல்ல என்ன இருக்கு ஞானம்.எத்தனையோ காலமாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை.இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !

கவிதை...நானும் இதை அறிந்திருக்கிறேன்.இந்தச் சிந்தனை அபாரம்தான்.நன்றி !

ஆ.ஞானசேகரன் said...

// ஹேமா said...

ஞானம்...சுகமா இருக்கிறீங்கன்னு அறிவுப்புச் செய்தமாதிரி ஒரு பதிவு போட்டிருக்கீங்க.சுகம்தானே.நானும் சுகம் !

பதிவின் சாரம் சொல்ல என்ன இருக்கு ஞானம்.எத்தனையோ காலமாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனை.இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !

கவிதை...நானும் இதை அறிந்திருக்கிறேன்.இந்தச் சிந்தனை அபாரம்தான்.நன்றி !//


வணக்கம் ஹேமா...
//இலங்கையும் இந்தியாவும் இந்த விஷயத்தில்கூட ஏதாவது ஒப்பந்தம் போட்டு வச்சிருப்பார்களேன்னு எனக்கொரு சந்தேகம்.இல்லாட்டி என்ன இது !//
ம்ம்ம்ம் ஆமாங்க ஏதோ ஒரு மர்மம் மட்டும் இருக்கு என்று தோன்றதான் செய்யுது,... அதை ஆராய சந்தர்ப்பம் இல்லை மொத்தத்தில் கொடுமை பன்னுராங்க

ஆனா ஒன்று மட்டும் உண்மை இதுவரை இலங்கை அரசின் ராஜதந்திரத்தை புரிந்துக்கொண்டவர் மறைந்த இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் நினைக்கின்றேன். பாவம் அப்பாவி மக்கள்தான்

நன்றிங்க ஹேமா

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html

தருமி said...

நலமா ...?

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் ஐயா... நலம், நீங்கள்?
வேலை பளு மற்றும் சோம்பலின் காரணமாக இணையம் பக்கம் வரமுடியவில்லை