_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, February 12, 2009

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...

என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...
தற்போது எல்லா அரசியல் வாதிகளும், ஆய்வாளர்களும் சொல்வதுபோல இலங்கையின் நடந்துவரும் போர் சூழல்கள் இந்தியாவை பொருத்தமட்டில் முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு முன் அல்லது பின் என்ற நிலைப்பாடுதான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதில் எந்த நிலைபாடானாலும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது எல்லா சாமானியனின் எதிர்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும் முத்துகுமார் போன்றவர்களின் தீக்குளிப்புகளும் உருவாக்கியுள்ளது. எதுவாகினும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது. அது இலங்கை தமிழாரக இருந்தாலும் இல்லை ஈழத்தமிழராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் அது ஒரு பிரச்சனையில்லை.

இப்படி இலங்கை மற்றும் புலிகளின் நிலைப்பாடு இந்தியாவை பொருத்த மட்டில் ராஜிவ் காந்தியின் படுகொலையை வரைகோடாக வைத்துக்கொண்டாலும், ராஜிவின் கொலை சம்மதப்பட்ட வழக்குகள் மற்றும் சாட்சிகள் முழுமைப்படாமல் இருப்பது மோசமான நிலைபாடை குறிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு 1993 ம் ஆண்டு தொடங்கி , 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. இவர் முன்னிலையில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் மற்றும் சந்திரசேகர் வாதங்கள் அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 2009வரை பதில் இல்லை என்பதே இந்திய அரசின் இலங்கைப் பற்றி கூறும் வாதம் சொத்தையாக்கப்படுகின்றது.... அன்று கேட்கபட்ட கேள்விகளின் சாரம் சுட்டியில் சுட்டி படித்து பாருங்கள்.... இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் விடை தெரியாமல் இருப்பது, நாளைய இந்தியாவிற்கு ஆபத்தாக கூட இருக்கலாம்.... சுட்டியை சுட்டவும் ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன

இலங்கையில் நடப்பது ஒரு இன அழிப்பு என ஊடகங்கள் பல சுட்டிக் காட்டுகின்றது. இப்படி ஒரு இன அழிப்பு போர் பக்கத்தில் உள்ள அண்டை நாட்டில் நடப்பதால் இந்தியாவின் நிலைபாடு என்ன என்பதை குறித்து அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகின்றது. இதற்கு முன் இந்தியா எந்த ஒரு நாட்டையும் அபகரிக்கும் நடவடிக்கையோ, எண்ணமோ கொண்டதில்லை என்பதுதான் வரலாறு. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா பக்கத்து நாடான இலங்கை மீது நட்பு நாடாகதான் இருக்க நினைக்கின்றது. இதை ஆட்சியில் உள்ளவர்கள் ராஜிவ் கோலையை சொத்தை சாக்காக சொல்வதுதான் மக்களின் எரிச்சலை கொடுக்கின்றது.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஞாயப்படுத்தி அப்பாவித் தமிழர்களின் படுகொலையை ஊக்குவிக்க முடியாது என்பதும் என் எண்ணங்கள். அதே சமயம் இலங்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது முடியாத காரியம். அது தற்போது உள்ள காங்கிரஸ் அரசானாலும் சரி, மற்றும் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் சரி இந்த நிலைப்பாட்டில்தான் இருக்க முடியும் என்பதும் உண்மைதான். இதுவே திராவிட கட்சிகளின் நிலையும். அப்படியிருக்க முத்துகுமார் போன்றோரின் தீக்குளிப்புகள் உணர்ச்சியில் உருவாகவேண்டாம் என்பதும் மேலும் உணர்வுபூர்வமாக புத்திசாலியான தீர்வை உருவாக்க முயல வேண்டும் என்பதும் என் எண்ணங்கள்.

இந்தியா போன்ற நடுநிலையான நாடு ஒரு இயக்கம் சார்ந்த பிரிவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ கரம்கோர்க்க முடியாது. மேலும் இந்தியா தன் அண்டை நாட்டுடன் நட்பு நாடாகதான் இருக்க நினைக்கும். இந்த நிலைதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளுடன் பாதுகாப்பாக இருக்க முடியும். நாளை புலிகள் வசம் இலங்கை வந்தாலும் இந்தியா இலங்கையின் நட்பு நாடாகதான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள். இதிலிருந்து தெரிவது இந்தியா ஒரு அரசுடன் நட்பு விரும்புகின்றது புரியும்.. ஆனால் இந்தியா சொத்தை சாக்கை சொல்லிக்கொண்டு அப்பாவி ஈழதமிழர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு காட்டாமல் மேலும் அவர்களை பாதுக்காக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையை கொடுக்கின்றது. மேலும் கண்டிக்கதக்கதும் கூட. இன்னும் மெளனம் சாதிப்பது மொத்த ஈழத்தமிழர்களுக்கு சவக்குழியில் மெளன அஞ்சலியும், இறங்கல் கவிதையும்தான் சொல்ல வேண்டிவரும்.

இந்தியா போன்ற நாட்டின் தலையிட்டால் தான் சொர்க்க பூமியான இலங்கை அமைதிப் படுத்த முடியும். அதே போல் இலங்கையில் உள்ள அனைத்து பிரிவுசாரார்களும் தங்களின் கொள்கைகளை கொஞ்சம் தளர்த்தி அப்பாவி மக்களுக்கு தரமான சுதந்திர காற்றை சுவாசிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பது என் போன்ற சாமானியனின் ஆசைகள். அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படுதை ஐ. நா சபை மூலம் இந்தியா தடுப்பதர்காண ஆவணம் செய்ய வேண்டும் என்பதும் முக்கியம். தமிழகத்தில் திரட்டிய நிதி 150கோடி என்ன சொல்கின்றது என்பதும் புரியவில்லைதான், இதற்கும் அரசு மெளனமே பதிலாக இருக்குமா? பல விடயங்கள் செய்திகள் சுதந்திரயின்மையால் என்னைபோல் சாமானியனுக்கு புரியவில்லை. எதுவாகினும் விரைவில் ஈழத்தமிழனுக்கு உண்மையான சுதந்திர காற்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்......
ஆ. ஞானசெகரன்.

2 comments:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஆ.ஞானசேகரன் said...

//உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்//

வலைபூக்கள் குழுவிநர்களிக்கு நன்றியும் வாழ்த்துகளும்