_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்
Showing posts with label மணற்கேணி 2009. Show all posts
Showing posts with label மணற்கேணி 2009. Show all posts

Saturday, May 29, 2010

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!.. விழாக்கோலம் கண்டது

சிங்கை பதிவுலகின் ஒரு மைல் கல்!..விழாக்கோலம் கண்டது

சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (
திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.






அதனை அடுத்து சிங்கை வலைப்பதிவர்களின் கட்டுரை தொகுப்பு நூல் "மணற்கேணி" வெளியிடப்படுகின்றது.



இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ்,திருமதி ஜெயந்தி சங்கர், திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான்,திரு.பாண்டியன், திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.


விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அணைத்து நண்பர்களுக்கும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் சார்பாக நன்றியை தெரியப்படுத்துகின்றேன்.... மேலும் அம்மா அப்பா வலை பூவின் சார்பாக அணைவருக்கும் நன்றி!


விழாக்கோலத்தை புகைப்படக் கோலமாக காண கீழ் உள்ள சுட்டியை சுட்டி மகிழலாம்....
விழாக்கோலம் கண்ட சிங்கை பதிவுலக புகைப்படங்களை காணலாம்....


அன்புடன்..
ஆ.ஞானசேகரன்..

Monday, May 24, 2010

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு.....

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...

மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார்கள். வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் ஒரு மாபெரும் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வாகதான் இருக்கும். சந்திப்பு மற்றும் BBQ பாபிக்கியூ உணவும் உண்டு மகிழ்ந்தனர். உணவின் முத்தாய்ப்பாக சிங்கை நாதனின் பாதாம் அல்வா சிறப்பான இடத்தை பிடித்தது.

விழாவின் சிறப்புகளை நமது பதிவர்கள் பகிர்ந்துக்கொள்வார்கள். மேலும் இதன் தொடர் நிகழ்வுகள் "சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம்" தில் வெளியாகும். அன்று நடைபெற்ற நிகழ்வுகளை புகைப்படமாக பதியப்பட்டது. அப்படிப்பட்ட வரலாற்று புகைப்படங்களை சுட்டியை சுட்டி காணுங்கள்..... தாங்களும் அந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்வதில் ஆணந்தமே.......

மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடன் சிங்கை பதிவர்கள் ஒரு சந்திப்பு...(புகைப்படங்கள்)

உங்களோடு பகிர்ந்துக்கொண்ட...
ஆ.ஞானசேகரன்