_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, August 22, 2008

காசிக்கு போனாலும் சுட்டெரிக்கும் சொல்!...


காசிக்கு போனாலும் சுட்டெரிக்கும் சொல்!...

இந்தியாவின் தேசிய கவிஞராக புகழப்பட்டு வரும் ரவீந்திரநாத் தாகூர். இவர் வங்கமொழி கவிஞராவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவி தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர்.

இந்த கவிஞர் கதை எழுதுவதிலும் வல்லமை பெற்றவர்.
ஒரு விதவை தாய் காசிக்கு சென்று கங்கையில் நீராடிவிட்டு கவலையெல்லாம் போக்கிகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஆனால் தன் பையனை பார்த்துக்கொள்ள ஆல்யில்லாதால் போகமுடியவில்லை. தன் வீட்டிற்கு அருகில்யுள்ள பெரியவரின் உதவியை நாடினாள்.. அந்த பெரியவரும் சரி என்று ஒப்புகொண்டார். ஆனால் பையனோ நானும் வருவேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தான்.. அந்த தாய் மிகவும் கோபம் கொண்டாள், அந்த பெரியவர் நாம் மூவருமே போகலாம் பையனை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். அவளுக்கும் சரியென்றேப்பட்டது பையனை பெரிதும் கடிந்துக்கொண்டாள்.. வா! உன்னை கங்கையில் தலைமுழ்கிட்டு வந்துவிடுகிறேன் என்று பெரிதும் கடிந்தாள்.

மூவரும் புறப்பட்டனர், பொகும் வழியெல்லாம் பையனை கடிந்தவாரே சென்றாள். கடவுளை தரிசித்துவிட்டு கங்கையை கடந்து செல்ல படகில் சென்றனர்.. படகு பாதிதூரம் சென்றதும் கங்கை சீற்றம் கொண்டது எனவே படகு கவிழும் நிலை வந்தது. அப்பொழுது பெரியவர் சொன்னார் உன் வேண்டுதல் பாக்கியுள்ளது அதனால்தான் கங்கை கொபம் கொண்டுள்ளது என்றார். அந்த தாயோ நான் எல்லா வேண்டுதலையும் முடித்து விட்டேன் என்றாள். இல்லை நீ வரும்பொது உன்பையனை கங்கையில் தலைமுழ்கிட்டு வருவதாக சொன்னாய் ஆனால் செய்யவில்லை என்றார். நாம் இருவரும் கங்கையை கடக்கவேண்டும் என்றால் உன் பையனை கங்கையில் மூழ்கவேண்டும் என்றார். தாயும் ஆழ்ந்து யொசித்துவிட்டு பையனை கங்கையில் தள்ளிவிட்டாள். பின் அந்த பெரியவர் தன் வாக்கின்படி அந்தப் பையனை தான் பார்த்துக்கொள்ள முடியாமல் போனதால் தானும் கங்கையில் குதித்துவிட்டார்...

இப்படியாக கதையை சொல்லியிருப்பார்,.. நாம் சொல்லகூடிய வார்த்தை காற்றில் கலந்து துகள்களாக சம்மதம்பட்டவர்களிடம் சென்றடைகின்றது. இப்படி காற்றில் கலந்த வார்த்தைகள் மின்காந்த அலைகளாக அண்டத்தில் பரவலாக செயல்வடிவம் பெருவதற்காக காத்துக்கொண்டுள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும்போது செயல்வடிவம் பெருவதாகவும் சமயக்கொட்பாடும், மனொதியல் கோட்பாடும் கூறுகின்றது.

அனேக பெற்றொர்கள் தன் இயலாமையால் பிள்ளைகளை கடிந்து பேசிவிடுவார்கள். சிலர் சனியனே! என்றும், உனக்கு சாவு வராதா! என்றும், நீ உறுப்படவே மாட்டாய்! என்றும் பேசிவிடுவர்.... இப்படி பேசுவதனால் உங்களுக்கு என்ன நிம்மதியை தந்துவிடும், மாறாக மனம் உளைச்சலைத்தான் கொடுக்கும். மேற்சொன்ன கதை கர்ப்பனையாக இருந்தாலும் உங்களின் வார்த்தை உங்கள் நிம்மதியையும் பிள்ளைகளின் நிம்மதியையும் கெடுத்து அந்த வார்த்தை செயல்வடிவம் பெருவதும் உண்மைதான். வார்த்தையின் சுத்தம் வாழ்வில் இன்பந்தானே! இதன் அடிப்படையில்தான் வயதான பெரியோர்களிடம் நல்லவார்த்தை வாங்க வேண்டும் என்று சொல்வதும். என்ன கொடுமையோ தெரியாது சூழ்நிலைக் காரணமாக பலர் சாபமிடே சென்றுவிடுவர்..

இப்படிப்பட்ட கர்ப்பனையும் நம்பிக்கையும் வாழ்வில் நெறியை வழியுருத்துவதால் பெரியார் பொன்ற சமுதாய சிற்பிகள் குற்றம் கூறமாட்டார்கள் என்பதும் என் என்னமே! கடிந்து பேசுவது பெரியாருக்கும் உண்டு, சமுதாயத்தை சீரழிக்கும் சாதி சமய கர்ப்பனை புற்றை சாகடிக்கும் வேகம்தான் அது.....

கடிக்காக : எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அம்மா எப்பொழுதும் காமடியாக பேசுவார்,... வழியில் செல்லும் மாணவர்களை எப்பொழுதும் கிண்டல் செய்வார்... அதேபொல் அன்று, ஏய் கோபி வா! என்ன நல்லா படிகிறீயா? ம்ம்ம்ம் என்று தலையசைத்தான். என்கே சானா சொல்லு அவன் சா என்பான். என்ன உனக்கு சாவே வராதா என்று கேட்ப்பார், ம்ம்ம்ம் வருமே என்பான் . அப்ப சாவு(இறப்பு) என்று கிண்டல் பன்னூவார்... அவன் சிரித்தவாரே சென்றுவிடுவான்..

0 comments: