_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, October 14, 2008

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

வருவேனா? வரமாட்டேனா? வராட்டி சொல்லமாட்டேன் போ!.. குழப்பத்தில் எந்திரன்...

என்னப்பா, ரஜினி அரசியலுக்கு வந்தா எல்லொரையும் போல நாலு காசு பாக்கலாம் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றமே! அவருக்கொ தன்னுடைய வியாபாரம் முக்கியம் ரசிகனுக்கோ நாலு காசு முக்கியம் என்னபன்னுரது. இடையில் பொறுமையிலந்த கோவை ரசிகர்கள் கட்சியும் அரம்பித்து போஸ்டரும் கலக்கிவிட்டனர்.


கடந்த 7ம் தேதி ரஜினி பெயரில் சிலர் கட்சி துவங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கட்சியில் ரஜினி சேர வேண்டும் என கெடுவும் விதித்திருந்தனர். இது அபத்தமான, கண்டிக்கத்தக்க செயல். விரைவில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பார். அரசியல் குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ரசிகர்கள் அவரை நிர்பந்திக்கக் கூடாது. "ரஜினி ரசிகர்' என்ற போர்வையில் கேலிக்கூத்து நடத்திய, மாஜி மாவட்ட துணைச் செயலர் அபு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டார். கோவையில் கட்சி துவங்கி, ரஜினியின் புகழுக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்றவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நபர்கள் மேற்கொண்டு போஸ்டர்கள் ஒட்டி பிரச்னை ஏற்படுத்தினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்; போலீசிலும் தெரிவிக்கப்படும். இவ்வாறு உலகநாதன் கூறினார்

இதற்க்கு மேல் ரஜினி நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களிடம் எதிர்ப்புதான் வரும். இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அவர் குழப்பத்திலிருந்து இன்னும் வெளிவராமல் மீண்டும் ரசிகனை குழப்பியும் உள்ளார். இதுதான் எந்திரனிம் வியாபரயுத்தி!...

அரசியலுக்கு நான் வந்து தான் ஆக வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
அப்படி நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால், என்னை யாரும் தடுக்கவும் முடியாது' என இறுதியாகவும், உறுதியாகவும் சொல்ல விரும்புகி
றேன். அந்த நிலைமையில் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் என்னுடன் இணைவதை நான் வரவேற்பேன்


இதுபோதும் எந்திரனின் வெற்றி விழாவிற்கு, அப்பரம் எந்திரனில் தான் அரசியலுக்கு வருவதாக சொல்லியுள்ளதாக ஒரு அறிக்கையும் வரும். சாமானிய ரசிகன் எந்திரனை 10 முறை பார்த்து தெரிந்துக் கொள்வான்.. என்ன ரஜினி சார் மனிசனை இப்படியா குழப்புவது? ஓஓஓ நீங்களே குழம்பிதான் இருகின்றீகளா! அதுசரி எப்பதான் உங்கள் குழப்பமும் ரசிகனை குழப்புவதும் நிறுத்துவீர்கள்.... ஒன்னுமட்டும் நிச்சயம் உங்கள் ரசிகர்களை உங்கள் கட்டளையின் கீழ் கொண்டுவரமுடியாது. நீங்களும் ஏமாற வேண்டாம்,... பாவம் உங்களை நம்பி குழம்பிய ரசிகனின் கெதி! அய்யோஓஓஓஓஓஒ.....

பாவபட்ட ரசிகனே! உங்களை நீங்கள் அறிய பல காலகட்டங்களில் தவற விட்டுவிட்டீகள். இது ஒரு அறிய சந்தர்ப்பம் சலுகை முறையில் வாய்ப்புகள்! உங்களை நீங்கள் எண்ணிப்பார்க்க புதியதோர் வாய்ப்பு! புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்குள் உங்கள் குடும்பம் இருக்கின்றது............ ஊதுர சங்கை ஊதிவிட்டேன்!...

நன்றி தினமலர்

வருவதை யாரும் தடுக்க முடியாது: அரசியல் குறித்து ரஜினி

ரஜினி பெயரில் கட்சி ரசிகர்களுக்கு 'கல்தா'

2 comments:

Anonymous said...

அவர் வரமாட்டாரு! வரவேமாட்டாரூ!

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...
அவர் வரமாட்டாரு! வரவேமாட்டாரூ!

October 14, 2008 9:51 AM//
வந்தாலும் ஒன்னும் சொல்லவே மாட்டாரூ..... ஏனா அவரு ஒருதடவை சொன்னா!.....