_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, October 23, 2008

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

மனிதம் காக்க கொண்டாடுங்கள்..தீபதிருநாள்!

வந்துவிட்டது திருவிழா! தீப திருநாள் "தீபாவளி" வந்துவிட்டது.
மனம் அழுத்தம், வேலையின் பழு, குடுப்பத்தில் குழப்பம், நாட்டில் மின் தட்டுபாடு போன்ற பிரச்சனைக்கு மத்தியில் மனிதன் சிறிதேனும் மனம் இழப்பாற இது போன்ற திருவிழாக்கள் தேவையான ஒன்றுதான்.

இதில் தீபாவளி தமிழனுக்கு தேவையா? தீபாவளியின் பொருள் மற்றும் கொண்டாடும் காரணம் என்ன? என்ற கேள்விகளும் வருவதிலிருந்து தீபாவளியின் நோக்கம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதும் தெளிவாகின்றது. என்னை பொருத்தவரை மனிதம் பேசாத, மனித நேயம் சொல்லாத, மனிதத்தை பிரித்து பார்க்கும் விழாக்கள் தேவையே இல்லை. (சரியான வரலாற்று காரணம் இருந்தாலும் கூட). தற்பொது தமிழ்நாட்டை கவ்வும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதூர்த்தி. முஸ்லிம் சகோதரனின் கொட்டத்தை அடக்க வந்த விழாவாக கொண்டாடப்படுவது சிந்திக்க வேண்டிய ஒன்று. இதற்காக பலத்த பாதுகாப்பு அத்துமீறும் வன்முறை இதுதான் நாம் காணும் நல்விழாவா?... இதைதான் மனிதம் சொல்ல வந்த கொண்டாட்டமா?

அது இருக்கட்டும், நாம் அவலோடு எதிர்பார்க்கும் தீபாவளின் கொண்டாட்டத்தின் வரலாற்று காரணம் பலவும் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்.

கோவி. கண்ணனின் தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ? ஆய்வு கட்டுரையாக இருக்கட்டும்...

சு'னா 'பா'னா வின் இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது.........

இருபெரும் ஆய்வு கட்டுரைகளில் அவரவர் வாதத்தை ஞாயபடுத்தி சொன்னாலும்...
தீபாவளி ஒரு அர்த்த மற்ற பண்டிகையானாலும் சரி. வரலாற்று காரணங்களால் சமுக பண்டிகையானாலும் சரி. இன்று நான், நாம் அர்த்தமுடன் கொண்டாடுகின்றேனா? சமூக நல்லிணக்கம் கொடுக்கும் எண்ணதில் கொண்டாடுகின்றோமா என்பதில்தான் தீபாவளிக்கு அர்த்தம் கொடுக்குமேயொழிய உங்கள் வரலாற்று காரணங்கள் ஒன்றும் செய்வதிற்கில்லை. மனிதனுக்கு விழாக்கள் தேவையற்றது என்ற போக்கும் ஞாயமற்றது. விழாக்களுக்கு காரணம் சரியாக இருக்க வேண்டும் என்பதும் முடியாத காரியம். ஆனால் கொண்டாடப்படும் தீபாவளி போன்ற விழாக்களை மனிதம் ஒளிப்பட நாம் செய்யலாமே!!!!

1. ஆதரவற்ற குழந்தகளுக்கு நாம் செய்யும் உதவிகளை அதிக படுத்தலாம்.
2. முதியோர்களின் இல்லங்களுக்கு உணவழிக்கலாம்.
3. பெற்றோர்களால் கைவிடப்பட்ட எய்ஸ் நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு திருவிழா பதார்த்தங்கள் கொடுக்கலாம்( அடுத்த தீபாவளிக்கு இவர்கள் இருப்பார்களா என்பது?????) திருச்சி தஞ்சை மாவட்டங்களில் மட்டும் 45 குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டும், அனாதைகளாகவும் இருப்பதாக அறிந்தேன்.
4. படிக்க வசதியில்லா குழந்தைகளுக்கு ஒரு சிறு உதவிகள் செய்யலாம்.

பின்குறிப்பு: பக்கத்து வீட்டார் மெச்சும் 1000 வாலா சரவெடி தவிற்த்து உதவிகள் செய்யலாமே!!!!

நான் ஒருவனால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை எடுத்து விடுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி பல மாற்றங்களை ஏற்படுத்தும். தீபாவளி கொண்டாட்டங்களை அர்த்தமுடையதாக்குங்கள்... போலி வேதாந்தங்களை ஞாயப்படுத்த வேண்டியதில்லை. தீபாவளி தேவையோ? இல்லையோ? உதவிகள் செய்யும் சந்தர்ப்பமாக பயன்படுத்தினால்... அர்த்தமற்ற தீபாவளியை அர்த்தமுள்ள விழாவாக்கலாமே!! அப்படியே அர்த்தமுல்ல தீபாவளியானால் மேலும் அர்த்தமுல்ல விழாவாக ஆக்கலாமே!!!!

வாருங்கள் மனிதம் காப்போம்!
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்வோம்!!!!!........

அடிமனதை ரணமாக்கும் செய்தி
ஆறு மாத பெண் குழந்தையை உயிருடன் சுடுகாட்டில் புதைக்க முயற்சி :செய்தி தினமலர்

0 comments: