_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, October 31, 2008

பயம் என்னை வென்றதா?

பயம் என்னை வென்றதா?

வணக்கம்!
சின்ன வயசு நினைவுகளை பற்றி சொல்லனும்னா ஒரு மகிழ்ச்சியான மனசுதாங்க வரும். அதிலும் பால்ய வயசு நினைவுகள் சொல்லவே வேண்டாம்.. இப்படி எல்லாமே ஒரு சுகமான நினைவாக வந்து செல்வது பிடித்தமான ஒரு விடயம். சின்ன வயசுல நடந்த பல விடயம் காரணமே புரியாமல் இருக்கும்.


சின்ன வயசு நினைவுகளை சொன்னால் இயக்குனர் தங்கர்பச்சன் சாரோட "அழகி" படம் எல்லோருக்கும் வந்து போகும். அப்படி ஒரு இயல்பான நிகழ்வை கொடுத்து இருப்பார். அதில் பார்த்திபன் சார் தன் குழந்தையின் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போடும்போது சொல்லும் இயல்பு ரொம்பவும் எதார்த்த வார்த்தை....


இப்படி அசைபோட்ட நிகழ்வு ஒன்று........ 4வது படித்துக்கொண்டிருந்த நேரம் என் நண்பன் ஒருவன் என்னிடம் டேய்! உனக்கு சாமிக்கு பயமா? எனக்கு பயமா? என்றான், நான் சாமிக்கு பயம் என்றேன். அவன் என் கண்முன்னே கையை வேகமாக ஆட்டினான், நான் கண்ணை சிமிட்டினேன். இதோ எனக்கு பயந்துடே! என்றான். பிறகு இல்லை இல்லை உனக்கு பயபுடுவேன் என்றென், மறுபடியும் கையை கண்முன் ஆட்டினான் என் கண்கள் சிமிட்டியது. இப்பொ சாமிக்கும் பயந்துடேன்.......


இப்படி பயம் என்பது எப்படியும் வெற்றிப் பெற்றது. மனிதன் வாழ்கை ஒன்றை சார்தே இருப்பது பொல் பயமும் மனிதனை சார்ந்து உள்ளது. ஆனால் பயம் இருக்கும் நிலை பொருத்துதான் அவனை அடையாலம் காணமுடிகின்றது.


பரினாம வளர்சியில் மனிதன் மனிதனாக வாழத்தொடங்கியதும், தன்னை சுற்றி நிகழும் இயற்கை புதுமைகள் எல்லாம் தன்னை அடக்கியாலும் சக்தியாக நினைத்தான். அவைகள் நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக எண்ணியதால், இவன் மீது இயற்கை ஆழ்மைக் கொண்டதன் உணர்வுதான் பயம் உண்டாக்கியது. இயற்கையின் மீது கொண்ட பயம்தான் மனிதனால் கடவுளை உண்டாக்க முடிந்தது. அது இன்றுவரை தொடந்து வரும் படைப்புகள். மனிதனை கடவுள் படைத்தான் என்று மனிதன் கடவுளை படைத்துக் கொண்டே இருக்கும் நிலைதான்..........???????.....!!!!!!....(எந்த குறியை எங்கே பொடுவது தெரியவில்லை)

இப்படி மனிதன் கடவுளுக்கு பயப்புடுகின்றானா என்றால்? ... தெரியவில்லை. நடந்துவரும் கோர நிகழ்வுகள் இல்லை என்றே சொல்லிவிடும். தனி மனிதன் பயமின்றி வாழ்வது இயலாத ஒன்று. ஏதோ ஒரு நிகழ்வுக்கு பயந்தே அகவேண்டிய நிலை எப்பொழுதும் உண்டு. உதாரணமாக மாபெரும் வீரன் சதாம் உசேன் சிறையில் இருந்தபோது தன் துணிகளுடன் மற்றவர்களின் துணிகளையும் காய வைத்த நிலைமை இருந்ததால் கிருமித் தொற்றினால் தனக்கு எய்ட்ஸ் வந்துவிடுமோ என்று பயந்தாராம். இதை அவரே தன்னுடைய ஜெயில் டைரியில் எழுதியிருக்கிறார் . இப்படி மனிதன் உணர்வுகளில் மிக முக்கிய இடத்தில் இருப்பது இந்த பயம் தான்.


பயம் மனிதனை வழிநடத்தும் கைகாட்டி.... எந்த பயத்தை எதற்கு பயன் படுத்துவது என்பதில் தான் நல்லது கெட்டது உருவாக்க முடியும்.... விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைதுளியில் பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு; கோழைத்தனதின் தோழன்; உறுதியிக்கு எதிரி; மனித பயங்களூக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணப் பயத்தை கொன்றுவிடுபவன் தன்னை வென்றுவிடுகின்றான்; அவந்தான் தனது மனசிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.


இப்படி பயத்தை வென்றவன் எதற்க்கு பயந்து வாழ்கின்றான். இப்பொழுதுதான் இன்றய சிந்தனையில், நான் என் நண்பனுக்கு பயப்புடுகின்றேனா? இல்லை கடவுளுக்கு பயப்புடுகின்றேனா? எப்படியும் பயம் என்பது மனிதன் உணர்வுகளில் ஒன்றுதான். வாழ்நாள் முழுவதும் பயம் இன்றி வாழ்வது முடியாத காரியம். எதற்கு?, எப்படி?, ஏன்? நம்மை பயம் ஆழ்கின்றது என்பதுதான் மனிதனை வழிநடத்தும் கரு.


புரட்சி தலைவர் MGR ன் என் அண்ணன் பட பாடலில்
"அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோலைக்கு இல்லம் எதற்கு
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு

நீ கொண்டு வந்தது என்னடா, மீசை முறுக்கு"
என்று பயத்தை போக்கும் வார்த்தைகள் சொல்லப்படும்...


மருத்துவியலில் தொடர் பயம் என்பது ஒரு மனநோய்.. உடன் கவணிக்க வேண்டியது என்று கூறுகின்றது. அப்படிப் பட்ட பாத்திரத்தில் பத்மஸ்ரீ கமலஹாசன் "தெனாலி" என்ற படத்தில் நடித்துருப்பார். கண்டிப்பாக கண்ணொளியை பார்க்கவும்



யாமிருக்க பயம் ஏன்? கடவுளின் தத்துவம்

பயமின்றி வாழ்வதா? இல்லை பயத்தை வென்று வாழ்வதா? முடிவை நம் பக்கம் வைத்து விட்டு தேவையற்ற பயத்தை வென்று மனிதனாக வாழ வாழ்த்துகள் !

0 comments: