_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, November 20, 2008

ம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்?..

ம்ம்ம்ம்ம்ம்.. நாம் எங்கே போகிறோம்?.

நடிகர் பத்மஸ்ரீ கமல் அவர்கள் "மகாநதி" படத்தில் ஒரு காட்சியில் 'நல்லவர்களுகே துன்பத்தை கொடுக்கின்றதே ஏன்? அதான் ஏன்? ' என்று காதலியுடன் புலம்புவதாக அமைத்திருப்பார்கள்.... இந்த காட்சி என்னை பல இடங்களில் நினைத்துப் பார்க்க தூண்டியது.


இந்தியாவில் இந்த நூற்றாண்டுகளில் பல காட்சியமைப்புகள், கோர நிகழ்ச்சிகள், இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட சம்பவங்கள் அனைத்தும் எதோ ஒரு விபத்தாகவும் அல்லது உணர்ச்சியில் உண்டான நிகழ்வாகவும் சொல்வதற்கில்லை... பல நேரங்களில் திட்டமிட்ட சதிகள் அப்பலதிற்கு வந்தாலும் அரசும், மக்களும் ஒன்றுமே கண்டுகொள்ளாதது கமலின் மகாநதி புலம்பல்தான் என்னை ஞாபக படுத்தும். இதில் பத்திகைகளில் வியாபார புத்தியை நினைதாலே கேவலமாக தோன்றும். கோரக் காட்சிகளை வரிசைப்படுத்தி மக்களை தூண்டும் விதமாகவும் உண்மைகள் திசை திரும்பவும் விதமாகவும் இருப்பதை பார்த்தால் பத்திரிகை சுதந்திரம் பாதை மாறிப் செல்வதும் தெரிந்து விடும்..

செங்கலை பார்த்தாலே எனக்கு முதலில் பொரித்தட்டுவது அயோத்தி கலவரம்தான். இந்த கலவரம் இன்றுவரை இந்தியாவின் நிம்மதியை கெடுக்கும் ஒரு நிகழ்வு. இன்றும் இதை வைத்து அரசியல் லாபம் காணும் ஓட்டு பொரிக்கிகள். அன்று என் வயசுக்க்கும் அனுபவத்திற்கும் என்னால்கூட இதை ஒரு விபத்தாக நினைக்க முடியவில்லை இதுவும் ஒரு திட்டமிட்ட சதி என்றே தோன்றியது. இன்றுவரை இந்த வழக்கு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பதும் அரசியல் ஆதாயம்தான் என்று சொல்ல தோன்றாமல் இருப்பது அதிசயம்.

பின் அயோத்தி பிரச்சனைக்கு தொடர் பிரச்சனையாக இருப்பது கோத்ரா சம்பவமும் அதற்கு பின் நடந்த குஜராத் கலவரமும். அயோத்தியில் நடந்த "தூண் தான" நிகழ்ச்யில கலந்துகொண்டு திரும்பிகொண்டிருந்த கரசேவகர்களில் கோத்ரா எனும் இடத்தில் வியாபாரிகளிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அதன் பின் ஏற்பட்ட தீ விபத்தால் 58 பேர் கோத்ரா எனும் இடத்தில் தொடர்வண்டியிலேயே கருகி உயிரிழந்தனர். இஸ்லாமியர்கள்தான் விரைவு வண்டியை எரித்ததாக கூறப்பட்டது. இதை குஜராத் முதல்வர் மோடி பகிரங்கமாக இஸ்லாமியர்களை குற்றம் சாட்டி குஜராத் கலவரத்திற்கு பச்சை கொடி அசைத்தார். சுமார் மூன்று நாட்கள் நடந்த இந்த படுகொலையில் குஜராத் அரசின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும். இந்நிகவுகளை ஒரு விபத்து என்றும் அல்லது உணர்ச்சில் உண்டான நிகழ்வு என்றும் கூறினால் கண்ணிருந்தும் குருடர்களேயாகும்.

மேற்கண்ட நிகழ்வின் சந்தேகமாக கூறப்பட்ட உதாரணம் மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சேவின் கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டான். அதே முறையை கோத்ரவிலும் சங்கபரிவாரங்கள் உபயோகப்படுதியிருக்கும் என்பது நியாயமான சந்தேகம் என்றே நினைக்க தோன்றுகின்றது.

இந்திராகாந்தி படுகொலைக்கு பிறகு நடந்தேறிய சீக்கிய கொலைகள். தற்போது ராகுல் காந்தி அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடதக்கது.

மெலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் விசுவ இந்து பரிஷத்தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி சுவாமி படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது. இதன் தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக கலவரம் தூண்டி படுகொலைகளும் கற்பழிப்பும் அரங்கேற்றியது. ஒரு இன கலவரத்திற்கு முறையற்ற சுழல்களை உருவாக்கப்பட்டதும் எல்லோருக்கும் புரிந்திருக்கும். அதன் தொடராக கர்நாடகத்திலும் தமிழ் நாட்டிலும் மாதா கோவில்களில் கலவரம் எற்பட்டது.

இதேபோல சாதியின் பெயராலும் மதத்தின் பெயாரலும் வன்முறைகள் தூண்டிவிடப்பட்டு முறைகேடான அரசியல் வியபாரிகள் லாபத்தை அனுபவிற்கின்றனர். இதில் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிளக்கல்ல எனபதும் இதயத்தில் பீச்சிய துப்பாக்கி ரவை. சமிபத்தில் நடந்த சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய சம்பவம்....

மேற்கண்ட கொடுமையான நிகழ்வுகளை ஏன் வரும் முன் தடுக்க முடியவில்லை? திட்டமிட்ட இந்த நிகழ்வுகள் அரசு நினைத்திருந்தால் தடுக்க முடியும் ஆனால் செய்யவில்லை. நேற்றய கலவரத்தை பத்திரிகைகள் வரிசைப் படுத்தி (டிசிட்டல் போட்டொகள்) காட்டியுள்ளார்கள். தொலைகாட்சியில் பின்னனி இசையில் வெளிப்படுத்தினார்கள். இப்படி செய்து மேலும் கலவரத்தை உருவாக்கி பெருசுப்படுத்தி லாபம் சம்பாரிக்க வேண்டுமா என்ன? பத்திரிகைக்கு ஒரு தர்மம் உண்டுங்க ... குழந்தைகள் படம், பூக்கள் படம் தெளிவாக இருக்கனும் ஆனால் கோர சம்பவம் படங்கள் கொஞ்சம் தெளிவற்ற நிலையிதான் இருக்க வேண்டும். இதுதான் ஞாயமுள்ள பத்திகைகள் செய்ய வேண்டியது. (அப்படிப்பட்ட நிலையில் "இந்தியா டுடே" எழுதிய விதமும் கொடுக்கப்பட்ட படம் பாராட்டலாம்) இந்த மாணவர் கலவரம் பெரிய அளவில் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே, ... வாழ்க தமிழகம்! வாழ்க தமிழர்கள்!...

இதுபோன்ற கலவரம் மற்றும் கோரச் சம்பவங்களுக்கு வேடிக்கை பார்த்த அரசு, ஒப்புகாக‌ ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும்வண்ணம் ஒரு கமிஷன் ஏற்பாடாகும். பின் கமிஷனும் முடியாது கலவரமும் தொடரும்.. இன்னமும் அயோத்தி கலவர கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்தமில்லா யுகம்காண மாணவர்கள் ஒன்றுபடட்டும்!...............

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,

ஆ.ஞானசேகரன்.

0 comments: