_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, February 19, 2009

காலங்களால் வரும் விடைகள்!....

காலங்களால் வரும் விடைகள்!....
சென்றப் பதிவின் தொடர்சியாக மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... என்ற ஒரு விவாதத்தை கடைசியில் வைத்து சென்றேன். எனக்கும் இந்த விவாதத்தில் ஒரே குழப்பங்கள்தான். இன்றைய இளஞர்களிடம் எதார்த்தமான மனோபக்குவம் காணமுடிகின்றது. இவர்கள் இப்படிப்பட்ட நிலையை ஒரு பிரச்சனையாக நினைப்பதில்லை. சூழ்நிலையால் தவறுகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை காலத்தால் இவர்கள் பக்குவப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இருப்பினும் நாம் பல கண்ணோட்டங்களில் சிந்திக்க வேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம்.. சமீபத்தில் நடிகை குஸ்புக்கு நடந்த விவாகாரத்தையும் நாம் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. சூழ்நிலைக் காரணமாக ஏற்பட்ட தவற்றை சரி என்றோ இல்லை என்றோ சொல்ல நாம் வரவில்லை, அப்படிப்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் முழுமையாக வந்துவிட்டோமா என்ற கேள்வியின் விடையை வைத்துதான் மேற்கண்ட முடிவை சரிப்பார்க்க முடியும். ஏதோ ஒரு காரணத்திற்காக நான் அவளை திருமணம் செய்ய தயக்கப்பட மாட்டேன் என்று கூறினாலும், அவளுக்கு வாழ்க்கை கொடுத்த தியாகிப் போல நடந்துக் கொள்வதனால் என்னப் பயனாக இருக்க முடியும். சூழ்நிலையால் செய்த தவற்றை மன்னிக்கும் பக்குவம் இவர்களிடம் இருந்தால் சாதாரண திருமணப் பந்தங்களில் முறிவுகள் எப்படி வரமுடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையோ திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும்.

அதேபோல் ஒருப் பெண் நான் சூழ்நிலையால் தவறிவிட்டேன், இனி செய்யமாட்டேன் என்று கூறும் நிலை இருக்கின்றது என்று வைத்தாலே, இங்கு எதார்த்தமான நிலை இன்னும் வரவில்லை என்றுதான் பொருள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பெண்ணைப்பற்றி தெரிந்த பின் திருமணம் செய்தால் காலச்சுழலால் அவளை பிரிய வேண்டிய நிலையும் வரலாம் என்று கூறலாம். இங்கு எதார்தமான நிலையிருந்தால் அவள் சொல்ல வேண்டியதும் தேவையில்லையே. அவர்கள் திருமணத்திற்கு முன் அல்லது பின் பிறசூழல்கள் காரணமாக தெரிய வந்தால் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருக்கும் நிலைதான் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட நிலை காலத்தால்தான் வரமுடியும். ஒருவர்கொருவர் சொல்லிக் கொள்வதினால் எந்த பயனும் வராது என்பதுதான் என்நிலை.

மேலைநாடுகளில் ஒருவனுக்கு வரப்போகும் மனைவியானவள் இதற்குமுன் வேரு ஒருவனிடம் பழகி அவன் அவளுக்கு ஒத்துவரவில்லை என்ற நிலையில் இவனை திருமணம் செய்கின்றாள். இதை அங்கு ஒரு பொருட்டாக நினைக்கும் நிலை இல்லை என்பதும் மேலும் இவனும் இதே நிலையில்தான் வந்தவன் என்பதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிலை நம் சமுகத்தில் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றே சொல்லலாம். மேலைநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளிகள் கூட கலாச்சாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்....

சூழ்நிலையால் தவறு செய்தவளை (இருபாலும்) ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று யாரும் நினைக்கும் நிலை இங்கில்லை. அதற்காக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நமது காலம் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்று சொல்லிகொள்வேன். அந்த காலமும் வரவேண்டிய கட்டாயம் வரும் அதுவரை பொருத்திருக்க வேண்டும். மேற்சொன்ன வாதத்தின் முழுமையான விடை காலத்தினால் தான் சொல்லமுடியும் என்பது என் விளக்கம்....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்..

2 comments:

narsim said...

//திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும். //

True..and good write up

ஆ.ஞானசேகரன் said...

/// narsim said...
//திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும். //

True..and good write up///

நன்றி! நர்சிம்... உங்களின் வருகை மகிழ்ச்சியுடையது..