படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம். Tuesday, February 24, 2009
நானும்(நீயும்) ஒரு மில்லியனியர்தான்!...
படிக்கனுங்க?.. அய்யோ! இப்பதான் "சிலம்டாக் மில்லியனியர்" திரைப்படத்தை பார்த்தேன்.... சேரில இருந்த ஜமால் மில்லியனியர் ஆகமுடியுமா?... வாழ்கையின் அனுபவக்கல்வி இருந்தா முடியும் போலதான் தோனுதுங்க,... சிறிய கதை, பெரிய காவியம், நல்ல திரைக்கதை அமைப்பு (திரைக்கதை பற்றி சொன்னா நம்மாளு பாக்கியராஜ் சாரை நினைக்க தோன்றும் "அந்த ஏழு நாட்கள்" திரைக்கதை சொல்லவேண்டியதில்லை படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலம்டாக் மில்லியனியர் படத்தில் உள்ள திரைக்கதை அமைப்பு எனக்கு பாக்கியராஜ் சாரை நினைக்க தொன்றியது, கொஞ்சம் ஓவர்தான் இருந்தாலும் சொல்ல வேண்டியதாக நினைக்கின்றேன்). சிலம்டாக் மில்லியனியர் படம் எட்டு ஆஸ்கர் விருதை தட்டி சென்றுவிட்டது. இது இந்தியர் அனைவரும் பெறுமைப் படக்கூடியது. அதில் இரண்டு விருது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிடைத்தது தமிழகத்திற்கே பெறுமை சேர்கின்றது.... படத்தில் இசை சோக காட்சிகளில் கூட வெற்றிப் பெறவேண்டும் என்ற எண்ணம் தூண்டும்படி எழுற்சியாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்... அந்த பெறுமை ஏ.ஆர். ரகுமானை சேரும். முக்கியமாக சொல்ல வேண்டும் Sound Mixing (சிறப்பு ஒலி சேர்ப்பு) ஒரு புதிய உணர்வையும், அவற்றுக்காண முகவரியும் கொடுக்கின்றது, ரெசுல் பூக்குட்டி பாராட்டலாம். Thursday, February 19, 2009
காலங்களால் வரும் விடைகள்!....
சென்றப் பதிவின் தொடர்சியாக மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... என்ற ஒரு விவாதத்தை கடைசியில் வைத்து சென்றேன். எனக்கும் இந்த விவாதத்தில் ஒரே குழப்பங்கள்தான். இன்றைய இளஞர்களிடம் எதார்த்தமான மனோபக்குவம் காணமுடிகின்றது. இவர்கள் இப்படிப்பட்ட நிலையை ஒரு பிரச்சனையாக நினைப்பதில்லை. சூழ்நிலையால் தவறுகள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை காலத்தால் இவர்கள் பக்குவப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இருப்பினும் நாம் பல கண்ணோட்டங்களில் சிந்திக்க வேண்டிய நிலையில்தான் இருக்கின்றோம்.. சமீபத்தில் நடிகை குஸ்புக்கு நடந்த விவாகாரத்தையும் நாம் கணக்கில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையும் உள்ளது. சூழ்நிலைக் காரணமாக ஏற்பட்ட தவற்றை சரி என்றோ இல்லை என்றோ சொல்ல நாம் வரவில்லை, அப்படிப்பட்ட நிலையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் முழுமையாக வந்துவிட்டோமா என்ற கேள்வியின் விடையை வைத்துதான் மேற்கண்ட முடிவை சரிப்பார்க்க முடியும். ஏதோ ஒரு காரணத்திற்காக நான் அவளை திருமணம் செய்ய தயக்கப்பட மாட்டேன் என்று கூறினாலும், அவளுக்கு வாழ்க்கை கொடுத்த தியாகிப் போல நடந்துக் கொள்வதனால் என்னப் பயனாக இருக்க முடியும். சூழ்நிலையால் செய்த தவற்றை மன்னிக்கும் பக்குவம் இவர்களிடம் இருந்தால் சாதாரண திருமணப் பந்தங்களில் முறிவுகள் எப்படி வரமுடியும். ஆனால் இப்பொழுது உள்ள நிலையோ திருமண முறிவுகளின் சதம் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இந்த உண்மையையும் கணக்கில் எடுத்தால்தான் சரியான பதிலை எதிர்பார்க்க முடியும்.
அதேபோல் ஒருப் பெண் நான் சூழ்நிலையால் தவறிவிட்டேன், இனி செய்யமாட்டேன் என்று கூறும் நிலை இருக்கின்றது என்று வைத்தாலே, இங்கு எதார்த்தமான நிலை இன்னும் வரவில்லை என்றுதான் பொருள். அப்படிப்பட்ட நிலையில் அந்த பெண்ணைப்பற்றி தெரிந்த பின் திருமணம் செய்தால் காலச்சுழலால் அவளை பிரிய வேண்டிய நிலையும் வரலாம் என்று கூறலாம். இங்கு எதார்தமான நிலையிருந்தால் அவள் சொல்ல வேண்டியதும் தேவையில்லையே. அவர்கள் திருமணத்திற்கு முன் அல்லது பின் பிறசூழல்கள் காரணமாக தெரிய வந்தால் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருக்கும் நிலைதான் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட நிலை காலத்தால்தான் வரமுடியும். ஒருவர்கொருவர் சொல்லிக் கொள்வதினால் எந்த பயனும் வராது என்பதுதான் என்நிலை.
மேலைநாடுகளில் ஒருவனுக்கு வரப்போகும் மனைவியானவள் இதற்குமுன் வேரு ஒருவனிடம் பழகி அவன் அவளுக்கு ஒத்துவரவில்லை என்ற நிலையில் இவனை திருமணம் செய்கின்றாள். இதை அங்கு ஒரு பொருட்டாக நினைக்கும் நிலை இல்லை என்பதும் மேலும் இவனும் இதே நிலையில்தான் வந்தவன் என்பதும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த நிலை நம் சமுகத்தில் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்றே சொல்லலாம். மேலைநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளிகள் கூட கலாச்சாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்கள்....
சூழ்நிலையால் தவறு செய்தவளை (இருபாலும்) ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று யாரும் நினைக்கும் நிலை இங்கில்லை. அதற்காக எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டுதான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றால் நமது காலம் அதற்கு இன்னும் பக்குவப்படவில்லை என்று சொல்லிகொள்வேன். அந்த காலமும் வரவேண்டிய கட்டாயம் வரும் அதுவரை பொருத்திருக்க வேண்டும். மேற்சொன்ன வாதத்தின் முழுமையான விடை காலத்தினால் தான் சொல்லமுடியும் என்பது என் விளக்கம்....
அன்புடன்
ஆ.ஞானசேகரன்..
Monday, February 16, 2009
மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி...
காடுவரை பிள்ளை,.. கடைசிவரை யாரோ?.. -கவிஞர் கண்ணதாசனின் வரிகள்......
கடைசிவரை பிள்ளை வருவது இருக்கட்டும், உயிர் உள்ளவரை கூடவே இருப்பவள் அது மனைவியாகதான் இருக்கும், இது மனைவிக்கும் பொருந்தும். இந்த கணவன், மனைவி உறவு என்பது பல பந்தங்களை உருவாக்கும் உறவாகதான் இருக்கும். இதுபோகட்டும் இந்த உறவுகளில் உள்ள மனக் குழப்பங்களைதான் வருடிவிட பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.
என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் பேச்சுவாக்கில் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண் கொடுங்கள் உங்கள் மனைவியிடம் உங்களை பற்றி சொல்லி வைக்கவேண்டும் என்று எல்லொரையும் போல கேட்டார். அதற்கு நான் அதுவும் சரி நானும் என்வீட்டு எண்ணை தருகின்றேன், நீங்களும் உங்கள் வீட்டு எண்ணை கொடுங்கள்,... ஒரு மணி நேர அவகாசம் பொய்யான தகவல்களை சொல்லிப் பார்க்கலாம் என்றேன், நண்பர் சிறிது ஆடிப் போய்விட்டார். மேலும் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று விலகிவிட்டார்.. ஆனால் அவர் மனதில் ஒரே குழப்பம் வீட்டுக்கு சென்றதும் அவர் மனைவியிடம் நடந்ததை சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி நம்பும்படி இருந்தால் நம்பிதானே ஆகவேண்டும் என்று சொல்லியதும் அவருக்கு மேலும் குழப்பமாக இருந்தது. மறுநாள் அவர் மனைவிடம் கேட்டதை என்னிடம் சொல்லி, எப்படிதான் உண்மையாக இருந்தாலும் இந்த மனைவிமார்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் சில விவாதங்களை சொன்னேன், நம்பிக்கை என்பது மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ இருப்பது காலத்தின் கட்டுபாடாகதான் எனக்கு தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு எவ்வளவு காலங்கள் கட்டியாள முடியும். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களினால் தகற்ககூடிய இந்த நம்பிக்கையால் என்ன பயன் இருக்கமுடியும். நம்பிக்கை என்பது வேண்டும்தான் ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் வைத்து என்ன சாதிக்க முடியும். இந்த கணவன் மனைவி உறவில் மன்னிப்பு என்ற ஒரு மருந்து இருந்தால் நம்பிக்கைக்கு உரமாக இருக்கும். இந்த உறவுகளில் நம்பிக்கையுடன் மன்னிக்கும் பழக்கம் இருக்குமாயின் எத்தனை சென்மங்களாயினும் உறவில் பிரிவில்லை என்பதுதான் என்வாதமாக இருந்தது.
மன்னிப்பார்கள் என்பதற்காக தவறுகள் செய்யலாம் என்று அர்த்தமில்லை. பொய்யான தகவல்களாலும், புரிதலின் தவறுகளினாலும் உருவாகும் பிரிவுகள் இந்த மன்னிப்பால்தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதுதான் என் வாதமாக இருக்கும். அதற்காக நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை எல்லா உறவுகளின் நம்பிக்கை மன்னிக்கும் பண்பினால் உருவாக்கப்பட வேண்டும் எனபதே என் கருத்தாக வைக்கின்றேன். அதன்பின் உங்கள விருப்பம் விஜய்காந்த் (திரைப்படம்) பாணியில் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றால், உறவுகளை நீதிமன்றத்தில்தான் சந்திக்கவேண்டும். நீதிபதியிடம் வைக்கும் நம்பிக்கையை உறவுகளிடம் வைத்து மன்னித்தால் காலம் நம் கைகளில்......!
இயக்குனர் பாக்கியராஜ் சின்னவீடு திரைப்படத்தில் " பொதுவா ஆம்பளங்க உண்மையில் நல்லவங்க, சமயம் கிடைச்சா சங்கதில வல்லவங்க" என்னை பொருத்தவரை இந்த வரிகளில் சமயம் என்பது பெண்ணால் எற்படும் சூழல்கள் என்றுதான் கூறுவேன். இதில் பெண்ணுக்கு ஆணால் ஏற்படும் சூழல் என்பதும் பொருள்தானே!... இதில் மேற்கூறிய நம்பிக்கையில் மன்னிப்பு என்ற நிலை இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் போய்விடும்.
நான் திருமண வயதில் இருக்கும்போது நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு விவாதம் வைக்கப்பட்டது. ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... இந்த விவாத அடிப்படையில் நான் என் கருத்தாக அடுத்த பதிவில் கூறுகின்றேன்..
Thursday, February 12, 2009
என்று தனியும்?... எங்கும் சுதந்திர தாகம்!...
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது எல்லா சாமானியனின் எதிர்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. மேலும் முத்துகுமார் போன்றவர்களின் தீக்குளிப்புகளும் உருவாக்கியுள்ளது. எதுவாகினும் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடுகள் இருக்க கூடாது. அது இலங்கை தமிழாரக இருந்தாலும் இல்லை ஈழத்தமிழராக இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும் அது ஒரு பிரச்சனையில்லை. Monday, February 9, 2009
சும்மானாச்சிக்கு!....
நாம் பேசுர வார்த்தைகளில் பல வார்த்தைகள் தமிழில் இருக்கின்றதா? என்றால் இல்லைதான் அதற்காக அந்த வார்த்தைகளை பேசாமல் விட்டுவிட்டால் நாம் பேசுவது செயற்கையான தோற்றத்தை கொடுக்கும் என்பதே என் எண்ணங்கள். அப்படிப்பட்ட வார்த்தைகளில் "சும்மா"வும் ஒன்று இந்த சும்மா இல்லாமல் சும்மா எதையும் பேசுவது சும்மா சொல்லகூடாது பேசுவதே கடினம்தான். இப்படிதான் சென்றப்பதிவில் முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?... என்ற பதிவில் கொஞ்சம் குத்தலாக இருக்கட்டுமே என்று இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்
- என்று எழுதியதை பார்த்த நண்பர் ஒருவர் இந்த வார்த்தை பேச்சில் உள்ள தமிழாக உள்ளது இதற்கு பதிலாக சரியான தமிழ் சொல்லை பயன் படுத்தி இருக்கலாமே என்று கூறினார். அவர் கூற்று சரி என்றாலும், நான் அவரிடம் அந்த இடத்தில் கொஞ்சம் கடுமையாக இருக்க இந்த சும்மானாச்சிக்கும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சும்மானாச்சிக்கும் சும்மா போட்டுவிட்டேன் சும்மா இருக்கட்டுமே இந்த சும்மானாச்சிக்கும் என்றதும், அவரும் சும்மா போய்விட்டார். இப்படி பல வார்த்தைகளை சும்மா பயன் படுத்திதான் வருகின்றோம்.
இப்படிதான் கோவையில் இருக்கும் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கையில் " எச்சாதானே" இருக்கு என்னிடம் கொடுங்கள் என்றார்" எனக்கு முதலில் புரியவில்லை பிறகு எச்சா என்றால் அதிகமாகவா என்றேன். அவர் ஆம் என்றார், அது ஆங்கில வார்த்தை எக்ஸ்ட்ரா (extra) போல் உள்ளதே ஆங்கில வார்த்தை மறுவி வந்துள்ளத்தா? என்று கேட்டேன். தெரியவில்லை கோவையில் என் பாட்டி முதல் இந்த வார்த்தையை பயன் படுத்துகின்றோம் என்றார். அதை சரி பார்க்கும் எண்ணத்தில் மற்றொரு கோவை நண்பரிடம் நான் சென்று வேண்டும் என்றே, எச்சா எதாவது இருக்கா? என்று கேட்டேன், அவரும் இல்லை என்று சாதாரணமாக சொன்னதால் அந்த வார்த்தை அவர்களிடம் பழகியுள்ளதை புரிந்துக்கொள்ள முடிந்தது. மேலும் அவரிடம் எச்சா என்ற வார்த்தையை சரிப்பார்க்கதான் நான் கேட்டதாக சொன்னதும் அவர் என்னிடம் சில கேள்விகளாக விளக்கமும் சொன்னார். அதேபோல் காய்ச்சல் என்பது தமிழ் மொழி என்றால் ஜுரம் என்பது என்ன மொழி? மருத்துவமனை என்பது தமிழ் என்றால் ஆஸ்பத்திரி என்பது என்ன மொழி? .. என்று கேட்டதும் ம்ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டினேன்.
பிறகு எம்டன்மகன் எந்த மொழி என்று கேள்விகளுடன் ஒரு விளக்கமும் சொன்னார். எனக்கும் சரிதான் என்றே தோன்றியது. இரண்டாம் உலகபோரில் ஜெர்மன் நாட்டு சர்வாதிக்காரன் ஹிட்லர் தலைமையில் இந்தியாவின் கடலோரத்தில் M10என்ற நீர்முழ்கி கப்பல் காத்திருந்து அந்த கப்பலினால் இந்தியாவிற்கு எதேனும் ஆபத்தா? என்று நடுங்கிக் கொண்டு இருந்தார்களாம், பிறகு அந்த கப்பலால் ஆபத்தின்றி கப்பல் திரும்பி சென்று விட்டதாம். இந்த பயம்தான் பயன்காட்டும் அப்பாக்களுக்கு எம்டன் என்று கூறுகின்றார்கள். என்று கூறிய விளக்கமும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது. இதில் மாற்று விளக்கம் இருந்தால் ஆய்வாளர்கள் யாரேனும் சொன்னால் நலமாக இருக்கலாம்..
Sunday, February 8, 2009
சொர்க்கம் என் கைகளில்!...
ப்பேன்... என் பாட்டி கதை சொல்லனும்னா நான் ங்ங்ங்ங்.. சொல்லனும். நான் ங்ங்ங்ங்.. சொல்லனா நான் தூங்கிடேனு அர்த்தம். எப்பவும் இப்படிதான் என் கதை கேட்கும் நேரம். பாட்டி சொன்ன கதைனா நல்லதங்காள் கதை, அர்ச்சந்திரன் கதை அப்பறம் சாமி கதைகள். சாமி கதைனா நான் கொஞ்சம் ங்ங்ங்ங்... அதிகமா சொல்லுவேன். சாமிக்கு நல்லது செய்யுறவுங்களதான் புடிக்கும் என்று சொல்லும் பாட்டியிடம் நான் எப்பவும் கேட்கும் கேள்வி தப்பு செஞ்சா என்ன பன்னும் சாமி கேட்பேன். தப்பு பன்னுறவுங்களை சாமி அவுங்க இறந்த பிறகு நரகத்தில் போடுவார்கள் என்பாள். எப்பவும் நல்லது செய்தால் நாம் சொர்க்கத்திற்கு போகாலாம் என்றும் சொல்லுவாள் என் பாட்டி....
ஒன்றை நாம் நம்பும்படி இன்னமும் காலம் கடத்திக்கொண்டே இருக்கின்றோம். அப்பறம் சில கேள்விகள் என் மனதில் தோன்றிய காலங்கள் அர்ச்சந்திரன் மாதிரி உண்மை பேசி எந்த துண்பதிலும் நல்லதே செய்து காத்திருந்த சொர்க்கம் என்னா என்றால் பசி இல்லா உலகம் உழைபே இல்லா உலகமுனு நினைச்சா! புரியலங்க ...... இந்த பூமியை விட சிறந்த சொர்க்கம் இருக்கா என்னால ஒத்துக்க முடியலங்க! இதுதான் சொர்க்கமா தோனுது. எனக்கு பசிக்கனும் அதனால உழைக்கனும் இதுல கிடைக்குற மகிழ்சியை பாட்டி சொன்ன சொர்க்கத்தில இருக்கா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இப்படி சொர்க்கமா இருக்குற பூமியை சொர்க்கமாவே இருக்க நாம தாங்க நல்லது பன்னனும். இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு எங்கேயோ இருக்கா இல்லையா என்று தெரியா சொர்க்கத்தை காண இந்த வாழ்நாள் எல்லாம் தேடிகொண்டே இருப்பதுதான் தெரியலங்க.Tuesday, February 3, 2009
முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...
கடந்த 25ஆண்டுகாளாய் அனலை கக்கும் எரிமலையாய், தமிழனை பூண்டோடு அழிக்க நினைக்கும் சிங்கள அரசின் கோரத்தாண்டவம்.... கொடூரமான கொலைகள், மற்றும் பள்ளிசிரார்களை சுட்டுத்தள்ளும் சிங்கள ராணுவம், கற்பழிப்புகள் என இன்று மட்டும் இல்லை ஒரு தலைமுறைகளாக நடந்து வருகின்றது..
சிங்கள ராணுவத்திற்கெதிராக பொதுவாக தமிழனின் பாதுகாவலாக புலிகளின் படைகள் சன்டையிட்டு வருகின்றது. இன்று இலங்கை அதிபர் ராஜபக்சே இன்னும் சிலநாட்களில் புலிகளை முழுமையாக அழித்துவிடுவோம் என்று போரை தீவிரப்படுத்தியுள்ளார். போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதுதான் முத்துகுமாரை உருவாக்கி உள்ளது... அதுமட்டுமில்லை தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழனை சொந்த அரசியல் லாபத்திற்காக ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதும், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்...
முத்துகுமார் தீகுளிப்பு நடந்து முடிந்து விட்டது.... நம்மால் தடுக்க முடியாமல் போனது நிச்சயம் நமக்கு ஒரு தலைகுனிவுதான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் தீக்குளிக்கும் முன் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பின்னர்தான் தான் வைத்திருந்த மண்ணெயில் தீக்குளித்துள்ளார்...
(முத்துகுமாரின் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... சுட்டி சுட்டவும்) நான்கு பக்கங்கள் எழுதிய முத்துகுமாரால் ஒரு நிமிடம் சிந்தித்து தவிற்த்திருக்கலாம்.... அல்லது பிரசுரம் படித்தவர்களாவது காப்பாற்றியிருக்காலாம் என்றே தோன்றுகின்றது. மாறாக அரசியலாக்கி தினம் கொள்ளப்படுகின்றார் என்பதை எண்ணும் போழுது வேதனைதான் மிச்சம். என்னை பொருத்தவரை தமிழனுக்கு வீரன் தேவையே ஒழிய தியாகிகள் தேவையில்லை.. முத்துக்குமாரின் இழப்பு உண்மை தமிழனுக்கு ஒரு பேரிழப்புதான். போராட்டத்திற்கு இதுதான் வழியா? தமிழா சிந்தித்து பார்? இன்று நாம் இழந்த ஒரு முத்துகுமார் போதும்..... இலங்கை போரில் தமிழனின் உயிர்கள் சூரையாடப்படுகின்றன. அவனுக்கு உயிர்கள் தேவையில்லை வீரர்கள்தான் தேவை.. தொடரும் முத்துகுமாரர்கள் நிச்சயம் தேவைப்படாது...
இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி விஷம் குடித்த மாணவர்களுக்கு சிகிச்சை
டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியவர் கைது நன்றி தினமலர்
இளஞர்களே! போராடுங்கள்... ஒன்றுபடுங்கள்! முத்துகுமாரால் கொடுக்கப்பட்ட தீ உங்களிடம் உள்ளது, அந்த தீ தமிழனின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் பயன்படுத்த படவேண்டுமேயொழிய உயிரை விடுவதற்கு இல்லை.... முத்துக்குமாரின் இந்த எண்ணம் ஒரு தியாகம் என்று சொல்லி பல முத்துக்குமார்களை உருவாக்க வேண்டாம்.. தினம் செத்து மடியும் இலங்கை தமிழனுக்கும் தியாகிகள் தேவையில்லை... போராடும் வீரர்கள்தான் தேவை.. இந்த போராட்டம் பத்தாது சிந்தித்து கலம் இறங்குகள்! மொத்த இந்திய அரசை திசைதிருப்பி போரை நிறுத்துங்கள்... காலம் கடந்துவிட்டோம் மிச்சமுள்ள உயிர்களையாவது காப்பாற்றலாம்... தயவுசெய்து முத்துக்குமாரின் மரணசாசனத்தில் அரசியல் நடத்தாதீர்கள்..
என்னால் தீகுளிப்பை ஞாயப்படுத்தவோ, இல்லை கொச்சப்படுத்தவோ முடியாது... இன்று மரணதில் போராடும் இலங்கை தமிழனுக்கு நம்முடைய ஒன்றுப்பட்ட போராட்டம்தான் தேவையே இன்றி உயிர்கள் இல்லை.... தியாகிகளும் தேவையில்லை..... மேலும் முத்துக்குமாரர்கள் உருவாகவேண்டாம், உருவாக்கப்பட வேண்டாம் என்பது தமிழர்களிம் எண்ணம்....
மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் நன்றி நக்கீரன்
புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்
அன்புடன் ஆ.ஞானசேகரன்
Thursday, January 29, 2009
வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...
தீபாவளி என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்... அதிலும் ராக்கட் வெடி என்றால் அதில் ஒரு தனி ஆசைதான், அப்பாவிடம் அடம்பிடித்து பெரிய அளவில் உள்ள ராக்கட் வெடிதான் வேண்டும் என்று வாங்கிவிடுவோம். "அப்பாடி பெரிய ராக்கட்" அருகில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் கூப்பிட்டு அந்த ராக்கட் விட தயாராகுவோம். பழைய சோடாப்பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு பாட்டிலை நிறுத்தி வைத்து அதில் அந்த ராக்கட்டை சரியாக நிறுத்தி நண்பர்கள் கோசமிட நெறுப்பை பொருத்தி ராக்கட்டை செலுத்தியதும் ஒரே மகிழ்ச்சிதான். சிலசமையம் ராக்கட் பக்கத்தில் உள்ள கமலா அக்கா விட்டுக்குள் சென்றுவிடுவதும் பின் கமலா அக்கா எங்களை விரட்டுவதும் இன்னும் பசுமையா இருக்கின்றது.....
என்னங்க இப்படி விட்ட வெடி ராக்கட்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த நம்மால் நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க அனுப்பிய சந்திரயான் -1 100வது வெற்றியை மகிழாமலா இருக்கமுடியும்.. இந்தியாவிற்கும் இந்தியனுக்கும் இது ஒரு மைல்கல்தான்... நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -1 வெற்றிகமாக 100வது நாளாக தனது பணிகள் செய்துகொண்டே வருவது நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் மிகையாகாது.

நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் தன் குழந்தை சந்திரயான் -1 வின்னில் செலுத்தும் பொழுது நம் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பும். அதன் வெற்றிக்கு பின் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் என்னவென்று சொல்ல..... கிழே உள்ள சுட்டியில் காணோளி உள்ளது சுட்டி பார்க்கவும்>>>>> அப்படி இப்படி உள்ள வீடியோவை மெனக்கட்டு உற்காந்து பார்க்கும் பொழுது இதை பார்க்க மாட்டோமா? பார்க்கனும்ங்க.... ம்ம்ம் பார்க்கனும் சுட்டியை சுட்டுங்க>>>>
Launched on Oct. 22, 2008 from SDSC SHAR, Sriharikota, INDIA
India's First Mission to Moon
Lunar Flythrough of Chandrayaan-1
Lunar Flythrough of Chandrayaan-1
ம்ம்ம்ம்ம்ம் அம்மாம்தூரம் உள்ள நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க சென்ற நம்மால்... இங்கே நம் கக்கத்தில் இருக்கும் நம் சகோதரனின், சகோதரியின் குசேலம் விசாரிக்க மாட்டோமா? ராக்கட் விடவேண்டாம்ங்க கரம் நீட்டினாலே போதும். சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இன்னமும் இலங்கை தமிழின் துயர் துடைக்க உங்கள் நாடகத்தை நிறுத்தி விட்டு கரம் கொடுங்க போதும்.. அதைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.....
புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்.
நன்றி தினமலர்:
சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா
ஜனவரி 29,2009,12:54 IST
பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ' மூன் இம்பாக்டர் பிரோப் ' நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ' மூன் இம்பாக்டர் பிரோப் ' எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது
Tuesday, January 27, 2009
இயற்கை இயற்கையாக!...
ல்லை. ஒருநாள் ஒரு கிளி வெளியில் பறந்து சென்று விட்டது என்று மிகவும் வருத்தப்பட்டார். நான் பரவாயில்லை விடுங்கள் அது சந்தோசமாக இருந்துவிட்டு போகட்டும் என்றேன். அவர் சொன்னார் இல்லை சார் அந்த கிளி எங்கள் வீட்டில் 10வருடம் இருந்துவிட்டது வெளியில் சென்றால் மற்றகிளிகளுடன் போராட பழக்கமில்லாமல் இறந்துவிடும் "அதுதான்" வருத்தமாக இருக்கின்றது என்றார்...........??????? மேற்கண்ட படத்தின் சாரம், ... உங்களின் உணவு அவைகளுக்கு ஏற்றவையாக இல்லை என்பதை குறிக்கும்... சிங்கபூரில் இயற்கையான விலங்கினங்களுக்கு உணவழித்தால் அபதாரமும் விதிக்கப்படுகின்றது..
மனிதன் இயற்கையின் அங்கமாக இருந்தாலும் அவனின் ஆறரறிவு இயற்கையை ரசிக்கலாமே தவிற அவற்றை தடுக்கவோ கெடுக்கவோ செய்வானாயின், தீவிறமான பாதிப்பை சந்தித்தே ஆகவேண்டும்.. அந்த இயற்கையின் அழகிற்கு இயற்கையே சொந்தகாரன்..... அந்த இயற்கையின் அழகில் (படம் பார்க்க.....) கல்லை கக்கத்தில் வைத்துக்கொண்டு வளரும் மரம்,....... மர கிளைகளில் பூத்தும் காய்த்தும் சிரிக்கும் மரம்,...... முயலின் முக சாயலில் இருக்கும் பூ..... இப்படி இயற்கை இயற்கையாக இருக்கும் வரை அவைகள் அழகுடனும் நம்மோடு வாழும் என்பதே என் எண்ணம்!.......
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்., ஆ.ஞானசெகரன்.
Sunday, January 25, 2009
நாம் கண்ட குடியரசு!........
நன்றி விக்கிபீடியா


