"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். "- திருக்குறள்
நான் படித்த பள்ளியில் வாரம் ஒரு முறை ஒரு வகுப்பு தோட்டக்கலை பாடம் இருக்கும். எனது ஆசிரியர் திரு ராமச்சந்திரன் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். தோட்டத்தில் எது செய்தாலும் அறிவியலும் சேர்ந்தே சொல்லுவார். மேலும் அதை செயல் விளக்கமாக சொல்லுவார். அன்று அவர் சொல்லி தந்தது தாவரங்களில் இனப் பெருக்கம் மற்றும் இனப் பெருக்கத்தின் நுண்ணியல் பற்றியும் விளக்கினார். இனப் பெருக்கத்தில் விதைத்தல், போத்து நடுதல், பதியம் இடுதல், ஒட்டுதல் பற்றி தெளிவாக கூறி சில செயல்முறைகளையும் காட்டினார். இன்னும் எனக்கு நினைவில் உள்ளது........
அன்று ஒட்டுதல் பற்றி விளக்கமும் செயல்வடிவமும் நடந்தது. உயர் ஜாதி வகை மாமரத்தையும் கொட்டை மா கன்றையும் வைத்து ஒட்டுதல். இதனால் கொட்டை மா நல்ல மா வகையாக மாற்றம் வரும் என்று கூறினார்.. நான் வீட்டுக்கு சென்றதும் இதே ஞாபகம் மற்றும் குழப்பம்.....
இப்படி ஒட்டி சேர்க்கை செய்து புதிய வகை மா உருவாக்கப் படுகின்றதே, அதே போல் ஒரே மரத்தில் மா, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு பொன்ற மரகன்றுகளை ஒட்டுதல் செய்தால் ஒரே மரத்தில் எல்லா வகையான பழங்கள் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியது. மறுநாள் காலை பள்ளிக்கு சென்றதும் முதலில் என் ஆசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் சிரித்தார் மேலும் ஒரே வாகை பயிர்களைதான் ஒட்ட முடியும் ஏனனில் அதன் செல்கள்தான் ஒட்டிக்கொள்ளும் மாற்று கன்றுகள் ஒட்டாமல் காய்ந்துவிடும் என்றார். இது எனக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. மாறாக மேலும் நல்ல விவரங்கள் தெரிந்தது.
கீழெ உள்ள படங்களில் உள்ள செடிகளை பார்த்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. அதை உங்களிடம் பகிர்வதில் ஒரு ஆணந்தம்........
மேலெயுள்ள இரண்டு படங்களை பார்க்கும்பொழுது இதன் தண்டு ஒரு தூண் போல தெரியும். ஆம் இதில் எட்டு ஒரேவகையான செடியைக் கொண்டு ஒட்டுதல் மூலம் ஒவ்வொரு செடியுடன் ஒட்டி ஒரு தூண்போன்று அழகாக வடிவம் கொடுத்துள்ளார்கள். இதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியையும் வியப்பையும் கொடுத்தது.........
மற்றொன்று கீழ் உள்ள படம் செடியின் தண்டு பாகம் பின்னல் வடிவில் இருக்கும். இதில் மூன்று ஒரே வகை செடியை சடை பின்னுவதுபோல பின்னி அழகாக வைத்துள்ளார்கள். இவற்றை பார்க்கும் பொழுது நம் இந்திய நாட்டின் விவசாயத்தை நினைக்க வைக்கின்றது......

நம் நாடு இந்தியா ஒரு விவசாய நாடு. கிராமங்கள் அதிகம் கொண்டுள்ள மாபெரும் நாடு. கிராமங்களில் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் அதன் சார்புள்ள தொழில்கள்..
நான் சிறுவானாய் இருக்கும் பொழுது வயல்வெளிக்கு சென்று வருவேன். அதிலும் நெற்பயிர் வந்த பிறகு வயல் வெளியில் நடந்து சென்றால் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் எல்லா இடங்களிலும் இருக்கும். இந்த சத்தம் முதிர்ந்த நெல் மணிகள் காற்றில் உரசி கொள்வதால் வரும் சத்தம்.. கேட்க நன்றாக இருக்கும். அனுபவித்தவர்களுக்கு புரியும் என்றே நினைக்கின்றேன்.. எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் எங்கள் ஊரில் மூன்று வைகை நெற்கள்தான் பயிரிட்டனர். வெள்ளைக்கொடி, சம்பா, சிகப்பு பொன்னி போன்றவை.. பின்னர் வேளாண்மை ஆராய்ச்சிக்கு பின் நுண்ணியல் மகரந்த சேர்க்கையால் பல ரக நெல் மணிகள் வர ஆரம்பித்தது. இதனால் குறைந்த காலாத்தில் நிறைந்த மகசூல் என்ற நிலை உருவானது... இதன் பின் ஐ ஆர்-8, கோ-1, கோ-2 என பல புதினம் காணமுடிந்தது.
இன்றய காலத்தில் கிராமங்களிருந்து மக்கள் நகரங்களுக்கு வேலைத்தேடி சென்று விட்டனர்( என்னையும் சேர்த்தே). தற்போது கிராமங்களில் விவசயத்திற்கு போதிய வேலை ஆள் இல்லாமல் நலிந்துள்ளது. இது இப்படியே போனால், நாம் அண்டை நாடுகளில் கையேந்தும் நிலையும் வரலாம். அதற்குள் நம் அரசாங்கம் முன் ஏற்பாடு செய்யவேண்டியது கடமை. மேலைநாடுகளை போல விதை தெளிக்க, நாற்று நட, கதிர் அறுக்க போன்ற வேலைக்கு நம் நாட்டிற்கு ஏற்றப்படி புதிய கருவிகள் உருவாக்கவும், அதன் தொழிநுட்பம் இஸ்ரேல் போன்ற நாடுகளிருந்து பெறுவதற்கும் இந்த அரசுதான் செய்யவேண்டும். அப்படி ஒரு பசுமைப்புரட்சி வராவிட்டால் நாளைய உலகம் அழியும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.....
நான் சென்றமுறை இந்தியா வந்திருந்த பொழுது கதிரடிக்க எந்திரம் சில பார்த்தேன். மிக பெரிய வகையாக இருந்தது. நம் கிராமங்களில் வயல் வெளிகள் சிறிது சிறிதாகத்தான் இருக்கும் இதனால் இதை வைத்து சரியாக கதிர் அடிக்க முடியவில்லை. நம் நாட்டு சூழல்களுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க. நம் அரசாங்கம் ஊக்கம் கொடுக்க வேண்டும் எனபதும் எல்லொருடைய ஆசைகள்..
அன்புடன்,
ஆ.ஞானசேகரன்
மேலும் முக்கிய செய்தி இன்று தினமலரில் உங்களுடன் ஒரு பகிர்வு....
கரும்பு சாகுபடிக்கு அதிநவீன இயந்திரம்.....
