Friday, August 29, 2008
வெற்றியின் ரகசியம் (பரமரகசியம்)
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிக் காண்பதில்லை!
வெற்றிப் பெற்ற மனிதரெல்லாம் புத்திச்சாலியுமில்லை!....... (சந்திரபாபு)
எங்கள் ஊரில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த சிறப்பு இப்பொழுது இல்லை என்பதும் வருத்தப்படவேண்டிய ஒன்று. பொங்கல் விழாவில் போட்டிகள் நடத்துவார்கள், போட்டிகளில் பங்கெடுப்பதும் பார்ப்பதும் தனி அலாதியான மகிழ்ச்சிதான்... இப்படிப்பட்ட போட்டிகளில் மிகமுக்கியமான போட்டி கபடி, மாட்டு வண்டி வேகப் பந்தயம் மற்றும் மிதிவண்டி வேகப்போட்டி.
மிதிவண்டி வேகப்போட்டியில் அதிகமான இளஞர்கள் கலந்துகொள்வார்கள். இந்த போட்டியில் இரண்டு மூன்று ஊரெல்லைகளை தொட்டு வரவேண்டியிருக்கும்.. இந்த போட்டியில் தொடர்ந்து மூன்று முறை ஒரு பெரியவர் வெற்றிப்பெற்றார். வேட்டியை கோவணமாக கட்டிக்கொண்டு தனது பழய மிதிவண்டியில் செல்லும் வேகமொ தனி புகழ்தான். ஒருமுறை அவரிடம் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டேன், ... நான் வெற்றிப்பெறவேண்டும் என்று எண்ணத்துடன் கலந்துக்கொள்வதில்லை என்னுடைய பங்களிப்பை கொடுப்பதற்காகதான் கலந்துக்கொண்டேன். அதுபோல நான் செல்லும்போது வேகம் சீராக செல்லுவேன் பதட்டப்படமாட்டேன். எனக்கு முன் செல்லுவோரை பற்றி கவலைப்படாமல் அவரை முந்திசெல்ல முயற்சியும் செய்யமாட்டேன். எனக்கு பின் வருவோர் என்னை முந்தாமல் பார்த்துக்கொள்வதுடன்... என்னுடைய சீரான வேகம் குறையாமல் பார்த்துக்கொள்வேன். இதுவே என்னை வெற்றியடைய செய்கின்றது என்று கூறினார்..
ஆமங்க இந்த வெற்றியின் ரகசியம் போட்டிகளில் மட்டுமில்லைங்க, வாழ்கையில் வெற்றிப்பெறுவதற்கும் பொருத்தமாகதான் இருக்கும். இதுபோல என்னுடைய வெற்றியும் சிறப்புதானுங்க.. இந்த போட்டியில் வெற்றி எனக்கு மட்டுமே. என்னுடைய போட்டி ஒரு தனிக்கோடு இதில் போட்டி வைப்பவனும் போட்டியில் கலந்துக்கொள்பவனும் நானே! இங்கு வெற்றி பெறுவதும் நானே!.... போட்டி நேற்றைய நானுக்கும் இன்றைய நானுக்கும் நடக்கும், போட்டியில் வெற்றிப்பெறுவது இன்றைய நான். பின் இன்றைய நான் நாளைய நான்னுடன் போட்டியிட தயாராகும். இதில் வெற்றிப்பெறுவதும் நாளைய நானே!! எப்பொழுதும் வெற்றியின் மகழ்சியிலிருப்பதும் நானே!!!...
நீங்களும் உங்களுடன் போட்டியிட்டு வெற்றிப்பெற வாழ்த்துகளுடன் உங்களின் பிரியமான நான்...
விஜய்-ன் வில்லு
Monday, August 25, 2008
சீனர்களின் நம்பிகையில்-என்பார்வை!
மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மக்கள் வளத்தை மட்டுமே நம்பி வளர்ந்து வரும் நாடு. இங்கு என்னுடன் இந்தியர், சீனர் மற்றும் மலாய் நண்பர்கள் வேலைசெய்து வருகின்றனர். சீனர்களிடம் கடவுள் நம்பிக்கையும் பிறவிப்பற்றிய பயமும் அதிகமாக இருக்கும்.
சந்தர்ப்பசூல்நிலையில் சீனர்கள் யாரிடமும் சில்லாரை நாணயம் வாங்க நேர்ந்தால், அவற்றை மறுநாளே வாங்கியவரிகளிடம் கொடுத்து விடுவார்கள். 10 சென் நாணயமாக இருந்தாலும் சரி தாவறாமலும் மறவாமலும் கொடுப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன். (இந்தியர்களிடம் இந்த போக்கு பொதுவாக இல்லை என்பது என் எண்ணம்) இந்த பழக்கம் மலாய் நண்பர்களிடம் இருப்பதையும் பார்த்துள்ளேன். அதுபோல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நாம் உதவி செய்ய நேர்ந்தால்( உ-ம் காணாமல் போன பொருளை கண்டுபிடித்து கொடுத்தால்) அதற்காக குறைந்த பச்சம் தேனீர் வாங்கி கொடுப்பார்கள்.
சீனர்கள் மறுப்பிறப்பில் நம்மிக்கையுள்ளவர்கள். ஆவி அதற்காக பூஜைகள் செய்யும் பழக்கமும் உண்டு. இந்தப் பிறவியில் நாம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் விட்டுவிட்டால், மறுபிறவில் அதன் வட்டியுடன் கொடுக்க வேண்டியதாக இருக்கும் என்ற நம்மிக்கையின் அடிப்படையில்தான் இப்பிறவில் உள்ள கடனை உடன் தீர்வு கொடுக்கின்றனர். மறுபிறவி என்பது இனிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. இந்த பிறவில் நாம் கொடுக்கவேண்டிய நிலையில் இருந்தால் அதற்கு காரணம் சென்றப்பிறவியின் கடனே என்பது அவர்களின் நம்பிக்கை.
சூது என்பது சீனர்களின் பிறப்பில் தோன்றியது.. "சூதுயில்லா சீனன் இறப்புக்கு சமமானவன் என்பது பொருள்" என்ற எண்ணம் உள்ளது. தாய் மகன், தந்தை மகள், கணவன் மனைவி என்ற பாகுபாடுயின்றிதான் சூதாடுவார்கள்.. அதேபொல் தோற்றவர் முறைப்படி கொடுக்கவேண்டியதை கொடித்துவிடுவதும் சீனர்களின் பழக்கம்.... இதற்கும் மேற்சொன்ன காரணதான் இப்பழக்கத்தின் நம்பிக்ககை....
இவர்களின் நம்பிக்கை எதுவானாலும், வாங்கியதை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
ரஜினியின் "ப்ரியா" படத்தின் என்னுயிர் நீதானே என்ற பாடல்..அக்கரைச் சீமை அழகினிலே என்றப் பாடல் கிடைக்கவில்லை
Friday, August 22, 2008
காசிக்கு போனாலும் சுட்டெரிக்கும் சொல்!...

அதி குளிர் சூழலில் கடவுளின் துகளைத் தேடும் பணி.

Wednesday, August 20, 2008
சங்கு சார்! சங்கு!

ஒரு தொழிற்ச்சாலையில் தொழிளார் இருவர் பேசி கொண்டுள்ளனர்,....
Tuesday, August 19, 2008
ஒருத் துளி! ஒரு துகள்! சிந்திக்காமல் சிதையும் உடல்கள்...




Monday, August 18, 2008
பர்வேஸ் முஷாரப்க்கு அழகான அந்த மூக்கு கண்ணாடி
9 ஆண்டுகள் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்த அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.






Sunday, August 17, 2008
மர்மயோகியின் முதல் ஸ்டில் (Marmayogi's First still)




Saturday, August 16, 2008
இந்நிலை எப்பொழுதும் மாறும்!

தன்நாடு, அந்நாட்டு மக்கள், மனைவி பிள்ளைகள், செல்வங்கள் அனைத்தும் அன்னியரின் படையெடுப்பால் இழந்த மாபெரும் சக்கரவத்தி மனம்நொந்து காட்டில் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த முனிவர் ஒருவர் சக்கரவர்த்தியின் சோகநிலையறிந்து என்னவென்று விசாரித்தார். தான் அன்னியரின் படையெடுப்பால் தன் நாடு நாகரமனைத்தும் இழந்தேன், தற்பொது எனக்கென்றும் ஒன்றுமில்லை அனாதயாக இந்தக் காட்டில் சென்றுக்கொண்டுள்ளேன் என்று முனிவரிடம் சொன்னார். அதற்கு அந்த முனிவர் கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித்தருகின்றேன், அதை நீ சொன்னால் இழந்த செல்வங்கள் அனைத்தையும் நீ அடைவாய் என்று, ஒரு ஓலையில் அந்த மந்திர சொல்லை தந்தார். இதை தனியாக நீ படித்து பார் என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் சென்றுவிட்டார்.
அதன்படி சக்கரவத்தி அந்த ஓலையை படித்தார் " இந்நிலை எப்பொழுதும் மாறும் " என்றார்.... அதேபொல் முனிவர் சொன்னதுபொல இழந்த அனைத்து செல்வங்கள், நாடும் கிடைத்தது.... மிகவும் முனிவருக்கு நன்றியை சொல்லி நல்லாட்சி செய்துக்கொண்டு வந்தான்.... ஒருநாள் அந்த ஓலை அவன் கண்ணில் பட்டது, உடன் எடுத்து மகிழ்வுடன் படித்தான் " இந்நிலை எப்பொழுதும் மாறும்" என்றான்..... மீண்டு எல்லாச் செல்வங்களையும் இழந்து காடுச்சென்றான்.....
வாழ்வியலில் இன்பம் துன்பம், மகிழ்ச்சி சோகம், ஏற்றம் இறக்கம் அனைத்தும் இவ்வுலகில் நிரந்தரமில்லை. இந்த நிலை எப்பொழுதும் மாறும் அல்லது மாற்றப்படலாம் ......
Friday, August 15, 2008
இந்திய சுதந்திரப் போராட்டத்தில்

webdunia.com
இந்தியா- சில தகவல்கள்
தனது அபார முன்னேற்றத்தால் உலக நாடுகள் அனைத்தையும் இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்தியா.
Thursday, August 14, 2008
ரஜினியின் சுதந்திரதின அறிக்கையும்!... கமலின் சொதப்பலும்!..

62ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமெல்லாம் மகிச்சியுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளொம்..
தினமலர் சென்னை நகரைச் சுற்றி போலீஸ் குவிப்பு * முதல்வருக்கு குண்டு துளைக்காத ஜீப் தயார்........
தினத்தந்தி தீவிரவாதிகளின் மிரட்டலை சமாளிக்க அதிரடி நடவடிக்கை நாளை நடைபெறும் சுதந்திரதின விழாவுக்கு வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு சென்னை கோட்டையில், கருணாநிதி கொடி ஏற்றுகிறார்.
தினத்தந்தி
Thats Tamil சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.....
தட்ஸ் தமிழ்
இப்படி சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இப்படிப்பட்ட விழாவிற்கு ரஜினியின் அறிக்கையும், கமலின் சொதப்பலையும் விமர்சிக்க தயாராக இருக்கின்றோம்...
இந்திய நாட்டின் சுதந்திர தினம் பாலத்த பாதுகாப்புடன் முற்றிலும் சுதந்திரமாக கொண்டாடப்படுகின்றது... நாமெல்லாம் தொலைகாட்சி பெட்டியில் சிறப்பு பட்டிமன்றம் ( தலைப்பு: நமிதாவிற்கு சேலை அழகா? சுடிதார் அழகா? ) பார்த்து விடுமுறை மகிழ்சியுடன் இருப்போம்... அதன் பிறகு புதிய நடிகையின் சிறப்பு பேட்டி ( திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு வாழ்த்துகளை கூறுவார்). மற்றும் திரைக்கு வந்த சிலநாட்களேயான நாய்க்கு கல்யாணம் திரையிடப்படும்....
பின் குறிப்பு: பதிவர்களுக்கு வேண்டுகோள் நாளை திரைப்படம் தவிர்த்து விடுதலை போராட்ட சிறப்பு பதிவாக வரவேண்டுமாய் உறுதியளிப்போம்....
பிடிக்காத ரோஜாபூ!.....

Tuesday, August 12, 2008
Monday, August 11, 2008
நாடு! அதை நாடு!......
சிங்கபூரின் தேசிய நாள் ஆகஸ்டு-9 1965
நம் தேசிய தலைவர்களின் போராட்டங்களின் விளைவாகதான் இந்த சுதந்திர காற்று சுவாசிக்கப்படுகின்றது. அவர்கள் சிந்திய குருதியால் தான் இந்த சுதந்திர காற்று சுவாசிக்கமுடிகின்றது. அப்படிப்பட்ட தியாகிகளின் தினம்தான் இந்த தேசிய தினம்.
1970 வதுகளில் இந்திய தேசியதின கொண்டாட்டங்கள் பள்ளிகளில் அந்த ஒரு மாதம்(ஆகஸ்ட்) சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் அனைத்து மாணவர்களும் ஊர்வலமாக எல்லா வீதிகளுக்கும் செல்வோம். "மகாத்மா காந்திக்கு ஜே! இந்தியா வாழ்க! வளமான இந்தியாவை உருவாக்குவோம்! என்ற கோசங்கள் சொல்லியவண்ணம் சென்ற நினைவு இன்னும் இருக்கின்றது.. அந்த உண்ர்வுள்ள கொண்டாட்டங்கள் இன்று காண முடியாதது வருத்தப்படதான் முடிகிறது.. இன்றைய சுதந்திர தினம் டீவி சேனல்களின் பட்டிமன்றம், நடிகையின் பேட்டி, திரைக்கு வந்த சிலநாட்களேயான திரைப்படம் என்று முடிந்து விடுகின்றது.
கமலஹாசன் ரஜினியை அறிந்த நம்பிள்ளைகளுக்கு மகாத்மா காந்தியவொ! ஜவர்கலால் நேருவைவோ தெரியவில்லை...
"அதிருதுல்ல'' என்று சொல்லும் பிள்ளையை பார்த்து மகிழ்ந்த நம்மால் இந்திய வரலாற்றை சொல்லித்தர மறந்துவிட்டொம்.
முன்பெல்லாம் பள்ளி ஆண்டு விழாக்களில் பாரதியார் தேசியப்பாடல்களும், பகஸ்திங் நாடகங்களும் இருக்கும். இன்று குத்துப்பாட்டும் கும்மாளமும்தான்,...
குருதிசிந்தி அடைந்த இந்த சுதந்திரத்தை நம்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கும் வாய்ப்பாக இந்த வருட தேசிய தினத்தை கொண்டாட உறுதிக்கொள்வோம்..








Friday, August 8, 2008
நல்ல முதலீட்டை வீனடிக்காதீர்!.....

Wednesday, August 6, 2008
நீ! ஒரு நாயகன்...


இவர் காவல்த்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தார். காவல் துறையினர் முறைகேடாக பயன்படுத்தி வந்த சந்தேகதுடன் கைது செய்தல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மிதிவண்டியில் இருவர் செல்வதை அனுமதிக்கப்பட்டது.
இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.
Sunday, August 3, 2008
ரஜினி சார்க்கு சில கேள்விகள்.


ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பேனர்கள் கிழிக்கப்பட்டது பற்றி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவிடம் கேட்டபோது, ""கோவையில் ரஜினி ரசிகர்கள் யாரும் இவ்வாறு செய்யவில்லை. வேறு யாரோ குடிபோதையில் செய்திருக்கலாம். ரஜினியின் கருத்தை ரசிகர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வித கோபமும் இல்லை. எனக்கு கிடைத்த தகவல்படி எங்கும் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார்.
Friday, August 1, 2008
அந்தர்ப் பல்டி! ஆகாசப் பல்டி!
சென்னை: ஒகேனக்கல் பிரச்னை குறித்து, சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் "தண்ணீரைக் கூட பிரச்னையாக்குபவர்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசிய ரஜினிகாந்த், "குசேலன்' திரைப்படம் வெளியிடுவதற்காக கன்னட மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்த் திரைப்படத் துறையினர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால், சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிற தண்ணியில கூட பிரச்னை கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என ஆவேசமாக பேசினார். ரஜினியின் இந்த பேச்சு கன்னட அமைப்புகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "கர்நாடகாவில் ரஜினி சினிமாக்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என எச்சரிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை அமுங்கியிருந்த நிலையில், ரஜினி நடித்த "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகிறது. கர்நாடகாவில் தனது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடகா பிலிம் சேம்பருக்கு கடிதம் எழுதியுள்ளார் ரஜினிகாந்த். அதில், "எனது பேச்சு கர்நாடக மக்களின் மனதை புண்படுத்தியதை நான் அறிவேன். எனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்; இனிமேல் இதுபோல் பேசமாட்டேன். எனது திரைப்படத்தை தமிழ், கன்னட ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர். எனவே, "குசேலன்' திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதையடுத்து, இன்று "குசேலன்' திரைப்படத்தை வெளியிட கர்நாடகா பிலிம் சேம்பர் அனுமதித்தது.
இதை அறிந்த கன்னட ரக்சன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள், கர்நாடகா பிலிம் சேம்பர் முன் கூடி, "ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை "குசேலன்' திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்' என்று கோஷமிட்டனர். "ரஜினி, கன்னடர்களை அவமரியாதையாக பேசியுள்ளார். எனவே, அவர் நேரடியாக மக்களிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என "வாட்டாள்' நாகராஜ் கூறினார்
இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் துணைத் தலைவர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ""ரஜினி ஏற்கனவே "டிவி' சேனல்கள் மூலமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரது திரைப்படத்தை இன்று வெளியிட அனுமதித்துள்ளோம்,'' என்றார்.ஆனாலும், கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி "குசேலன்' திரைப்படம் இன்று வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம் : நடிகர் ரஜினி நடித்த "குசேலன்' படத்தை திரையிட அனுமதித்ததைக் கண்டித்து கர்நாடகா ஃபிலிம் சேம்பர் முன் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினி உருவப் படம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியபோது, தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் இணைந்து சென்னையில் போராட்டம் நடத்தினர். அதில் நடிகர் ரஜினியும் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியது, கன்னட வெறியர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரத்தில் இருந்த கன்னட வெறியர்கள், ரஜினியின் குசேலன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகாவில் 18 திரையரங்குகளில் குசேலன் படம் வெளியிட அனுமதி தரப்பட்டது. அதையடுத்து கன்னட அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா, பிரவீன் ஷெட்டி ஆகியோர் தலைமையில் நேற்று கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது ரஜினி உருவப் படத்தை தரையில் போட்டு அதைச் சுற்றி செருப்புகள் வைத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து அப்படத்தை எடுத்து வாட்டாள் நாகராஜ் தீ வைத்து கொளுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குசேலன் திரைப்படம் வெளியிடும் தியேட்டர்கள் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலு விவரங்களுக்கு சுட்டவும்
இங்கே சுட்டவும்www.dailythanthi.com/article.asp?NewsID=429170&disdate=8/1/2008&advt=1
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1420&cls=row4
மனிதன் உணர்சிவசப்பட்டு பேசும்பொது தவறுதல் இயற்கைதான்,. அதிலும் இமயமலை சென்று தியாணம் பன்னும் அறிவு ஜிவிகள் தவறுபன்னதான் செய்வார்கள்.. இவர்கள் ஞானம் மிக்கவர்கள் பணமே குறிகோளாகா கொண்டவர்கள். , தமிழர்களின் பணத்தை சுரண்ட ஆசையற்றவர்கள்' . தமிழக முதலமைசருக்கு முற்றிலும் தகுதியானவர்கள். ஒகேனக்கல் பிரச்னை நடந்தது இரண்டுமாதங்களுக்கு முன் ஆனால் தற்ப்பொதுதான் ஞானம் பிறந்து மன்னிப்பு கேட்பார்கள். பணமே எண்ணம் கொண்ட இவர்களுக்கு எல்லாம் சாத்தியமே.. தமிழ் மாக்களுக்கு தலைவராக தகுதியானவர்கள்.. இவர் ஒருமுறை சொன்னா! நூறு முறைச்சொல்ல நாங்கள் இருக்கிறோம்... நாங்களும் மன்னிப்பு கேட்கின்றொம்...