_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 2, 2008

இதயமே! என் இதயமே!...

இதயமே! என் இதயமே!...

இதயமில்லாதவனை இரக்கமில்லாதவன் என்று சொல்கின்றொம், இரக்கதிற்கும் இதயத்திற்கும் தொடர்புயில்லை என்றாலும் தொடர்ச்சியான இதயத் துடிப்புதான் மனிதனை இயங்க வைக்கின்றது. பாதுகாப்பற்ற உணவு முறை, தூக்கமின்மை, மன அழுத்தம், ஊக்கமின்மையால் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் சொல்கின்றது.

வருகின்ற 2020ம் ஆண்டில் இந்தியாவில் வெகுவாக இதயநோய் பாதிக்கும் என்று எச்சரிக்கை சொல்கிறது. இந்தியாவில் கொள்ளை நோய்பொல இதயநோய் பரவகூடும் என்று உலக சுகாதர நிறுவனம் எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹெட்போன் பயன் படுத்துவதும் இதயம் பாதிக்கும் என்றும் ஆராட்சியாளர்கள் சொல்கின்றனர். ஹெட்போன் பயன்படுத்துவதால் தூக்கமின்மை, மன எரிச்சல் உண்டாகின்றது அதனால் பலருக்கு இதய அழுத்தம் மற்றும் இதய அடைப்பு ஏற்ப்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்...

லண்டனில் உள்ள வெல்கம் பவுண்டேஷனும், பிரிட்டிஷ் இதய அமைப்பும் இணைந்து `பாலிபில்' என்ற மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மாத்திரையானது அனைத்து வகையான இதய நோய்களையும் குணப்படுத்தக்கூடியது என்பதும் மகிழ்சியான விடயம். மேலும் ஆஸ்பிரின் மாத்திரையை நடுத்தர வயதுடையவர்கள் அன்றாடம் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் ஏற்படுவதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்... ஆஸ்பிரின் எல்லொரும் எடுத்துகொள்ளலாம் என்றாலும் தகுந்த மருத்துவர் அலோசனை பேரில் எடுப்பதுதான் நல்லது.

இதநோயால் பாதிக்கப்பட்டு மாற்று இதயம் பொருத்தபடுவதும் சமிபத்தில் இந்தியாவில் வெற்றியடைகின்றது. ஆனால் மாற்று இதயம் கிடைப்பது அரிதான விடயம். மாற்று இதயம் வேண்டி காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே இதயம் கொடுக்கமுடியும். இதற்கான விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் வரவில்லை.... இப்படிபட்ட நிலையில் தற்போது மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான விடயம் வெற்றிப்பெற்றால் வருகின்ற காலங்களின் இதயநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.. இப்படி மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்வதில் ஒரு மனமகிழ்சியுடன்... இத்துடன் இணைத்துள்ளேன்....


விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட,இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது."உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்"என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்"இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

"இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது"என அவர் கூறினார்.கார்மட் நிறுவனமானது,பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள்,எறிகணைகள்,விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது.இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.1980களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேகஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும்,அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது.ஆனால்,இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
29 Oct 2008

0 comments: