_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Friday, November 28, 2008

அட போங்கடா!...


அட போங்கடா!...
கருவேலங்காட்டு வண்ணத்துப் பூச்சிகாளாய்!..


மனிதனை மனிதன் மாய்த்துக் கொண்ட
மானங்கெட்ட மானிடம்- இங்கே
சொரனை கெட்ட சென்மங்களுக்கு-இங்குதான்
மதமும் ஒரு கேடாம்... இல்லை கேடயமாம்..
எந்த மதம் கேட்டது! எந்த சாமி சொன்னது!
மானிடன் ரத்தமும் சதையும் வேண்டுமென்று!...


மானுடம் மதிக்காத மதம்,
மானிடம் ருசிக்காத மதம்,
இங்கெ இருதென்ன பயன்?
மனிதா! இரங்கல்பா சொன்னது போதும்..
இருக்கும் மதத்தை தூக்கி எரிந்துவிட்டு...
இந்தியனா வா!...


சாமியாம் கடவுளாம் மண்ணாங்கட்டி
உயிரை எடுக்க எந்த சாமி வரம் சொன்னது
உன்வீட்டு சகோதரனின்
உயிரை கொண்டு வர சொன்ன கடவுளை
தூக்கி எரிந்துவீட்டு
இன்றே இந்தியனா வா!


எந்நாட்டு அன்னியனுக்கும் இந்நாட்டில்
ஒருதுளி இடம்மில்லை
எத்தனை யுத்தம் வந்தாலும்..
யார் தடுப்பார்- இல்லை யார் கெடுப்பார்
என் தேசத்தின் வாழ்விதன்னை!...


சொரனை கெட்ட இந்தியனே!
இனியாவது விழித்திரு!
நீ பூசும் மதசாயம் தொலைத்துவிடு..
இந்தியனா இரு! -இல்லை
மதத்தை கட்டிக்கொண்டு செத்து தொலை.......

0 comments: