_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Wednesday, November 12, 2008

மகிழ்வை கொண்டாடுவோம்!...

மகிழ்வை கொண்டாடுவோம்!...

வீடு, மனைவி, மக்கள், வசதிகள் அனைத்தும் இருந்தும் இவரிடம் ஒரு குறையாக தெரிவது மகிழ்ச்சிதாங்க. இந்த மகிழ்ச்சியை எங்கிருந்து பெருவது? மகிழ்ச்சியை கொடுப்பது எது? எங்கே விளைக்கொடுத்து வாங்க முடியும்?

இயக்குனர் பாரதிராஜாவின் "கருத்தம்மா" படத்தில் பெரியார் தாசனும் சுந்தராஜனும் பேசும் வசனம் நினைவுக்கு வருகின்றது. பெரியார் தாசன் பாமர விவசாயியாக இருப்பார். சுந்தராஜன் அந்த ஊர் ஆசிரியாராக வருவார். பெரியார்தாசன் தன் மகனுடன் வயலில் வேலை செய்துகொண்டு இருப்பார். சுந்தராஜன் அவரிடம் ஏங்க உங்க மகனை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பலாமே என்பார். வேலைக்கு போயி என்னப்பன்னுறது என்று கேட்பார் பெரியார்தாசன். வேலைக்கு போயி பணம் சம்பாரித்து மகிழ்ச்சியா இருக்கலாம் என்பார் சுந்தராஜன். இப்ப என்ன நாங்கள் மகிழ்ச்சி இல்லாமலா இருக்கோம் போயி உன்வேலை பாரு என்று வாயடைத்து சொல்லுவார் பெரியார் தாசன்.

மகிழ்ச்சியா இருந்தா படிக்க வேண்டியதில்லை என்று சொல்வதிற்கில்லை. நமக்கு தேவையின் எல்லையே இந்த மகிழ்ச்சி தானே. உங்கள் அருகிலேயே இருக்கும் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு தேடி அழைவோர் பலர். மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் நேரம் தேவையில்லை. மகிழ்ச்சிக்கு தேவை தொடரும் பயிற்சியே.

சிலர் மகிழ்ச்சியை பிரிதொரு காரணங்களுக்காக தள்ளிப் பொடுவார்கள். பரிச்சையில் நல்ல மதிப்பெண் பெற்றால் மகிழலாம் என்பார்கள், நல்ல மதிப்பெண் பெற்றதும் நல்ல கல்லூரி கிடைத்தால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள். நல்ல கல்லூரியும் கிடைக்கும் பின் நன்றாக படித்து வேலைக்கு போனால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள். வேலையும் கிடைக்கும் பின் வேலை உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியா இருக்கும் என்று நினைப்பார்கள்........ இப்படியே இன்று கிடைக்கும் மகிழ்வை அனுபவிக்காமல் தள்ளிப்போட்டு தன்னை சோர்வு நிலைக்கு தள்ளி மற்றவர்களின் மகிழ்வையும் கெடுத்து விடுவதும் உண்டு..

நல்ல மகிழ்வுக்கு நல்ல பயிற்ச்சிதாங்க.... மகிழ்ச்சியாக இருக்க பெரிய காரணம் தேவையில்லை..... இயற்க்கையை பார்த்து, அதன் அழகை பார்த்து மகிழலாம். இன்று கிடைக்கும் சிறு வெற்றியும் மகிழ்ச்சிதானே, இதை இந்த சந்தர்ப்பத்தை விட்டால் கிடைக்காமல் போகலாம் எனவே இதையும் மகிழ்வாக ஏற்றுகொள்ளுங்கள். உங்கள் மகிழ்ச்சி மற்றவரையும் மகிழப்படுத்தலாம்....

மனிதனுக்கு மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தேவையற்ற தொடர் மகிழ்ச்சி மனநிலை பாதிப்பாக இருக்கும். மகிழ்ச்சியா இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே மகிழ்வா இருங்கள். "துன்பம் வரும்போது சிரிங்க" என்பதற்காக தாய் தன் பிள்ளையை இழந்து அழுகின்ற இடத்தில் சிரிக்க முடியுமா என்ன?

அதேபொல நாளை வரபோகும், அல்லது வராமலே போகும் துன்பத்திற்காக இன்றய மகிழ்வை விட்டு விடாதீர்கள்.. நல்ல பயிற்ச்சியே மகிழ்வுக்கு வழிகாட்டி. ஒரு படத்தில் நாகேஷ் ஊர் பண்ணையாராக அந்த ஊர் திருமண விழாவிற்கு செல்வார். சிறிது நேரத்தில் நாகேஷ் மணமகளை பார்த்து அழுவார். அதை பார்த்த மணமகள் அழுவார் பின் மணமகளை பார்த்து மணமகன் அழுவார். மணமக்கள் அழுவதை பார்த்து திருமணத்திற்க்கு வந்தவர்கள் அனைவரும் அழுதுக்கொண்டு இருப்பார்கள். புதிதாக வந்த ஒருவர் ஏன் எல்லோரும் அழுகின்றனர் என்று விசாரிப்பார்.. மணமக்கள் அழுகின்றார்கள் எனவே நாங்கள் அழுகின்றோம் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்பார்கள். பின் மணமகனை கேட்டால் மணமகள் பண்ணையாரை பார்த்து அழுதாள் இவர்களுக்கு முன் தொடர்பு இருக்குமோ என்று நினைத்து அழுதேன் என்பார். பின் மணமகளை கேட்டால் பண்ணையார் அழுதார் பாவம் என்ன கவலையோ என்று நினைத்தேன் அழுகை வந்தது என்பாள். எல்லோரும் பண்ணையார் நாகேஷ்சை கேட்பார்கள். அதற்கு நாகேஷ் மணமகள் பக்கத்தில் ஒரு விளக்கு எரிகின்றது, அதன் நெருப்பு மணமகளின் சேலையில் பட்டால் அவள் எரிவாள் பின் இந்த மேடையே எரியும் அதை நினைத்துதான் மணமகளை பார்த்து அழுதேன் என்பார்....(படம் தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்)

இந்த படநிகழ்வு காமடியாக இருந்தாலும் இல்லாத ஒரு நிகழ்வை நினைத்து தன்னுள் உள்ள மகிழ்வை இழக்கவெண்டாம் என்பதும் புரிந்து இருக்கும். மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, மாளிகை எதுவும் தேவையில்லை நல்ல எண்ணமும் தகுந்த பயிற்ச்சியும் இருந்தாலே போதும் மகிழ்வா இருக்கலாம்.......


மகிழ்வை கொண்டாடுவோம்!....
மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

4 comments:

பாபு said...

யாருக்காக அழுதான் ? என்று நினைக்கிறேன்

ஆ.ஞானசேகரன் said...

//பாபு said...
யாருக்காக அழுதான் ? என்று நினைக்கிறேன்//

நன்றி பாபு....

CorTexT (Old) said...

சந்திரபாபுவின் பாட்டு...

பிறக்கும் போதும் அழுகின்றாய்;
இறக்கும் போத்ம் அழுகின்றாய்;
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்,
சிரிக்க மறந்தாய் மானிடனே!

ஆ.ஞானசேகரன் said...

// RajK said...
சந்திரபாபுவின் பாட்டு...

பிறக்கும் போதும் அழுகின்றாய்;
இறக்கும் போத்ம் அழுகின்றாய்;
ஒரு நாளேனும் கவலை இல்லாமல்,
சிரிக்க மறந்தாய் மானிடனே!//

மேலும் தகவலுக்கு
நன்றி ராஜ்