_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, June 21, 2009

"லோஷன்" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-2009)

"லோஷன்" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-200)

வானலை (வெற்றி FM) மூலம் தன் குரலை ரசிகர் மத்தியில் பதிந்துகொண்டும் வலைப்பதிவுகளிலும் கலக்கி கொண்டிருக்கும் இலங்கை பதிவர் "லோஷன்" அவர்களுடன் மரியாதையின் காரணமாக மாபெரும் சிங்கை பதிவர்கள் சந்திப்பு நேற்று (20-06-2009) புற நகரான Kallang ல் நதிக்கரை (நைல் நதியில்லாப்பா) ஓரம் நண்பர் "டொன் லீ " அறிவிப்பின் படி சிறப்பாக நடைப்பெற்றது.

முக்கிய பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு கூட்டம் கலைகட்டியது. லொஷன் அவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கோவி.கண்ணன் அவர்களின் அருளால் பக்கோடா விருந்தும் நடைப்பெற்றது. கலந்துரையாடல் மட்டுமில்லாது மொக்கைகளும் கூட்டத்தை மிக சிறப்பாக்கியது. புதிதாக லோஷன் நண்பரும் பதிவருமான நண்பர் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தார்.

கூட்டத்தின் முக்கிய பேச்சாக கிரிக்கெட்(மட்டை பந்தாட்டம்) , இந்திய அரசியல் அதன் காமடிகளும் தேவைகளும், இலங்கை தமிழ் மக்களின் மானுடம் காக்கப்படவேண்டும் என்றும் அவர்களின் மறுவாழ்வு அமையவேண்டும் என்றும் பேசப்பட்டது சிறப்பாக அமைந்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களைப்பற்றி தனித்தனியாக சொல்லாவிட்டாலும் அவர்களின் புகைப்படம் மற்றும் காணொளியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மேலும் விவரங்கள் "டொன்"லீ பக்கம் பார்க்கவும் "சிங்கை பதிவர் ஒன்றுகூடல் அறிக்கை (20-06-2009)"

புகைப்படங்களை பார்க்க இங்கே செல்லவும்

கூட்ட அறிக்கையின் காணொளி பகிர்வு




41 comments:

சி தயாளன் said...

நன்று...என் பதிவிலும் இணைப்பு கொடுத்து விடுகிறேன்

ஆ.ஞானசேகரன் said...

//’டொன்’ லீ said...

நன்று...என் பதிவிலும் இணைப்பு கொடுத்து விடுகிறேன்//

நன்றி 'டொன்' லீ

Anonymous said...

சிங்கபூர் சென்று பதிவர்களைச் சந்திக்கும் லோஷன் அண்ணா , அப்படியே சிறி லங்காவிலையும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்தால் நன்றாக இருக்கும்...

Anonymous said...

லோஷன் நீங்களும் புகலானவர்களைத் தேடி அலைந்து புகழ் தேடும் சிறு பிள்ளைத்தனமானவர்தானா?

ஆ.ஞானசேகரன் said...

// Anonymous said...

சிங்கபூர் சென்று பதிவர்களைச் சந்திக்கும் லோஷன் அண்ணா , அப்படியே சிறி லங்காவிலையும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்தால் நன்றாக இருக்கும்...//

வங்க நண்பா,
விலாசத்துடன் சொன்னால் அவர் சந்திக்க வாய்ப்பாக இருக்குமே

சின்னப்பயல் said...

பதிவர் சந்திப்பின் உரையாடலை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்...

ஆ.ஞானசேகரன் said...

// chinnappayal said...

பதிவர் சந்திப்பின் உரையாடலை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்...//

வணக்கம் நண்பரே,
பாதுகாப்பை முன்நிறுத்தி உரையாடல் தடுக்கப்பட்டுள்ளது மன்னிக்கவும்

கோவி.கண்ணன் said...

படங்கள் அசைபடங்கள் தொகுப்பு அருமை !

கலக்கிட்டேள் !

கோவி.கண்ணன் said...

//Anonymous said...
லோஷன் நீங்களும் புகலானவர்களைத் தேடி அலைந்து புகழ் தேடும் சிறு பிள்ளைத்தனமானவர்தானா?
//

இது என்ன கூத்து ? அவரு ஏற்கனவே விஐபி தானே, அவரு எங்களை சந்தித்தது எங்களுக்குத்தான் பெருமை.

ஆ.சுதா said...

கலக்கல்...!!

ஆ.ஞானசேகரன் said...

// கோவி.கண்ணன் said...

படங்கள் அசைபடங்கள் தொகுப்பு அருமை !

கலக்கிட்டேள் !//

மிக்க நன்றி கண்ணன்

ஆ.ஞானசேகரன் said...

// ஆ.முத்துராமலிங்கம் said...

கலக்கல்...!!//

வாங்க ஆ.முத்துராமலிங்கம்
நன்றிங்க

வெற்றி-[க்]-கதிரவன் said...

அருமை !!!

ஆ.ஞானசேகரன் said...

// பித்தன் said...

அருமை !!!//

நன்றி நண்பா

தமிழ் said...

அருமையான தொகுப்பு

நேரடியாகப் பார்த்த உணர்வு

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// திகழ்மிளிர் said...

அருமையான தொகுப்பு

நேரடியாகப் பார்த்த உணர்வு

வாழ்த்துகள்//
மிக்க நன்றிங்க

Suresh Kumar said...

அருமையாக இருக்கிறது காணொளிகள் புகை படங்கள்

Suresh Kumar said...

புகைப்படங்களின் கீழே பதிவர்களின் பெயர்களை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

அப்பாவி முரு said...

// Suresh Kumar said...
புகைப்படங்களின் கீழே பதிவர்களின் பெயர்களை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//

முதல் கானொளியில் எல்லாப் பதிவர்களின் புகைப்படத்தின் கீழும் பெயர் பதியப்பட்டுள்ளதே!!

*****************************

அண்ணே இரண்டு காநோளிகளும் மிகவும் அருமையாக தொகுத்துள்ளிர்கள்

வாழ்த்துகள்

Subankan said...

முதல் காணொளியில் பெயர்கள் பதிந்தது அருமை. அனைவரையும் அறிய உதவியாக இருந்தது.

ஷண்முகப்ரியன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்,ஞானசேகரன்.

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...

அருமையாக இருக்கிறது காணொளிகள் புகை படங்கள்//
நன்றி சுரெஷ் குமார்.
//புகைப்படங்களின் கீழே பதிவர்களின் பெயர்களை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//

முதல் காணோளியில் பதிந்துள்ளேன் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

// அப்பாவி முரு said...
அண்ணே இரண்டு காநோளிகளும் மிகவும் அருமையாக தொகுத்துள்ளிர்கள்

வாழ்த்துகள்//

நன்றி முரு.. உங்களுக்கும் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

// Subankan said...

முதல் காணொளியில் பெயர்கள் பதிந்தது அருமை. அனைவரையும் அறிய உதவியாக இருந்தது.//

வணக்கம் சுபாங்கன்
மிக்க நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

// ஷண்முகப்ரியன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துகள்,ஞானசேகரன்.//

வணக்கம் சார்,
உங்களின் வாழ்த்துகளை நண்பர்களிடம் சொல்லிவிடுகின்றேன்....

நன்றி சார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காணொளி, வரைகலை போன்றவற்றில் கலக்கு கலக்கு என்று கலக்குகிறீர்கள் ஞானம்!
நிறைய தொழில் நுட்பங்களை கையில் வைத்திருக்கிறீர்கள்!
அருமை!

Suresh Kumar said...

// Suresh Kumar said...
புகைப்படங்களின் கீழே பதிவர்களின் பெயர்களை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//

முதல் கானொளியில் எல்லாப் பதிவர்களின் புகைப்படத்தின் கீழும் பெயர் பதியப்பட்டுள்ளதே!! ///////////

காணொளியை முழுமையாக பார்க்கும் முன்னால் புகை படத்தை பார்த்து கருத்து போட்டு விட்டேங்கோ சாமிகளா . என்ன கதையென்றால் internet connection கொஞ்சம் slow . அதனால விடியோ load ஆக லேட் ஆகுது

ஆ.ஞானசேகரன் said...

// அத்திவெட்டி ஜோதிபாரதி said...

காணொளி, வரைகலை போன்றவற்றில் கலக்கு கலக்கு என்று கலக்குகிறீர்கள் ஞானம்!
நிறைய தொழில் நுட்பங்களை கையில் வைத்திருக்கிறீர்கள்!
அருமை!//

நன்றிங்க ஜோதிபாரதி

ஆ.ஞானசேகரன் said...

// Suresh Kumar said...
புகைப்படங்களின் கீழே பதிவர்களின் பெயர்களை பதித்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//

முதல் கானொளியில் எல்லாப் பதிவர்களின் புகைப்படத்தின் கீழும் பெயர் பதியப்பட்டுள்ளதே!! ///////////

காணொளியை முழுமையாக பார்க்கும் முன்னால் புகை படத்தை பார்த்து கருத்து போட்டு விட்டேங்கோ சாமிகளா . என்ன கதையென்றால் internet connection கொஞ்சம் slow . அதனால விடியோ load ஆக லேட் ஆகுது///


என்னால் புரிந்துகொள்ள முடிந்தது நண்பா.....

Muniappan Pakkangal said...

Glad to know this.

கிடுகுவேலி said...

வணக்கம் ஞானசேகரன்...!
தொகுப்பு அருமையாக உள்ளது. தொடரட்டும். படங்கள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// Muniappan Pakkangal said...

Glad to know this.///
thanks sir

ஆ.ஞானசேகரன் said...

// கதியால் said...

வணக்கம் ஞானசேகரன்...!
தொகுப்பு அருமையாக உள்ளது. தொடரட்டும். படங்கள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.//

வணக்கம் கதியால்
மிக்க நன்றிங்க

குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.

ஆ.ஞானசேகரன் said...

// குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள், தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.//

மிக்க நன்றி நண்பா

காமராஜ் said...

மனிதர்கள் கூட்டமாகி கொண்டாடும்
வைபவங்கள் இந்த வாழ்கையின்
மிகப்பெரும் ரெபிரஷ் பட்டன்.
வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

// காமராஜ் said...

மனிதர்கள் கூட்டமாகி கொண்டாடும்
வைபவங்கள் இந்த வாழ்கையின்
மிகப்பெரும் ரெபிரஷ் பட்டன்.
வாழ்த்துக்கள்.//

உண்மைதான் காமராஜ் ஒரு புத்துணர்வை கொடுக்கிறது. மிக்க நன்றி நண்பா

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
// chinnappayal said...

பதிவர் சந்திப்பின் உரையாடலை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்...//

வணக்கம் நண்பரே,
பாதுகாப்பை முன்நிறுத்தி உரையாடல் தடுக்கப்பட்டுள்ளது மன்னிக்கவும்//

சுவாரசியமான தகவலாக இருந்திருக்குமோ! ப்ச்! நான் அங்கு இல்லாமல் போய்வி்ட்டேனே!

ஆ.ஞானசேகரன் said...

/// குடந்தை அன்புமணி said...
//ஆ.ஞானசேகரன் said...
// chinnappayal said...

பதிவர் சந்திப்பின் உரையாடலை எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்...//

வணக்கம் நண்பரே,
பாதுகாப்பை முன்நிறுத்தி உரையாடல் தடுக்கப்பட்டுள்ளது மன்னிக்கவும்//

சுவாரசியமான தகவலாக இருந்திருக்குமோ! ப்ச்! நான் அங்கு இல்லாமல் போய்வி்ட்டேனே!//

"லோசன்" அவர்கள் ஆகஸ்ட் செப்டம்பர் வாக்கில் இந்தியா வரும் வாய்ப்பு உள்ளது நண்பா

ARV Loshan said...

நன்றி ஞானா.. அருமையான தொகுப்பு..

உங்கள் அனைவரது அன்பும் வரவேற்பும் மகிழ்ச்சியை தந்தது..

என்னுடைய படங்களை காமெராவை உலுப்பி எடுத்து எப்படியாவது இடுகிறேன்..

ஒளிப்பதிவின் ஒலிப்பகுதியை நீக்கியமைக்கு நன்றிகள்.. ;)

நண்பர் அனானிக்கு அப்படி என்ன தான் கோபமோ?

இலங்கைப் பதிவர்கள் தான் அநேகமானோர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனரே.. நானொன்றும் தொடர்பில் இல்லாத தூஅரத்தில் இல்லையே,..
கூட்டுங்கள் கூட்டத்தை வருகிறேன்.

நண்பர்களை சந்திப்பதில் என்ன லாபமும் நட்டமும் .. உங்களுக்கே சின்னப் பிள்ளைத் தனமாக இல்லையா?

ஆ.ஞானசேகரன் said...

// LOSHAN said...

நன்றி ஞானா.. அருமையான தொகுப்பு..

உங்கள் அனைவரது அன்பும் வரவேற்பும் மகிழ்ச்சியை தந்தது..

என்னுடைய படங்களை காமெராவை உலுப்பி எடுத்து எப்படியாவது இடுகிறேன்..

ஒளிப்பதிவின் ஒலிப்பகுதியை நீக்கியமைக்கு நன்றிகள்.. ;)

நண்பர் அனானிக்கு அப்படி என்ன தான் கோபமோ?

இலங்கைப் பதிவர்கள் தான் அநேகமானோர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனரே.. நானொன்றும் தொடர்பில் இல்லாத தூஅரத்தில் இல்லையே,..
கூட்டுங்கள் கூட்டத்தை வருகிறேன்.

நண்பர்களை சந்திப்பதில் என்ன லாபமும் நட்டமும் .. உங்களுக்கே சின்னப் பிள்ளைத் தனமாக இல்லையா?//

வணக்கம் லோஷன்..
உங்களின் பின்னூட்டம் என்னை மகிழ செய்கின்றது. மிக்க நன்றி

கூட்டுங்கள் மாபெரும் பதிவர் சந்திப்பை இலங்கையில்..

மிக்க மகிழ்ச்சி....