முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!...
பசியோடு... மனிதன் போராட்டங்கள்!... பாகம்-2
என்னதான் அறிவியல் சாதனைகளில் புதுமைகள் பல செய்தாலும் மனிதன் உயிர் வாழ்வது என்பது அந்த ஒரு சாண் வயிற்று பசிக்காகத்தானே!. போராட்டங்கள், புரட்சிகள் பல வெடித்ததும் இந்த பசிக்காகத்தானே!. பல புரட்சிக்கு பின்னும் இந்த பசியின் கொடுமை ஒழிந்தப்பாடில்லை எனபதுதான் கொடுமை.

முன்பு ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதாம். அப்பொழுது ஒரு வகை களிமண்ணில் ரொட்டி சுட்டு சாப்பிட்டதாக என் பாட்டி சொல்லுவார்கள். அப்பொழுது நான் நம்பவில்லை, இன்றும் தெனாப்பிரிக்காவில் சில இடங்களின் மண்ணாலான ரொட்டிகள் சாப்பிட்டு பல குழந்தைகள் இறந்ததாக செய்திகளில் படித்துள்ளேன். உலகில் ஒரு புறம் பட்டினியால் சாவுகள், மறுபுறம் உணவுப்பொருள்களை வீணாக்குதல். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சிங்கப்பூர் உலகிலேயே சிறிய நாடு என்ற வரிசையில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. இதன் பரப்பளவு அளவில் சிறிய இடம் என்பதால் இங்கு விவசாயம் இல்லை. ஒரு சில இடங்களில் மாதிரிக்காக கீரை வகைகள் பயிர் செய்கின்றனர். இப்படி துளிக்கூட விவசாயம் செய்யாத நாட்டில் ஒருவர் கூட சாப்பிட உணவு இல்லை என்ற நிலை இல்லை. எல்லா உணவுப்பொருள்களும் இங்கு இறக்குமதியாகின்றது. உலகிலேயே 24 மணிநேரமும் எந்த இடத்திலும் எல்லாவகையான உணவுகள் கிடைக்கும் என்றால் அது சிங்கப்பூர்தான் என்றால் மிகையாகாது. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு ஏதோ அந்த நாட்டை பீற்றிக்கொள்வதாக எண்ணவேண்டாம். இந்நிலைக்காக இந்நாட்டின் அரசு முனைப்புடன் செயல்படுகின்றதை பார்க்க முடிகின்றது. சரியான தலைவரும் முறையான கட்டமைப்பும் இருந்தால் எல்லாம் சாத்தியம் என்பதை கண்முன் காணமுடிகின்றது. சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு அதனால்தான் இது சாத்தியமாக்கபட்டுள்ளது என்பதை விட எந்த விதமான விவசாயமும் இல்லாத நாட்டில் சாத்தியப்படும்பொழுது எல்லா வளங்களும் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஏன் முடியாது என்று சுய பரிசோதனை செய்வது நல்லது. இந்தியாவின் இன்று மிகபெரிய வளம் குறைவு என்னவென்றால் தன்னலமற்ற தலைவர்களும், சுத்தமுள்ள அரசு அதிகாரிகளும்தான். அரசு அதிகாரிகளின் பொறுப்பின்மைதான் நாட்டை சின்னா பின்னாமாக்கிக் கொண்டுள்ளது.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்
ஏன் கையேந்த வேண்டும் அயல்நாட்டில்
எல்லா வளங்கள் இருந்தும் முறையற்ற கட்டமைப்பாலும் சுய நலம் கொண்ட தலைவர்களாலும் நாட்டை வறுமையில் சிக்கவைக்கின்றனர். ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது. இப்படிப்பட்ட வறுமையின் காரணமாக பெற்ற பிள்ளைகளையே விற்கும் அவலங்களும் செய்திகளில் பார்க்க முடிகின்றது.
இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பின் உலகில் கடுமையான உணவு பஞ்சம் வரும் என பிரபல பொருளாதார நிபுணர் பிரவத் பட்நாயக் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. சுமார் 10 மில்லியன் டன் அரிசி உற்பத்தி குறைய வாய்புள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழல்களில் பசி பட்டினிகளிலிருந்து காப்பாற்றுவதும் மேலும் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும். நலிந்து வரும் விவாசயத்தை ஊக்குவிக்க கிராமங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்துதல். விவசாயிகளின் ஆரோக்கியம், கல்வி, உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம் மேன்படுத்துதல், நவீன விவசாய முறைகளை அறிமுகம் செய்தல் போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும் என்பதை அரசும் அரசு அதிகாரிகளும் புரிந்துக் கொள்ளவேண்டும். மேலும் தானும் தன்னை சார்ந்தவர்களின் மேன்பாட்டுக்காக நடந்துவரும் அரசின் போக்கில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் தற்பொழுது தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது அதேபோல் வறுமையின் அளவும் அதிகரித்துள்ளது என்பதை கணக்கிடும்பொழுது. அரசின் கட்டமைப்பில் கோளாருகள் இருப்பதை உணரமுடிகின்றது. கள்ளப்பணம், பதுக்கல், முறையற்ற முறையில் செல்வம் சேர்த்தல், தனிமனிதன் சொத்துகள் ஓரிடத்தில் சேர்தல் போன்ற காரணங்களால் பட்டினி சாவுகளும் அதிகரிக்கின்றது என்பதை இந்த அரசும் உணரவேண்டும். அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்பது தனி மனித திறமை என்றாலும் அது பல உயிர்கள் உயிர் வாழவேண்டிய உணவு என்பதை உணரும் நிலை ஏற்பட வேண்டும். அந்த உள்கட்டமைப்பை அரசுதான் நிர்ணயம் செய்ய வேண்டும்.
நாட்டின் நீரின் தேவையை கருதி நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். நதி நீர் பங்கீட்டை ஒழுங்கு படுத்த அரசு முன்வரவேண்டிய கட்டாயத்தை உணரவேண்டும்.
இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு பின் உலகில் கடுமையான உணவு பஞ்சம் வரும் என பிரபல பொருளாதார நிபுணர் பிரவத் பட்நாயக் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அரிசி உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. சுமார் 10 மில்லியன் டன் அரிசி உற்பத்தி குறைய வாய்புள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழல்களில் பசி பட்டினிகளிலிருந்து காப்பாற்றுவதும் மேலும் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும். நலிந்து வரும் விவாசயத்தை ஊக்குவிக்க கிராமங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்துதல். விவசாயிகளின் ஆரோக்கியம், கல்வி, உள்கட்டமைப்பு, நீர்ப்பாசனம் மேன்படுத்துதல், நவீன விவசாய முறைகளை அறிமுகம் செய்தல் போன்றவைகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும் என்பதை அரசும் அரசு அதிகாரிகளும் புரிந்துக் கொள்ளவேண்டும். மேலும் தானும் தன்னை சார்ந்தவர்களின் மேன்பாட்டுக்காக நடந்துவரும் அரசின் போக்கில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் தற்பொழுது தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது அதேபோல் வறுமையின் அளவும் அதிகரித்துள்ளது என்பதை கணக்கிடும்பொழுது. அரசின் கட்டமைப்பில் கோளாருகள் இருப்பதை உணரமுடிகின்றது. கள்ளப்பணம், பதுக்கல், முறையற்ற முறையில் செல்வம் சேர்த்தல், தனிமனிதன் சொத்துகள் ஓரிடத்தில் சேர்தல் போன்ற காரணங்களால் பட்டினி சாவுகளும் அதிகரிக்கின்றது என்பதை இந்த அரசும் உணரவேண்டும். அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்பது தனி மனித திறமை என்றாலும் அது பல உயிர்கள் உயிர் வாழவேண்டிய உணவு என்பதை உணரும் நிலை ஏற்பட வேண்டும். அந்த உள்கட்டமைப்பை அரசுதான் நிர்ணயம் செய்ய வேண்டும்.
நாட்டின் நீரின் தேவையை கருதி நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். நதி நீர் பங்கீட்டை ஒழுங்கு படுத்த அரசு முன்வரவேண்டிய கட்டாயத்தை உணரவேண்டும்.
வங்கத்தில் ஓடிவரும் நீரின் விசையால்-மையத்து
நாடுகளில் பயிர் செய்வோம்....(பாரதியார்)
கனவுகளும் கர்ப்பனைகள் மட்டும் இந்நாட்டை வளப்படுத்த முடியாது. வளமான செயல்பாடுகள் தேவையாகின்றது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டும். நாளைய வளமான உலகம் நம்கைகளில் இருப்பதை உணந்துகொண்டாலே போதும் மகிழ்ச்சியான சமூகத்தை பார்க்க முடியும்.
அடுத்த கட்ட சிந்தனைகள் ஏழை, ஏழையாக இருப்பதேன்?.. என்ற தலைப்பின் கீழ்
சிந்தனைகளுடன்.....
ஆ.ஞானசேகரன்
நாடுகளில் பயிர் செய்வோம்....(பாரதியார்)
கனவுகளும் கர்ப்பனைகள் மட்டும் இந்நாட்டை வளப்படுத்த முடியாது. வளமான செயல்பாடுகள் தேவையாகின்றது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணரவேண்டும். நாளைய வளமான உலகம் நம்கைகளில் இருப்பதை உணந்துகொண்டாலே போதும் மகிழ்ச்சியான சமூகத்தை பார்க்க முடியும்.
அடுத்த கட்ட சிந்தனைகள் ஏழை, ஏழையாக இருப்பதேன்?.. என்ற தலைப்பின் கீழ்
சிந்தனைகளுடன்.....
ஆ.ஞானசேகரன்




















