
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின் முக்கியமாக கல்வியும் மருத்துவமும் நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் சென்றடையவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயதுவரை கல்வியை தரமாகவும் இலவசமாகவும் கொடுக்கவேண்டும் என்பது இந்திய அரசின் கடமை என அரசியல் அமைப்பு சட்டம் சொல்கின்றது. ஆனால் இன்றைய நிலைமை பாலர் கல்விக்கும், ஆரம்பக்கல்விக்குமே பெரும் செலவு செய்யவேண்டிய நிலையில் இருக்கின்றொம்.
நாட்டில் எல்லொருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் கைக்கொடுக்காததால். அன்றைய பிரதமர் ஜவர்கலால் நேரு தொண்டு நிர்வணங்களுக்கு அழைப்பு விடுத்தார். நேரு இட்ட அழைப்புக்கு முதலில் செவிக்கொடுத்தது கிருஸ்துவ ஸ்தாபணம். அவ்வாறு கிடைத்த அழைப்பின் படி இன்றுவரை கல்வியையும் மருத்துவத்தையும் சேவையாக செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
நாட்டின் முக்கிய தேவை கல்வியும் மருத்துவமும் இதை இன்று வியாபாரமாக்கிவிட்டார்கள் இன்றைய அரசியல் வியாபாரிகள். தமிழ் நாட்டை பொருத்தவரை காமராஜர் காலத்தில்தான் எல்லோருக்கும் இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது. மேலும் இலவச மதிய உணவுத்திட்டமும் இருந்தது. இப்படி இலவசமாக கிடைத்த கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து கல்வியை வியாபாரமாக்கிய பெருமை டாக்டர் MG ராமச்சத்திரனையே சாரும். இதற்கு பின் வந்த அரசுகளும் கல்வியில் காசுபார்க்க தொடங்கிவிட்டார்கள். கல்வி நிர்வணங்கள் வியாபார தளமாக மாற்றப்பட்டுவிட்டது.
உலகிலேயே தனி பெரும் சிறப்பு தமிழகத்திற்கு உண்டு. கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும், டாஸ்மாக் மதுவை அரசு ஏற்று நடத்துவதும். கல்வி தனியார் பொருளீட்டும் வழிகளில் ஒன்றாகதான் இன்று செயல்ப்பட்டு வருகின்றது. தற்பொழுது உள்ள சூழலில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை விட அதிகமாக உள்ளது. காசு உள்ள யார் வேண்டுமானாலும் கல்வி நிர்வணங்களை ஆரம்பித்து வாணிபம் செய்யலாம் என்ற நிலைமைதான் இன்று. எல்லா அமைச்சர்களுக்கும் சொந்தமாக ஒரு கல்வி நிர்வணம் உண்டு, சேவை செய்வதற்காக இல்லை பொருளீட்டுவதற்காகதான்.
எங்கள் பள்ளியில் தரமான கல்வித் தருகின்றோம் என்று சொல்லி காசை பிடுங்குவதுதான் நிர்வாகங்களுக்கான வேலை. நாமும் அப்படிதான் ஆகிவிட்டொம், கல்வி என்பது அறிவின் தேடல் என்பதை மறந்துவிட்டு பொருளீட்டுவதற்காண முதலீடு என்றுதான் கல்வியை பார்க்கின்றோம். அப்படிதான் இன்றைய கல்விமுறையும் இருக்கின்றது.
கல்வி என்பது மாணவர்களின் அடிப்படை அறிவை தந்து அதன் பின் அவர்களை ஆற்றலோடு வளர்ப்பதுதான் சரியானதே தவிர மதிப்பெண்ணின் நோக்கத்திற்காக இல்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் தங்களின் லட்சியங்களை அடைந்திருக்கின்றார்கள்? வாழ்வில் வெற்றிப்பெற்றவர்கள் அனைவரும் மதிப்பெண் பெற்றவர்கள் என்று சொல்லவும் முடியாது. கல்வி என்பது அறிவின் தேடல், அந்த தேடலின் வெற்றிதான் வாழ்க்கையின் வெற்றியாக இருக்கும். மதிப்பெண்ணுக்காவும் பொருளீட்டுவதற்காகவும் கொடுக்கப்படும் கல்வி வெற்றியை கொடுக்காது என்பதுதான் உண்மை. இப்படி பொருளீட்டுவதற்காக காசுகொடுத்து வாங்கும் கல்வியால்தான் பின்னர் தன் பொறுப்பில் உள்ள வேலைக்காக லஞ்சம் வாங்கும் நிலை ஏற்படுத்துகின்றது.
அரசுகள் இலவச TV வழங்குதல் மற்றும் மது விற்பனை என கவணம் செலுத்தும் அளவிற்கு, கல்விக்கு கவணம் செலுத்தாதது ஏன் என்றுதான் தெரியவில்லை. இன்னும் சில அரசியல் பூச்சிகள் "கள்" எடுக்க அங்கிகாரம் கேட்கின்றார்கள். ஆக மொத்தம் கல்வியை சாகடித்து விடுவார்கள் என்றே தோன்றுகின்றது.
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.